Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

print
சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்!

மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது. அடுத்து (நாளை அல்லது நாளை மறுநாள்) நாம் அளிக்கவிருக்கும் மகா பெரியவா தொடர்பான பதிவு, குருவின் அக்கறையான நலம் விசாரிப்பு கூட எந்தளவு ஒருவர் வாழ்க்கையை உயர்த்தும் என்று பார்க்கப்போகிறோம். நமக்கு பிரத்யேகமாக கிடைத்த தகவல் அது.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே!
– திருமந்திரம் 

ramana

கனவு தாகத்துக்கு கனவு நீர்!

ரு முறை ரங்கய்யரின் பொருளாதாரச் சூழ்நிலை மிகவும் நலிவுற்றது. கடன் சுமை கூடியது. வேலை தேடி சென்னை செல்லும் வழியில் பகவானை தரிசித்துவிட்டு செல்லாம் என்று திருவண்ணாமலை வந்தார். பகவானை நமஸ்கரித்துவிட்டு எழுந்தவுடன், ”ரங்கா நீ ஆம்பளை! எங்கேயும் போகலாம்; எப்படியோ இருக்கலாம். ஆனால் பெண்கள், குழந்தைங்க அப்படி இல்லை, ஊர்ல அவாளுக்கு தேவையானதை ஏற்பாடு பண்ணிட்டுதானே வந்தே?” என்று கேட்டார்.

“ஆமாம், பணம் கொடுத்துட்டுதான் வந்திருக்கேன்.” என்றார் ரங்கய்யர்.

பகவானோ அவர் பதிலில் திருப்தி அடையாதவராய், ”என்னமோ சொல்றே! சரி” என்றார்.

சில நாட்களில் ஊரில் இருந்து ரங்கய்யரின் அண்ணா வந்தார். பகவான் ரங்கய்யரின் குடும்பச் சூழ்நிலையை விசாரித்தறிந்தார். அச்சமயம் வேலைதேடி ரங்கய்யர் சென்னை சென்றிருந்தார். ஆனால் வேலை ஏதும் கிட்டாமல் மீண்டும் பகவானை தரிசிக்க வந்தார்.

ரங்கய்யர் வந்தவுடன் பகவான், ”ரங்கா! நீ பணம் கொடுத்துட்டு வந்தேன்னு சொன்ன, ஆனா ஊர்ல ரொம்ப சிரம படறதா சொல்றாளே” என்று கேட்டார். ரங்கய்யர் பதிலேதும் கூறவில்லை. அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. குடும்பச் சூழ்நிலையைப் பற்றிய சிந்தனையால் தூக்கம் வராமல் புரண்டது புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

”என்ன ரங்கா! தூக்கம் வரலியோ?” என்று ஆதரவாய் பகவான் குரல் கேட்டது. கண் திறந்தால்… பகவான் ரங்கய்யர் அருகில் அமர்ந்திருந்தார்.

ரங்கய்யர் எழுந்து உட்கார்ந்தார். ”காசு பணத்தை நெனைச்சு கவலைப்படறியா? ரங்கா! இதெல்லாம் ஒரு சொப்பனம் மாதிரி. சொப்பனத்திலே உன்னை அடிக்கறா! வலிக்கறது! எப்படி தப்பிப்போம்ன்னு கவலைப்படறே! முழிச்சதுக்கப்புறம் இதை நெனைச்சு சிரிப்பே.”

”ரங்கா! ஒரு பத்தாயிரம் இருந்தா போறுமா?” என்றபடி மௌனமானார் பகவான்.

ரங்கய்யர் கவலை நீங்கினார். விரைவிலேயே ரங்கய்யர் ஒரு மோட்டார் கம்பெனியில் பஸ் விற்கும் ஏஜெண்டாக வேலையில் அமர்ந்தார். பகவான் அருளால் நிறைய பஸ்கள் விற்றதில் அவருடைய கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு பகவான் கூறியது போலவே மொத்தமாக பத்தாயிரம் ரூபாய் கிடைத்தது.

========================================================

Don’t miss this :

தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

========================================================

குரு உத்தரவே மருந்து

விருபாகஷா குகையில் பகவான் இருந்த போது ஒரு பண்டிகைக் காலம். மணவாசி ராமசாமி அய்யர் குகைக்கு வெளியில் மிகவும் மனம் நொந்து அமர்ந்திருந்தார். பகவான் குகையில் இருந்து வெளியில் வந்தார். வந்தவர் ”என்ன இப்படி உக்காந்திருக்கேள்! ”என்றார். மணவாசி ராமசாமி அய்யர், என்னத்தை சொல்றது பகவானே! வீடு முழுவது மருந்து பாட்டில்கள்தான் இருக்கு. எனக்கு ஜீரணமும் ஆகமாட்டேங்கிறது. தூக்கமும் வரமாட்டேங்கரறது. நான் எப்படி வாழப் போறேனே தெரியல’ என்றார்.

பகவான் சிறிதுநேரம் பார்த்தபடி இருந்தார். ராமசாமி அய்யருக்கு சிறிது தேவலாம் போல் இருந்தது.

எச்சம்மாள், பண்டிகையின் காரணமாக சாயங்காலம் போல நிறைய உணவு வகைகள், பட்சணங்கள் கொண்டு வந்தாள். எல்லோருமருகில் இருந்த நீர் நிலைக்கு உணவு அருந்தச் சென்றார்கள். மிகவும் அழகான மாலை… மழைக்காலம் ஆதலால் நீர்நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. மனவாசி ராமசாமி அய்யரோ சூழ்நிலைக்கு பொருந்தாமல் இருந்தார். மனதில் கலக்க இருள், உடம்பில் வலி, வாழ்க்கையே நோயினால் சுமையாகத் தெரிந்தது.

பகவான் மணவாசி ராமசாமி அய்யர் உணவு உட்கொள்ள வராதது தெரிந்தவுடன் வாசுதேவசாஸ்திரியை அழைத்து, ”போய் அவரைக் கூட்டிக் கொண்டு வா” என்றார். மணவாசி அய்யர் வாசுதேவ் சாஸ்த்திரியிடம் ‘கஞ்சியே ஜீரணமாக மாட்டேன்கிறது, எண்ணெய் பலகாரம் எல்லாம் என்னால் சாப்பிட முடியாது’ என்று கூறினார். அப்போது பகவான் கையைத்து கூப்பிடுவது தெரிந்தது.

உடனே பகவானுக்கு அருகில் சென்று அமர்ந்தார். ஒரு இலைப் போட்டு எல்லாவித உணவுகளும் அதில் பரிமாறப்பட்டன. பகவான் ”சாப்பிடுங்கோ!” என்றார். எல்லா பயமும் கணப்பொழுதில் நீங்கியது. பலவருடங்கள் கழித்து வயிறார உண்டார். அன்றிரவு நன்றாகத் தூங்கினார்.

காலை எழுந்தபோது அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல் உணர்ந்தார். நோய்க்கான அறிகுறியே இல்லை. பகவான் புது வாழ்க்கை தந்ததை உணர்ந்தார். மனவாசி ராமசாமி ஐயரின் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

– ரமண திருவிளையாடற் திரட்டு   ¶¶

=========================================================

நம் தளத்திற்கு இந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

For earlier episodes…

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும்

”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=========================================================

ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்

=========================================================

[END]

2 thoughts on “குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

  1. வெரி குட் ஆர்டிகிள் சுந்தர். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

Leave a Reply to ambrish Cancel reply

Your email address will not be published. Required fields are marked *