Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 26, 2024
Please specify the group
Home > Featured > பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

பித்து பிடித்த உலகில் எந்த பித்தனுக்கு வைத்தியம் தேவை? – பெரியவா காட்டும் வழி!

print

ந்தப் பதிவில் வரும் நபர்கள் போல இன்றும் பலர் உண்டு. அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் அவர்கள் மீது அக்கறை உடையவர்களுக்கும் இது ஆறுதலாக / தீர்வாக இருக்கலாம். குருவார்த்தையே காயத்திற்கு அருமருந்து அல்லவா?

யார் பைத்தியம்?

ஒரு முறை ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார். அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள ஒரு மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர அங்கு வேறு எவருமில்லை.

maha-periyavaஅப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனை கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அனுஷ்டானம் முடிந்த பின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர். ஸ்ரீ சுவாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள். அவர்கள் உட்காரவில்லை. வந்த மனிதரும், அவர் மனைவியும், ”எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீன மில்லாதவனாக நடந்துகொள்கிறான். பெரியவாள் கருணை புரிய வேண்டும்” என்றுமிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள். பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். சில நிமிஷங்கள் கழிந்த பின் பேச ஆரம்பித்தார்கள்.

”இந்த உலகமே பைத்தியக்காரத்தனமான உலகம் தான். பரமேச்வரனையே ‘பித்தா பிறை சூடி’ என்று பாடி நாயனார் ஈச்வரனுக்கே பைத்தியக்கார பட்டம் கட்ட வில்லையா? மதுரையில் ஒரு சமயம், பரமேச்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்தார். பைத்தியக்காரனைப்போல் ஆடிக்கொண்டும், சேஷ்டைகள் செய்து கொண்டும், வைகை வெள்ளத்தை தடுக்கும் நோக்கில் பலருடன் தானும் மண் சுமந்து போனார். அவருடைய சேஷ்டைகளை கவனித்த அரசனின் அதிகாரிகள் அவரை அடித்தார்கள். அந்த அடி அரசன் உள்பட அனைவரின் முதுகிலும் பட்டது. பைத்தியக்கார சேஷ்டையுடன் கூடிய கூலியாள் மறைந்து விட்டார். இந்தக் கதையை நாம் கேட்டிருக்கிறோமல்லவா?”

பிறகு சிறிது நேரம் மௌனம். மறுபடி ஸ்ரீ பெரியவாள் பேசினார்கள்:

”ஆதிசங்கர பகவத்பாதாள் தக்ஷிண தேச யாத்திரை செய்து வரும்போது ஸ்ரீவலி என்ற ஊரில் ஒரு சமயம் தங்கியிருந்தார். அந்த ஊரில் நிறையப் படித்த ஒருவருக்கு ஒரு பிள்ளை. அந்த பையன், தாய் தந்தை உள்பட யாரிடமும் பேசுவதில்லை. ஆசாரியாள் ஊருக்கு வந்ததை அறிந்த பெற்றோர்கள் அந்தப் பையனை ஆசார்யாளிடம் அழைத்து வந்து, தாமும் வணங்கி, பையனையும் வணங்கும்படி செய்து, மகன் உன்மத்தனாக

==========================================================

Don’t miss this…

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

==========================================================

இருப்பதை கூறினார்கள். பகவத்பாதாள் அப்பையனைப் பார்த்து, ‘ஏனப்பா இப்படி ஜடமாக இருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். ‘நான் ஜடமல்ல என்று ஆரம்பித்து வேதாந்த கருத்துக்களைக் கொண்ட பல சமஸ்கிருத செய்யுள்களைப் பாடினான். அவனை சங்கரர் தன்னுடன் விட்டு விடும்படி சொல்ல அப்பையன் ஆச்சார்யர்களுடனே இருந்து அவரிடம் சந்நியாசம் பெற்று ‘ஹஸ்தாமலகர்’ என்று பெயரையும் பெற்று அவருடைய முக்கிய சிஷ்யர்களில் ஒருவரானார்.”

பிறகு பெரியவர்கள் அந்த தம்பதிகளை, ”ஜட பரதரின் கதையைக் கேட்டிருக்கேளா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். ஸ்ரீ பெரியவர்கள் தொடர்ந்து சொன்னார்கள்:

periyava

”அவரையும் புத்தீசுவாதீனம் இல்லாதவன் என்று நினைத்து ராஜாவின் பல்லக்கை தூக்கி சுமக்கச் சொன்னார்கள். பல்லக்கை தூக்கி ஆடி ஆடி வந்ததால் அவரை ராஜாவின் சேவகர்கள் அடித்தார்கள். பிற்காலத்தில் அரசனுக்கு, ஜடபரதர் பெரிய ஞானி என்று தெரிய வந்தது. ராஜாவும் எல்லோரும் அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிப்புக் கேட்டார்கள்.”

பெரியவாள் சொல்லும் கதையை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தனர், அந்தத் தம்பதிகள்.

விஷ்ணுபக்தன் ஒருவன் மகாவிஷ்ணுவைக் காண ஆசைக் கொண்டு பைத்தியக்காரத்தனமாக கடல் நீரை மொண்டு கொட்டுவதில் ஈடுபட்டக் கதை, காஞ்சியில் ஊமையாகவும் பைத்தியமும் போலிருந்த மூகன் காமாக்ஷி அம்பாளின் அனுக்கிரகத்தால் கவியாக மாறி அம்பாளின் மீது ஐநூறு ச்லோகம் பாடிய விவரமும், பிறகு சமீபக் காலத்தில் காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைப் பகுதியில் பைத்தியம் போல் எது கொடுத்தாலும் சாப்பிடுவார், ஒன்றும் சாப்பிடாமலும் இருப்பார்; எங்கு வேண்டுமானாலும் படுப்பார்; இப்படி அலைந்து திரிந்து கொண்டிருந்தவரான சேஷாத்ரி சுவாமிகள் பற்றியக் கதைகளையும் அவர்களுக்கு பெரியவாள் சொன்னார்.

அந்த தம்பதிகளைக் காட்டிலும் புத்திசுவாதீனமில்லாத அந்த பையன் மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்ததை பெரியவர்கள் கவனித்தார்கள். சில நிமிஷங்கள் மௌனத்திற்கு பின் ஸ்ரீபெரியவாள் மறுபடி சொன்னார்கள். ”என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள். ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதியினர் தங்கள் பிள்ளையுடன் வந்தார்கள். அந்தப் பையன், ஆறு மாதமாக பல் தேய்ப்பதில்லை, சாப்பிடுவதில்லை, துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால் அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை. வேஷ்டியில் அழுக்கு படுவதில்லை என்று சொன்னார்கள். பிறகு கண்ணீர் வடிய, ‘அவன் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும் போது, நாங்கள் சாப்பிடுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது’ என்றார்கள். ‘அவனால் ஏதாவது சிரமம் இருக்கா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் உபத்ரம் ஏதுமில்லை. என்றும் எப்போதாவது, ‘ஸ்ரீ ராம சிவ’ என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர்கள் சொன்னார்கள். நான் இவனும் ஒரு மகான்தான். நீங்கள் சாப்பிடும்போது, கொஞ்சம் சாதம், குழம்பு ஆகியவைகளை, சுவாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல் பையன் இருக்குமிடத்தில் வைத்து விடுங்கள். அவன் சாப்பிடாவிட்டால் அவைகளை எடுத்து யாராவது ஏழைகளுக்கு கொடுங்கள் என்று சொன்னேன்.”

பிறகு இன்று சில வேறு பைத்தியங்களைப் பற்றி ஸ்ரீ பெரியவர்கள் கூறினார்கள்.

மறுபடிக் கேட்டுக்கொண்டிருந்த தம்பதிகளையும், பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவர்கள் கூறியதாவது: ”வன்முறையில் ஈடுபடும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்குத்தான் வைத்தியம் தேவை. எவருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காத புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் பற்றி அனாவசியமாக கவலைப் படவேண்டாம். சொல்லப் போனால் அவர்கள் ஞானிகளாகலாம். அவர்கள் கெடுதி செய்ய மாட்டார்கள். பாப கார்யங்களை செய்ய மாட்டார்கள். அவர்கட்கு துவேஷம் கிடையாது. அவர்களை பார்க்கும்போது நானும் பைத்தியமாகலாமா? என்று நினைத்து பார்க்கின்றேன். நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று சிரித்தபடி ஸ்ரீ மகாபெரியவாள் முன் உட்கார்ந்திருந்த அந்த பையனை நோக்கிக் கேட்டார்கள். அந்தப் பையனும் சிரித்தான்.

அந்தப் பையனின் பெற்றோர்கள், ஸ்ரீபெரியவர்கள், வெகுநேரம் பேசியதைக் கேட்டு, பையனைப் பற்றிய வருத்தமும், மனக்கவலையும் குறைந்தவர்களாக, தெளிவுடனும், மனச்சாந்தியும் அடைந்தவர்களாக, விடைப்பெற்று சென்றனர்.

அருகிலிருந்து பெரியவர்கள் பேசியதனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட பேச்சை மறக்கவே முடியாது.

– ஸ்ரீமடம் பாலு | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

==========================================================

பிரார்த்தனை கிளப் பதிவு குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு!

அடுத்த பிரார்த்தனை கிளப் பதிவு வரும் வெள்ளி 11/11/2016 அன்று புதிய பிரார்த்தனைகளுடன் அளிக்கப்படும். கடந்த பிரார்த்தனை பதிவில் அளித்த கோரிக்கைகளுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். (அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club)

கடந்த பிரார்த்தனைக்கு தலைமையேற்ற பேரம்பாக்கம் வைகுண்டவாசப்பெருமாள் கோவில் பட்டர் ஸ்ரீ ராகவன் பட்டரை சந்தித்து கௌரவித்து நமது கோரிக்கைகளை அளித்தபோது...
கடந்த பிரார்த்தனைக்கு தலைமையேற்ற பேரம்பாக்கம் வைகுண்டவாசப்பெருமாள் கோவில் பட்டர் ஸ்ரீ ராகவன் பட்டரை சந்தித்து கௌரவித்து நமது கோரிக்கைகளை அளித்தபோது…

நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனைக் கோரிக்கைகளை பல அன்பர்கள் அனுப்பியிருக்கின்றனர். அனுப்பி வருகின்றனர். கோரிக்கைகளின் தீவிரத்தையும் அவசரத்தையும் கருத்தில் கொண்டே அவற்றை நமது பிரார்த்தனை பதிவில் சேர்த்து வருகிறோம். பிரார்த்தனை கிளப் பதிவின் மற்றுமொரு முக்கிய அம்சம் அதை தலைமேற்று நடத்துபவர்கள். இது தான் மிகவும் சவாலான ஒரு விஷயம். அடுத்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் யார் என்று இதுவரை தெரியவில்லை. அந்தப் பணி நிறைவடையவில்லை. இறைவனின் திருவுள்ளம் யார் என்று தெரியவில்லை. பார்க்கலாம்…!

* கடந்த பிரார்த்தனை பதிவில் கோரிக்கை சமர்பித்தவர்கள் ஒருவகையில் உண்மையில் பாக்கியசாலிகள். நாம் சென்ற திருமந்திர நகர் சங்கரராமேஸ்வரர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த துளசி வனம், திருப்பராய்த்துறை, மப்பேடு சிங்கீஸ்வரர், நரசிங்கபுரம் நரசிம்மர், பேரம்பாக்கம் வைகுண்டவாசப்பெருமாள், சோளீஸ்வரர் உள்ளிட்ட பல தலங்களில் அவர்களுக்காக அர்ச்சனையும் பிரார்த்தனையும் நடைபெற்றது. ** பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்களும் வந்திருக்கின்றன. அதையும் ஒரு தனிப்பதிவாக அளிக்கிறோம்.

நாராயண!

Rightmantra is now available in android. Go to google playstore and type ‘rightmantra’ and download our app.

==========================================================

Don’t miss this…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check – ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள் 

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *