Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

print
நேற்றைக்கு மாலை சுமார் ஏழு மணியளவில் மும்பையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டார். சமீபத்தில் நமது முகநூல் பகிர்வு (தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?) ஒன்றை பார்க்க நேர்ந்ததாகவும் நம்மிடம் பேச விரும்புவதாகவும் சொன்னார். கந்தசஷ்டி தரிசனத்திற்காக அப்போது போரூர் முருகன் கோவிலில் இருந்தபடியால் “கோவிலில் இருக்கிறேன். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கூப்பிடமுடியுமா? என்று கேட்டோம். நிச்சயம் அழைப்பதாக கூறியவர் அதன் படி இரவு 9.00 மணியளவில் அழைத்தார்.

lord-muruga

மனிதர் பேசும்போதே உடைந்து அழுதுவிட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள உறவின் இழப்பு உண்மையில் ஈடு செய்யமுடியாதது. அவர் நிலையில் நம்மை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. “எனக்கு ஏன் இப்படி ஆனது? என் தெய்வம் ஏன் இப்படி பாராமுகமாய் போனது?” என்று குமுறினார். நமக்கு தெரிந்த சில அதே போன்ற கேள்விக்குரிய நிகழ்வுகளை அவரிடம் பகிர்ந்துகொண்டு இது தான் உலகம் என்று ஓரளவு யதார்த்தை புரியவைத்தோம். இருப்பினும் அவரை முழுமையாக சமாதானப்படுத்த முடியவில்லை. ஏனெனில் சில கேள்விகளுக்கு விடைகளை ஆண்டவன் ஒருவனால் தான் தரமுடியும்.

“ரைட்மந்த்ரா பதிவுகள் சிலவற்றின் சுட்டிகளை உங்களுக்கு அனுப்புகிறேன். படியுங்கள். உங்கள் மனம் ஓரளவு ஆறுதலடையலாம். காலம் உங்கள் காயங்களை ஆற்றும். TIME IS THE BEST HEALER, GO GIVE SOME TIME” என்று கூறி முடித்தோம்.

கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

அடுத்த அரைமணிநேரத்தில் அவருக்கு விடையளிப்பது போல சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ரைட்மந்த்ராவில் அளித்த பதிவொன்று கண்ணில் பட்டது. (அதை சற்று மேருகூற்றி மீண்டும் அளித்திருக்கிறோம்).

படியுங்கள்… பகிருங்கள்… யாருடைய கண்ணீரையாவது இது துடைக்க உதவலாம்…!

இறைவனின் படைப்பில் மிக மிக உன்னதமானது எது தெரியுமா?

மரங்கள் தான்!

கடுமையான கோடை. சூரியன் சுட்டெரிக்கிறான். ஒரு மாபெரும் மரம் கண்ணுக்கு படுகிறது. அனைவரும் அதன் நிழலில் இளைப்பாறுகிறார்கள். நமக்கு நிழல் தரும் அந்த விருட்சம், சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களை தான் தாங்கிக்கொள்கிறது. ஆகையால் தான் நமக்கு நிழல் கிடைக்கிறது. வெயில் தாங்க முடியவில்லை என்றால், நாம் வேறு எங்காவது நகர்ந்து புகலிடம் தேடிக்கொள்ள முடிகிறது. பாவம் மரங்கள். அவை அவ்வாறு செய்ய முடியாது. அவை சூரியனின் வெப்பத்தை தாங்கிக்கொண்டே ஆகவேண்டும்.

எத்தனையோ பேர் இந்த தளத்தை ஒரு விருட்சமாக கருதி, தாங்கள் இளைப்பாறும் வேளையில், நமக்கு சோதனைகளோ அல்லது மனதுக்கு கஷ்டங்களோ ஏற்படும் வேளையில் நாம் இளைப்பாறுவதற்கு என்று சில பெரிய விருட்சங்கள் இருக்கின்றன. திருக்குறள், விவேகானந்தரின் உரைகள், பாரதியார் கவிதைகள், கண்ணதாசனின் எழுத்துக்கள் ஆகியவை தான் அவை. அவற்றுள் மிகவும் முக்கியமானது கண்ணதாசனின் காலத்தை வென்ற படைப்புக்களில் ஒன்றான ‘அர்த்தமுள்ள இந்துமதம்.’

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதே தவிர இது மதம் சார்ந்த நூல் அல்ல. இது ’20 ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் வேதம்’ என்பது தான் உண்மை. அந்தளவு சராசரி வாழ்க்கையில் நாம் சந்தித்துவரும் பிரச்சனைகள், சோதனைகள் ஆகியவற்றுக்கு இந்த நூலில் கண்ணதாசனின் பார்வையில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

எதிரிகளின் தொல்லையா?

நண்பர்களின் துரோகமா?

மனைவி வஞ்சித்துவிட்டாளா?

கணவன் சரியில்லையா?

உறவுகள் உயிரை எடுக்கிறார்களா?

பொருளாதார பிரச்னையா?

தெய்வம் பார்க்கவில்லையா?

ஊர் ஏளனம் செய்கிறதா?

– அத்தனைக்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. அந்த பதில் நம்மை சமாதானப்படுத்தும், துவண்டுகிடக்கும் நமது உள்ளத்தை தூக்கி நிறுத்தும், நமது இறை சிந்தனையை மேன்மேலும் பெருகச் செய்யும் என்பதே உண்மை.

கண்ணதாசன் என்கிற அந்த விருட்சத்தில் நாம் ஒரு முறை இளைப்பாறியபோது படித்தது இது. உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி இங்கு பதிவு செய்கிறோம்.

– ரைட்மந்த்ரா சுந்தர், Rightmantra.com

==========================================================

Over to கண்ணதாசன் – ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

சோதனையும் வேதனையும்!

‘நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!’

“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறதே என்ன செய்ய?” என்று தஞ்சாவூரிலுள்ள ஒருவர் கேட்கிறார்.

எப்போது நமக்குத் துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.

kannadasan

சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.

திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.

பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.

முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.

பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.

வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.

சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.

சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.

நண்பா, வருகின்ற சோதனைகளையெல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.

ராசி மாறும்போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும்போது, அதன் பலன் தெரியும்.

“நிழலருமை வெய்யிலிலே
நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையில்
காண்மின்”

என்றார்கள்.

Gopuram

வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.

ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும், எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.

இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.

பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.

வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன.    மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.

விதியும் பூர்வஜென்மமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.

ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், `கண்ணா’ என்றோ, `கந்தா’ என்றோ ஒருமுறை அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.

`துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.

இந்துமதம் வேரூன்றியுள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டுக் கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?

கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?

“காலம் ஒருநாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்!”

என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.

அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் ‘ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதுதான்.

பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?

பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.

‘போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.

‘போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.

குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் `வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.

அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.

அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.

இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.

இது சத்தியம்.

நன்றி : கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

==========================================================

இந்த தளம் யாரை நம்பி நடக்கிறது தெரியுமா? 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

உங்களை நம்பி உங்களுக்காகவே இந்த தளம் நடத்தப்படுகிறது.

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

==========================================================

Also check :

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

உயர உயர பறக்க வேண்டுமா?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *