Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

print
மிகப் பெரிய செல்வந்தன் அவன். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களும் தோட்டம் துரவுகளும் அவனுக்கு இருந்தன. அவனுக்கு நான்கு வாரிசுகள்.

“எனக்கு நீங்கள் பிள்ளைகளாய் பிறந்தவர்கள் என்பதால், என் சொத்துக்களை உங்களுக்கு தரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பெற்றோர் என்ன சொத்தை எனக்கு எழுதி வைத்து விட்டு சென்றார்கள்? அத்தனையும் நான் உழைத்து சம்பாதித்தது” என்று அடிக்கடி மகன்களிடம் சொல்வான். (பில்கேட்ஸ் கூட இதேக் கொள்கையை உடையவர் தான்!)

GrainsBleதனக்கு இறுதிக் காலம் நெருங்குவதற்குள் தனது சொத்துக்கள் அனைத்தையும் அதை கட்டி காக்கக்கூடிய மகனுக்கே கொடுக்கவேண்டும் என்று விரும்பினான்.

ஒரு நாள் நான்கு மகன்களையும் அழைத்தான்.

அனைவரிடமும் கையில் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் ஒரு கைப்பிடிக்கும் குறைவாக கோதுமைகளையும் கொடுத்து “இந்த உயர் ரக கோதுமை தானியங்கள் விசேஷமாக மந்திரித்து எனது குருநாதரால் கொடுக்கப்பட்டது. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து என்னை வந்து பாருங்கள். இந்தக் கோதுமை தானியங்களுக்கு அப்போது யார் மிகப் பெரிய மதிப்பை தருகிறீர்களோ அவர்களுக்கே என் சொத்தை எழுதி வைப்பேன்!” என்றான்.

முதல் மகன், இந்தப் பக்கம் வந்ததும், அந்த கோதுமைகளை வீசி எறிந்துவிட்டான். பணத்தை பீரோவுக்குள் பத்திரப்படுத்தினான். மூன்றாண்டுகள் கழித்து ஒரு படி நிறைய இதே போல கோதுமைகளை வாங்கி கொடுத்துவிடலாம். அப்பாவுக்கு என்ன வித்தியாசம் தெரியப்போகிறது என்பது அவன் எண்ணம்.

இரண்டாம் மகன்… பக்திமான். அந்த கோதுமை மணிகளை ஒரு வெள்ளிப் பேழையில் போட்டு வீட்டு பூஜையறையில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தான். “ஆண்டவா சொத்து எல்லாத்தையும் என் அப்பன் எனக்கே எழுதித் தரணும். ஆண்டவா சொத்து எல்லாத்தையும் எங்கப்பன் எனக்கே எழுதித் தரணும்!” இது தான் அவன் கடவுளிடம் அந்த பேழையை வைத்து இவன் மூன்று ஆண்டுகளும் வேண்டி வந்தது.

மூன்றாம் மகன், அதிபுத்திசாலி. அப்பா கொடுத்த ஒரு லட்சம் பணத்தில் தங்கம் வாங்கி அந்த கோதுமைகளுக்கு அசல் தங்கத்தை முலாம் போல பூசி, அந்த தங்கக் கோதுமைகளாக்கினான். கோதுமைக்கு இதைவிட மதிப்பை கொடுக்க தனது சகோதரர்களால் முடியாது என்பது அவன் கணிப்பு. (நெசமாலுமே புத்திசாலிதான்ல!)

Wheat

நான்காம் மகனுக்கு இந்த குறுக்கு வழிகள் அதிர்ஷ்டம் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. கொஞ்சம் நிலத்தை வாங்கி, அந்த கோதுமைகளை விதைத்து உழுது பயிரிட்டான். அடுத்த அறுவடைக் காலத்தில் அது விளைந்து அறுவடையை கொடுத்தது. கிடைத்த லாபத்தில் இன்னும் கொஞ்சம் நிலத்தை வாங்கி மேலும் கோதுமை பயிரிட்டான். அதுவும் நல்ல விளைச்சலை கொடுத்தது. இப்படியே செய்யச் செய்ய, மூன்றாண்டுகள் முடிவில் அவனிடம் நூற்றுகணக்கான கோதுமை மூட்டைகளும் விலை நிலங்களும் இருந்தன. மேலும் பல சொத்துக்களை வாங்கியிருந்தான்.

தந்தையிடம் நான்கு பேரும் மூன்றாம் ஆண்டு முடிவில் சென்றனர்.

முதல் மூன்று மகன்கள் தான் கூறியதன் உட்பொருளை விளங்கிக்கொள்ளாமல், குறுக்கு வழிகளில் சொத்துக்களை அடைய நினைத்ததும், நான்காம் மகன உழைத்து அதை பல்கி பெருக்கியதையும் புரிந்துகொண்டான்.

நான்காம் மகனுக்கே செல்வந்தன் தனது சொத்துக்களை கொடுத்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

அந்த தந்தை போன்றவன் தான் இறைவன். ஏற்றத் தாழ்வில்லாமல் அவன் நமக்கு கொடுத்துள்ள 24 மணிநேரமும் அப்படித் தான். அதைக் கொண்டு நாம் என்ன செய்கிறோமோ அதை வைத்து தான் நமது வாழ்க்கையும் வளர்ச்சியும் தீர்மானிக்கப்படுகிறது.

குறுக்கு வழிகளையும் அதிர்ஷ்டத்தையும் நம்புபவர்கள் என்றுமே வெற்றி பெற முடியாது. ஏமாற்றத்திற்கு தான் அவர்கள் உள்ளாவார்கள்.

Join our Voluntary Subscription Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

உங்களிடம் கையில் கொஞ்சம் தான் இருக்கிறது என்றாலும் அது எதுவாக இருந்தாலும், அதை மேலும் பெருக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய்ந்து ‘நம்பிக்கை’ என்னும் உரம் போட்டு ‘உழைப்பு’ என்னும் நீர் விட்டு வளர்க்கவேண்டும்.

இந்த தேதியில் இந்த நேரத்தில் உங்கள் கையில் கொஞ்சம் தான் பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை வைத்து எப்படி முன்னேறுவது என்று நினைக்காதீர்கள். THOUSANDS OF MILES OF JOURNEY STARTS IN A SINGLE STEP.

உங்களால் அதை நிச்சயம் பல்கி பெருகச் செய்ய முடியும். அது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. எங்கோ இருக்கும் கிரகங்களின் கைகளில் அல்ல.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் (குறள் 611)

==============================================================

Prathiyangira Devi

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 16

வயல்களில் நல்ல விளைச்சல் வேண்டுவோர்…

தங்கள் வயல்களில் நல்ல விளைச்சல் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அம்பாளுக்கு வாழைப்பழ அபிஷேகம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் வயலில் தானியங்கள் செழித்து வளரும். தற்போது நவராத்திரி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அம்பாளுக்கு வாழைப்பழ அபிஷேகம் செய்யுங்கள். கூட, தேன் கலப்பது சிறப்பு.

புத்திர பாக்கியம் வேண்டுவோர் பசுந்தயிர் அபிஷேகம் செய்யுங்கள். (பாக்கெட் பால் தயிர் வேண்டாமே!)

டிப்ஸ் தொடரும்…

==============================================================

Also check for more motivational stories :

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

 

6 thoughts on “எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

  1. இழந்த சொத்தின் மதிப்பு இப்போது தான் புரிகிறது. இனியாவது இருக்கின்ற சொத்தை வைத்து, நல்வழியில் உயர நம் தளம் மேலும் நமக்கு உதவட்டும். வாருங்கள்.! நம்பிக்கை உரமிட்டு, உழைப்பு நீர் பாய்ச்சி..உயர்வோம்..உயர்விப்போம்.

    சாதாரண கதை யாக தோன்றினாலும்..கதையின் நீதி அசாதாரமானது.

  2. மிகவும் அருமையான தன்னம்பிக்கை பதிவு.

    வாழ்வின் உயர் லட்சியத்தை அடைய நாளையும், கோளையும் நம்பாமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தால் வெற்றி நமதே

    டிப்ஸ் சூப்பர்.

    வாசகர்கள் அனைவருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்

    நன்றி

    வாழ்க … வளமுடன்

    உமா வெங்கட்

  3. சுந்தர்
    அருமயான கருத்து அவசியம் அனைவரும் பின்பற்றவேண்டிய நீதி

  4. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் -குறள் -691

    இதில் வள்ளுவர் விளக்க வருவது முயற்சியின் மேன்மையே அன்றி கடவுளை குறைத்து சொல்வது ஆகா.

    (மு. வ. – கூறுவார் -” ஊழியின் காரணமாக ஒரு செயல் செய்ய முடியாமல் போயினும் முயற்சி நம் உழைப்புக்கு ஏற்ற பலனை தரும்”)

    நல்ல பதிவு !!! சிறக்கட்டும் உங்கள் பணி !!!

    நெ வீ வாசுதேவன்

  5. சார்,

    முயற்சிக்கு இதைவிட ஒரு உதாரணம் கிடைக்காது.

    மிக்க நன்றி

    தங்களின்

    சோ ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *