கரூர் அருகே உள்ள நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் அதிஷ்டானம் அனைவரும் தரிசிக்கவேண்டிய ஒன்று. அதிஷ்டானங்கள் பொதுவாகவே அருட்சக்திகள் உறைந்து கிடைக்கும் இடங்கள். அங்கு அமர்ந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் பெரும்பாலும் அதிசீக்கிரம் நிறைவேறிவிடும். மேலும் ஐந்து இடங்களில் (நெரூர், மானாமதுரை, காசி, பூரி, கராச்சி) அதிஷ்டானம் கொண்டுள்ள ஒரே மகன் இவர் தான்.
நம் தளத்தில் நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் வாழ்க்கை வரலாறு மற்றும் அதிஷ்டானம் பற்றி விரிவான பதிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு நாம் இரண்டு முறை சென்றிருக்கிறோம்.
இன்று குருவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ மகா பெரியவாள் நெரூருக்கு தரிசனம் செய்யச் சென்றது பற்றி பார்ப்போம்.
==========================================================
சதாசிவ பிரும்மேந்திரர் பற்றி ரைட்மந்த்ராவில் வெளியான பதிவுகள்….
தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!
‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!
Also check :
கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!
கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)
==========================================================
காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகன் – நெரூர் அற்புதம்!
– எஸ்.கோதண்ட ராம சர்மா | ராயவரம் பாலு | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார்கள் பெரியவாள். சதாசிவ பிரும்மேந்திரரிடம் பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும் மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரா பெயரை சொன்னாலும் கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவா.
அதிஷ்டானத்தில் ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள் பெரியவா. அதிஷ்டான அன்பர்களும் பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவுக்குப் போய் நின்று கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாச முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக் கூடாது என்பது, ஸ்ரீமடத்துச் சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை.
இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின் விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தங்க முடியும்? அந்த சமயம் பார்த்து வெகு அவசரமாக வந்தார் ஓர் அன்பர் ரங்கசாமி.
”பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும் பிரசாதம் வாங்கி கொண்டு, உடனே புறப்படணும்’ என்று, மனம் திறந்து வாய்விட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த தொண்டர்களிடம் முறையிட்டார்.
‘சுவாமி, பெரியவாள், கதவை சார்த்திக்கொண்டு அதிர்ஷ்டானத்திற்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவாள் தானாகவே வெளியே வந்தவுடன் முதன் முதலாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.’
வந்தவர் லேசுப்பட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி! தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். தொண்டர்களின் சுதந்திரமான வாய்வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், புதிதாக வந்த அன்பர் ரங்கசாமி அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்துகொண்டு, உள்ளே சென்று விட்டார். இந்தத் தடாலடி திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால், எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள்.
அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல் அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாக கேட்டது.
“நீங்கள் ம்ருத்யுஞ்சய ஜப – ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான். திரும்பிப் போங்கள்.”
அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக் கொண்டுவிட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார்.
அவருடைய நெருங்கிய உறவினருக்கு திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான், உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று சொல்லிவிட்டார்கள்.
ஜோசியர் உடனே மிருத்யுஞ்சய ஹோமம் செய்யுங்கள் என்றார். உடனே போய் பெரியவாளிடம் தெரிவித்து பிரசாதம் வாங்கி கொண்டு வந்தால் நல்லது என்று ஒருவர் ஆலோசனை. வயதான மூதாட்டி ஒருவர், ‘பெரியவா, இதோ பக்கத்திலே நெரூர்லேதானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ. அவா பாத்துப்பா’ என்று சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படி தான், அன்பர் ரங்கசாமி அவ்வளவு அவசரப்பட்டிருக்கிறார்! அவருடைய அதிர்ஷ்டம் தெய்வமே அவருக்கு அருள்வாக்கு கூறிவிட்டது.
ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தவுடன் அந்த நோயாளி உறவினர் படுக்கையில் உட்கார்ந்து புன்முறுவலித்துக் கொண்டிருந்தார். ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு ‘காரண்டி’!
==========================================================
Don’t miss this…
ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?
குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For more information click here!
==========================================================
Also check – ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள்
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!
எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!
==========================================================
Also check our earlier articles on Maha Periyava
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!
ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!
இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!
குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL
“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!
தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!
பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!
”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!
தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
[END]
Very interesting about Mahaperiava. Only Mahan only do this.Hara hara sankara jaya jaya sankara.