Home > Featured

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!!

நம் நண்பர் சுந்தர் மறைவு ஏற்று கொள்ள முடியாத பெரிய இழப்பு. நண்பர்களும், ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரிய வெற்றிடம் தான் தெரிகிறது. அவரின் இந்த அசுர மாற்றம் கடந்த 3-4 வருடங்களில் ஏற்பட்டது. அவர் பிறவியிலேயே நல்ல எழுத்தாளர். சூப்பர் ஸ்டார் தளத்திலும் ஏகப்பட்ட வாசர்கள் உண்டு. www.rightmantra.com எந்த அளவிற்கு பரவியதோ அந்த அளவிற்கும் மேல் ரைட் மந்த்ரா சுந்தர்ஜி யின் புகழ் பரவியது. அவரின் தொண்டு, சுய முன்னேற்றம்,

Read More

தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்!

நமது தளத்தில் அவ்வப்போது பதிவுகளுக்கு கடைசியில் டிப்ஸ்கள் அளிப்பது வழக்கம். டிப்ஸ் மட்டுமே சேர்த்து ஒரே பதிவாக அளிக்க விரும்பி இவற்றை அளிக்கிறோம். இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில புதிதாக இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னேயும் காரணம் இருக்கிறது. இயன்றவரை அனைத்தையும் பின்பற்றி பலன் பெறுங்கள். 1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும். 2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன்

Read More

இந்துமதம் ஏன் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறது? நாம் செய்யவேண்டியது என்ன?

இன்றைய உலகில், அரசியல் சூழ்நிலையில் இந்துமதம் பல்வேறு தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்துமதத்தை ஒழித்துக் கட்ட நம் நாட்டில் பல்வேறு முயற்சிகள் நடக்கிறது என்பது உண்மை. அதற்காக பல நூறுகோடிகள் செலவிடுப்படுகின்றன என்பதும் உண்மை. இந்துமதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கருதிக்கொண்டு பலர் சமூக வலைத்தளங்களில் எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் எல்லாம் இந்து மதத்தின் கோட்பாடுகளை, தத்துவத்தை சரியாக புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. பதிலுக்கு பதில் தருவதாக எண்ணிக்கொண்டு அருவருக்கத்தக்க

Read More

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும்!

கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் இத்தனை இத்தனை விஷயங்களா என்று பிரமித்து போவீர்கள். 'கண்ண'தாசன்

Read More

தனயனை காத்த தந்தையின் தருமம் – நெகிழ வைக்கும் கதை!!

வாசக அன்பர்களுக்கு வணக்கம். கடந்த சனிக்கிழமை (04/03/2017) இரவு திடீர் பயணமாக திருவாரூர், திருக்குவளை, கஞ்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வந்தோம். செவ்வாய் அதிகாலை தான் சென்னை திரும்பினோம். இது திட்டமிடப்படாத பயணம். அவனிடமிருந்து அழைப்பு வந்தது. சென்றுவந்தோம். அவ்வளவே. சனிக்கிழமை மதியம் தான் பயண திட்டம் முடிவானது. இறையருளால் கடைசி நேரம் டிக்கட் கன்பார்ம் (கம்பன் எக்ஸ்பிரஸ்) ஆனது. சென்ற அனைத்து தலங்களிலும் நமது பிரார்த்தனை கிளப் பதிவை வைத்து

Read More

முடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி? உண்மை சம்பவம்!

எழுபதுகளில் சிறந்த பளுதூக்கும் வீரராக இருந்தவர் ரஷ்யாவை சேர்ந்த வாஸிலி அலெக்ஸெவ். பளுதூக்குவதில் உலக சாதனை படைத்தவர் இவர். 500 பவுண்டுகள் எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தார் அப்போதெல்லாம் பளுதூக்கும் வீரர்கள் தூக்கக்கூடிய அதிக பட்ச எடை 490 ~ 499 பவுண்டுகள் தான். (அதாவது சுமார் 225 கிலோ வரை). அதற்கு மேல் யாராலும் தூக்க இயலாது. அதற்கு ஒரு பாயிண்ட் அதிகமாக தூக்கிவிட்டால் கூட அது உலக

Read More

கருவாய் உதித்த பொழுதே தொடுத்த கலியகற்ற வருவாய் கருணாம்பிகையே! Rightmantra Prayer Club

அவிநாசி மிகப் பழமையான தலம். மிகுந்த வரலாற்று பெருமையை உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அவை: அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா (பவானி), கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், வெஞ்சமாங்கூடலூர். இந்த ஏழில் முதன்மையானது அவிநாசி ஆகும். அவிநாசியின் பழம்பெயர் திருப்புக்கொளியூர் ஆகும். இறைவன் ஆடிய அக்கினித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம். 'விநாசி' என்றால் பெருங்கேடு என்று பொருள்படும்.

Read More

அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்ற ஐராவதம்!

இதுவரை எத்தனையோ பாடல்பெற்ற தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசி ஏற்படுத்திய பிரமிப்பும் நெருக்கமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஏற்கனவே இது பற்றி நாம் சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறோம். மற்ற தலங்களை போல அல்ல அவிநாசி. விதியையே மாற்றி இழந்தவைகளை மீட்டுத் தரும் தலம். (நம்பிக்கை இருந்தால்!) பொதுவாக எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு இடப்பக்கம் இருக்கும் அம்பாள் இங்கு வலப்பக்கம் இருக்கிறார். இப்படி பல சிறப்புக்கள் அவிநாசிக்கு உள்ளன. மேலும் சுந்தரருக்கு

Read More

புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!

மகா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது ஒரு கூடுதல் சந்தோஷம் அனைவருக்கும் ஏற்படுகிறது.. காரணம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதோடு நமக்கு ஏதாவது ஒரு டிப்ஸ் கிடைத்துவிடுகிறது. கீழ்கண்ட இந்த மூன்று அனுபவத்திலும் மூன்று முத்தான டிப்ஸ்கள் அதுவும் சாட்சாத் ஸ்ரீ பெரியவாவே கூறிய டிப்ஸ்கள் அடங்கியிருக்கின்றன என்பது எத்தனை அற்புதம். சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள யாவரும் அதை பின்பற்றி பலனை பெறலாம். உள்ளங்கை நெல்லிக்கனி போல அவை இருப்பதால்

Read More

“மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை!

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன். “ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர். “மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” “உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” “அப்படியா சொல்கிறீர்கள்?“ “ஆமாம்!” “அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?” “மனதைப் புரிந்து கொள்... அது போதும்.” “எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன். “இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் - “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து

Read More

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஆண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர்

Read More

அன்புள்ள அப்பாவிற்கு நமஸ்காரம்…! (தவறவிடக்கூடாத ஒரு பதிவு)

அண்மையில் நாம் படித்து வியந்த சிலிர்த்த அழுத கதை இது. ஒரு கதை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். படிக்கத் துவங்கினால் முடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பீர்கள் அங்கே இங்கே பார்வையோ சிந்தனையோ திரும்பாது என்பது உறுதி. இந்த கதை கொடுக்கும் மெஸ்ஸேஜ் இன்றைய சமூகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணை விற்று சித்திரம் வாங்கினால் கூட பரவாயில்லை. சில்லறைகளை அல்லவா இன்றைய சமூகம் வாங்கிக்கொண்டிருக்கிறது. யாருக்கு இழப்பு? சிந்திக்கவேண்டிய வேளை;

Read More

நாம் வேண்டியதை தருவான்; தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வான்!

தமிழகம் முழுக்க எண்ணற்ற தொன்மை வாய்ந்த தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலத்தின் பின்னேயும் அந்த தல வரலாற்றை தவிர வேறு சில சுவையான வரலாறுகளும் உண்டு. அதே போல ஒவ்வொரு தலத்திற்கும் தல ரகசியம் என்று ஒன்று உண்டு. அவை ஈசனருள் பெற்ற சைவ சமயக் குரவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களும் அந்த ரகசியங்களை தங்களிடையே மட்டும் வைத்து பூட்டிக்கொள்ளாமல், தங்களது பதிகங்களில் மறைப்பொருளாக வைத்து பாடிவிட்டு சென்றிருக்கின்றனர். சில சமயங்களில்

Read More

தீர்க்க முடியாத கணக்கு!

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் டாண்ட்ஸ்ஜிக் என்கிற ஆராய்ச்சி மாணவர் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்தார். ஒரு நாள் அவர் வகுப்புக்கு வர தாமதமாகிவிட்டது. அவர் வருவதற்குள் அன்றைய வகுப்புக்கள் முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தார்கள். கரும்பலைகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் (Maths Problems) காணப்பட்டன. அவை தான் அன்றைய தினத்தின் ஹோம் ஒர்க் அசைன்மென்ட் என்று

Read More