Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

print

குருசேஷத்திர போர் முடிந்து தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், “கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?” என்றார்.

அதற்கு கிருஷ்ணர் நேரடியாக பதில் சொல்லாமல், “உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்!” என்ற பகவான் ஒரு கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது. அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

“திருதராஷ்டிரா இப்போது சொல்… அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?”

சற்று சிந்தித்த திருதராஷ்டிரன், “எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது கிருஷ்ணா. இதே போன்று வசிஷ்ட மகரிஷியின் சமையற்காரன் ஒரு முறை புலால் கலந்த உணவை தன்னையுமறியாமல் அவருக்கு வைத்து விட்டான். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்துவிட்டார். உடனே அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அது மரக்கறி உணவு அல்ல ஊன் என்று கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்!: என்றார் திருதராஷ்டிரன்.

“சபாஷ் திருதராஷ்டிரா. நீயும் ஓர் அரசனாக இருந்தும் நியாயம் தவறாது, அந்த மன்னன் செய்ததே தவறு என கூறினாய். அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். ஆம் சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள் மற்றும் அதன் தாய்ப் பறவை எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

நீயே சொன்னபடி வசிஷ்டர் ஒரு முறை பார்த்ததுமே புலால் உணவு என்று உணர்ந்துகொண்டார். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்….”

“தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!” என்று முடித்தார் கிருஷ்ணர்.

தன் வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.

(*முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் வரிகள் விடுபட்டு தெளிவின்றி சுற்றிக்கொண்டிருந்த இந்த கதையை முழுமையாக்கி சற்று மெருகூட்டி நமது பாணியில் இங்கு தந்திருக்கிறோம்.)

==========================================================

உழவாரப்பணி அறிவிப்பு!

எல்லாம் வல்ல ஈசனருளால் நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி சென்னை திருமழிசை – பட்டாபிராம் சாலையில் அமைந்துள்ள ‘சித்துக்காடு’ என்னும் ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் வரும் ஞாயிறு பிப்ரவரி 19, 2017 அன்று நடைபெறும் நடைபெறும். ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேன் புறப்படும் நேரம் காலை : 6.45 AM. மதிய உணவு உண்டு. பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

– ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

இந்த தளம் எப்படி நடக்கிறது என்று அறிவீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Similar articles…

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

ராமநாமத்தின் விலை!

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

எது நிஜமான பக்தி?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *