Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!

புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!

print

கா பெரியவா தொடர்புடைய பதிவுகள் எனும்போது ஒரு கூடுதல் சந்தோஷம் அனைவருக்கும் ஏற்படுகிறது.. காரணம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதோடு நமக்கு ஏதாவது ஒரு டிப்ஸ் கிடைத்துவிடுகிறது.

கீழ்கண்ட இந்த மூன்று அனுபவத்திலும் மூன்று முத்தான டிப்ஸ்கள் அதுவும் சாட்சாத் ஸ்ரீ பெரியவாவே கூறிய டிப்ஸ்கள் அடங்கியிருக்கின்றன என்பது எத்தனை அற்புதம். சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள யாவரும் அதை பின்பற்றி பலனை பெறலாம்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல அவை இருப்பதால் தனியே விளக்கவேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

தெய்வமா? பூச்சாண்டியா?

– ஸ்ரீமடம் பாலு | ‘காஞ்சி மகான் தரிசனம்’

ஒரு வைஷ்ணவப் பெண், மயிலாப்பூரிலிருந்து ஸ்ரீ மடத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். கடிதம் மிகவும் உருக்கமாக இருந்தது.

‘என்னை என் மாமியார் மிகவும் கொடுமைப் படுத்துகிறார். எவ்வளவு சுத்தமாக வேலை செய்தாலும், குற்றம் கண்டுபிடிக்கிறார். எப்போதும் என் பிறந்தகத்தைப் பற்றி வசைமாரி, இளக்காரம், அசூயை. ஒரு நிமிஷம் கூட என்னை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. நான் எதிர்த்து பேசுவது இல்லை. ரொம்பவும் பொறுத்துக்கொண்டிருந்தாலும், சில நேரங்களில் மனம் தளர்ந்து போய் விடுகிறது. ஏதாவது விபரீதம் ஆகிவிடப் போகிறதே என்று கவலையாக இருக்கிறது. உங்களை எல்லாரும் நடமாடும் தெய்வம், பேசும் தெய்வம் என்று கூறுகிறார்கள். அது உண்மையானால், என் கஷ்டங்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று சேவித்துக் கேட்டுக் கொள்கிறேன்’.

மானேஜர் கடிதத்தைப் படித்து முடித்ததும் பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.

“அவனைக் கூப்பிடு” என்றார்கள். ஒரு சிஷ்யர் வந்து நின்றார்.

“இந்த லெட்டர்லே இருக்குற விலாசத்தை வாங்கிக்கோ. மயிலாப்பூர் மடத்துக்குப் போ. மடத்து மனுஷ்யாள் வீட்டு ஸ்திரீயை, லெட்டர் எழுதியிருக்கிற பெண்கிட்ட போகச் சொல்லு. சீதை, தமயந்தி, திரௌபதி கதையைச் சொல்லி… அவாளும் ரொம்ப கஷ்டப் பட்டிருக்கா; பொறுமையா இருந்தா.. பின்னாடி, பகவான் கிருபையாலே சௌக்யம் அடைஞ்சாங்கன்னு ஆறுதல் சொல்லச் சொல்லு”.

அவ்வாறே மயிலாப்பூர் மடத்து அன்பரின் மனைவி பக்குவமாக செயல்பட்டாள்.

சில நாள்கள் சென்ற பின், அதே பெண்ணிடமிருந்து கடிதம் வந்தது. ‘சௌக்கியமாக இருக்கிறேன். மாமியார் குணம் மாறிவிட்டார். அதட்டல், மிரட்டல் எல்லாம் மறைந்தே போச்சு. பெரியவா நிஜமா தெய்வம்தான்!’

பெரியவாள் மெதுவாகச் சிரித்துக் கொண்டார்கள்.

“ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கேன். மாமியார்க்காரி மாறிட்டா. இல்லைன்னா… இந்தப் பொண்ணு என்னைப் பூச்சாண்டின்னு சொல்லியிருக்கும்.

மானேஜர், அடுத்த கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.

==========================================================

Don’t miss this…

யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா…?

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

சம்சாரிகள் ஆசிர்வாதம்! 

வாலிபப் பருவதைக் கடந்து கொண்டிருந்த ஒரு தம்பதி வந்து பெரியவாளைத் தரிசனம் செய்து விட்டு, கண்களில் ஏக்கமும் ஆவலும் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார்கள்.

பெரியவாள் உத்தரவுப்படி, பிரம்மச்சாரி இராம கிருஷ்ணன் என்ற மெய்ப் பணியாளர், ‘என்ன?’ என்று அவர்களைக் கேட்டார்.

“கல்யாணமாகி பத்து வருஷமாச்சு…புத்திர பாக்யம் இல்லை…”

ராமகிருஷ்ணன் உடனே, “அரசமரத்தைப் பிரதட்சிணம் பண்ணுங்கோ” என்று தானாகவே பதில் சொல்லிவிட்டார்.

பெரியவாள், மெல்லச் சிரித்தபடி அருகில் நின்று கொண்டிருந்த நாகராஜ அய்யர் என்ற பக்தரைச் சுட்டிக் காட்டினார். “இவரைப் பிரதக்ஷிண-நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டாலே போதும்- நிறையக் குழந்தைகள் பிறக்கும்!”

ஆமாம். நிறையக் குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொண்ட சம்சாரிகள் ஆசீர்வாத பலம், புத்திர, பாக்கியத்தைக் கொடுக்கும் என்பது ஒரு மாமூல் நம்பிக்கை. நாகராஜ அய்யருக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் ஏராளமான குழைந்தைகள். இந்த உண்மையைத்தான் பெரியவாள், மறைமுகமாக விளம்பரப்படுத்தினார்கள்.

ஆனால், குடும்பக் கட்டுப்பாடு என்ற அதர்மம் நன்றாக வேரூன்றிவிட்ட தற்காலத்தில், அரசமரத்தை வலம் வருவபவர்களைக் காணோம்; நாகராஜ அய்யர்கள் இல்லாமலே போய்விட்டார்கள்! இது யுக தர்மமோ?

==========================================================

Don’t miss this…

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

விதி என்னும் விளையாட்டு பொம்மை மதியை எப்படி ஆட்டிப்படைக்கிறது?

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

==========================================================

மணத்தக்காளி மருந்து 

த்த சோகைக்காரர். உடலில் எலும்புகளை எண்ணி விடலாம்.

“ரொம்பவும் கஷ்டமா இருக்கு…”

“என்ன மருந்து கொடுத்திருக்கா?”

“மருந்து இல்லே.தங்கபஸ்பம் சாப்பிடணுமாம்.”

“சாப்பிட்டேன்”

“பெரியவாளே இதுபோல் சொன்னா? எப்படி? தங்க பஸ்பம் வாங்கணும்னா, காசு நெறைய வேணும்.”

“மணத்தக்காளி கேள்விப்பட்டிருக்கியோ?”

“முந்தி எப்பவோ சாப்பிட்டிருக்கேன்.”

“மணத்தக்காளி கீரையில், ஸ்வர்ணச் சத்து இருக்கு. நிறைய மணத்தக்காளி கீரை சாப்பிடு…”

அந்தச் சமயத்தில் மயிலாப்பூர் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளின் அறிவுரையை கேட்டுக்கொண்டிருந்த அவர், ‘வெங்கட்ரமணா வைத்திய சாலையில் தங்க பஸ்பம் ரெடியா இருக்கு. நானே வாங்கித் தர்றேன்” என்றார். பெரியவாள் உள்ளதை உணர்ந்து கொண்டு. சோகைக்காரரருக்கு, அப்போது ஒரு பாட்டில் ரத்தம் உடலில் செலுத்தப்பட்டாற் போலிருந்தது.

“பெரியவாளுக்குத் தங்கமான மனசு!” என்றவாறே நமஸ்கரித்தார்.

நன்றி : ஸ்ரீமடம் பாலு | ‘காஞ்சி மகான் தரிசனம்’

Rightmantra is now available in android. Go to google playstore and type ‘rightmantra’ and download our app.

==========================================================

Don’t miss this…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check –

ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள் 

கனவில் தோன்றி கோவில் கட்டச் சொன்ன மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!

விபீஷண பட்டாபிஷேகம் நடந்த ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் – ஒரு நேரடி தரிசனம்!

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

கோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்? வழிகாட்டும் மகா பெரியவா!!

பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

One thought on “புத்திர பாக்கியமும் சம்சாரிகள் ஆசீர்வாதமும் – மகா பெரியவா சொல்லும் சூட்சுமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *