இந்துக்களின் பண்டிகையில் மிக மிக முக்கியமானது அர்த்தமிக்கது ஆயுத பூஜை பண்டிகை. செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து அதற்கென்று ஒரு பண்டிகை எடுப்பது நமது இந்து மதம் மட்டுமே.
சென்ற ஆண்டு தி.நகர் சத்குரு சபா வேத பாடசாலை குழந்தைகளை கொண்டு நமது அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடியது நினைவிருக்கலாம். இந்த ஆண்டும் அக்குழந்தைகளை கொண்டே கொண்டாடுவது என்று முடிவு செய்து முன்னதாக சென்று பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளிடம் பேசி அனுமதி பெற்றுவிட்டோம்.
திங்கட்கிழமை (10/10/2016) ஆயுத பூஜை என்றாலும் கலந்துகொள்பவர்கள் சௌகரியம் மற்றும் இதர விஷயங்களை மனதில்கொண்டு சனிக்கிழமை மாலையே ஆயுத பூஜை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த பாடசாலையில் சுமார் 15 வித்யார்த்திகள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். இந்த பாடசாலையில் உள்ள கோ-சாலை பசுக்களுக்கு நம் தளம் சார்பாக பிரதி மாதம் தீவனம் வாங்கித் தருவதும் வழக்கம். இங்கு இரண்டு பசுக்களும் கன்றுகளும் உள்ளன. அடிக்கடி இங்கு சென்று, மாணவர்களுடன் கன்றுக்குட்டிகளுடன் விளையாடுவது நமக்கு பிடித்த ஒன்று. எனவே மாணவர்கள் அனைவரும் நமக்கு பரிச்சயம். அவர்களின் சிறு சிறு தேவைகள் அனைத்தும் நமக்கு அத்துப்படி.
வேதம் படிக்கும் இம்மாணவர்கள் நம்மை பொருத்தவரை நிஜ ஹீரோக்கள். கொண்டாடப்பட வேண்டியவர்கள். இம்மாணவர்களை அலுவலகம் வரவழைத்து அவர்களையே பூஜை செய்யவைத்து பின்னர் அவர்களுக்கும் ஆயுத பூஜை பையை கொடுத்து நம் நண்பர்களுக்கும் அவர்களைக் கொண்டே அவர்கள் கையால் பூஜைப் பையை தருவதாக பிளான்.
மாணவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நமக்கு தெரியும். எனவே சுவீட், காரம், பொரி & கடலை மிக்ஸ், ஐஸ்க்ரீம், ஸ்நாக்ஸ் என பைகள் தயார் செய்யப்பட்டது.
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்கனவே தளத்தில் நமது ஆயுத பூஜை பற்றி கூறி வருமாறு தகவல் தெரிவித்து, சென்ற ஆண்டு பங்கேற்றவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டி அழைப்பு விடுத்தோம். விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் கலந்துகொள்ளட்டும் என்று தளத்திலும் அறிவித்து அனைவரையும் வரவேற்றோம்.
வெள்ளிக்கிழமை முதலே அலுவலகத்தில் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். சிறிய இடம் என்பதால், இடத்தை அடையக்கூடிய வஸ்துக்களை ஒழுங்குபடுத்தி ஓரளவு இடத்தை கிரியேட் செய்தோம்.
சென்ற ஆண்டு பூஜை நமக்கு நல்ல அனுபவத்தை தந்தபடியால் இந்த ஆண்டு திட்டமிடல் சற்று சுலபமாக இருந்தத். தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிவைத்டோம். அலுவகலத்தை சுத்தம் செய்து அலங்கரித்தோம்.
சனிக்கிழமை மாலை சுமார் 6.00 மணியளவில் மாணவர்கள் அலுவலகம் வந்தனர். நண்பர் குட்டி சந்திரன் சென்று அவர்களை அழைத்து வந்தார். அலுவலகத்தின் கீழே எங்கள் வளாகத்தின் வாயிலுக்கு சென்று எதிர்கொண்டு அவர்களை வரவேற்று அழைத்து வந்தோம்.
“வருக… வருக….உங்கள் வருகையால் எங்கள் அலுவலகம் புனிதமடைந்தது!” என்று கூறி அவர்களை வணங்கி வந்திருந்த நம் நண்பர்கள் அனைவரிடம் அவர்களை அறிமுகம் செய்துவைத்தோம்.
பூஜைக்கு தேவையான முழு பொருட்களும் தயாராக இருந்தது.
நாமும் வந்திருந்த அனைத்து நண்பர்களும் சங்கல்பம் செய்த்துக்கொண்ட பின்னர் பூஜை துவங்கியது. முதலில் பிள்ளையார் பூஜை. மாணவர்கள் வேதம் ஓதி, முறைப்படி பூஜை செய்து பின்னர் ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம், ருத்ரம் முதலியவற்றை ஓதினார்கள். சுமார் அரைமணி நேரம் பூஜை நடைபெற்றது. பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நம் தளம் சார்பாக வேத வித்துக்களுக்கு ஆயுத பூஜை பை கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களை கொண்டே வந்திருந்த நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உழவாரப்பணி குழுவினருக்கும் ஆயுத பூஜை பிரசாத பையை கொடுத்தோம். வந்திருந்த அனைவருக்கும் பொரிகடலை, சுவீட், காரம், பழம், மல்டி-பர்பஸ் பிளாட்டிக் பவுல், சுமங்கலி செட் ஆகியவை கொண்ட கிப்ட் கொடுக்கப்பட்டது.
அனைத்தும் முடிந்த பிறகு வேத வித்துக்களை ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவைகளை அங்கேயே சாப்பிட சொன்னோம்.
அவர்கள் அனைத்தும் முடிந்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றபோது, அவர்கள் பிரிய எங்கள் யாருக்கும் மனமின்றி கண்கள் கலங்கின.
* சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இம்மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வஸ்திரம், பட்டாசு, இனிப்புக்கள் ஆகியவற்றை தரவிருக்கிறோம். சென்ற ஆண்டு இந்த கைங்கரியத்தில் உதவியவர்களை மீண்டும் இதன்பொருட்டு தொடர்புகொள்ளவிருக்கிறோம். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் இந்த பொருட்கள் அவர்களிடம் முறைப்படி கோ-பூஜை செய்து ஒப்படைக்கப்படும்.
வேதத்தை விட்ட அறமில்லை – வேதத்தில்
ஓதத்தகும் அறம் எல்லாம் உள – தருக்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே!
– திருமந்திரம்
==========================================================
தேடி வந்த தெய்வம்…!
நம் அலுவலக ஆயுதபூஜைக்கு வந்த நண்பர் ஹரிஹரன் அவர்கள் அளித்த பரிசு… யோகி ராம்சுரத் குமார் அவர்களின் படம்.
யோகிராம் சுரத்குமார! யோகிராம் சுரத்குமார!
யோகிராம் சுரத்குமார! ஜெய குரு ராயா!
யோகிராம் சுரத்குமார் அவர்களைப் பற்றி ரைட்மந்த்ராவில் பல பதிவுகள் வந்துள்ளது. சாம்பிளுக்கு ஒன்று…
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!!
==========================================================
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
==========================================================
[END]
Dear SundarJi,
Super..
Ramesh