Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

print
நீங்கள் இப்போதுள்ள நிலைமைக்கு, அது நல்ல நிலைமையோ அல்லது மோசமான நிலைமையோ காரணம் யார் தெரியுமா? அது நீங்கள் தான்! நீங்கள் மறுத்தாலும் உங்கள் மனசாட்சி இதை மறுக்காது. சரி தானே? ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் நன்கு நினைவில் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் உதவி கேட்டாலும் உங்களுக்கு மறுக்காமல், தயங்காமல் உதவக்கூடிய ஒரு நபர் யார் தெரியுமா? நீங்கள் தான்! நீங்கள் தான் உங்களுக்கு உதவமுடியும். கடவுளும் அத்தகைய நபர்களுக்கு தான் உதவுவார்.

ஜோதிட கட்டங்களை ஆராய்ந்து கொண்டு, ஜாதகத்தின் மீதும் கிரகங்களின் மீதும் பழியை போட்டுக்கொண்டு திரிபவர்கள் என்றுமே கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.

Thoughts

நமக்கு பாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை கூட நாம் நினைத்தால் நமக்கு சாதகமாக மாற்ற முடியும். அது எப்படி என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஒரு மனிதன் பெறக்கூடிய ஆற்றல்களிலேயே மிக மிக வலுவானது, பயனுள்ளது மனதின் ஆற்றலே.

இந்த ஆற்றல் உங்கள் எண்ணங்களிலிருந்து வருகிறது என்பது தான் விசேஷமே.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் காரணம். விதியோ ஜாதகமோ அல்ல. நம் மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களே நமது நடத்தை மற்றும் மனப்பான்மை மீது பாதிப்பை ஏற்படுத்தி நமது செயலையும் அதன் பின்விளைவுகளையும் தீர்மானிக்கிறது. எனவே நமது எண்ணங்கள் எப்படியோ நமது வாழ்க்கையும் அப்படியே.

http://rightmantra.com/wp-content/uploads/2014/01/Swami-Vivekanda.jpg

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது குறித்து கவனமாயிருங்கள்…

நமது மனதுக்குள் ஓடும் வீடியோ போன்றவை நமது எண்ணங்கள். நாம் அங்கே என்ன பிளே செய்கிறோம் என்பதை பொறுத்தே என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம், என்ன மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவர் தமது வாழ்க்கையில் இனிமையான மாற்றங்களை காணவிரும்பினால் அவர்கள் அதற்கு ஏற்றார்போல தாங்கள் விரும்பும் வீடியோவை பிளே செய்யவேண்டும்.

நமது எண்ணங்களின் சக்தி என்பது ஆக்கப்பூர்வ  சக்தியாகும்.

இந்த எண்ணங்களை நாம் பயிற்சி மூலம் மேலும் வலுவுள்ளதாக ஆக்க முடியும். இதை பயன்படுத்தி, நாம் நமது வாழ்க்கையில் மட்டுமல்ல, மற்றவர்கள் மனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஒரு விதையை நீங்கள் நட்டு, அதை நல்ல முறையில் நீரூற்றி பரமாரித்தால் அது எப்படி வளர்ந்து பலன் தருகிறதோ அதே போலத் தான் நம் எண்ணங்களும். நமது எண்ணங்களுக்கு நாம் அக்கறை, ஆர்வம், உற்சாகம் ஆகியவற்றை ஊட்டி வளர்த்து வந்தால் அவை வளர்ந்து நிச்சயம் பல கொடுக்கும்.

உங்கள் எண்ணங்கள் உங்கள் மனதிலிருந்து ஆழ்மனதிற்கு சென்று, அங்கு அவை நம் செயலை தீர்மானிக்கின்றன. அதே நேரம், நமது எண்ணங்கள் மற்றவர்கள் மனதிற்கும் சில சமயம் சென்றடைந்து நமக்கு உதவக்கூடிய நிலையில் உள்ளவர்கள் ஏன் என்று புரியாமலே நமக்கு உதவுவார்கள்.

இது நம்புவதற்கு கடினமாகவும் கஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இது தான். மனதின் சக்தியை அறிந்தவர்கள் நிச்சயம் இதை ஒப்புக்கொள்வார்கள். உங்கள் சிந்தனைகளையும் நீங்கள் வாழும் வாழ்க்கையையும் சற்று ஆராய்ந்து ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால் மனதை பற்றிய பல ரகசியங்களை புரிந்துகொள்ளமுடியும்.

இந்த பிரபஞ்சத்தின் அளவற்ற சக்திக்கும் உங்கள் மனதின் சக்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஒரே விதமான சிந்தனையை திரும்ப திரும்ப நீங்கள் உங்கள் மனதில் செலுத்துவதன் மூலம் இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு வழியில் அதை செயல்படுத்த உதவுகிறது. அதற்குரிய சூழலை கனிய வைக்கிறது.

God helps
சரி… நமது எண்ணங்களின் சக்தியை எப்படி பயன்படுத்துவது?

* நீங்கள் சாதிக்கவேண்டிய சாதனை அல்லது இருக்க விரும்பும் நிலை குறித்த ஒரு பக்காவான காட்சியை உங்கள் மனதில் தயார் செய்யுங்கள்.

* மனதில் தோன்றும் அந்த வீடியோ காட்சிக்கு ஒலி, ஒளி, வண்ணம், வாசனை, உயிர் என அனைத்தையும் கொடுங்கள். இதற்கு பெயர் தான் VISUALIZATION.

* இந்த VISUALIZATION ஐ அடிக்கடி நம்பிக்கையுடனும், கவனத்துடனும் மனதுக்குள் ஓடவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

* அப்படி ஓடவிட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்கள் ஆழ்மனது அதை உண்மையான அனுபவங்கள் என்று நம்பத் துவங்கும். ஆழ்மனதிற்கு உண்மையான அனுபவம், கற்பனையான அனுபவம் என்று வேறுபடுத்தி பார்க்க தெரியாது. எனவே அது மாற்றங்களை ஏற்படுத்தி, வாய்ப்புக்களை ஈர்த்து மனதில் உள்ள அனுபவத்துடன் யதார்த்தத்தை பொருத்திப் பார்க்க துவங்கும்.

நாம் அடிக்கடி இப்படி VISUALIZE செய்யும் செயல்கள், சூழ்நிலைகள் மற்றும் பொருட்கள் நடைமுறை உலகில் இயற்கையான முறையில் நிஜமாகிவிடும். கனவு நனவாவது இப்படித் தான். இப்படி கனவு நனவாவது சினிமாவில் வரும் பாடல் போல ஒரே நாளில் நடக்கக்கூடியதல்ல. உங்கள் லட்சியத்தில் நீங்கள் எந்த அளவு உறுதியாக, உண்மையாக இருக்கிறீர்கள், எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள், எந்தளவு அக்கறை செலுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும்.

மேற்கூறிய இந்த பழக்கத்தை பயன்படுத்தி, உங்களிடம் இருக்கும் எதிர்மறையான (நெகட்டிவ்) பழக்கங்களை மாற்றி, புதிய நேர்மறையான (பாஸிட்டிவ்) பழக்கங்களை, திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பணத்தை ஈர்ப்பதற்கும், சொத்துக்களை பெருக்குவதற்கும், பணியிடங்களில் உத்தியோக உயர்வை பெறுவதற்கும், வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும், உடல் நலத்தை பேணுவதற்கும், உறவு முறைகளை பராமரிப்பதற்கும், சாதகமற்ற சூழ்நிலைகளை சாதகமான சூழ்நிலைகளாக மாற்றுவதற்கும்… இப்படி எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

எனவே எப்போதும் உங்கள் சிந்தனைகளில் கவனமாக இருக்கவேண்டும். எதிர்மறையான எண்ணங்களை, நபர்களை ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள். என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்லதையும், பாஸிட்டிவ்வான முடிவுகளையும் தரும் சிந்தனைகளை மட்டுமே உங்கள் மனதிற்குள் அனுமதிக்கவேண்டும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (குறள் 595)

நீரைக் குறிக்க எத்தனையோ உதாரணங்கள் இருக்க வெள்ளத்தை இந்த குறளில் ஏன் வள்ளுவர் குறிப்பிடுகிறார் தெரியுமா?

எப்போதுமே வெள்ளம் என்பது எதிர்பாராமல் வருவது. நமக்கு பிரச்சனைகள் என்பதும் அப்படித் தான். அப்படி பிரச்சனைகள் வரும்போது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோமோ அதை பொறுத்தே நமது உயர்வும் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

ஒருவன் எந்தளவு உயர்கிறானோ அந்தளவு பிரச்சனைகளை சவால்களை சந்தித்தே தீரவேண்டும் என்று சுவாமி விவேகானந்தரும் ஒரு கருத்தை கூறியிருக்கிறார் தெரியுமா?

அண்மையில் திருக்கோவிலூர் சென்றபோது அங்கு பேருந்து நிலையம் அருகே ஒரு ஹோட்டலில் கண்ட வாசகம்!
அண்மையில் திருக்கோவிலூர் சென்றபோது அங்கு பேருந்து நிலையம் அருகே ஒரு ஹோட்டலில் கண்ட வாசகம்!

இறுதியாக சில :

* நெகட்டிவ்வாக பேசுபவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களால் உங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

* உன்னால் முடியாது, உனக்கு தகுதியில்லை, என்னால் உதவ முடியுமா என்று தெரியவில்லை போன்ற சொற்களை பேசுபவர்களைவிட, உன்னால் முடியும், உன்னைத் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை, என்னால் நிச்சயம் உதவ முடியும் (அப்படி செய்கிறார்களா என்பதை பற்றி கவலை இல்லை!) போன்றவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் வைத்திருங்கள்.

* உங்கள் சிந்தனைகளில் எப்போதும் கவனமாக இருங்கள்.

* எல்லாருக்கும் எப்போதும் நல்லதையே நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும். இது பிரபஞ்ச விதி.

குறிப்பு : நேர்மறையான (POSITIVE) சிந்தனைகள் குறித்து நமது தளத்தில் பல கதைகள் வெளிவந்துள்ளன. அவற்றை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! (அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? )

=====================================================================

சிந்தனை எப்படி இருக்கவேண்டும் ?

சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பெயர் பெற்றது அந்த நாடு. அந்த நாட்டு மன்னனுக்கு அழகிய ஒரு மகள் இருந்தாள். பல சவால்களும், சோதனைகளும், ஆபத்துக்களும் நாட்டை சூழ்ந்திருக்கும் வேளையில், தனது மகளை தகுந்த ஒருவருக்கு மணமுடித்து அவனுக்கு பட்டம் சூட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.

முரசறிவித்து பல்வேறு போட்டிகள் வைத்து இறுதியில் மூவர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அது அவனுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

தனது நாட்டில் கானகத்தில் குருகுலம் அமைத்து சிறந்த முறையில் கல்வி போதித்து வரும் அந்த ஞானியை அணுகி விஷயத்தை சொல்லி, இவர்கள் மூவரில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான்.

மூவரும் சில நாட்கள் தன்னுடன் தங்கியிருக்கட்டும் என்றும் தனது முடிவை பின்னர் சொல்வதாகவும் சொன்னார் ஞானி.

plant-in-handமன்னர் தனக்கிட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட அந்த ஞானி அசாத்திய தன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் மிக்க ஒருவனே இளவரசியை மணந்து இந்த நாட்டை மன்னனுக்கு பிறகு வழிநடத்தவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார்.

மூவருக்கு பல விஷயங்களில் சில காலம்  பயிற்சியளித்தார்.

இறுதியாக, ஒரு நாள் மூவரையும் அழைத்து தனது உள்ளங்கையில் இருந்த ஒன்றை காட்டி “இது என்ன?” என்று கேட்டார்.

முதலாமவன், “இது ஏதோ ஒரு பழத்தின் கொட்டை!” என்றான்.

இரண்டாமவன், “இது ஒரு விருட்சத்தின் விதை!” என்று சற்று தெளிவாக சொன்னான்.

மூன்றாமவனோ, “குருவே! உங்களின் உள்ளங்கையில் ஒரு காடு இருக்கிறது!” என்றான்.

இளவரசியை மணந்து முடிசூடிக்கொண்டவன் அந்த மூன்றாமவனே என்பதை உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?

மூவரிடமும் கேட்ட கேள்வி ஒன்று தான். ஆனால் அந்த பதிலும் உண்மை தான். ஆனால் அதில் தான் எத்தனை வித்தியாசம்!!
ஒவ்வொருவரும் சொன்ன பதில் குருவின் கையில் என்ன இருக்கிறது என்பதை விட அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதையே சொன்னது.

இந்த மூன்றாமவனுக்கு இருக்கும் அதே மனநிலை தான் உங்கள் எல்லோருக்கும் இருக்கவேண்டும்!!!

=====================================================================

Also  check :

தோல்வி என்றால் உண்மையில் என்ன?

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

=====================================================================

[END]

13 thoughts on “நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

  1. மிகவும் அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு . இந்த பதிவை படிக்கும் பொழுது இன்று திங்கள் கிழமையோ என்று நினைத்தேன்.

    //தீதும் நன்றும் பிறர் தர வாரா //

    நாம் செய்யும் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பு. நாம் நல்லவற்றையே நினைத்தால்………… நமக்கு கண்டிப்பாக நல்லதே விளையும்

    நமது சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ……..மிக அழகிய கதை மூலம் தெளிவு படுத்திவிட்டீர்கள் .

    இவ்வளவு தன்னம்பிக்கை பதிவை நம் தளம் மூலம் படிக்கும் நம் வாசகர்கள் நேர் மறை சிந்தனை உள்ளவர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ. … தங்களின் ஒவ்வொரு பதிவின் மூலம் எங்களுக்கு விதைத்த நற் சிந்தனை என்னும் விதை …………..தற்பொழுது விருட்சமாக வளர்ந்து வருகிறது………….

    நன்றி
    உமா வெங்கட்

  2. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் அவர்கள் சொல்லியது ” தீதும் நன்றும் பிறர் தர வாரா”
    நமது நல்லவைகளுக்கும் , அல்லவைகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பு
    “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நன்று”

  3. சிறந்த பதிவு.

    இப்பதிவினை படிக்கும்போது கீழ் கண்ட வாக்கியங்களே நினைவுக்கு வருகின்றன.

    “WHEN THE GOING GETS TOUGH, ONLY THE TOUGH GETS GOING.”

    அதேபோல் உயரிய சிந்தனைகளே நம் வாழ்க்கையினை
    தீர்மானிக்கின்றன என்பதை மிக சிறப்பான உதாரணத்துடன் விளக்கியுள்ளீர்.

    உயரிய சிந்தனைகளை கொள்வோம். சீறான வாழ்வினை பெறுவோம்.

  4. சார்

    படிக்கும்போதே கண்ணில் நீர் வருகிறது.

    சத்தியமாக நீங்கள் எனக்காகத் தான் எழுதியுள்ளீர்கள்.

    காலையில் மனது கஷ்டமாக இருந்தது. வீட்டுக்காரம்மா ரூ.5,00,000/- கேட்டார்கள். என்ன செய்வது என்று மனம் கஷ்டத்தோடு ஆபீஸ் வந்தேன். படித்தவுடன் மனம் தெளிவாகி விட்டது.

    selvi

  5. வணக்கம் சுந்தர். எண்ணங்கள் செயலாகும் என்பது உண்மைதான்.ஆனால், குழப்பத்திலும் ,பிரச்சனைலும், தினசரி வேலைகளிலும் சிக்கி இருக்கும் மனைதை இந்த எண்ணங்களில் இருந்து திசை திருப்பி ஆக்கபூர்வமாக சிந்திப்பது சிரமம்தான்.ஆனால் முயன்றால் முடியாதது இல்லை. நன்றி.

  6. கலங்கரை விளக்கம் போல வாழ்க்கைக்கு வழிகாட்டும் அருமையான பதிவு
    உறக்கத்தில் இருப்பவர்களை உசுப்பி எழுப்பும் உன்னதமான பதிவு
    சிறுகதை மூலம் நம்பிக்கை என்னும் பெரும் விதையை விதைத்தமைக்கு மிக்க நன்றி

    வாழ்க வளமுடன் !!!

  7. Wonderfully explained.
    **
    I really appreciate for this article. Only few like you can write like this.
    **
    Each points touch the chord. Lovely story.
    **
    I appreciate reader viji’s comments. Yes, only few of us fix one aim and try to achieve it. Most of us are just living daily life.
    **
    **Chitti**.

  8. நினைப்பதை அடிய “visualization technique” சொல்லி கொடுத்து இருக்கீங்க. முடிஞ்ச வர முயற்சி பண்ணுறோம்

    சிந்தனை சிறுகதை – சிந்திக்க தூண்டியது.

    இந்த பதிவு – கட்டாயம் அனைவரும் படித்து,பின்பற்ற வேண்டிய ஒன்று.

    மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *