Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

print

ந்தப் பதிவு இன்றைய தேவை. நம் ஒட்டுமொத்த எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

  • ஒரு தேர்தலில் ராட்சத பலத்துடன் மெஜாரிட்டி பெறும் ஒரு அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்கள் வாங்கி மண்ணை கவ்வுவது எப்படி?
  • அதே போல ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த விழிப்புணர்வும், எழுச்சியும் கோடிக்கணக்கான மக்களிடம் வெகு சீக்கிரம் பரவுவது எப்படி?
  • எத்தனையோ பேர் சொல்லியும் மக்களிடம் எடுபடாத கருத்துக்கள், ஒரு சிலர் சொல்லும்போது மட்டும் எடுபடுவது எப்படி?

இன்றைக்கு இருப்பது போன்ற தொலை தொடர்பு, தகவல் தொடர்பு சாதனங்கள், (மொபைல், சாட்டிலைட் டிவி etc.etc.) எதுவும் இல்லாத காலத்திலேயே – மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்த காலகட்டங்களிலேயே – சரித்திரத்தில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்ட போராட்டங்கள் தோன்றியது எப்படி? மாபெரும் புரட்சிகள் ஒரு இரவில் வெடித்தது எப்படி?

இவற்றுக்கெல்லாம் சுவாரஸ்யமான – அறிவியல் ரீதியிலான – மனோதத்துவ காரணம் ஒன்று உண்டு.

கொஞ்சம் உண்மை + கொஞ்சம் நம்பிக்கை = மாபெரும் நிகழ்வு!

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

1952 ஆம் ஆண்டு ஜப்பான் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகாமையில் ஆப்பிள், கொய்யா உள்ளிட்ட பழ வகைகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. கடலில் மிதந்த ஆப்பிள் பெட்டிகள் தீவுக்கு அருகே கரை ஒதுங்க, அதை அந்த தீவில் உள்ள குரங்குக் கூட்டம் கண்டது.

ஆவலோடு ஆப்பிள்களை குரங்குகள் ஒரு கை பார்த்தன. அந்த குரங்கு கூட்டத்தில் உள்ள புத்திசாலி குரங்கு ஒன்று, மண் படிந்திருந்த ஆப்பிளை தண்ணீரில் முக்கி கழுவி பின்னர் சாப்பிட, இதை பார்த்த மற்ற குரங்குகளும் அதே போலச் செய்ய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் அனைத்து குரங்குகளும் ஆப்பிளை தண்ணீரில் முக்கி கழுவிவிட்டு பின்னர் தான் சாப்பிட்டன.

இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. Ok?

குறிப்பிட்ட ஒருவர் மனம் மாறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் அதே அளவு எண்ண அலைகள் (Thought Frequency) உடைய பலரது மனமும் மாறிவிடும். அந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியபிறகு (ஒரு நூறு பேர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) சட சடவென்று அனைவரது எண்ணமும் மாறிவிடும். புரட்சிகள், எழுச்சிகள் வெடிப்பது இப்படித்தான்.

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி ஏன் சொன்னார் என்று இப்போது புரிகிறதா?

உதாரணத்திற்கு உ.பி. தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். வீண் ஆடம்பரம், தற்புகழ்ச்சி, தனக்கு தானே சிலைகள் வைத்துக்கொண்டது என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், சென்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி பெற்ற மாயாவதி அரசு அதன் பின்னர் மக்களின் மௌனப் புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. சரியான மாற்று அல்ல என்றபோதும், ‘சமாஜ்வாடி கட்சியே மேல்’ என்ற முடிவுக்கு மக்கள் வந்து, அதை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியிருக்கின்றனர். ஆனால் இந்த உண்மை புரியாமல், ‘இந்த சமூகம் எங்களுக்கு ஓட்டு போடலை, அந்த சமூகம் எங்களுக்கு ஓட்டு போடலை, அந்த ஜாதி மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட்டாங்க’ அப்படி இப்படின்னு புள்ளிவிபரங்களை சொல்லி, அவங்களை அவங்களே ஏமாத்திக்கிறாங்க…. மக்களையும் முட்டாளாக்குறாங்க!

தமிழக மக்களை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது

இங்கு தமிழ்நாட்டில், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஒரு பிரிவு செய்யும் கூத்துக்களை நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நம்மைப் போன்று தேசப் பற்று உள்ளவர்களின் இதயத்தில் ரத்தம் வடிகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் வெட்கி தலைகுனிகின்றனர். மனுநீதி சோழன் ஆண்ட பூமியில் இப்படிப்பட்ட காட்சிகள் பார்க்க நேரிடுவது காலத்தின் கொடுமை.

கொலை கொள்ளைகளை, வன்முறைகளை நடக்கும் முன் தடுக்க வேண்டிய புலானாய்வு போலீசாரின் திறமை, அரசியல் பகைவர்களை உளவு பார்ப்பதிலேயே செலவழிந்து வருகிறது.

தமிழக மக்களை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. எவ்வளவு உயரத்திலும் தூக்கியும் வைப்பார்கள். போட்டும் உடைப்பார்கள் அவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். (குறள் 553)

(பொருள் : நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.)

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

நல்ல விஷயங்களை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்

உங்களை சுற்றியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு உடனடியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டு துவக்குங்கள். தாமதமே வேண்டாம். அது நடைமுறையில் ஒத்துவருமா? இல்லை எவராவது கேலி கிண்டல் செய்வார்களா என்று ஒரு போதும் தயக்கம் கொள்ளாதீர்கள். உங்களது முயற்சிகளில் தடைகளோ குறைகளோ இருக்குமானால், அதை பொருட்படுத்த வேண்டாம். அது நாளடைவில் சரியாகிவிடும். இன்றைக்கு நாம் பின்பற்றும் பல விஷயங்கள் எல்லாம் அது தொடங்கும்போது இருந்த விதத்தில் இல்லை. காலப்போக்கில் மெருகூட்டப்பட்டவையே.

நல்ல மாற்றங்களில் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள்

அதே போல, பிறர் ஆரம்பித்துள்ள உங்களை கவர்ந்த நல்ல விஷயங்களிலும் தயங்காது பங்கு கொள்ளுங்கள். அதற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள். உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு ஒரு விதையாக இருக்க முடிந்தால் அதுவல்லவா அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள், சமூக மாற்றங்கள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம் பங்கிற்கு நாம் ஏதாவது செய்யவேண்டாமா? நாம் மறையும் முன், இந்த உலகத்தில் நமது அடையாளமாக ஏதாவது விட்டு செல்லவேண்டாமா?

நாடு எக்கேடு கேட்டால் எனக்கென்ன, நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் யாரையும் இறைவன் விரும்பமாட்டான். சொல்லப்போனால் அத்தகையவர்களை அவன் வெறுக்கிறான்.

நாடு நன்றாக இருந்தால் தான் வீடு நன்றாக இருக்கும்!

வீடு நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருப்போம்!

நாம் நன்றாக இருந்தால் தான் நம் சந்ததிகள் நன்றாக இருக்கும்!!

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று பராசக்தியிடம் சூளுரைத்த பாரதியை போன்று நாமும் இருப்போம்.

நீங்கள் தெருவுக்கு சென்று போராடவேண்டும் என்பதோ கொடி பிடிக்கவேண்டும் என்பதோ இதன் அர்த்தம் அல்ல. உங்கள் உளப்பூர்வமான பிணைப்பு போதும்.

நடக்குமோ நடக்காதோ நல்ல விஷயங்களை இன்றே உங்கள் எண்ணங்களில் பயிர் செய்யுங்கள். அவை நடக்கும் என்று மனப்பூர்வமாக நம்புங்கள். நீங்கள எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் அவை நடக்கும்.¶¶

=========================================================

Also check :

ஒரு உடைந்த டீ கோப்பையும் கொஞ்சம் பக்குவமும்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!

‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

Also check :

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

வதந்தி சூழ் உலகு – நாம் எப்படி கரைசேர்வது? MUST READ

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

நேர்மைக்கு ஒரு விலை!

கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!

ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’!

ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்!

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *