Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!

பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!

print

ரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 16/11/1916 அன்று தமிழகத்தை வரலாறு காணாத புயல் தாக்கிய நேரம். அப்போது பாரதி புதுவையில் இருந்தார். எங்கும் மழை வெள்ளம். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர். பல நூறு பேர் உயிரிழந்தனர்.

bharathi
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லம்…!

பாரதியும் அவர் நண்பர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள். அடிபட்டவர்களை வீடு வாசல் எல்லாம் இழந்து தவிப்பவர்களை ஒருங்கு சேர்த்தார்கள். அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை செய்தார்கள். மடிந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய ஏற்பாடு பண்ணினார்கள். தண்டல் செய்து வந்தவர்களில் ஒருவரை ஈசுவரன் தர்மராஜா கோயிலில் கூழ் காய்ச்சும்படி ஏற்பாடு செய்தார்கள். இவர்களோடு புதுச்சேரியில் இருந்த பரோபகாரிகளும் சேர்ந்துகொண்டார்கள். சாய்ந்த தென்னை மரங்களின் மட்டைகளை ஓரிடத்தில் சேர்த்து ஓலையாக வேயும்படி செய்தார்கள். சிலரை மண் கலந்து சுவர் எழுப்பிக் குடிசை கட்டும்படி செய்தார்கள். குடிசைகள் கட்டி முடியும்வரை யாரும் சோம்பேறித்தனமாகக் காலம் கழிக்கும்படி விடாமல் கண்ணாய்க் காவல் காத்தார்கள். வேலைகளை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக் கொடுத்துத் தாங்களும் அவர்களுடன் வேலை செய்தார்கள்.

அப்போது தென்னம் ஓலையை பாரதி வேய்ந்துகொண்டிருந்தார். அவரை நெருங்கிய மூதாட்டி ஒருத்தி, “அப்பேன்! என் வீடு விழுந்து விட்டது. கரைந்தும் பெருகியும் போய்விட்டது. திக்கில்லை. கண்ணும் தெரிவதில்லை. என் பாகத்திற்கு நீயே கட்டிக்கொடு அப்பா! உனக்குப் புண்ணியம் வரும்” என்றாள்.

hut

பாரதி, “எது உன் வீடு அம்மா?” என்று கேட்க, அவள் சுவர், கூரை, கதவு ஒன்றுமே இல்லாத வாசல் சட்டம் ஒன்றைக் காட்டினாள்.

அதைப் பார்த்துவிட்டு பாரதி உரக்கச் சிரித்தார்.

அதற்கு அவள், “காற்று மழைக்குமுன் என் வீட்டை நீ பார்த்திருந்தால் இப்படிச் சிரிக்க மாட்டாய். அதன் அழகைக் கண்டு மகிழ்ந்திருப்பாய். இன்று விழுந்துவிட்டது. சிரிக்கிறாய். இந்த உடலும் ஒருநாள் அதே மாதிரித்தான் ஆகப்போகிறது. எல்லாம் யமனைப் போன்ற காற்றின் கோலம்!” என்றாள். பாரதிக்கு இரக்கமாய்ப் போய்விட்டது.

‘அவள் சொல்வதும் உண்மை. உயிர்போன பிறகு எச்சம் எலும்புக்கூடுதானே?’ என்பது சட்டென்று அவர் மனதில் உறுத்தியது.

“ஆகட்டும் ஆயா! கட்டித் தருகிறேன்” என்றார். பின் சில நண்பர்களுடன் சேர்ந்து அவளுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்.

  • இன்று டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள்!

==========================================================

பாரதி விழா அறிவிப்பு!

bharathiyarமது தளத்தின் பாரதிவிழா வரும் 18/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில்  நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும்.

வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.

(மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நிகழ்ச்சி நடத்த மண்டபம், சிறப்பு விருந்தினர்களின் அப்பாயின்ட்மெண்ட் கிடைப்பது உள்ளிட்ட நடைமுறை சிரமங்கள் காரணமாக விழா ஒரு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது!)

சென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்!)

மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Also check… Articles on பாரதியார் 

மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *