Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

print
சிவபுண்ணியக் கதைகள் யாவும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. மிகப் பெரிய நீதிகளை உணர்த்துபவை. ஒரு ஜீவன் வாழும் காலத்தே எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒரு சிவபுண்ணியச் செயலை செய்யும்போது அது நற்கதியை பெற்றுவிடுகிறது. அப்படியெனில், வாழ்நாள் முழுதும் பலன் கருதாது சிவபுண்ணியத்தை செய்துவருபவர்கள் பெறக்கூடிய நன்மையை பட்டியலிட முடியுமா?

DSCN5352-22

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும்!

ஞானிகளுள் சிறந்தவராகிய ரிஷப முனிவர் ஒரு முறை தேவலோகத்துக்கு சென்றிருந்தார். அப்போது தேவேந்திரன் அங்கு இல்லை. தேவேந்திரனின் மகன் ஜயந்தன் தான் அங்கு இருந்தான். ரிஷப முனிவரை கண்டதும் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவரை வரவேற்று உபசரித்தான். அவருக்கு பலவிதமான பணிவிடைகளை செய்து அவரை மகிழ்வித்தான்.

அப்போது ரிஷப முனிவர் ஜயந்தனை நோக்கி, “ஜயந்தா உன் பணிவிடைகளால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம். உன் தந்தை இந்திரன் தற்போது எங்கு சென்றிருக்கிறார்?” என்று கேட்டார்.

“முனிபுங்குவரே, சிவகணங்கள் பார்த்திபன் என்பவனையும் விகார்த்தனன் என்பவனையும் புஷ்பக விமானத்தில் ஏற்றிக்கொண்டு சிவலோகம் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக என் தந்தை அவர்களுக்கு முன்பாகவே சிவலோகம் சென்றிருக்கிறார்….!” என்றான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தேவேந்திரன் அங்கு வந்துவிட்டான்.

ரிஷப முனிவர் தேவேந்திரனை கண்டதும் பெரிதும் உவகையடைந்து… “தேவேந்திரா தற்போது நீ எங்கு சென்று வருகிறாய்?” என்று கேட்டார்.

“தவயோகியே, சிவபக்தர்கள் விகர்த்தனனையும், பார்த்திபனையும் சிவகணங்கள் கயிலைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களை தரிசிக்கும்பொருட்டே நானும் சிவலோகம் சென்று வந்தேன். எனவே தான் இங்கு நீங்கள் வரும்போது இருக்க முடியாமல் போய்விட்டது” என்றான் இந்திரன்.

“ஓ…அப்படியா… அவர்கள் இருவரும் அப்படி என்ன புண்ணியம் செய்தார்கள் ? தேவேந்திரன் நீயே ஓடிச்சென்று வரவேற்கும் அளவுக்கு?”

தேவேந்திரன் கூறத் தொடங்கினான்… “கர்ணன் குஞ்சரம் என்னும் நாட்டில் வீரட்டாபுரம் என்னும் நகரம் உண்டு. அந்த நகரத்தை ஆண்ட அரசனுக்கு விகர்த்தனன் என்கிற பெயருடைய ஒரு அழகிய குமாரன் இருந்தான். அவனும் அந்த நகரத்து மந்திரியின் குமாரனுமான பார்த்திபன் என்பவனும் இணை பிரியா நண்பர்கள்.

இருவரும் செழுமையிலேயே வளர்ந்த படியால் பொறுப்பின்றி திரிந்தார்கள். சதா சர்வ காலமும் சொக்கட்டான் ஆடுவதிலேயே கழித்தார்கள். தங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூப்பிட்டு இவர்களை கண்டித்தபடி இருந்தமையால், இவர்களுக்கு தங்கள் நாட்டில் தாங்கள் விரும்பியது போல இருக்க முடியவில்லை. எனவே வேறு எங்காவது சென்று அங்கு நம் இஷ்டப்படி வாழ்வோம் என்று கருதி, தூர தேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டனர்.

Sivapunniyam August II

அங்கே தகாத சேர்க்கையின் விளைவாக பல வித தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டும் பொருளை ஈட்டி இஷ்டம் போல செலவு செயதும் காலத்தை கழித்துவந்தனர்.

ஒரு நாள் இருவரும் தங்கள் கூட்டாளிகளோடு சேர்ந்து செல்வந்தர்களின் உறைவிடமாக திகழும் காமபுரம் என்ற நகரத்தில் நுழைந்து கொள்ளையடித்தார்கள். பின்னர் கொள்ளையிட்ட பொருட்களை அவசர அவசரமாக வாரியெடுத்து மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு, அவற்றை சுமக்க முடியாமல் தலைகளில் சுமந்த வண்ணம் ஆளுக்கொரு திசையில் தப்பிச் சென்றார்கள்.

விகர்த்தனனும் பார்த்திபனும் இருவரும் தொழில்முறைக் கொள்ளையர்கள் அல்ல ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களால் பெரிதாக ஒன்றையும் கொள்ளையடிக்க முடியவில்லை. தாங்கள் ஏதாவது கொள்ளையடிக்காவிட்டால் தங்கள் சகாக்கள் மத்தியில் அவமானப்பட நேரிடும் என்பதால் இருவரும் முறையே அரிசி மூட்டையையும், பெட்டியொன்றையும் கொள்ளையடித்து அதை சுமக்கமுடியாமல் சுமந்த வண்ணம் அந்தப் பட்டினத்திற்கு வெளிப்புறமாக ஓடிச் சென்றார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் ஓட முடியவில்லை. மிகவும் களைப்படைந்த அவர்கள் கானகத்திற்கு இடையே ஓரிடத்தில் சுமைகளை இறக்கிவைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினார்கள்.

அருகே ஓடிய சுனையில் நீரை அள்ளி பருகியவர்கள், சிறிது நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர் மீண்டும் புறப்பட்டு செல்ல ஆயத்தமானார்கள். தங்கள் சுமைகளை கீழேயிருந்து எடுத்துத் தங்கள் தலைகளிலேயே மீண்டும் வைத்துக் கொள்ள முயன்றார்கள். ஆனால் அவர்களால் அந்தச் சுமைகளை தரையில் இருந்து எடுக்கவே முடியவில்லை.

பெட்டியை எடுத்து முதலில் விகர்த்தனன் தலையில் வைப்போம் என்று கருதிய பார்த்திபன் தேவையில்லாதது ஏதாவது அதனுள் இருந்தால் அதை எறிந்துவிட்டு அதன் எடையை குறைப்போம் என்று கருதி அதை திறந்த பார்த்தபோது, கொஞ்சம் நகைகளும் பணமும் கூடவே ஒரு அழகான எழுதப்படாத புத்தகமும் (ஓலைச்சுவடி) இருந்ததை பார்த்தான். உடனே அதை தூக்கி தூர எறிந்துவிட்டு பெட்டியை மீண்டும் மூடி, சிறிது முயற்சிக்கு பிறகு அந்த மரப் பெட்டியை எடுத்து விகர்த்தனன் தலை மீது வைத்துவிட்டான். ஆனால் தனி ஒருவனாக அரிசி மூட்டையை பார்த்திபனால் தூக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை.

இவர்கள் நல்வினைப்பயன் அப்போது வேலை செய்யத் துவங்கியது.

அப்போது அந்த வழியே சிவப்பிராமணன் ஒருவன் வந்துகொண்டிருந்தான். அவனை நோக்கி இருவரும், “இந்த அரிசி மூட்டையை கொஞ்சம் எங்கள் தலையில் வைக்க உதவுங்களேன்” என்று கேட்டுக்கொண்டார்கள் இருவரும்.

அப்போது அந்த பிராமணன் இவர்களிடம் “இளைஞர்களே… நான் ருத்ராக்ஷத்தையும், விபூதியையும் தரித்த சிறந்த சிவபக்தர்களில் ஒருவனாவேன். எந்த நேரத்திலும் சிவபூஜையிலேயே என் மனதை செலுத்தி வருபவன். நல்லொழுக்கங்களையே கடைபிடிப்பவன். நான் இப்போது பசிக் கொடுமையால் பெரிதும் வாடி வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆகையால் எனக்குச் சிறிதளவு அரிசியைக் கொடுத்து உதவினால் உனக்கு அதனால் சகல நன்மைகளும் உண்டாகும்!” என்று கூறினான்.

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

==========================================================

அதைக் கேட்டதும் மந்திரி குமாரனான பார்த்திபன், ”அந்தணரே! தரையில் சிந்திக்கிடக்கும் இந்த அரிசியை நீங்கள் எடுத்துக் கொண்டு போங்கள்! மற்றபடி மூட்டையிலிருந்து அரிசி எதையும் நாங்கள் தரமாட்டோம்!” என்று கூறினான்.

அதே சமயத்தில் அரசகுமாரனான விகர்த்தனனும் அந்த அந்தணனை நோக்கி, ”வேதியரே! வேண்டுமானால் இந்த எழுதப்படாத புத்தகத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்” என்று சற்றுமுன் அவர்கள் வீசியெறிந்த அந்தப் புத்தகத்தைக் காட்டினான்.

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு தேசத்திற்கு சென்று அங்கே தினசரி பலவித தீய செயல்களில் ஈடுபட்டு திருட்டு, கொள்ளை, சூது முதலானவற்றில் மிகவும் நாட்டம்கொண்டு தங்கள் வாழ்நாளை கழித்து வந்தார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு அழகிய இளம்பெண்ணை கூடி களிப்புறும் பொருட்டு தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தார்கள். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சண்டை முற்றி ஒருவரையொருவர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கிக்கொண்டு அந்த இடத்திலேயே வீழ்ந்து மடிந்தார்கள்.

இதற்கிடையே, கானகத்தில் இவர்கள் கண்ட அந்த சிவபக்தரோ, மிகவும் கஷ்டத்தில் இருந்தபடியால், கீழே சிதறிக்கிடந்த பல படிகள் பெறுமானமுள்ள அரிசியை வீணாக்காது அதை அள்ளி ஒரு துணியில் முடிந்து, இவர்கள் வீசியெறிந்த அந்த எழுதப்படாத புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

அந்த அரிசியை சில நாட்கள் வைத்திருந்து சமைத்து சாப்பிட்டு பசியாறினார். அந்த வெற்றுப் புத்தகத்தில் சிவபுராணத்தை எழுதி, அதை தினசரி ஏராளமான பக்தர்கள் புடைசூழ படித்து மகிழ்ந்தார்.

“விகர்த்தனனும், பார்த்திபனும் தாசியின் பொருட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு உயிரிழந்தாலும் அவர்கள் செய்த மகத்தான சிவபுண்ணியத்தின் மகிமையால்,  சிவகணங்களால் புஷ்பக விமானத்தில் ஏற்றப்பட்டு சிவலோகத்தை அடைந்தார்கள். அவ்விரு புண்ணியத்தமாக்களையும் தரிசித்துவிட்டு நான் இப்போது இங்கு வருகிறேன்” என்று சொல்லி முடித்தான் தேவேந்திரன்.

இதைக் கேட்டு வியந்த ரிஷப முனிவர், “சிவபுண்ணியத்தின் மகிமையை உண்மையில் அறுதியிட்டு கூற யாரால் முடியும்….” என்று கூறி வியந்து, தான் ஒரு சிவபுண்ணியக் கதையை கூறத் துவங்கினார். (அது மற்றொரு பதிவில்!)

************************************************

சிவபுண்ணியத்தின் அடுத்த பரிமாணத்தை உணர்த்திய கதை இது என்றால் மிகையாகாது.

“மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்…”

என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டிருக்கும் வரிகள் சாதாரண வரிகள் அல்ல.

மேற்கூறிய சம்பவத்தில் வரும் விகர்தனன், பார்த்திபன் இருவரும் அவர்கள் வாழும் காலத்தே எத்தனையோ பாபச் செயல்களை புரிந்தபோதும் சிவனடியார் ஒருவரின் பசியை போக்கும் அருந்தொண்டை அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த காரணத்தினால் தான் அவர்களுக்கு நல்லகதி இறுதியில் கிட்டியது. அதையே போல, சிவபுராணம் எழுதுவதற்கு நூல் கொடுத்து உதவிய சிவபுண்ணியமும் சேர்ந்துகொண்டது. அந்த நூலில் சிவபுராணத்தை எழுதிய அந்த சிவப்பிராமணர் அதன் மூலம் பலருக்கு ஈசனின் பெருமையை கூறியதால் அத்தனை பேருக்கு சிவபுண்ணியத்தை எடுத்துச் சென்ற புண்ணியமும் சேர்ந்துகொண்டது.

நமது பாவம் என்கிற மலையளவு மூட்டையில் ஒரு சிறு பொறியாக சிவபுண்ணியம் சேர்ந்தால் போதும், அதை எரித்து சாம்பலாக்கிவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடக்கூடாது.

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்      
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்      
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்   
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே!

– திருஞானசம்பந்தர் (2:41)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

 

==========================================================

Maha Periyava

ஐந்தெழுத்து மந்திரத்தை எப்படி சொல்லவேண்டும்?

“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க – மாணிக்கவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச் செய்த சிவபுராணத்தில் இந்த மந்திரம் முதலாவது அடியாக வருகின்றது. பாடுவோர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் மந்திரம், கேட்போர் மனதை உருகச் செய்யும் மந்திரம். இந்த மந்திரத்தை மனத்திற்குள் தியானிக்கலாம். பிறர் காதிள் கேளாதபடி மெல்ல மெல்ல உச்சரித்துச் சொல்லலாம். வெளிப்படையாகவும் சொல்லலாம். இறைவனுடைய திருநாமம் ஓதினாலே நன்னெறியைத் தரும் சிறப்புடையதாகும். மந்திரம் இறைவனுடைய சொரூபமாகும். எனவே, மந்திரச் சொற்கள் அருட்தன்மை பெற்றவை. இறைவனை அடைவதற்கு இறைவனால் அருளிச் செய்யப்பட்ட சொற்களே மந்திரங்களாகும். அவற்றை இறைவனுடைய அடியார்கள், இறையுணர்வாளர்கள் ஆகியோர்கள் வாயிலாகப் பெறுகின்றோம். இவர்கள் நிறை மொழி மாந்தர் எனப்படுவார்கள். அவர்களுடைய ஆணையில் கிளர்ந்தவை மந்திரங்கள். மந்திரங்களைத் தொல்காப்பியர் மறைமொழி என்பார். மந்திரங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் நாம் விரும்பும் பயனைக் கொடுக்க வல்லவை என்பது மட்டுமன்று. சிந்தையிலே இறைவனுடைய நாமமாகிய மந்திரத்தை நிலையாக நிறுத்தி வைக்கப் பழகிக் கொண்டோமானால் இறப்பு, பிறப்பு நிலைகளிலிருந்து விடுபட்டு, இறைவனடியைப் பற்றி என்றும் மாறாத இன்பத்தில் திளைத்து நிற்கலாம் என்பது அருள் அனுபவம்.”

– ஸ்ரீ மகா பெரியவா

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *