Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > ஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்!

ஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்!

print
ரு ஒட்டகமும் அதோட குட்டியோட படுத்திருந்தது.

“அம்மா… நான் உன்கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா?”

“தாராளமா கேளுடா கண்ணு… என்ன சந்தேகம் உனக்கு?” – இது அம்மா ஒட்டகம்.

“அம்மா அது வந்து நமக்கெல்லாம் ஏன்மா பெரிசா முதுகுக்கு மேல் செதில் இருக்கு??”

Camel and calf

“அதுவா… அதாவது நாம பாலைவனத்துல வாழற பிராணிகள். நமக்கு தண்ணீர் கிடைக்கிறது அபூர்வம். அதுனால் தண்ணி கிடைக்கும்போது, செதில்ல சேர்த்து வெச்சுக்குவோம். அதனால் தண்ணியே இல்லாட்டி கூட நம்மால பல நாட்கள் உயிர் வாழமுடியும்”

“ஓ… இப்போ புரியுது. அது சரி கால்லாம் ஏன் உயரமா, வட்டமா, கீழே தட்டையா  இருக்கு?”

“பாலைவனத்துல மணல்ல நடக்கிறதுக்கு வசதியா அது கடவுளால அப்படி படைக்கப்பட்டிருக்கு. இப்படி கால் இருந்தாத் தான் மணல்ல நல்லா நடக்கமுடியும்!”

“ஒ.கே…! அப்போ நம்ம இமைகள் மட்டும் ஏன் ரொம்ப பெரிசா இருக்கு? சமயத்துல அது என் பார்வையை கூட மறைச்சிடுது….”

“பாலைவனத்துல வீசுற மணல் புயல் மற்றும் காத்து கிட்டே இருந்து நம்ம கண்களை அது தான் காப்பாத்துது…! அதனால அது பெரிசா இருக்கு!”

“ஓ… அப்போ நாம பாலைவன விலங்குகள்ங்குறதால நம்ம ஒவ்வொரு உறுப்புக்களையும், கடவுள் இப்படி படைச்சதுக்கு காரணம் இருக்கு. ஆனா, நமக்கு இங்கே ZOO ல என்ன வேலை? இங்கே என்ன பண்ணிட்டுருக்கோம்?”

நீதி : நம்ம திறமை, அறிவு, அனுபவம் இதெல்லாம் நாம இருக்கவேண்டிய இடத்துல இருந்தாத்தான் பிரயோஜனப்படும். இல்லேன்னா நோ யூஸ்!!

(இது ஆங்கிலத்தில் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கதை தான். அதை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறோம். அவ்வளவே!).

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா?

பக்கத்து வீட்டு துணிங்க அழுக்கா இருக்கா?

ஆண் Vs பெண் – சில வித்தியாசங்கள் !

அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் !

வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்….

“என்ன சொன்னே? குடும்பத்துல பிரச்னைன்னு தானே?”

“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?”

=====================================================================

[END]

4 thoughts on “ஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்!

  1. மிகவும் அருமையான நீதிக் கதை. பகிர்ந்தமைக்கு நன்றி

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர். நல்ல கதை ஏற்கனவே படித்தது.இப்பொது உள்ள வாழ்கையில் சூழலில் யாரையும் அவர்கள் சூழலில் வாழ விடமாட்டார்கள்.பதில் சொலமுடியாத கேள்வி கேட்கிறது ஒட்டக குட்டி .மனிதர்களகு பொருத்தி பார்த்தாலும் பதில் சொல்ல முடியாதே நிலையே.நன்றி.

  3. திறமை இருந்தும் வெளிபடுத்த முடியாமல் இருக்கும் நம்மை போன்றவர்களின் மன குமறல்… நன்றி சுந்தர்….

Leave a Reply to UMA VENKAT Cancel reply

Your email address will not be published. Required fields are marked *