Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 25, 2024
Please specify the group
Home > Featured > நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

print

மூன்று பெரியவர்களும் கர்நூலில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்கள்.

விஜயவாடாவிலிருந்த பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற துறவியும் கர்நூலுக்கு வந்து ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுடன் தங்குவதாக ஏற்பாடாயிற்று.

விஜயவாடா ஸ்வாமிகள் பாத யாத்திரையாகக் கர்நூலுக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.

அவர் புறப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் ஆன பிறகு, ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஏகாம்பரம்,மேட்டூர் ராஜு ஆகிய இருவரையும் காரில் அனுப்பி விஜயவாடா ஸ்வாமிகளை வழியில் சந்தித்து,காரில் அழைத்து வரும்படி ஸ்ரீ பெரியவாள் உத்தரவிட்டார்கள்.

maha-periyava

இதில் அதிசயம் என்னவென்றால் மகாப் பெரியவாள் தானாக எந்த ஒரு சந்நியாஸியையும் எந்த வாகனத்திலும் போகச் சொல்வதோ, அழைத்து வரச் சொல்வதோ கிடையாது. அது சந்தியாஸ தர்மத்துக்கு விரோதம் என்பது அபிப்ராயம்.

”ஆனால் விஜயவாடா ஸ்வாமிகளை காரில் அழைத்து வரச் சொல்கிறார்களே?” என்று தொண்டர்களுக்கு மகா ஆச்சரியம்!

பூஜ்யஸ்ரீ ஜனார்தனானந்த ஸ்வாமிகளை எங்கே கண்டு பிடிப்பது? நிகழ்ச்சி நிரல் தயாரித்துக் கொண்டு போகக் கூடியவரல்லவே அவர்? செய்தித்தாள்களில் அவருடைய பாதயாத்திரை பற்றித் தகவல் ஏதும் வெளிவருவதில்லை.

காரில் சென்ற தொண்டர்கள் குண்டூர் வரை சென்றார்கள். ஆங்காங்கே விசாரித்துக் கொண்டு முன்னும் பின்னும் பல கிராமங்களில் சுற்றி அலைந்தார்கள். கடைசியில் சிவபுரம் என்ற குக்கிராமத்தில் அவரைக் கண்டு பிடித்தார்கள்.

ஸ்ரீமடம் சிஷ்யர்களைப் பார்த்தும் விஜயவாடா ஸ்வாமிகளுக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

அதற்கு முதல் நாள் சுவாமிகளின் கால் நரம்பு பிசகிப் போய், ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் மிகவும் தவித்துக் கொண்டிருந்தார்.

dscn2965

”அந்தக் கைலாஸநாதன், தான் ஏறிப்போவதற்கு ஒரு கிழட்டு ரிஷபத்தையாவது வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காஞ்சிநாதன் எல்லா வாகனங்களையும் உதறிவிட்டு கால்நடையாகவே போய்க் கொண்டிருக்கிறார்!…

”பக்தர்களிடம் என்ன கருணை! நரம்பு பிசகிய காலுடன் நான் நடக்கவே முடியாது என்பதை, அந்த ஸர்வக்ஞர் தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் வாகனத்தை அனுப்பியிருக்கிறாரோ!”

”காலைச் சரிப்படுத்திக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தால்,அடுத்த சாதுர்மாஸ்யத்துக்குத் தான் கார்நூல் போய்ச் சேருவேன்!…

”பெரியவா, சாட்சாத் பரமேசுவரன் அவதாரம்!” என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மனம் நெகிழ்ந்தார்.

அவருக்கு காரில் ஏறுவதற்குக் கூட சிரமமாக இருந்தது; உட்காரவும் சிரமப்பட்டார்.

கார் புறப்பட்டதும் ஒரு தொண்டர் சமத்காரமாகச் சொன்னார்; ”பெரியவாளுக்கு எல்லோருடைய நாடி – நரம்பும் தெரியும். உங்கள் நரம்பில் தான் பிசகு. நாடியில் இல்லை என்பது பெரியவாளுக்குத் தெரியாதா, என்ன?”

கர்நூலில் விஜயவாடா ஸ்வாமிகளுக்கு சாதுர்மாஸ்ய சங்கல்பம் மட்டுமல்ல, வைத்திய சங்கல்பமும் ஆயிற்று!

– எஸ்.கோதண்ட ராம சர்மா | ஸ்ரீமடம் பாலு | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

==========================================================

maha periyavaஆரோக்கியம் வேண்டுபவர்கள்….

‘செல்வம், புகழ், பணம், பொருள், ஆயுள் – எல்லாம் வேண்டும்தான். முக்கியமாக, ஆரோக்கியம் வேண்டும்’ என்று பிரார்த்தித்தேன். ‘புராண பாராயணங்களைச் செய்வதற்கு எனக்கு நேரமில்லை… எளிதாக, என்னால் செய்யக்கூடியதான முறையைச் சொல்லணும்…’

சட்டென்று, பெரியவாளிடமிருந்து உபதேசம் வந்தது.

‘ஓம் நமோ பகவதே சூர்யநாராயணாய நம:’

தினமும் பன்னிரெண்டு தடவை சொல்லி, கிழக்கே பார்த்து பன்னிரெண்டு நமஸ்காரம் பண்ணு…’

ஆசாரியாளின் ஆசீர்வாத பலத்தினால், எங்கள் அனைவருடைய உடல் பலமும் ஆயுள்பலமும் குறைவில்லாமல் இருக்கின்றன.

– கீதா துரைஸ்வாமி, சென்னை – 20 | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

==========================================================

Don’t miss this…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check – ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள் 

thirupunkoor nandhi 6

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *