Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > தவளையை கொன்றது எது?

தவளையை கொன்றது எது?

print
வளை ஒன்றை பிடித்து ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் போட்டு அந்த பாத்திரத்தை சூடேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீர் சூடேற சூடேற பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்பத்துக்கு ஏற்ப தவளை தனது உடலின் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். நீரின் வெப்பம் ஏற ஏற தவளை தனது உடலின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து கொண்டே போகும்.

நீர் மிகவும் சூடேறிவிட்ட நிலையில் தவளையால், மேற்கொண்டு தனது உடல் வெப்பத்தை மாற்ற முடியாது. இனி பாத்திரத்தில் இருக்க முடியாது என்கிற நிலை வரும்போது தவளை பாத்திரத்தை விட்டு வெளியே தாவ முயற்சிக்கும். ஆனால் அதனால் முடியாது. காரணம், தனது உடலின் சக்தி முழுவதையும் உடலின் வெப்பத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்வதிலேயே இழந்திருக்கும்.

அடுத்த சில வினாடிகளில் தவளை இறந்துவிடும்.

Boiling Frog syndrome

இங்கே தவளையை கொன்றது எது?

கொதிக்கும் நீர் தான் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் பதிலாக இருக்கும். ஆனால் அது தான் இல்லை. தவளை நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தாவி தப்பித்திருக்க முடியும்!

தவளையை உண்மையில் கொன்றது எது என்றால், எப்போது வெளியே தாவி தப்பிக்கவேண்டும் என்று அது முடிவு செய்யாமல் போனதே.

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் அனுசரித்து போகவேண்டியுள்ளது. அது தவிர்க்க இயலாதது. ஆனால், எதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தெரியுமா? எப்போது அனுசரித்து போகவேண்டும் (ADJUST), எப்போது எதிர்க்கவேண்டும் (CONFRONT / FACE) என்பதை முடிவு செய்வதில் தான்.

சில நேரங்களில் நாம் சில சூழ்நிலைகளை எதிர்கொண்டு உரிய நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டும்.

உடல்ரீதியாக, மனோரீதியாக, உணர்வு ரீதியாக, அல்லது பொருளாதார ரீதியாக பிறர் நம்மை தொடர்ந்து சுரண்டி வாழ (EXPLOIT) அனுமதித்தால் அதை அவர்கள் செய்துகொண்டே தான் இருப்பார்கள்.

இதிலிருந்து தப்பிக்க, எப்போது சரியாக வெளியே தாவுவது என்று முடிவு செய்யவேண்டும்.

நமது உடலில் சக்தி இருக்கும்போதே தாவுவோம்!

(நண்பர் திரு.இருங்கோவேள் அவர்கள் தன் முகநூலில் ஆங்கிலத்தில் ஷேர் செய்திருந்த இந்த அற்புதமான கதையினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறோம். அவருக்கு நம் நன்றி!)

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also  check for more motivational stories :

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

=====================================================================

[END]

 

5 thoughts on “தவளையை கொன்றது எது?

  1. வணக்கம் சுந்தர். நல்ல கதை. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதை பொறுத்துதான் உயர்வு ,தாழ்வு வெற்றி தோல்வி , சமயங்களில் உயிர் வாழ்வதும் அமைகிறது. நல்ல கருத்துக்கு நன்றி.

  2. உடல் ரீதியாக , மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பிறர் நம்மை சுரண்டி வாழ்தால் அவர்களிடமிருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்பதை அழகாகன தவளை கதை மூலம் விளக்கியதற்கு நன்றி

    நன்றி

    உமா வெங்கட்

  3. உடல் ரீதியாக மன ரீதியாக என்று யோசிக்காமல் எந்த சமயத்திலும் டென்ஷன் ஆகாமல் இருந்தாலும் கூட தண்ணீருக்கு ஏற்ப உடல்சூட்டை மாற்றி கொள்வதற்கு முன் பாத்திரத்தை விட்டு குதித்து தன் உயிரை காத்துகொண்டிருக்கும் அந்த தவளை

  4. ஆழகான கதை ஆனால் ஆழமான கருத்து மிக்க நன்றி சுந்தர்…

    விசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *