Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

print
து தண்டபாணித் தெய்வம் புரிந்த மற்றுமொரு திருவிளையாடல். முருகப் பெருமானுக்கு எத்தனையோ தலங்கள் உள்ளன. இருப்பினும் குறிப்பிட்ட தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ‘அறுபடை வீடுகள்’ என்று சொல்லும் வழக்கம் எப்படி வந்தது? அறுபடை வீடுகளின் பின்னணி என்ன என்பது பலருக்கு தெரியாது.

//இப்பதிவுக்காக நமது தளத்தின் ஓவியர் பெரியவர் திரு.சசி அவர்கள் வரைந்த பிரத்யேக ஓவியம் இடம்பெற்றுள்ளது.//

தலைசிறந்த முருகனடியார்களுள் ஒருவர் புலவர் நக்கீரர். (ஆம் ‘நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றமே குற்றமே’ என்று தலைவரையே எதிர்த்து நின்றவர் தான்!).

முருகனின் ஆறுபடை வீடுகைளப் பற்றியும் அவற்றின் சிறப்புகளை பற்றியும் நக்கீரர் இயற்றிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. இந்நூலில் நக்கீரர் வரிசைப்படுத்தி பாடிய முருகனின் ஆறு திருத்தலங்களைத்தான் ஆறுபடை வீடுகளாய் இன்றும் நாம் வழிபட்டு வருகிறோம்.

lord-subramaniya-swamy
வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி!

திரு+முருகன்+ஆற்றுப்படை = திருமுருகாற்றுப்படை சரி. ஆற்றுப்படை என்றால் என்ன?

‘ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘வழிபடுத்துதல்’ அல்லது ‘வழிகாட்டுதல்’ என்று பொருள்.

‘ஆற்றுப்படை’ என்றால் ‘வீடுபேறுகளைப் பெற்ற ஒருவன், வீடு பேறுகளைப் பெற மற்றொருவனை வழிநடத்துவது’ என்று பொருள்படும். அதாவது, ஒரு கொடையாளியிடம் தானம்பெற்று தன் வறுமையைத் போக்கிக்கொண்ட ஒருவன், வறுமையில் வாழும் மற்றொருவனுக்கு அந்த வள்ளலின் இருக்குமிடம், போகும் வழி, வள்ளலின் குணம் ஆகியவற்றை எடுத்துக்கூறி, “அங்கே சென்று உன் வறுமையை தீர்த்துக்கொள்” என்று வழிகாட்டுதலே ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

முருகனை தஞ்சமடைந்து, அவன் அருளைப்பெற்ற நக்கீரர், நம்மைப்போன்ற பக்தர்களுக்கு, முருகன் வாழும் ஆறு வீடுகளை நமக்கு காட்டி, அங்கே சென்று முருகனை வணங்கி அவன் அருளைப்பெற வழிகாட்டி நம்மை ஆற்றுப்படுத்தி எழுதியதே திருமுருகாற்றுப்படையாகும்.

ஆஹா… எத்தனை பெரிய உபகாரத்தை நமக்கு நக்கீரர் செய்திருக்கிறார்!

திருமுருகாற்றுப்படையில் அடையாளம் காட்டப்பட்டுள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் அன்பர்கள் அனைவரும் தவறாமல் சென்று வழிபட்டு எல்லா நலமும் பெறலாம்.

நக்கீரர் வரிசைப்படுத்தும் ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படைவீடு திருச்செந்தூர், மூன்றாம் படைவீடு பழநி (திருவாவின்குடி), நான்காம் படைவீடு சுவாமிமலை, ஐந்தாம் படைவீடு திருத்தணிகை, ஆறாம் படைவிடு பழமுதிர்ச்சோலை. திருப்பரங்குன்றத்தில் அமர்ந்து பாடியதால்தான் திருப்பரங்குன்றத்தை முதல் பாடினார் போல…!

பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை வைக்கப்பட்டுள்ளது. பெருமைமிகு திருமுறைகளில் இது இடம்பெற்றிருப்பதிலிருந்தே இதன் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளலாம். அது தவிர பத்துப்பாட்டில் முதலாவதாகவும் உள்ளது இந்த திருமுருகாற்றுப்படை.

==========================================================

Also check some important updates….

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

==========================================================

‘திருமுருகாற்றுப்படை’ பாடப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திருப்பரங்குன்றத்தின் தல வரலாற்றை விளக்கும் திருப்பரங்கிரி புராணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் அடிப்படையில் ஒரு தீவிர சிவபக்தர். ‘சிவனைத்தவிர எவரையும் வழிபடமாட்டேன்’ என்ற கொள்கையுடையவர். சிவனோடு வாதம் புரிந்த பாவத்தை போக்கும் வகையில் கயிலைக்கு சென்று தவமியற்ற திட்டமிட்டார். செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் அருகே மரத்தின் கீழ் ஒரு தடாகத்தை கண்டு அதிலிருந்த நீரை பருகி பின் நிழலில் இளைப்பாறினார்.

தொடர்ந்து நித்யகர்மானுஷ்டானங்களை முடித்து சிவனை கண்மூடி தியானித்துக் கொண்டிருந்தபோது, அம்மரத்திலிருந்து இலை ஒன்று அவர் மீது விழுந்து பின் தடாகத்தில் விழுந்தது. உடனே தியானம் களைந்து கண் திறந்து பார்த்தார் நக்கீரர். நீரில் மூழ்கிய பகுதி மீனாகவும், தரையில் கிடந்த பகுதி பறவையாக மாறி ஒன்றுக்கொன்று இழுத்தபடி இருந்தது. இந்த அதிசயத்தை கண்டு பிரமித்த நக்கீரர் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

nakkeearar-thirumurugatruppadai

அவ்வேளையில் அங்கே தோன்றிய பூதம் ஒன்று, “சிவபூஜையில் கவனம் சிதைந்து சிவாபராதம் செய்தாய்… வா என்னோடு” அவரை பற்றி இழுத்துக்கொண்டு போய் அருகே இருந்த குகையில் அடைத்தது. அச்சிறையில் ஏற்கனவே 999 அடியார்கள் இவரைப் போலவே பூதத்தால் சிறைவைக்கப்பட்டிருப்பதை கண்டார். இவரோடு சேர்த்து அந்த எண்ணிக்கை ஆயிரமானது.

இவரைக் கண்ட அந்த அடியார்கள் யாவரும் “நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் என்று நினைத்தோம். நீங்கள் வந்து எங்கள் உயிருக்கு உலை வைத்துவிட்டீர்கள்” என்றனர்.

இதைக் கேட்ட நக்கீரர் திடுக்கிட்டார்.

“நான் பிடிப்பட்டதற்கும் நீங்கள் மேலும் சில காலம் வாழ்வதற்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவினார்.

“இந்தப் பூதம் பசி எடுக்கும்போதேல்லாம் ஆயிரம் பேரை சேர்த்து வைத்து உண்ணும் வழக்கம் உடையது. இதுவரை 999 பேர் தான் இருந்தோம். ஆயிரமாவது நபர் அப்பூததிற்கு கிடைக்கவில்லை. நீங்கள் தற்போது இங்கு வந்து சிக்கிக்கொண்டதால் உங்களோடு சேர்ந்து எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டது. விரைவில் அனைவரையும் உண்ணப் போகிறது” என்றனர்.

தான் பூதத்திற்கு இரையாகப்போவதைப் பற்றி நக்கீரர் கவலைப்படவில்லை. ஆனால், தன்னால் அடியார்களின் ஆயுள் குறைந்துபோனதே என்கிற பழிக்கு நாம் ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார்.

அப்போது பூதம் உணவை உண்ணும் முன் நீராடிவிட்டு வரலாம் என்று குகையின் முன்னே ஒரு பெரிய பாறையை இழுத்துபோட்டு குகையை அடைத்துவிட்டு சென்றது.

இந்த இக்கட்டிலிருந்து தன்னை மீட்க தேவர்களை சிறைமீட்ட முருகப்பெருமானால் தான் முடியும் என்று கருதி முருகப்பெருமான் மீது ‘திருமுருகாற்றுப்படை’ என்னும் பாடலை இயற்றினார் நக்கீரர்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு

என்று திருப்பரங்குன்றத்தில் தொடங்கி,

இழுமென இழிதரும் அருவி
பழமுதிர் சோலை மலைகிழ வோனே

என்று பழமுதிர்சோலையில் நிறைவு செய்தார்.

இயற்கை வளமிக்க எழில்மிகு இடங்களிலேயே இறைவன் விரும்பி எழுந்தருளி இருக்கிறான். இதை திருமுருகாற்றுப்படையில் வரும் ஒரு பாடலில்…

“காடும் காவும் கவின்பெறும் துருத்தியும்
யாறம் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பு
மன்றமும்; பொதியிலும் சந்துடை நிலையினும்”

ஆகிய இடங்களில் சென்று மனமுருகி வழிபடுவாருக்கு முருகன் அருள்புரிகிறான் என்று நக்கீரர் கூறுவதை கவனியுங்கள். மேலும் பல ஞானிகள், யோகிகள் கூட மலை, வளம், போன்ற இயற்கை எழில்மிக்க இடங்களுக்கே சென்று தவநெறியை மேற்கொண்டார்கள். இறைவனும் அருவுருவத் திருமேனி கொண்டு அன்பர்கள் உய்யும் வண்ணம் இயற்கை வனப்பு நிரம்பிய இடங்களிலேயே திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையை பாடி முடித்ததும் கருணைக் கடலாம் கந்தன் மயில் மீதேறி வந்து அவருக்கு காட்சியளித்து பூதத்தைக் கொன்று அந்த குகையை பிளந்து, அனைவரையும் சிறையிலிருந்து விடுவித்தார். இன்றும் திருப்பரங்குன்றத்தில் அந்தப் பாறை உள்ளது. ‘வேலேறிப் பாறை’ என்று அதற்கு பெயர்.

தக்க சமயத்தில் வந்து தன்னை காத்து அடியார்களையும் மீட்டு தன் மீது பழி வராமல் காத்த கந்தவேளை கண்கள் பனிக்க தொழுது நின்றார் நக்கீரர்.

நக்கீரரை நோக்கிய சரவணபவனார், “அன்பனே…. மிக்க மகிழ்ச்சி. நீவிர் இனி திருக்காளத்தி தரிசனம் செய்தால் போதும் அதுவே திருக்கயிலையைத் தரிசித்த பலனைத் தரும்” எனக்கூறி அருள்புரிந்தார்.

நக்கீரர் திருக்காளத்தி சென்று காளத்தியப்பரை வணங்கி, ‘கயிலை பாதி காளத்தி பாதி’ என்கிற அந்தாதி பாடி ஈசனருள் பெற்றார்.

திருமுருகாற்றுப்படையை பக்தி சிரத்தையுடன் ஓதிவந்தால் மனம் சம்பந்தப்பட்ட (PHYCHOLOGICAL DISORDERS) எந்தப் பிணியும் அணுகாது.

திருமுருகாற்றுப்படை நூற்பயனான நேரிசை வெண்பாவில்,

//நக்கீரர் தாம் உ ரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் – முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான் நினைந்த எல்லாம் தரும்.//

‘மனக்கவலை தீர்த்தருளி தான் நினைத்த எல்லாவற்றையும் தரும்’ என்று கடைசி வரியில் கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். எனவே, தாங்களோ தங்கள் சுற்றத்தினரோ மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பதாக கருதினால் தினமும் திருமுருகாற்றுப்படையை ஓதி வரவேண்டும். ¶¶

வரலாற்று தகவல் :

நக்கீரர் வாழ்ந்த காலம் இரண்டாம் நூற்றாண்டு எனவும் ஒன்பதாம் நூற்றாண்டு எனவும் இரு வேறு கருத்துக்கள் உலவுகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றி திருவிளையாடல் புராணத்திலும் நக்கீரரைப் பற்றி பல தகவல்கள் காணப்படுகிறன.

தருமி பொற்கிழி பெற்ற வரலாறு திருநாவுக்கரரரசின் பதிகங்களில் வருவதால் இவர் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தியவர் என்பது மட்டும் உறுதி.

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

– திருப்புத்தூர் (ஆறாம் தேவாரம்)

நக்கீரர் பாடியப் பாடல்கள் பதினோறாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன.

பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர்.

திருமுருகாற்றுப்படை காணொளி 

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

One thought on “திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

  1. வேலுண்டு வினை இல்லை
    ஆறுமுகப்பெருமானை பற்றிய செய்திகள் என்றென்றும் திகட்டாதவை
    ஆற்றுப்படையை பற்றியும் அதனை இயற்றிய நக்கீரப்பெருமானார் பற்றியும் அறிய செய்திகளை பகிர்தமைக்கு மிக்க நன்றி

    நமது தள ஓவியர் திரு சசி அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுதல்களும்
    அவரது ஓவியத்தை எப்படி பாராட்டுவது?
    அவ்வளவு தத்ரூபமாக வரைந்துள்ளார்
    ஓவியத்தின் பின்னணி, முகபாவம், வர்ண ஆளுகை என அனைத்திலும் பிரமிக்க வைக்கிறார்

    சுந்தர் ஜி
    பதிவின் இறுதியில் ஆற்றுப்படையின் காணொளியும் இணைத்து பதிவிற்கு மேலும் மெருகேயிற்றிவிட்டீர்கள்

    எல்லாம் வல்ல அந்த ஆறுமுகக்கடவுள் உங்களுக்கு என்றென்றும் துணை இருப்பார்

    வாழ்க வளமுடன்

Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *