Home > மாமனிதர்கள்

பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!

சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 16/11/1916 அன்று தமிழகத்தை வரலாறு காணாத புயல் தாக்கிய நேரம். அப்போது பாரதி புதுவையில் இருந்தார். எங்கும் மழை வெள்ளம். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர். பல நூறு பேர் உயிரிழந்தனர். பாரதியும் அவர் நண்பர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள்.

Read More

மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

நாளை அக்டோபர் 29 தீபாவளி. ஆனால் இன்று அதைவிட முக்கிய நாள். இன்றைக்கு பெண் விடுதலை, பெண் கல்வி என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் மகாகவி சுப்ரமணிய பாரதியே ஆவார். ஆனால் சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் அல்லவா? பாரதிக்கு பெண் விடுதலையை பற்றியும் நமது தேச விடுதலைப் போரின் புதிய பரிமாணத்தையம் காட்டியது யார் தெரியுமா? சகோதரி நிவேதிதை! அக்டோபர் 28 அவர் பிறந்த நாள்! மகாகவி பாரதியார் இவரைத் தமது

Read More

அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!

ஸ்ரீ ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றபோது, அவதாரத்தின் நோக்கத்திற்கு துணை செய்யும் பொருட்டு, தேவர்கள் பலரும் கூடவே பிறந்தனர். வானரங்களும் கோபிகைகளும் இப்படி பிறந்தவர்கள் தான். அது போல அந்நியர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நம் நாட்டை மீட்க, ஜனங்களுக்கு உத்வேகத்தை அளிக்க, இறைவன் தன் அடியார்களை அனுப்பி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போரிட வைத்தான். நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள். மதுரை மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் வத்தலக்குண்டு என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ராஜம் ஐயர், நாகம்மாள்

Read More

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் வாழ்வில் மலையப்பனும் மகாபெரியவாவும் புரிந்த அற்புதம்!

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 16 அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பிறந்தநாளையொட்டி நாம் அளித்த பதிவு இது. இந்தப் பதிவை தயாரிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதாவது நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம். அப்போதெல்லாம் நாம் ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டே மீதி நேரத்தில் தளத்திற்காக உழைத்தோம். இன்று இப்பதிவு நமது பெயரோ நமது தளத்தின் பெயரோ இன்றி முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் சுற்றிகொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் புதிதாக

Read More

குருபக்திக்கும் தொழில்பக்திக்கும் உதாரணமாய் திகழ்ந்த ‘தனித்தவில்’ நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை!

எந்தக் இசைக்கருவிகளுக்கும் இல்லாத பெருமை தவிலுக்கும் நாதஸ்வரத்துக்கும் உண்டு. மங்கள இசைக்கருவிகள் என்கிற பெயர் அவற்றுக்கு மட்டுமே உரித்தாவன. மேலும் திருக்கோவில்களில் அபிஷேக ஆராதனை மற்றும் உற்சவங்களின்போது அவசியம் மங்கள இசையை இசைக்கவேண்டும். அந்தக் கலைக்காகவே தம்மை அற்பணித்து, அதையே மூச்சாக கருதி வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்று பார்ப்போம். தமிழ் வாத்திய உலகில் 'தவில்காரர்' என்றால் அது நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களையே குறிக்கும். இவரைப் பற்றி பேசினாலே போதும்,

Read More

ரூபாய் கட்டுக்கு பதில் சில்லறை கேட்ட கலைவாணர் என்.எஸ்.கே – ஏன் தெரியுமா?

இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள அற்புதமான மனிதர்களுள் என்.எஸ்.கே. அவர்களும் ஒருவர். நகைச்சுவை என்கிற பெயரில் இன்று எதை எதையோ ரசிக்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனால், கலைவாணர் சிரிக்கவைத்து சிந்திக்கவைத்தவர். விரசமில்லாத தரமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர். தன்னை நாடி வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாத கொடை வள்ளல். வாழும் கர்ணனாய் விளங்கியவர். வறுமையில் சிக்கி இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூட அவரை நாடி வந்தவர்களுக்கு அள்ளி

Read More

“லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே, ஆனா…” – திரு.பஞ்சு அருணாசலம் அவர்களுடன் சில மணித்துளிகள்!

பிரபல தயாரிப்பாளரும் கவிஞருமான திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் (ரைட்மந்த்ரா துவங்குவதற்கு முன்) தி.நகர் பாகீரதியம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உரையாடியது மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அவரை நாம் கண்ட பேட்டியிலிருந்து முக்கியமான சில EXCERPTS. பஞ்சு அருணாச்சலம் அவர்களை பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டவர். இசைஞானி

Read More

கையில் கீதை நாவில் வந்தே மாதரம் – குதிராம் போஸ் எனும் மாவீரன் தூக்குமேடை ஏறிய கதை!

நம் வாசகர்கள் இந்த தளத்தில் வெளியாகும் எந்தப் பதிவுகளை படித்தாலும் படிக்காவிட்டாலும் இது போன்ற பதிவுகளை அவசியம் படிக்கவேண்டும். தெய்வத்தைவிட தேசமே உயர்ந்தது. தெய்வபக்தி இல்லாத நாடு கூட செழிக்கும். ஆனால் தேசபக்தி இல்லாத நாடு அழிந்துவிடும். எனவே ஆன்மீக / சுயமுன்னேற்ற பதிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற பதிவுகளுக்கும் அவசியம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

Read More

என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ??

இன்று சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள். ஒரு மனிதனுக்கு தெய்வ பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள இவரது வரலாற்றை படித்தால் போதும். அப்படி ஒரு வைராக்கிய பக்தி இவருக்கு முருகன் மீது. 'COMPLETE SURRENDER' என்பார்கள் இல்லையா அதன் அர்த்தம் புரியவேண்டும் என்றால் இவரது வரலாற்றை படித்தால் போதும். இப்படியும் கூட இறைவனிடம் பக்தி செய்யமுடியுமா உரிமை எடுத்துக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தளவு நாடி,

Read More

விட்டில் பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரம்!

'தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் முதலீடுகள் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறிப்பாக நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வார மாத இதழ்களுக்கு பேட்டி கொடுப்பதும், டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவதும், கவர்ச்சியாக பத்திரிகை அட்டைகளுக்கு போஸ் கொடுப்பதும், சான்ஸ் பிடிக்க திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக ஆடை அணிந்து கலந்து கொள்வதும்,

Read More

பிரம்படி வாத்தியாரும் படிப்பு ஏறாத பிச்சு ஐயரும்!

யார் பணக்காரன்? யார் ஏழை? - பதிவு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நல்ல கருத்து அனைவருக்கும் சென்று சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்த பதிவின் தொடர்ச்சியாக நாம் அளிக்கவிருக்கும் பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று தெரியும். அது சற்று ஹெவியான பதிவு. எனவே அதற்கு முன்பாக ஒரு மென்மையான பதிவை தர விரும்பி இந்தப் பதிவை அளிக்கிறோம். இதைப் படியுங்கள். ரசியுங்கள். அடுத்து நாம் சொன்ன அந்தப்

Read More

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

ஏப்ரல் 28 - இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் நினைவு நாள்! நாம் ஏற்கனவே முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருக்கிறோம் மகா பெரியவாவின் 'தெய்வத்தின் குரல்' நூலையும் மேலும் சில திருமுறைகளையும் ஒன்றாக படிப்பது போல இருக்கிறது உ.வே.சா. அவர்களின் 'என் சரித்திரம்'. இதை ஏதோ வாழ்க்கை வரலாற்று நூல் என்று எண்ணிவிடவேண்டாம். வாழ்வியல் வழிகாட்டி இந்நூல். இந்த நூல் வீட்டில் இருப்பதே விசேஷம் தான். அந்தளவு மங்கள விஷயங்கள் அடங்கியிருக்கும்

Read More

கோவிந்த தீட்சிதர் – மன்னராட்சியிலும் மக்களுக்கான ஆட்சியை தந்த மகான்!

அக்காலங்களில் குடிமக்களை பரிபாலனம் செய்யும் ராஜாவுக்கு முக்கிய விஷயங்களில் ஆலோசனை கூற 'ராஜகுரு' என்று ஒருவர் உண்டு. சரித்திரத்தில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்ததற்க்கும் நிமிர்ந்ததற்கும் இவர்களே முக்கிய காரணம். அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பு இந்த 'ராஜகுரு' என்னும் பதவி. தஞ்சையை ஆண்ட சேவப்ப நாயக், அச்சுதப்ப நாயக், ரகுநாத நாயக் ஆகிய மூன்று நாயக்க மன்னர்களுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் (1515-1634) என்பவர்.

Read More

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்த நாளன்று (பிப்ரவரி 19) கும்பகோணம் - தஞ்சை மார்க்கத்தில் பாபநாசம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு சென்று நாமும் நண்பர் சிட்டியும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது நினைவிருக்கலாம். 19 காலை கும்பகோணம் சென்றதும் குளித்து முடித்து தயாராகி பாபநாசம் புறப்பட்டோம். பாபநாசம் கும்பகோணம் - தஞ்சை சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ளது. பாபநாசத்தில் இறங்கியதும் கடைவீதியில்

Read More