Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

ஹரிஹர கிருபா கடாக்ஷம்!

print

ந்த சிவராத்திரிக்கு (24/02/2017 வெள்ளிக்கிழமை) மற்றுமொரு விசேஷமும் உண்டு. பிரதோஷம், சிவராத்திரி, திருவோணம் மூன்றும் சேர்ந்து வருவதே அது.

எனவே நாளைய தினம் விரதம் இருப்பவர்கள் பிரதோஷம், சிவராத்திரி, திருவோண விரதம் மூன்று விரதமும் இருந்த பலன் கிடைத்துவிடும். எனவே மும்மடங்கு பலன் உண்டு. நாளை சிவாலயத்துடன் முடிந்தால் வைணவ ஆலயத்தையும் நாளை தரிசிக்கவும். ஹரிஹர கிருபா கடாக்ஷம் கிடைக்கும்.

“அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு” — இந்த பழமொழிக்கான விளக்கம் மிக மிக புரிந்துகொள்ளப்படுகிறது.

“அதாவது சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான். அதை உணராதவர்கள் வாயில் மண்ணைத் தான் கொட்ட வேண்டும்” என்பது தான் அர்த்தம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

தெய்வங்களை தொடர்புபடுத்தி பழமொழிகள் இருக்கும்போது எப்படி நம் முன்னோர்கள் இன்னொருவர் வாயில் மண்ணைக் கொட்டவேண்டும் என்று கூறுவார்கள்?

இதன் பொருள் என்னவென்றால்…

கிருஷ்ண பரமாத்மா பாலகிருஷ்ணராக கோகுலத்தில் வளர்ந்த போது எத்தனையோ லீலைகள் குறும்புகள் செய்தான். அவற்றுள் ஒன்று மண்ணை தின்றது.

ஒரு முறை கண்ணன் விளையாடும்போது வாயில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டான். அதைப் பார்த்த யசோதை பதறிப்போய், குழந்தை மண்ணை விழுங்கிவிட்டால் என்னாவது என்று பதறிப்போய், ஓடி வந்து அவனை அதட்டி “எங்கே வாயை திற” என்று கூறியபோது, குழந்தை கண்ணன் வாயைத் திறக்க, அங்கு அரியும் சிவனும் ஒன்றாக காட்சியளித்தார்களாம். அது மட்டுமா வைகுண்டம், கயிலை உள்ளிட்ட ஈரேழ் புவனங்களும் கண்ணனின் வாயில் தெரிந்தனவாம்.

அறியாத பருவத்தினனான குழந்தையின் வாயில் இந்த ஹரிஹர தத்துவம் விளங்கியபடியால் அது முதல் “அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பழமொழி ஏற்பட்டது.

இது பற்றி தெய்வத்தின் குரலில் கூட மஹா பெரியவா தனக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்.

“அறியாதவன்” : வார்த்தை விளையாடல்!

“அரியும் சிவனும் ஒண்ணு;அறியாதவன் வாயிலே மண்ணு;என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது. இதிலே ‘அறியாதவன்’என்பதில் வல்லின ‘றி’யை இடையினமாக மாற்றி, ‘அரியாதவன்’என்று சொல்வார்கள். ‘ஹரி’யாகிய ‘யாதவ’குலக் கண்ணன் என்று அர்த்தம். அவன் வாயிலே மண்ணைப் போட்டுக்கொண்டுவிட்டு யசோதைக்கு லோகம் முழுவதையும் காட்டினான் அல்லவா?அதைத்தான் ”அரி யாதவன் வாயில் மண்ணு”என்பது.

“ஸரி. அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இப்படி ஒன்று – இவர்களிலே ஹரி லோகம் முழுவதையும் காட்டினவன் என்று – எதற்காகச் சொல்லவேண்டும்?”

எதற்காகவா?

இதிலேயும் பெரிய தத்வம் இருக்கிறது. ஒரே பிரம்மம்தான் ஹரி, சிவன் இரண்டு பேரும். அதனாலே அவர்கள் ஒன்றேதான். ஆனால் அந்த ஒரே பிரம்மத்தை நிர்குணம், ஸகுணம் என்று இரண்டு நிலைகளில் நாம் பாவிக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த இரண்டில் லோக வ்யவஹாரம் அடிப்பட்டுப்போன நிர்குணம்தான் சிவன். லோக வ்யவஹாரத்தை நடத்தும் ஸகுணமே ஹரி. மண்ணைத் தின்று லோகம் முழுவதையும் தன் வாயில் அடங்கியிருப்பதாக அவன் காட்டினபோது இந்த உண்மையைத்தான் உருவகப்படுத்தியிருக்கிறான். ‘அரி யாதவன் வாயில் மண்ணு’என்று சொல்லி இதை ஞாபகப்படுத்திவிட்டால், முதல் வரியில் சொன்ன ‘அரியும் சிவனும்’என்பதில் விட்டுப்போன சிவன் நிர்குணம் என்பதையும் சொன்னதாகி விடுகிறது.

‘றி’யை ‘ரி’யாகக் கூட மாற்றாமல் ‘அறியாதவன்’என்ற ஒற்றை வார்த்தையை ‘அறி யாதவன்’என்று இரண்டாகப் பண்ணிக்கொண்டாலே போதும்!’அறி, யாதவன் வாயிலே மண்ணு’என்றாலே, ‘அரியும் சிவனும் ஒண்ணானாலும் இவர்களில் யாதவனாக வந்து மண்ணைத் தின்னவன் ஸகுண ப்ரமம் என்று அறி;அதனால் இன்னொருவன் நிர்குணம் என்றும் அறி’என்று அர்த்தமாகிவிடும்.

– ஸ்ரீ மஹா பெரியவா (தெய்வத்தின் குரல் 3)

**************************************************************

இந்த தளம் எப்படி நடக்கிறது என்று அறிவீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Also check —  ஹரிஹர ஒற்றுமை பற்றி நம் தளத்தில் வெளிவந்துள்ள சில பதிவுகள் 

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

**************************************************************

Also check :

மாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *