Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

print

சிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும்.

கடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது.

நமது தளத்தின் ஓவியர் சசி (இராகவேந்திர மகிமை புகழ்) அவர்களைக் கொண்டு விஷேட ஓவியங்கள் வரையப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன…!

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில!

லிங்க தேசத்தில் (இன்றைய ஒரிஸ்ஸா) கடகபூர் என்னும் நகரம் இருந்தது. அந்த நகரை ஆண்ட மன்னனுக்கு விராகன் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற சிறந்த வீரன் அவன். மிகுந்த பராக்கிரம சாலி. அவனுக்கு ஸுமந்திரன், ஸுனந்தன், ஸுகுந்தன் என்கிற மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் அமைச்சரின் மகன். மற்றொருவன் அரண்மனை புரோகிதரின் மகன், இன்னொருவன் வாயிற்காப்போனின் மகன். இவர்கள் நால்வரும் இணைபிரியா தோழர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர்

அவரவர்க்குரிய கடமையை சிறந்த முறையில் செய்து வந்த இவர்கள், தான தருமம் முதலியவற்றை கடைப்பிடித்து சிறந்ததொரு வாழ்வை வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் நால்வருக்கும் தீர்த்த யாத்திரை செல்லவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. உடனே தங்கள் பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி அவர்கள் ஒப்புதல் பெற்று, ஏராளமான பொன் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு மாட்டுவண்டியையும் அமர்த்திக்கொண்டு யாத்திரை புறப்பட்டார்கள்.

செல்லும் வழியில் ஸுபுரம் என்கிற ஊர் வந்தது. அங்கு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் தங்கள் பிரயாணத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்தனர். அந்த ஊரில் எங்கேனும் உணவு கிடைக்குமா என்று விசாரித்தபோது தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு அந்த ஊரில் ஒரு அந்தணர் உணவளித்து வருகிறார் என்றும் அவர் வீட்டுக்கு சென்றால் சாப்பிடலாம் என்றும் கூறினார்கள்.

உடனே நால்வரும் அந்த அந்தணர் வீட்டுக்கு சென்றனர்.

அந்தணரும் இவர்களை வரவேற்று, “நீங்கள் நால்வரும் என் வீட்டில் தாரளமாக உணவருந்தலாம். இரவு தங்குவதற்கு மட்டும் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு இடவசதி போதாது” என்றார்.

“சரி!” என்று சொல்லிவிட்டு நால்வரும் அவர் வீட்டில் உணவருந்திவிட்டு நன்றி கூறிவிட்டு சென்றார்கள்.

அந்த ஊரில் உள்ள சிவாலயம் ஒன்றில் அரசகுமாரனும், சிவயோகியின் மடம் ஒன்றில் மந்திரிகுமாரனும், விபுதன் என்னும் சிவபக்தர் ஒருவர் வீட்டில் புரோகிதரின் மகனும், நந்தவனம் ஒன்றில் வாயிற்காப்போன் மகனும் படுத்துறங்கி அன்றைய இரவை கழித்தனர்.

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

விடிந்ததும் காலைக்கடன்களை முடித்து நீராடிவிட்டு ஆகாரம் அருந்திவிட்டு அடுத்த ஊருக்கு பயணத்தை தொடர்ந்தனர்.

அப்போது இவர்கள் எதிரே கௌதம முனிவர் வந்தார்.

அவரை நோக்கிச் சென்று நமஸ்கரித்து, தாங்கள் தீர்த்த யாத்திரை சென்று கொண்டிருக்கும் விஷயத்தை கூறி, அவரிடம் ஆசி வேண்டினார்கள்.

கௌதமர் ஒரு கணம் கண்களை மூடி தியானித்தார். பின்னர்… தீனமான குரலில்… “என்ன சொல்வது… அன்பர்களே உங்களயுமறியாமல் நீங்கள் சிவாபராதம் செய்திருக்கும் காரணத்தால் உங்கள் ஆயுள் விரைவில் முடியவிருக்கிறது… நீங்கள் தீர்த்த யாத்திரை செல்ல முடியாது… விரைவில் உங்கள் மரணம் உறுதி!” என்றார்.

நால்வரும் அது கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

“சுவாமி… நாங்கள் எத்தகைய சிவாபராதத்தை செய்தோம்? எதனால் எங்கள் ஆயுளுக்கு இப்படி ஒரு பங்கம் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டனர்.

கௌதமர் சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு தொடர்ந்தார்… “நேற்று இரவு சிவாலயத்தில் தங்கிய நீ காலை குளித்துவிட்டு உன் தலையை துவட்டிக்கொண்டிருந்தாய். அப்போது உன் தலையிலிருந்து சில ரோமங்கள் உதிர்ந்து கீழே விழுந்து காற்றில் பறந்து சென்று சன்னதியில் விழுந்துவிட்டது. இதனால் சிவபெருமானின் சன்னதி அசுத்தமாகிவிட்டது.

siva-abaradham2

“மந்திரி குமாரனே… நீ தங்கியிருந்தது ஒரு சிவயோகியின் மடம். அங்கு நீ தாம்பூலம் தரித்து உமிழ்ந்தாய்… உன் செய்கையால் அம்மடம் அசுத்தமடைந்துவிட்டது….”

“புரோகித குமாரனே… நீ விபுதன் என்னும் சிவபக்தரின் வீட்டில் வாயைக் கொப்புளித்து எச்சிலை துப்பினாய்… அந்த எச்சிலை அந்த சிவபக்தர் மிதித்துவிட்டார்…. வாயிற்காப்போனின் மகன்,  சிவபூஜைக்கு பூக்கள் வளரும் நந்தவனத்தில் மூக்கு சிந்தி அந்த சளியினால் அந்த நந்தவனம் அசுத்தமடைந்தது”

– இப்படியாக ஒவ்வொருவரும் செய்த சிவாபராதத்தை பட்டியலிட்டார்.

(* கிரிவலம் செல்லும் அன்பர்கள் எச்சில் துப்பக்கூடாது. அப்படியே துப்ப நேர்ந்தாலும் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதங்கள் அதன் மீது படாதவண்ணம் மறைவில் சென்று துப்பவேண்டும்!)

siva-abaradham1

கௌதம முனிவர் இவ்வாறு கூறியதும் அனைவருக்கும் அவர்கள் செய்த அந்த செயல்கள் நினைவுக்கு வந்தன. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘இதனால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்கிற அலட்சியம் ஏற்பட்டது.

கௌதமரிடம் விடைபெற்றுவிட்டு தங்கள் யாத்திரையை தொடர்ந்தார்கள்.

சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்… அரசகுமாரன் தலைசுற்றி மயக்கமடைந்து வீழ்ந்தான். மந்திரி குமாரனுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு திணறினான். புரோகித குமாரனுக்கு நாக்கு வறண்டு விட்டது. வாயிற்காப்போனின் மகனுக்கு மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு பேரும் மாண்டு போனார்கள்.

உடனே அங்கே தோன்றிய யம கிங்கரர்கள் அவர்களை இழுத்துக்கொண்டு போய், நரகில் தள்ளி பல்வேறு கொடுமைகளை செய்தார்கள். சிவசன்னதியில் ரோமம் பறக்க காரணமாக அமைந்த அரசகுமாரனின் தலையில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினார்கள். மடத்தில் தாம்பூலம் உமிழ்ந்த மந்திரி குமாரனின் நாக்கில் பழுக்க காய்ச்சிய தாமிரத்தை கொட்டினார்கள். சிவபக்தரின் வீட்டில் எச்சில் துப்பிய புரோகித குமாரனின் பற்களை இடுக்கிகளால் பிடுங்கி எறிந்தனர். நந்தவனத்தில் மூக்கு சிந்திய வாயிற்காப்போனின் மூக்கில் மலமூத்ராதிகளை கொட்டினார்கள்.

இப்படி பல சித்ரவதைகளை அனுபவிக்கும் அவர்கள் அனேக காலம் நரகில் தள்ளப்பட்டு துன்பம் அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்கள், மூதாதையர்களும் இந்த தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இதிலிருந்து விடுதலை பெறுவது எக்காலத்திலும் வாய்ப்பில்லை.

இதை நந்திதேவர் கூறியதும் சதானந்த முனிவர் நடுநடுங்கிப்போனார். மும்மூர்த்திகளில் மற்ற இருவருக்கும் கூட உள்ளம் நடுங்கியது.

“எனக்கும் கூட சிவாபராதம் செய்கிறவர்கள் பெறும் தண்டனையைப் பற்றி கேட்கும்போது நடுக்கம் ஏற்படும் என்றால் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்” என்றார் நந்தியம்பெருமான்.

“இந்த பாபிகளின் வரலாற்றை கேட்ட நான் உடனே ஐயனை தரிசித்து என் பாபத்தை தீர்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறி நேரே கயிலை நோக்கி சென்றார் சதானந்த முனிவர்.

ஆகவே அன்பர்களே மறந்தும் கூட சிவாபராதத்தை செய்யக்கூடாது.

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப்படுமா என்று நினைக்கவேண்டாம். அறிவுடையவர்களும் சான்றோர்களும் மேலே கூறப்பட்டுள்ள சிவதுரோகச் செயல்களை ஒருபோதும் செய்யமாட்டார்கள். தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலில் இது தொடர்பான ஒரு அற்புதமான சம்பவம் இருக்கிறது. அதை நாளை வேறொரு பதிவில் தருகிறோம்.

அறிந்தோ அறியாமலோ சிவாபராதம் செய்திருப்பதாக கருதும் அன்பர்கள் கீழ்கண்ட பாடலை ஒதி வரலாம்…

திருவையாறில் சுந்தரர், ஈசனிடம் பிழை பொறுக்கப் பாடிய பாடல் இது…

மயிலை காரணீஸ்வரர் கோவில் - சுந்தரர் உற்சவர்
மயிலை காரணீஸ்வரர் கோவில் – சுந்தரர் உற்சவர்

பிழைத்த பிழையொன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !
– சுந்தரமூர்த்தி சுவாமிகள்

விளக்கம் : மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்!!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

தெய்வத்தின் குரல் 

பாவச்செயல்களின் பலனைக் கழிக்க…

Maha Periyava copy2* எதைச் செய்வது நல்லது என்று தோன்றுகிறதோ அது புண்ணியம். எதைச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அது பாவம்.

* உலகில் பிறந்த அனைவரும் புண்ணியம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கு எண்பது பங்கு பாவத்தையே செய்கிறார்கள்.

* வாயாலும், மனத்தாலும், உடலாலும், பணத்தாலும் நாம் பலவித பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறோம்.

* கயிற்றை எப்படி சுற்றினோமோ, அப்படியே தான் அவிழ்க்க வேண்டும். அதுபோல, பாவச்செயல்களின் பலனைக் கழிக்க, புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே வழி.

* மனம்,வாக்கு, உடல், பணம் என எல்லாவற்றாலும் நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ள முயல வேண்டும்.

– மகா பெரியவா

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *