Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

print
நமது கணக்கு வேறு இறைவனின் கணக்கு வேறு என்பதை உணர்த்தும் ஒரு அருமையான சம்பவம் இது. நமக்கு பல பாடங்கள் இதில் ஒளிந்திருக்கின்றன!

காராஷ்டிர மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டு அவதரித்த மகான் சமர்த்த ராமதாஸர். மாவீரன் சத்ரபதி சிவாஜியின் குரு இவர். தான் வாழ்ந்த காலத்தில் பல அதிசயங்களை இவர் புரிந்திருக்கிறார். தனது யோக சக்தியின் மூலம் சத்ரபதி சிவாஜியை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்.

Shivaji and Samartha Ramdas
சமர்த்த ராமதாஸருடன் மாவீரன் சிவாஜி

பதிமூன்று அட்சரங்கள் கொண்ட ஸ்ரீராமபிரானது தாரக மந்திரத்தை ஒரு மனதாக ஜபிப்பவர்களுக்கு ஸ்ரீராமனது தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்பது இவரது வாக்கு.

சமர்த்த ராமதாஸர் தனது வாழ்நாளின் இறுதியில் சுமார் ஆறு வருடங்கள் கழித்த புண்ணிய பூமி சஜ்ஜன்காட். அவரின் சமாதி இங்கு தான் அமைந்துள்ளது.  சமர்த்த ராமதாஸரின் சீடர்களில் ஒருவர் ஸ்ரீதர சுவாமிகள். (1908-1973). இவர் இந்தியா முழுதும் பயணம் செய்து சமர்த்த ராமதாஸரின் கருத்துக்களை பரப்பியதோடு சனாதன தர்மம் தழைக்கவும் பாடுபட்டார்.

ஸ்ரீதர சுவாமிகள் தனது குருநாதரின் சமாதியில் தங்கி சேவை செய்துகொண்டிருந்த காலகட்டங்களில் ஒரு நாள் ஒரு சமர்த்த ராமதாஸரின் சமாதிக்கு ராமதாஸரின் பக்தர் ஒருவர் வந்திருந்தார்.

அவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். தலையில் தலைப்பாகையும், வேட்டியும், கோட்டும் அணிந்திருந்தார்.

ராமதாஸரது சமாதியையே பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று கோபத்தில் வெடிக்கத் தொடங்கிவிட்டார். “என்னை மோசம் செய்துவிட்டீர்களே… உங்களை நம்பி மோசம் போனேனே…” என்று பலவாறு ராமதாஸரை தூற்றத் தொடங்கிவிட்டார்.

தனது குருநாதரின் சமாதியை பார்த்து இவ்வாறு ஒருவர் தூற்றிக்கொண்டிருப்பதை பார்த்த ஸ்ரீதர ஸ்வாமிகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“என்னது என் குருநாதர் உங்களை ஏமாற்றிவிட்டாரா? அவர் எப்போதப்பா உன்னிடம் பேசினார்?” என்று கேட்டார் ஸ்ரீதர சுவாமிகள்.

“சுவாமி… ராம மந்திரத்தை 13 கோடி தரம் ஜபித்தால் ஸ்ரீ ராமரது தரிசனம் கிடைக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நானும் 13 கோடி அல்ல…. 16 கோடி முறை ஜபித்துவிட்டேன். இதுவரை ராமரின் தரிசனம் கிடைக்கவில்லை. இது ஏமாற்று வேலை தானே? இதில் என் வாழ்நாளையே நான் தொலைத்துவிட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இதில் எனக்கு போய்விட்டது. வயதோ 75 ஐ கடந்துவிட்டது. இனியும் என்னால் நம்பிக்கையுடன் ராமநாமத்தை ஜபிக்க முடியாது. இவரை பார்த்து இரண்டில் ஒன்று கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன்” என்றார்.

தனது கோபம் சற்றும் குறையாமல்… “சமர்த்த ராமதாஸர் ஒரு மோசடிப் பேர்வழி. பொய் சொன்னவர் என்று நான் ஊர் ஊராக போய் சொல்லப்போகிறேன்.” என்றார்.

“ஐயா.. எங்கள் குருநாதர் ஒரு போதும் பொய்யுரைக்க மாட்டார். அவர் வாக்கு என்றும் தவறாக ஆகாது. அசைக்க முடியாத நம்பிக்கையோடு 13 கோடி முறை ராம நாமத்தை ஜபித்தால் நிச்சயம் ஸ்ரீ ராமச்சாந்திர மூர்த்தியின் தரிசனம் ஒருவருக்கு கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.”

"

ஆசிரியரின் கோபம் தற்போது ஸ்ரீதர சுவாமிகள் மீது திரும்பியது.

“அப்படியானால் என் கணக்கு பொய்யா? அல்லது நான் கூறுவது பொய்யா??”

இவ்வாறு கூறியவர், தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதில் தான் ராமநாமத்தை எத்தனை முறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஜபித்தார் என்று எழுதி வைத்திருப்பதை ஸ்ரீதர சுவாமிகளிடம் காண்பித்து பின்னர் அதை ராமதாஸரின் சமாதி மீது வீசியெறிந்தார்.

Sridhara Swamy 1
சமர்த்த ராமதாஸரின் சீடர் ஸ்ரீதர ஸ்வாமிகள்

இதை பார்த்த ஸ்ரீதர ஸ்வாமிகளுக்கு என்னவோ போலிருந்தது.

“குருவே இதென்ன சோதனை…! இந்த அடியவரின் கோபத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறேன்…” என்று சில வினாடிகள் கண்களை மூடி தியானித்தார்.

சில வினாடிகள் கழித்து கண்களை திறந்தவர், “என் குருநாதர் கூறியதும் உண்மை. நீ கூறுவதும் உண்மை”

“என்ன சொல்கிறீர்கள் ??”

“13 கோடி முறை ஜபித்தால் ஸ்ரீ ராமர் தரிசனம் கிடைக்கும் என்று என் குருநாதர் கூறியது உண்மை. நீங்கள் 16 கோடிமுறை அந்த மந்திரத்தை ஜெபித்தீர்கள் என்பதும் உண்மை”

இந்த முறை ஆசிரியரின் கோபம் தலைக்கேறியது.

“என்ன உளறுகிறீர்கள்… புரியும்படி சொல்லுங்கள்”

“உன் மனைவி ஏழு ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள். நீங்கள் எத்தனையோ செலவு செய்தும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. எந்த மருத்துவரும் அவளை குணப்படுத்த முடியவில்லை. அதனால் நீங்கள் என் குருநாதரிடம் முறையிட்டீர்கள். அழுது புலம்பினீர்கள். ‘இதுவரை நான் செய்த புண்ணியத்தை எல்லாம் என் மனைவிக்கு தானமளிக்கிறேன். எப்படியாவது அவளை காப்பாற்றுங்கள், எனக்கு அவளைத் தவிர யாருமே இல்லை’ என்று மன்றாடினீர்கள். குருநாதரும் உங்கள் வேண்டுகோளுக்கு இரங்கினார்.”

சஜ்ஜன்காட்டில் உள்ள சமர்த்த ராமதாஸரின் சமாதி

“ஆம்… நினைவிருக்கிறது…”

“நீங்கள் வீட்டுக்கு சென்றபோது உங்கள் மனைவி எப்படி இருந்தாள்? முழுதும் குணம் பெற்று ஒரு குடம் நிறைய நீருடன் உங்களை வாசலில் நின்று வரவேற்றாள் அல்லவா?… அதை மறந்துவிட்டீர்களா??”

“இல்லை… இல்லை… அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்??”

“இருங்கள் சொல்கிறேன். மற்றொரு முறை உங்கள மகளுக்கு எத்தனையோ இடங்களில் வரன் பார்த்தும் சரியான மாப்பிள்ளை கிடைக்காததால் மனமுடைந்து, இங்கே வந்து குருநாதரிடம் முறையிட்டீர்கள் அல்லவா?”

“ஆம்… முறையிட்டேன்…!”

“மகளுக்கு திருமணமே நடக்காது என்கிற நிலையில் இருந்து அனைத்து மாறி, நல்ல இடத்தில் உங்கள் மகளுக்கு வரன் அமைந்து… திருமணமும் ஊரார் மெச்ச ஜாம் ஜாமென்று நடந்தது அல்லவா?”

"

“ஆமாம்… அமாம்…. அதற்கென்ன இப்போது?”

“அது மட்டுமா? உங்கள் மகன் தொடர்ந்து பலமுறை 10 ஆம் வகுப்பு தேர்வில்தேர்ச்சி பெறாமல் தோற்றுப்போனான். மனமுடைந்து கிடந்த அவன் எங்கே தற்கொலை செய்துகொண்டுவிடுவானோ என்று நீங்கள் பயந்தீர்கள். இங்கே சுவாமியிடம் வந்து முறையிட்டீர்கள். அவன் ஆச்சரியத்தக்க அளவில் தேர்வில் வெற்றி பெற்றான்… உண்மை தானே?”

Ramar

“நீங்கள் ஜபத்தை 13 கோடி அளவு எட்டும் முன்பே அதில் கிட்டத்தட்ட ஆறரை கோடியை செலவிட்டுவிட்டீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற அதாவது உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற உங்கள் ஜபத்தை செலவு செய்துவிட்டீர்கள். 13 கோடி அளவு என்பது எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் செய்யும் அளவு ஆகும். அப்போது தான் உங்களுக்கு ராமதரிசனம் கிட்டும். அப்படிப் பார்த்தால் உங்கள் கணக்கில் தற்போது ஒன்பதரை கோடிகளே உள்ளன. மேலும் நீங்கள் மூன்றரை கோடிகள் ஜபித்தால் நிச்சயம் ஸ்ரீராமர் உங்களுக்கு காட்சி கொடுப்பார்” என்றார் ஸ்ரீதர சுவாமிகள்.

தன் தவறை உணர்ந்த அந்த ஆசிரியர், “என்னை மன்னியுங்கள்… என் கண்களை திறந்துவிட்டீர்கள் சுவாமி” என்று ஸ்ரீதர சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டதோடு சமர்த்தரின் சமாதியிலும் பலமுறை விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்டார்.

“இந்த ஏழை அறியாமல் செய்த பிழையை மன்னிக்கவேண்டும். எனக்கு அருள் செய்த என் குருவை திட்டிவிட்டேனே. குருநிந்தனை செய்த பாபமல்லவா என்னை வந்து சேரும்? எனக்கு மன்னிப்பே கிடையாதே…” என்றெல்லாம் அழுது அரற்றியவரை தேற்றி அனுப்பி வைத்தார் ஸ்ரீதர சுவாமிகள்.

இன்னொரு விஷயம் தெரியுமா?

ராம தாரக மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிக்கும்போது கணக்கு வைத்திருக்க தேவையில்லை. ஒவ்வொரு கோடியையும் ஒருவர் பூர்த்தி செய்யும்போது…. ஸ்ரீராமனின் கோதண்டத்தில் உள்ள மணியானது சப்தம் எழுப்பி ஒரு கோடி பூர்த்தியாகிவிட்டது என்று நினைவூட்டுமாம். இப்படி 13 முறை ஒலித்ததும், நொடிக் கூட தாமதிக்காமல் ஸ்ரீராமனே சம்பந்தப்பட்ட பக்தரிடம் ஓடி வருவானாம். சங்கீத பிதாமகர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஸ்ரீ ராமரின் தரிசனம் கிடைத்தது இப்படித்தான்!

Join our Voluntary Subscrition Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

இறைவனின் கோர்ட்டில் பொய்க் கணக்குகள் / காட்டப்படாத கணக்குகள் என்றுமே செல்லுபடியாகாது. நம் ஒவ்வொருவரைப் பற்றிய  உண்மையான கணக்கும் இறைவனிடம் உள்ளது.

எதிர்பார்ப்பு என்கிற ஏட்டில் நமது கணக்கை என்றும் பதிவு செய்யாமல், நம்பிக்கை என்ற ஏட்டில் நமது கணக்கை பதிவு செய்வோம். நிச்சயம் திருவருள் கைகொடுக்கும்.

==============================================================

நாம் முன்பே கூறியபடி நமது நூல்கள் வாசகர்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படும். நன்றி!

==============================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 14

நன்மையும் செல்வமும் நாளும் பெற்றிட…!

இந்தப் பதிவே ஒரு மிகப் பெரிய டிப்ஸ் தான். எவ்வளவு பெரிய விஷயங்களுக்கு எத்தனை எளிமையான தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது….!  இருப்பினும் உங்களுக்காக… இதோ ஒரு அருமையான டிப்ஸ்.

ராமநாமத்தை உங்களால் கோடிகளில் ஜபிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நேரத்தை பயனற்ற விஷயங்களில் செலவிடுவதை தவிர்த்து, ஒருமனதுடன் குறைந்தபட்சம் நோட்டுப் புத்தங்களிலாவது உங்களால் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் எழுதி வாருங்கள். அதுவே உங்களுக்கு எல்லாவற்றையும் குறைவின்று அள்ளித் தரும்!

ஆதாரம் வேண்டுமா?  இதோ….!

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

==============================================================

Also check :

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

==============================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

==============================================================

Also check :

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==============================================================

[END]

7 thoughts on “உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

  1. ஆஹா! என்ன சொல்வதென்றே தெரியவில்லை! ராம நாமத்தின் மகிமையை கேட்க கேட்க பரம சுகமாக இருக்கிறது. ராமானுக்ரஹத்தால் நான் தினமும் 1008 நாமங்கள் எழுதி வருகிறேன். எங்கள் வீட்டுப் பெரியவர்களும் எழுதுகிறார்கள். மனம் நிறைவாக இருக்கிறது. இப்பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி!

  2. ராம நாம மகிமையை பற்றிய இந்த பதிவை படிக்கும் பொழுது என்னையும் அறியாமல் என் கண்கள் குளமாகின.

    ராம நாம மந்திரத்தின் மகிமையை ஒரு அழகிய கதையுடன் விளக்கி எல்லோர் மனதிலும் ராம நாமம் என்னும் தாரக மந்திரத்தை ஒலிக்கச் செய்து விட்டீர்கள்.

    இன்று காலையில் தான் கங்கா ஜலமும், ராமர் பாதமும், அன்ன பூரணியும் சமீபத்தில் காசிக்கு சென்று வந்த என் அக்கா எனக்கு கொடுத்த பொக்கிஷத்தை இன்று காலையில் பூஜை செய்து ராமர் பாதத்தை வணங்கினேன். தளத்தை ஓபன் செய்தால் ராமர் பற்றிய பதிவாக உள்ளது, மெய் சிலிர்க்கும் இந்த பதிவு என் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

    ராம நாமம் என்னும் தாரக மந்திரத்தை தினமும் எழுதும் வழக்கம் எனக்கு உண்டு.
    என் கனவில் விஸ்வரூப தரிசனமே விஷ்ணு எனக்கு காட்சி அளித்து இருக்கிறார்

    //நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே ராம என்னும் இரண்டு எழுத்தினால் //

    ராம நாமம் இந்த உலகம் முழுவதும் எதிர் ஒலிக்கட்டும். ராமர் படம் கண்ணை விட்டு அகலவில்லை …

    நன்றி!

    வாழ்க …. வளமுடன்!!

    நன்றி

    உமா வெங்கட்

  3. மிகவும் கலங்கியுள்ள மனதிற்கு மிகவும் ஆறுதலான பதிவு.
    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
    நன்றி
    வாழ்க வளமுடன்

  4. சுந்தர் அண்ணா.
    மிக மிக ஆழமான கருத்துக்களை ஒரே ஒரு கதையின் மூலம் சொன்னதே இந்த பதிவின் சிறப்பு.நம்முடைய கணக்கு வேறு…தலைவரின் கணக்கு வேறு.தெளிவாக புரிகின்றது.நம் தலத்தில் லிகித ஜெபம் பற்றி தேடி கொண்டிருந்த போது..இந்த பதிவு என் தேடலை நிறுத்தியது.

    ராம சீதை – அனுமான் படம் மிக மிக அரியது என்று தோன்றுகிறது.ஏனெனில் நான் பார்த்த படங்கள் அனைத்தும் மிகவும் வண்ணமயமாய் இருக்கும்.நம் தலத்தில் இருக்கும் அரிய படம்-மிகவும் இயல்பான ஒன்று என்று நினைக்கின்றேன்.

    லிகித ஜெபத்தின் தேவையை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள்.

  5. சுந்தர்ஜி
    ராம நாமத்தின் மகிமை எவ்வளவு படித்தாலும் கேட்டாலும் திகட்டுவது இல்லை . ராம நாமத்தை குருமுகமாக உபதேசம் பெறுவது எப்படி எனக் கூறினால் நலமாக இருக்கும். ஏனென்றால் நமது குருமார்கள் அரூபமாக இருப்பதால் இக்காலத்தில் எப்படி உபதேசம் பெறுவது ? சற்று விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி.

  6. ஒரே கணக்கு அதுவும் இறைவன் கணக்கு /.
    தெள்ள தெளிவாக புரியுது சார்.

    நம் கணக்கு எல்லாம் வேஸ்ட் தான் .

    ரொம்ப ரொம்ப நன்றி சார்/.

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்
    கார்வார்,
    கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *