Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

print
வாட்ஸ்ஆப் போன்ற சமூக பகிர்வு தொழில்நுட்பங்களை மற்றவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் நம்மைப் பொருத்தவரை நமது லட்சியத்திற்கு அது உறுதுணையாய் இருக்கும் வண்ணமும் நமது தளத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் வகையிலும் தான் பயன்படுத்தி வருகிறோம். நம் நேரத்தை அதில் வீணடிப்பது கிடையாது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பியிருந்த கதை இது. அருமையான கதை. மிகப் பெரிய நீதி அடங்கிய இந்த கதையை மேலும் சற்று மெருகூட்டி, சுவை சேர்த்து இங்கே தருகிறோம்.

உங்கள் விருப்பப்பட்டியல் என்ன ?

Napoleanபேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் “மன்னா! எனக்கு பெர்லின் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை” என்றான்.

“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்” என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம், “எனக்கு ஒரு சிறிய முத்துமாலையும், இரண்டு வார விடுப்பும் பரிசாக வேண்டும்” என்று கேட்டான். அடுத்தநொடி அவனுக்கு அரசாங்க கருவூலத்தில் இருந்த முத்துமாலை ஒன்றை கொணரச் செய்து பரிசாக அளித்து “உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்” என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து “நாங்கள் கேட்டது போல பெரிதாக ஏதாவது கேட்கலாமே. ஏன் இப்படி முத்து மாலையையும் விடுப்பையும் ஏன் கேட்டாய்? தலைமுறைக்கு பொருள் சேர்க்கும் வாய்ப்பை விட்டுவிட்டாயே…. ” என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் “நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்” என்றான்.

மற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே” என்றார்கள்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

யூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில், விடுப்பும் வழங்கப்பட்டுவிட்டது!”

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

================================================================

Also check for more motivational stories :

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

8 thoughts on “இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

  1. தெள்ள தெளிவான உண்மை. இந்த வாரத்திற்கான சிறந்த டானிக்.

    நன்றி.

  2. மிகவும் அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு.
    நாளை கிடைக்கப் போகும் மகிழ்ச்சிக்கு காத்து இராமல் இன்றைக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. வணக்கம் சுந்தர். நல்ல கதை.வேர்வை காயும் முன் கூலி கொடுக்கவேண்டும் என்பதும் ,பாராட்ரிக்கு உடனே கொடுக்கும் பரிசும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும். எப்போவோ கிடைக்கும் பலா காயைவிட கையில் இருக்கும் களகாய் பெரியது . நன்றி

  4. சுந்தர் சார் வணக்கம்

    அணைத்து பதிவு மிகவும் அருமை சார்

    நன்றி

  5. உண்மை தான். நாளை நடப்பதை யார் அறிவார்?.
    யூதத் தளபதி மிகவும் புத்திசாலி. கேட்டவுடன் கிடைக்கும் பரிசிற்கு முக்கியத்துவம் அதிகம்.
    சொன்ன வாக்குறுதி நாளடைவில் மறந்து போகும் அதற்க்கு முன் கேட்டவுடன் கிடைக்கும் பரிசு சிறிதானாலும் நம் சந்தோசம் அளவிடமுடியாதது.
    நன்றி

  6. இதைத்தான் நமது முன்னோர்கள் அன்றே சொன்னார்கள் “இன்று கையில் இருக்கும் களாகாய், நாளை கிடைக்க போகும் பலாக்காயவிட பெரியது” என்று.

    ஆசிரியரின் உரைநடையில் இக்கருத்தை வாசிப்பதே ஒரு தனி சிறப்புதான்.

    நன்றி

  7. நாளை ..நாளை என்று எண்ணி ஏங்குவதை விட ..இன்று..இப்பொது..இக்கணம் என்று வாழ தொடங்க வேண்டும் ..அந்த வாழ்தலின் மகிழ்ச்சியே ..உண்மையான,நிலையான மகிழ்ச்சி என்பதை சுட்டி காட்டிய கதை ..இது போன்ற கதைகளை நாம் வருங்கால சந்ததிக்கும் சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்..இது காலத்தின் கட்டாயமும் கூட..

    இக்கன வாழ்வினை தொடங்குவோம்
    இனிமையாக வாழ்வோம்.

  8. SIR,

    BEST MORAL. YESTERDAY WAS THE CANCELLED CHEQUE NO USE OF IT.

    TOMORROW WILL BE PROMISSORY NOTE, NO GUARANTEE FOR IT, BUT

    TODAY IS THE CURRENCY NOTE WHICH CAN BE USED NOW ITSELF.

    THAT IS WHY THAT GENTLEMAN ASKED FOR IMMEDIATE BENEFIT.

    FINALLY EXCELLENT SIR.

    THANKS

    S. RAVICHANDRAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *