Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

print
மது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் வரிசையில் நான்காவது பதிவு இது.

வேதங்களே தர்மத்தின் ஆதாரம். வேத சம்ரட்சணம் இல்லேயேல் தர்மம் இல்லை. வேதங்கள் இறைவனின் மூச்சுக் காற்று. அதற்கு மொழிபேதம் கற்பித்து புறக்கணிப்பது அறிவீனம். தீந்தமிழில் தேவாரம் பாடிய மூவர் கூட வேதங்களை பழித்ததில்லை. புறக்கணித்ததுமில்லை. எனவே வேதம் தழைக்க உதவுவது நம் அனைவரது பொறுப்புக்களுள் ஒன்றாக ஆகிறது.

காஞ்சியில் மகா பெரியவா மணிமண்டபத்தில் காணப்படும் நான்கு வேத மூர்த்திகளின் அரிய புகைப்படம்
காஞ்சியில் மகா பெரியவா மணிமண்டபத்தில் காணப்படும் நான்கு வேத மூர்த்திகளின் அரிய புகைப்படம்

நமது தளத்தை பொருத்தவரை தீபாவளியை அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான வகையில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நீங்கள் அறிவீர்கள். அவற்றில் ஒன்று வேத சம்ரட்சணம்.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது தி.நகர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள ‘ஸ்ரீ வேதவித்யா ஆஸ்ரமம்’ என்னும் வேத பாடசாலையில் ‘ஜகத்குரு ஆதி சங்கரர்’ படத்தை திரையிட்டு அங்குள்ள வித்யார்த்திகளுக்கு வஸ்திர தானம் செய்து, பாடசாலைக்கு பாத்திர பண்டங்கள் உள்ளிட்டவற்றை பரிசளித்து கொண்டாடியது நினைவிருக்கலாம்.

எனவே இந்த ஆண்டும் வேத வித்யார்த்திகளுக்கு ஏதேனும் செய்து அவர்களுடன் தீபாவளியை கொண்டாடவேண்டும் என்று முடிவு செய்த போது நமக்கு நினைவுக்கு வந்தது மேற்கு மாம்பலம் சுப்பிரமணி தெரு ‘ஸத்குரு ஸபா’ வேத பாடசாலை தான்.

இந்த பாடசாலையில் சுமார் 17 மாணவர்கள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இங்கு நாம் கோ-சம்ரட்சணம் செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். மேலும் நமது தளத்தின் ஆயுத பூஜைக்கு மேற்படி பாடசாலை மாணவர்கள் சுமார் 10 பேர் வந்திருந்து நமது அலுவலகத்தில் வேதம் ஓதியது குறிப்பிடத்தக்கது.

 வேத வித்யார்த்திகள் நமது அலுவலகத்தில்...

வேத வித்யார்த்திகள் நமது அலுவலகத்தில்…

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகள் மாமாவை சந்தித்து, மாணவர்களுக்கு தீபாவளிக்கு வஸ்திர தானம் அளிக்கும் நமது விருப்பத்தை தெரிவித்தோம். “தாராளமாக செய்யுங்கள்” என்று நமக்கு ஒப்புதல் தந்தார்.

தொடர்ந்து மாணவர்களை சந்தித்து அவர்களது தேவை என்ன, எத்தனை முழம் வேஷ்டி ஒவ்வொருவருக்கும் வேண்டும், சட்டைகளின் அளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்துக்கொண்டோம்.

17 மாணவர்கள் மற்றும் பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகள் + அவரது இல்லத்தரசி திருமதி.கீதா பாலசுப்ரமணியன், பாடசாலை சமையற்காரர், இரண்டு பணிப்பெண்கள் ஆகியோருக்கு வேஷ்டி, சட்டை, புடவை மற்றும் ரவிக்கை பிட், பட்சணம் (ஸ்வீட், காரம்) மற்றும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

முதலில் உத்தேச படஜெட் தயார் செய்யப்பட்டது. பின்னர் இது போன்ற கைங்கரியங்களுக்கு மனமுவந்து உதவக்கூடிய சில நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் தேவைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

கைங்கரியத்துக்கான நாளாக சனிக்கிழமை 07/11/2015 முடிவானது. ஏற்பாடுகளையும் ஒவ்வொன்றாக செய்யத் துவங்கிய நேரம் கனபாடிகள் மாமாவை சந்திக்க சென்றோம். மாணவர்கள் அனைவரும் தீபாவளிக்காக அவரவர் ஊர்களுக்கு சனிக்கிழமை புறப்படுவதால் ஒரு நாள் முன்னதாக அதாவது வெள்ளிக்கிழமை மாலை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால் அதுவும் தெய்வச் செயல் தான். காரணம் பின்னர் சொல்கிறோம்.

 கோ-பூஜையை நடத்தி வைக்கும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகள்...

கோ-பூஜையை நடத்தி வைக்கும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகள்…
வாசகர்கள் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது....
வாசகர்கள் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது….

Vedha Samratchana 5சனிக்கிழமை காலை மொத்த பர்சேஸையும் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமையே செய்யவேண்டிய நிர்பந்தம்.

மேற்கூறிய அனைத்தும் வாங்கவேண்டும் என்றால் நிச்சயம் நான்கு இடங்களுக்கு சென்று அலைந்து திரிந்து வாங்கவேண்டும். மேலும் டூவீலரில் சென்று வாங்கி வர முடியாது. கார் அல்லது ஆட்டோ இருந்தால் சௌகரியப்படும். ஆட்டோவோ கால்டாக்சியே அமர்த்துவது ஒரு விஷயமல்ல. அதற்கு ஆகும் தொகையில் ஏதேனும் நல்ல விஷயத்தை செய்யலாம். வேறு ஒன்றுமில்லை.

நண்பர் ராஜ்குமார் உதவிக்கு வந்தார். தேவையானால் தனது காரை எடுத்துக்கொண்டு வருவதாக சொன்னார். (ஏற்கனவே மத்தூருக்கு கொலு பொம்மைகளை ஏற்றிச் செல்ல தனது காரை இவர் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது!) “பட்டாசு கிப்ட் பாக்ஸ் மட்டும் 20 தேவைப்படுகிறது. முதலில் அதை வாங்கவேண்டும் சார்” என்றோம்.

Vedha Samratchana 6

Vedha Samratchana 7நான்கு இடத்தில விசாரித்து ரேட் சொல்வதாகவும் நாம் ஒ.கே. செய்த பிறகு வாங்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்து அவர் நான்கைந்து கடைகளுக்கு சென்று விசாரித்து விலைப்பட்டியல் அனுப்பினார். நாம் முடிவெடுக்க சௌகரியமாக அந்தந்த கிப்ட் பாக்ஸ்களின் படங்களை கூட வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார். ஆர்டர் கன்பர்ம் செய்யும்போது கூடுதல் டிஸ்கவுன்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறினார். அவர் கூறியதில் ஓரளவு எக்கானமியாக இருந்த சுப்ரீம் சில்வர் என்னும் பேக்கை தேர்வு செய்து அதற்குரிய தொகையை அவரிடம் கொடுத்தோம். (இறுதித் தொகையில் ஒரு சிறு பகுதியை தனது பங்காக இருக்கட்டும் என்று கூறி, கொஞ்சம் பணத்தை திருப்பி தந்துவிட்டார் திரு.ராஜ்குமார்.)

Cracker reciept copyபட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் பத்திரமாக வைத்திருப்பதாகவும், நேரே பாடசாலைக்கு அவற்றை கொண்டு வந்து சேர்ப்பதாகவும் கூறினார்.

பட்டாசு வாங்கிய ரசீதில் ஒரு உன்னதமான விஷயத்தை பார்த்ததாகவும் நாம் அதை கவனித்தோமா என்றும் நம்மை கேட்டார்.

அவர் சொன்ன பிறகு தான் நாம் நம்மிடம் இருந்த ரசீதை கவனித்தோம். ரசீதை இணைத்திருக்கிறோம். அந்த பட்டாசு கிப்ட் பாக்ஸின் பெயரை கவனியுங்கள். இது கடைக்கார்கள் அவர்கள் சௌகரியத்துக்கு ஒவ்வொரு கிப்ட் பேக்கிற்கும் வைத்திருக்கும் பெயர்.

ஆக நம்மை கருவியாக்கி வேத வித்யார்த்திகளுக்கு இறைவன் தரும் பரிசு இது.

பட்டாசு வாங்கியாகிவிட்டது. அடுத்து வஸ்திரம் மற்றும் துண்டு.

உழவாரப்பணிகளின் போது வேஷ்டி மற்றும் துண்டுகளை நாம் அளித்து சம்பந்தப்பட்டவர்களை கௌரவிப்பதால் அடிக்கடி வேஷ்டி, துண்டு இவற்றை வாங்க வேண்டியிருக்கும். எப்போது அவற்றை வாங்கினாலும் வடபழனி அம்பேத்கர் சாலையில் உள்ள காதி கிராஃப்ட்டில் தான் வாங்குவோம். நாம் கொடுக்கும் தொகை சிறிதோ பெரிதோ ஏதோ ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் கல்லா பெட்டிக்கு செல்வதற்கு பதில் ஒரு ஏழை நெசவாளன் வீட்டில் அடுப்பெரிய பயன்பட வேண்டும் என்கிற நமது நோக்கமே காரணம். (நன்றி திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்!)

Vedha Samratchana 8

Vedha Samratchana 9Vedha Samratchana 1020 வேஷ்டி + துண்டு + சால்வை + பெரியவர்களுக்கு மட்டும் இரண்டு காட்டன் ஷர்ட்டுகள். (மாணவர்களுக்குரிய மற்ற அளவுகளில் இங்கு சட்டைகள் இல்லை) ஆகியவற்றை அங்கேயே வாங்கிவிட்டோம். அருகில் உள்ள மற்றொரு கடையில் மூன்று புடவைகள் + ரவிக்கை பிட். அனைத்தையும் எடுத்துக்கொண்டு நண்பர் ஒருவரை உதவிக்கு வைத்துக்கொண்டு அலுவலகம் கொண்டு வந்து சேர்த்தோம்.

இதற்கிடையே மனதில் ஒரு சிறு ஆசை அரும்பியது. பாடசாலையில் பசுக்கள் இருப்பதால் கோ-பூஜை செய்துவிட்டு பிறகு வஸ்திர தானம் வைத்துக்கொள்ளலாமே என்று திடீரென்று தோன்ற, கோ-பூஜைக்கு ஏதேனும் விசேஷமாக வாங்கி வரவேண்டுமா என்று கேட்க நேரே பாடசாலைக்கே சென்றோம்.

மாமா எங்கோ சென்றிருந்தார். மாமி தான் இருந்தார். கோ-பூஜை பற்றி கூறியதும் “நீங்க தான் பாடசாலைக்கு எவ்வளவோ பண்றீங்களே. அதனால நீங்க பழமும் பூவும் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். கொஞ்சம் சீக்கிரமே வந்துடுங்க. பசங்கல்லாம் விட்டா வீட்டுக்கு ஓடியே போய்டுவாங்க. எல்லாரும் தீபாவளி பரபரப்புல இருக்காங்க” என்றார் மாமி.

மறுபடியும் நண்பர் ராஜ்குமார் ஃபோன் செய்து “வேறு என்ன வாங்கவேண்டும்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்” என்றார்.

அவரிடம் கோ-பூஜை பற்றி குறிப்பிட்டு “கொஞ்சம் உதிரிப்பூக்களும் பசுக்களுக்கு பழம் ஒரு டஜனும், (தீவனம் அடிக்கடி நாம் இங்கு வாங்கித் தருவதால் தீவனம் தனியாக தேவைப்படவில்லை) வித்யார்த்திகளுக்கு வஸ்திரம் வழங்கும்போது தட்டில் வைத்துக்கொடுக்க தாம்பூலம் (வெற்றிலை பாக்கு பழம்) 20 செட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். மற்ற அனைத்தும் நான் இங்கே ஒவ்வொன்றாக தயார் செய்துவிட்டேன்” என்றோம்.

கோ-பூஜையும் நடக்கிறது என்றவுடன் அவருக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. மடமடவென அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன.

இடையே நம் முகநூல் நண்பர் திருமதி.சாந்தா ரோகிணி ஃ போன் செய்தார். தான் வரவிரும்புவதாகவும் ஏதேனும் வாங்கி வரவா என்று கேட்டார்.

மாணவர்களுக்கு சீதாப்பழம் மிகவும் பிடிக்கும். இரண்டு டஜன் சீதாப்பழம் கிடைத்தால் வாங்கி வாருங்கள் அது போதும். மற்றதெல்லாம் நாங்கள் இங்கே வாங்கிவிடுவோம் என்றோம்.

“சீதாப் பழமா ? அது இங்கே கிடைக்குமான்னு தெரியலியே….? ட்ரை பண்றேன்” என்றார்.

அடுத்து இரண்டு விஷயங்கள் பாக்கி இருந்தன. பட்சணம் மற்றும் ஷர்ட்டுகள்.

நமது அலுவலகம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் தீபாவளி பட்சணம் (கால் கிலோ சுவீட் + கால் கிலோ காரம்) 20 செட்கள் வாங்கிக்கொண்டோம்.

ஷர்ட்டுகள் அனைத்து அளவுகளிலும் வாங்கவேண்டும். ஒரே இடத்தில் வாங்க வேண்டும். (காதி கிராப்டில் மாணவர்களுக்குரிய அளவுகளில் இல்லை) பெரிய கடைகளுக்கு சென்று வர நேரமில்லை.

ஷர்ட்டுகளை பொருத்தவரை வித்யார்த்திகள் அனைவருக்கும் டி-ஷர்ட்டுகளை வாங்கும் பொறுப்பை நண்பர் பாலா ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தார். தானே அவற்றை வாங்கி வந்துவிடுவதாக சொன்னார். நம்மிடம் இருந்த தொகையும் நடப்பு செலவுகளுக்கு சரியாக இருந்தது. எனவே ஷர்ட்டுகள் தனியே வாங்கவேண்டியதில்லை என்று தீர்மானமானது. (மேலும் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் நம்மிடம் டி-ஷர்ட்டுகளே தங்களுக்கு வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தனர்).

பொதுவாக இது போன்ற வாய்ப்புக்களை தங்களுக்கு புண்ணியம் சேர்க்க மட்டுமே நம்மிடம் வருபவர்களிடம் நாம் அளிப்பதில்லை. நம் தளத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்டு அதன் பணிகளில் உதவுபவர்களுக்கு மட்டுமே இத்தகைய மகத்தான கைங்கரியங்களில் பொருளாதார ரீதியாக பங்குகொள்ளும் வாய்ப்பை வழங்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். காரணம் சில கசப்பான அனுபவங்கள். கருவேப்பிலை போல நம்மை பயன்படுத்திக்கொண்டு பின்னர் தூக்கி எறிந்துவிட்டு சில புண்ணியாத்மாக்கள் செல்வதையடுத்து இந்த முடிவு. (நம்மளை இப்படி நினைக்க வெச்சிட்டீங்களே…!)

ஆனால் பாலா அவர்களை பற்றி நிறைய சொல்லவேண்டும். ஞானானந்தகிரி ஸ்வாமிகள் பற்றிய தொடர் விரைவில் துவங்கவிருக்கிறது. அதில் பாலா அவர்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

அவரிடம் மாணவர்களின் அளவை தந்துவிட அவர் 20 டி-ஷர்ட்டுகளை தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் பெரிய கடை ஒன்றில் வாங்கிவிட்டார். “மாலை 6.30 அளவில் நேரே பாடசாலைக்கு அவற்றை கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுங்கள், நானும் என்னிடம் உள்ள அனைத்தையும் ஏற்றிக்கொண்டு அங்கு வந்துவிடுகிறேன்” என்றோம்.

ஏற்கனவே பாதி பொருட்களை நண்பர் ராஜ்குமார் பாடசாலையில் சேர்த்துவிட்ட நிலையில் நம் அலுவலகத்தில் வைத்திருந்த வஸ்திரம், துண்டு, புடவை, பட்சணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட நிலையில், முக்கியமான ஒன்று வாங்கவேண்டியிருந்தது.

அலுவலகம் அருகே சற்று தள்ளி இருந்த கடையில் ‘அதை’ வாங்கினோம். நல்லவேளை கேட்டது கேட்ட எண்ணிக்கையில் ஒரே மாதிரி கிடைத்தது.

‘அது’ என்ன?

கடைசியில் சொல்கிறோம்.

அடுத்த சில நிமிடங்களில் பாடசாலையில் ஆட்டோ நின்றது.

நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள்.

நண்பர்களிடம் சொல்லி, உடனடியாக அனைத்தையும் தனித் தனியாக பிரிக்கச் சொன்னோம். ஏற்கனவே வஸ்திரம் தனித் தனி கவர்களில் வைத்து அந்தந்த வித்யார்த்திகளின் பெயர்களை எழுதிவிட்டோம்.

மாமியை போய் பார்த்து “இதை பிரிஜ்ஜில் வையுங்கள். பிறகு வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறி ‘அதை’ பிரிஜ்ஜில் வைக்கச் சொன்னோம்.

இதற்கிடையே “கோ-பூஜை ஆரம்பிச்சுடுவோமா?” என்று கேட்டார் மாமா.

உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டு பசுக்கள் அலங்கரிக்கப்பட்டன. மாமாவே முன்னின்று நமக்கும் நண்பர்களுக்கும் சங்கல்பம் செய்வித்தார். புத்திர பாக்கியம் உள்ளிட்ட வேறு பல முக்கிய வேண்டுதல்கள் உடைய நம் வாசகர்களின் பெயர்களும், பிரார்த்தனை கிளபுக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பெயர்களுக்கும், கைங்கரியத்துக்கு உதவிய நண்பர்களின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.

“நாளையவிட இன்னைக்கு கோ-பூஜை நடக்கிறது விசேஷம். இன்னைக்கு ஐப்பசி வெள்ளிக்கிழமை” என்றார் மாமா எங்களிடம்.

அப்போது தான் நமக்கும் தோன்றியது… அட… ஆமாம்… வெள்ளிக்கிழமையில் கோ-பூஜை அமைந்துவிட்டதே… எல்லாம் இறையருள்.

தொடர்ந்து சுமார் அரைமணிநேரம் கோ-பூஜை நடைபெற்றது. பசுக்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பின்னர் பூக்கள் போட்டு காமேதேனு அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது.

மாமா மந்திரங்களை சொல்ல சொல்ல நாங்கள் அர்ச்சித்தோம்.

பூஜை இறுதியில் பழங்களும் தீவனமும் பசுக்களுக்கு எங்கள் அனைவரையும் கொண்டு அளிக்கப்பட்டன.

மகா பெரியவா மேற்பார்வையில் இந்த கோ-பூஜை நடைபெற்றது என்பது தான் விசேஷமே. (இடது ஓரம் சுவற்றில் பாருங்கள்!).

கோ-பூஜை நிறைவு பெற்றதையடுத்து வஸ்திர தானம் நடைபெற்றது.

சங்கல்பம் செய்யப்படுகிறது..
சங்கல்பம் செய்யப்படுகிறது..

Vedha Samratchana 15Vedha Samratchana 16பூர்வாங்க வஸ்திர தானம் துவங்குவதற்கு முன்னர் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வேதம் ஓதியது கண்கொள்ளா காட்சி. சுமார் 20 நிமிடங்கள் ருத்ரம், ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம் முதலியவற்றை ஓதினார்கள்.

தொடர்ந்து பூஜை நடைபெற்றது. திரு.கனபாடிகள் மாமா இங்கே மீண்டும் எங்கள் அனைவரின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்துவைத்தார்.

அடுத்து வஸ்திர தானம் துவங்கியது. முதலில் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளுக்கு நாம் பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவருக்கு வஸ்திரங்களை அளித்து அவருக்கு வாழ்த்து கூறி ஆசி பெற்றோம். அடுத்து கனபாடிகளின் மனைவி திருமதி.கீதா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நண்பர் ராஜ்குமாரின் அவர்களின் துணைவியாரை கொண்டு கௌரவித்து அவர் மூலம் புடவை ரவிக்கை பிட் கொடுத்தோம்.

அடுத்து பாடசாலையில் பல்வேறு பணிகளில் உதவியாக இருக்கும் இரண்டு பெண்களுக்கும் முறையே திரு.வி.எஸ். பாலா மற்றும் திருமதி.சாந்தா ரோகினி ஆகியோரை கொண்டு தீபாவளி பரிசு கொடுத்தோம்.

Vedha Samratchana 17

Vedha Samratchana 18Vedha Samratchana 19

Vedha Samratchana 20

Vedha Samratchana 35
மாமாவின் பேத்தி இவள்…

Vedha Samratchana 21கடைசியாக திரு.கண்ணன். இவர் பாடசாலை மாணவர்களுக்கு உணவு சமைப்பவர். பாடசாலையின் சமையற்காரர். இவர் பேச்சு மற்றும் செவித் திறன் குறைபாடுடையவர். காது கேட்காது. வாய் பேச வராது.

கடந்த பத்தாண்டுகளாக இந்த பாடசாலையில் தங்கியிருந்து தமது கைவண்ணத்தால் மாணவர்களின் பசியை போக்கி வருபவர். இவருக்கு ஒரே ஒரு பெண். அவருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டு இங்கே பாடசாலையில் தங்கியிருந்து தொண்டை செய்துவருகிறார்.

அவருக்கு வஸ்திரம், ஷர்ட், பட்சணம், பட்டாசு இவற்றை கொடுத்து, அவரின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம். ஒருநொடி நம்மை பார்த்தவர் கண்கலங்கிவிட்டார். பார்வையிலேயே நன்றி சொன்னார். ஓராயிரம் பக்கங்கள் எழுதக்கூடியதை அவரின் நன்றி கலந்த பார்வை வெளிப்படுத்திவிட்டது. இன்னும் நம்மால் அதை மறக்க முடியவில்லை. இந்த கைங்கரியத்தின் ஹைலைட்டே இது தான்.

திரு.ராஜ்குமார் அவர்களின் குமாரன் பிரணவ் மாணவன் ஒருவனுக்கு பரிசு வழங்கும்போது...
திரு.ராஜ்குமார் அவர்களின் குமாரன் பிரணவ் மாணவன் ஒருவனுக்கு பரிசு வழங்கும்போது…

Vedha Samratchana 23மாணவர்களுக்கு வஸ்திரம் அளிக்கவேண்டும். அத்தனை பேருக்கும் ஒவ்வொன்றாக அளிக்க நேரமில்லை. காரணம் மணி 8.00 pm தாண்டிவிட்டிருந்தது. மாணவர்கள் சாப்பிடும் நேரம். குழந்தைகளுக்கு பசிக்க ஆரம்பிக்குமே… நம்மை போல நொறுக்குத் தீனிகளோ அல்லது பாஸ்ட் ஃபுட்டோ அல்லது வேறு ஏதேனும் சாப்பிடும் வழக்கமோ இவர்களுக்கு கிடையாது. பாடசாலையில் வேளாவேளைக்கு சாப்பிடவேண்டும். எனவே நான்கைந்து மாணவர்களுக்கு மட்டும் நமது நண்பர்கள் கையால் கொடுத்துவிட்டு மற்ற மாணவர்களுக்கு கொடுப்பதை திரு.கனபாடிகளின் பொறுப்பிலேயே விட்டுவிட்டோம்.

அடுத்து திருமதி.சாந்தா ரோகினி அவர்கள் நம்மிடம் சீதாப்பழம் வாங்கி வந்ததை நினைவுபடுத்தினார். “ஓ… தாராளமா கொடுங்க… இப்போவே கொடுத்துடுங்க” என்றவுடன் தான் வாங்கி வந்த சீதாப் பழங்களை கொடுத்தார்.

Vedha Samratchana 24
நண்பர் கார்த்திக் பரிசு வழங்குபோது… வலது புறம் : திரு.வி.எஸ்.பாலா

Vedha Samratchana 26

திரு.வி.எஸ்.பாலா பரிசு வழங்குபோது...
திரு.வி.எஸ்.பாலா பரிசு வழங்குபோது…

Vedha Samratchana 27Vedha Samratchana 32“கொரட்டூரில் எப்போதும் நான் பழங்கள் வாங்கும் கடையில் சீதாப்பழமெல்லாம் நான் பார்த்ததில்லை. எனவே எங்கே வாங்குவது என்று யோசித்தபடி தான் பஸ் ஸ்டாண்ட் வந்தேன். ஆனால் அதிசயமாக அந்த பழக்கடையில் சீதாப்பழம் இருந்தது. கேட்டபோது, இன்றைக்கு மட்டும் வாங்கி வைத்திருப்பதாக சொன்னார்கள். மாணவர்களுக்கென்றே வந்தது போல இருக்கிறது” என்றார் பரவசத்துடன்.

அடுத்து நாம் நேரே சமையர்க்கட்டுக்கு சென்று, “அதை வெளியில எடுத்துக் கொடுங்க… மாணவர்களுக்கு கொடுத்துவிடலாம்” என்றோம்.

உடனே அதை எடுக்க, மாணவர்கள் மத்தியில் அதை பிரித்து ஆளுக்கு ஒன்று கொடுத்தோம்.

அது என்ன?

கோன் ஐஸ்-கிரீம். ஆம் மாணவர்களுக்கு இதுவும் மிகவும் பிடிக்கும் என்பதால் நம் அலுவலகம் அருகே இருந்த அமுல் ஐஸ்க்ரீம் பார்லரில் உயர் தர கோன்-ஐஸ் கிரீம்கள் ஒரு பாக்ஸ் (20 எண்ணிக்கை) வாங்கி எடுத்துச் சென்றிருந்தோம்.

Vedha Samratchana 28

ஐஸ் க்ரீமுடன்
ஐஸ் க்ரீமுடன்

சாப்பிடுவதற்குள் உருகிவிட்டால் என்ன செய்வதென்று கருதி, சென்றவுடனேயே அதை சமையற்கட்டில் கொடுத்து பிரிஜ்ஜில் வைக்கச் சொன்னோம். சும்மா ஒரு சஸ்பென்ஸுக்காக உங்களிடம் அது அது என்று குறிப்பிட்டோம்.

ஐஸ் கிரீம் கொடுத்தது தான் தாமதம். மாணவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் மேலே மாடியில் உள்ள அவர்கள் அறைக்கு பறந்தே சென்றுவிட்டார்கள்.

விடைபெறும் முன்னர் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளின் கால்களில் வீழ்ந்து அனைவரும் ஆசி பெற்றோம். மந்திரங்கள் உச்சரித்து ஆசி கூறினார். எங்கள் அனைவருக்கும் சிறு நினைவுப் பரிசு வைத்து தந்தார். இது நாங்கள் எதிர்பாராதது.

“கைங்கரியத்தில் குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இன்னும் திட்டமிட்டு நன்றாக செய்கிறோம்” என்றோம்.

Vedha Samratchana 31

Vedha Samratchana 30

Vedha Samratchana 33“அதெல்லாம் ஒன்ன்மில்லே. பிரமாதமா பண்ணிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். இதுக்கு பக்கபலமா இருந்தவங்க எல்லாரும் ஷேமமா இருக்கணும்” என்றார்.

(அலுவலகம் வந்த பின்னர் பரிசை பிரித்துப் பார்த்த்தோம் – மகாவிஷ்ணுவின் அழகான குட்டி பொம்மை!)

Vedha Samratchana 34

கோ-சம்ரட்சணமோ அல்லது வேத சம்ரட்சணமோ அல்லது இது போன்ற வேறு கைங்கரியங்களோ ஏதோ பணத்தினால் மட்டும் நடப்பவை அல்ல. இன்றைக்கு பணத்தை கூட பலர் செலவிட தயாராய் இருக்கிறார்கள். ஆனால் நேரத்தை செலவிடுவது தான் அரிதான விஷயமாய் இருக்கிறது. எனவே பொருளையும் தாண்டி இது போன்ற கைங்கரியங்களில் திட்டமிடல்கள், ஒருங்கிணைப்புக்கள் இருக்கின்றன. இன்றைய பரபரப்பான உலகில் அது அத்தனை சுலபம் அல்ல. இதையெல்லாம் நாம் விவரிக்காவிட்டால் இதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் எவருக்கே தெரியாமல் போய்விடும். அதையெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை விரிவாக அப்டேட் செய்கிறோம்.

“இது போன்ற கைங்கரியங்களுக்கு என்னால் பெரிதாக உதவ முடியாது. மனமிருக்கிறது பணமில்லை. உடலுழைப்பு நல்கிடவும் எனக்கு அவகாசமில்லை” என்று கருதுபவர்கள் கவனத்திற்கு : நமது கைங்கரியங்களில் உங்கள் தொகை சிறு துளியாக இருந்தால் கூட போதும். நீங்கள் அளிக்கக்கூடிய தொகையில் தளத்திற்கு என்று கொஞ்சம் ஒதுக்குங்கள். இது தான் நமது வேண்டுகோள். காரணம் அனைத்திற்கும் ஆணிவேர் இந்த தளம் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்!

==========================================================

விசேஷ கோ-சம்ரட்சணம்!

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் பாஞ்சாலி என்கிற பசு கந்த சஷ்டி துவக்கத்தில் கன்று ஈன்றதையும் அதற்கு வள்ளி என்று பெயர் சூட்டப்பட்டதையும் அறிவீர்கள். இதையடுத்து விசேஷ கோ-சம்ரட்சணம் வரும் சனிக்கிழமை (21/11/2015) மாலை 6.30 மணியளவில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெறவிருக்கிறது.

Vedha Samratchana 36

வழக்கம் போல கோ-சாலை பணியாளர்கள் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவிருக்கிறது. வாசகர்கள் வந்திருந்து நிகழ்வை சிறப்பிக்க வேண்டுமென என கேட்டுக்கொள்கிறோம்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check :

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

==========================================================

Also check…

என்ன தவம் செய்தனை யசோதா…!

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

Our 2015 Deepavali Celebrations

கோமாதா எங்கள் குலமாதா – தீபாவளி கொண்டாட்டம் (3)

நமக்காக உழைப்பவர்களை சிறிது நினைப்போம் – தீபாவளி கொண்டாட்டம் (2)

திருப்பதி முருகனுக்கு அரோகரா… தீபாவளி கொண்டாட்டம் (1)

Our 2014 Deepavali Celebrations

பாக்கு விற்பவன் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான் !

இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

Our 2013 Deepavali Celebrations

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

வண்ணத்து பூச்சிகளுக்கு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

==========================================================

[END]

3 thoughts on “கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

  1. கோ சம்ரட்சணமும் வேத சம்ரட்சணமும் வெகு விமர்சையாக கொண்டாடியதில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் உள்ளது இந்த பதிவு. மாணவர்களின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்க காண கண் கோடி வேண்டும்.

    மகா பெரியாவாளுக்கு பிடித்த ஒன்றை தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் சேர்த்து தீபாவளியை 1000 வாலா பட்டாசாக மாற்றி விட்டீர்கள். தங்கள் அலுவலகத்தில் வேத பாடசாலை மாணவர்கள் வந்த பொழுது ‘ஐஸ் கிரீம் வாங்கி தருகிறேன்’ என்று மாணவர்களிடம் சொன்னீர்கள். சொன்னதை நிறைவேற்றி விட்டீர்கள். நினைவு பரிசு அருமை.

    அனைத்து படங்களும் அருமை

    மொத்தத்தில் சந்தோஷ கொண்டாட்டம்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. படிக்கவே சந்தோஷமா இருகு சார், இதைஎல்லாம் பண்ண உங்கள்ல்கு எல்வேளவு சந்தோசம் இருக்கும்.
    மானதர சொல்க்றேன் நீங்க ரொம்ப நல்ல இருகண்ணம் சுந்தர்ஜி
    .
    நன்றுடன்,
    நாராயணன்.

  3. பார்க்க, படிக்க, ரசிக்க அற்புதமான ஒரு பதிவு. ஆத்மானுபவம் என்று நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு பொருள் இப்போது தான் புகிறது.

    பெரியவாவின் மேற்பார்வையில் நடைபெற்ற கோ-பூஜை சிலிர்க்க வைக்கிறது. ஒட்டு மொத்த நிகழ்விலும் ஒரு வித நேர்த்தி திட்டமிடல் தெரிகிறது.

    வெகு சாதரணமாக நாங்கள் படித்துவிட்டு ஏன் பல சமயங்களில் கமெண்ட் கூட அளிக்காமல் செல்லும் பதிவுகளின் பின்னணியில் உள்ள உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    நிகழ்வை சுவாரஸ்யமாக தொகுத்த விதம் உங்கள் எழுதத் திறனுக்கு சாட்சி. கண் முன்னே அப்படியே அனைத்தையும் கொண்டு வந்துள்ளீர்கள்.

    பாட சாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் முகம் பார்க்க பார்க்க பரவசம்.

    (மழையால் எங்கள் பகுதியில் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் பவானியில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். கடந்த சில நாட்களாக அங்கு தான் இருந்தேன். எனக்கும் நான்கு நாட்கள் லீவ். தற்போது ஒவ்வொரு பதிவாக படித்து வருகிறேன்.)

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *