Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

print
திருப்பராய்த்துறை தலத்தின் ஆலய தரிசன பதிவை எழுதிவருகிறோம். பதிவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, திருப்பராய்த்துறை தொடர்பாக மகா பெரியவா கூறிய ஒரு அற்புதமான விஷயம் மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் தொகுப்பில் கண்ணில் பட்டது. கூட இரண்டு மூன்று மகிமைகள் சேர்த்து அதை முதலில் அளித்துவிடுவோம். பின்னர் ஆலயதரிசன பதிவை சற்று நிதானமாக அளிக்கலாம் என்று தோன்றியது.

சிவாலயங்களில் காலக்கிரமம் தவறாமல் பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தால் வானம் பொய்க்காது. நாட்டில் பஞ்சம் வராது. எந்த ஊரில் சிவபூஜை சரியாக செய்யப்படுகிறதோ அந்த ஊர் செழிப்பாக இருக்கும். எனவேதான் அக்காலத்தில் மன்னர்கள் ஆங்காங்கே சிவாலயங்களை கட்டினார்கள். சமயக்குரவர்களும் ஒரே இடத்தில் இருக்காமல் பல ஆலயங்களுக்கு சென்று பதிகங்கள் பாடினார்கள். இதன்மூலம் பல ஆலயங்களில் பூஜை சரியாக நடைபெற்றது. ஆனால் இன்று?

ஓவர் டு பெரியவா…

thirupparaaythurai-shiva-temple

திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

மழையே பெய்யவில்லை. தண்ணீர்ப் பஞ்சம். நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை; மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது, கண்ணீர்.

சென்னை வர்த்தகப் பிரமுகர், பெரியவாளை தரிசனம் செய்யக் காஞ்சீபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில், வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது. ‘என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்’ என்று கேட்கவில்லை; ‘எசமானே! மழை இல்லமால் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணனும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

‘அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு. பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில், திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு. ஓதுவார்களுக்குத் தெரியும். அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம். மழை பெய்யும்: ஜனங்கள் சௌக்கியமா இருப்பா…’

பெரியவாளின் வாக்கு, நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும், திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக் கொண்டுவரலாமே?

பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.

periyavaநூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கோ….

பெல்லாரி அருகில் வேணிவீராபுரம் என்று ஒரு கிராமம். விவசாயத்தை நம்பிப் பிழைக்கும் ஜனங்கள். மழை இல்லை என்றால் ஜீவனம் இல்லை.

பெரியவர்களிடம் வந்து (கன்னடத்தில்) முறையிட்டார்கள்.

”உங்க கிராமத்திலே சிவன் கோயில் இருக்கா?”

”இருக்கு…”

”நூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கோ… சிவ சிவன்னு சொல்லிண்டு பண்ணினா போறும்… சன்னதியிலேயே உட்கார்ந்துகொண்டு சிவநாம ஜபம், சூரியோதயம் ஆகிற வரையிலும்…”

பெரியவர் உத்தரவிட்டபடி, மறுநாள் சிவாராதனம் நடந்தது. அதற்கு மறுநாள் வானம் பொத்துக்கொண்டு மழைக் கொட்டியது.

ஏழைக்கு இரங்குங்கள்!

ரமாச்சார்ய ஸ்வாமிகள் எப்போதும் தன்னிடம் வருபவர்களில் ஏழ்மையானவர்களைத்தான் கூர்மையாகக் கவனிப்பார்.

கோடிக்கரையில் ஸ்நானம் செய்யச் சென்றபோது வழிநெடுகிலும் கூட்டம். ஒரு ஏழைக் குடியானவன், வழியில் திடீரென்று வீழ்ந்து நமஸ்கரித்தான். அங்கிருந்த ஒரு மிராசுதார், ஒரு கம்பினால் அவனை அடித்துவிட்டார். உடனே ஸ்வாமிகள் ஒருவருடனும் பேசாமல் அந்த ஏழையைத் தூக்கச் சொல்லி தன் சிஷ்யர்களிடம் அவனுக்கு உடனே வைத்யம் செய்யச் சொன்னார், என்னே கருணை!

டாக்டர் பொன்னம்மாள், கம்யூனிஸ்டு தலைவர் ராமமூர்த்தியின் பெண். பெரியவாளிடம் ஆசிகள் பெறச் சென்றார். பெரியவாள், ”ஏழைகளுக்கு இலவசமாக வைத்யம் செய். அவர்களை அன்போடு நடத்து. ஆண்டவன் உன்னை ரக்ஷிப்பான்” என்றார். ஏழைகள் ஆண்டவன் குழந்தைகள் என்று உணர்த்தினார்.

ஒரு ஏழை பிராமணர் தன் பெண்ணை அழைத்துச் சென்று ஸ்வாமிகளிடம், ”என் பெண் கல்யாணத்திற்கு என்னிடத்தில் எதுவும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றார். அப்போது அங்கு வந்த மார்வாடியிடம் ”நீங்கள் கொண்டு வந்திருக்கும் 13 பவுன்களை இந்த ஏழைக்குக் கொடுங்கள். காமாக்ஷிக்குப் போய்ச் சேரும்” என்றார்.

ஏழையின் சிரிப்பிலே இறைவனைப் பார்க்கலாம். அவன் அனாத பந்து.

– எஸ்.கோதண்ட ராம சர்மா | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

==========================================================

Don’t miss this…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

For more information click here!

==========================================================

Also check – ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள் 

thirupunkoor nandhi 6

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

நடக்க முடியாதவருக்கு நாடிச் சென்று அருள்புரிந்த மகா பெரியவா!

காலனை திருப்பி அனுப்பிய காஞ்சி மகான் – நெரூரில் நடந்த அற்புதம்!

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….!

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!

இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

One thought on “திருப்பராய்த்துறையும் வான் மழையும்!

  1. மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன
    ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை எங்களால் உணர முடிகிறது
    மெருகேற்றப்பட்ட உங்கள் பதிவிற்காக நாங்கள் காத்திருப்போம்
    உங்கள் பனி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு துணை நிற்கட்டும்
    வாழ்க வளமுடன்

Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *