Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

print
புருஷோத்தம ஷேத்ரம் எனப்படும் பூரியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜகந்நாதர் தன் அடியவர்கள் வாழ்வில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் தொகுப்பு இந்த குறுந்தொடர்.

சென்ற அத்தியாயத்தில் மனோகர் தாஸ் என்னும் அடியவரிடம் ஜகந்நாதர் நிகழ்த்திய திருவிளையாடலை கண்டோம். தற்போது ரசிக முராரி என்ற பக்தரிடம் அவர் நிகழ்த்திய திருவிளையாடலை காண்போம்.

ரிஸ்ஸாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாயும் சுபர்ணரேகா என்னும் நதி தீரத்தில் அமைந்துள்ள ரோகினி நகர் என்னும் ஊரில் 1590 ல் பிறந்தவர் ரசிக முராரி என்னும் அடியவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த ரசிக முராரி எப்போது பார்த்தாலும் அவர் பெயரையே உச்சரித்துக்கொண்டிருப்பார்.

 ரசிக முராரி
ரசிக முராரி

வைஷ்ணவ குரு ஜீவ கோஸ்வாமி என்பரின் ஆணைக்கிணங்க, ஸ்ரீ சியாமானந்தா தாகூர் என்னும் அடியவர் பிருந்தாவனத்தில் தங்கி, அங்கு கிருஷ்ண கானங்களை ஆராய்ச்சி செய்து அவற்றை படித்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படி அவர் கீர்த்தனைகளை படித்துவிட்டு தியானத்தில் மூழ்கியிருக்கும்போது ஸ்ரீ மதனகோபால ஸ்வாமி அவரது முன் தோன்றி, “வத்ஸ, நீ உடனே உத்கலுக்கு புறப்படுவாயாக. அங்கு என்னையே சதா தியானித்துக்கொண்டிருக்கும் என் பக்தன் ரசிக முராரிக்கு ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை உபதேசிப்பயாக” என்று கட்டளையிட்டு மறைந்தார்.

இதை ஏதோ கனவு என்று கருதிய சியாமானந்தர் இதை அலட்சியப்படுத்தவே, அவரது குருநாதர் ஜீவ கோஸ்வாமியின் கனவில் தோன்றிய புருஷோத்தமன், உடனே அவரது சீடர் சியாமானந்தரை உத்கலுக்கு அனுப்பி ரசிக முராரிக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசிக்கும்படி ஆணையிட்டார். குருவின் கட்டளையையடுத்து உடனே உத்கலுக்கு புறப்பட்டார் சியாமானந்தர்.

சியாமானந்தர் உத்கலை அடைந்தது 1608 ஆம் ஆண்டு. அங்கு ரசிக முராரிக்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவரது சமாதி இன்றும் ஒரிஸ்ஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு பாதுகாத்து வருகின்றனர்.

சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் சுபர்ணரேகா நதிக்கரையில் வாழ்ந்து வந்தார்.

பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒரிஸா மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த சுபேதார் அஹமது பைக் என்பவருக்கு ரசிக முராரியின் இந்த கிருஷ்ண பக்தி பிடிக்கவில்லை. மேலும் ரசிக முராரியின் பேச்சும் உபதேசமும் பாடல்களும் பாமரரையும் கிருஷ்ணர் பால் ஈர்த்து எங்கெங்கு பார்க்கிலும் கிருஷ்ணனின் நாமாவே ஒலித்தது. இது சுபேதார் அஹமதுவுக்கு மேலும் எரிச்சலை தந்தது.

அப்போது அந்த ராஜ்ஜியத்தில் மதம் பிடித்த பட்டத்து யானை ஒன்று இருந்தது. எதற்கும் அடங்க மறுத்து அட்டகாசம் செய்து வந்தது.

ஒரு நாள் ரசிக முராரியை சந்தித்த சுபேதார் அஹமது அவரிடம், “மதம் பிடித்த எதற்கும் அடங்காத யானை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதனை அடக்கி உன் கிருஷ்ணனுக்கு உள்ள சக்தியை உன்னால் காட்ட முடியுமா? ஒருவேளை இதில் நீ தோற்றால் உனக்கு கடுமையான தண்டனைகள் தரப்படும்” என்றார்.

ரசிக முராரி சிறிது கூட தயங்காமல், “இதோ இப்போதே புறப்படுவோம் உன் யானையை பார்க்க” என்றார்.

யானையை அடைத்து வைத்திருக்கும் கொட்டிலுக்குள் தனியே சென்றார் ரசிக முராரி. உள்ளே சென்றதும் யானை இவரை நோக்கி ஆவேசமாக வந்தது. ஸ்ரீ கிருஷ்ணரை மனதுக்குள் தியானித்தவர், யானையின் இரண்டு காதுகளிலும் அந்த மஹா மந்திரத்தை உபதேசித்தார். அடுத்து யாருமே எதிர்பார்க்க வகையில் யானையின் குணம் மாறத் துவங்கியது. ஆக்ரோஷமாக பிளிறிக்கொண்டு வந்த யானை பரம சாதுவாகிப் போனது. அத்தோடு மட்டுமல்லாமல், காண்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் ரசிக முராரியை மண்டியிட்டு வணங்கவும் செய்தது.

ஸ்ரீ கிருஷ்ணரை மனதுக்குள் தியானித்தவர், யானையின் இரண்டு காதுகளிலும் அந்த மஹா மந்திரத்தை உபதேசித்தார். அடுத்து யாருமே எதிர்பார்க்க வகையில் யானையின் குணம் மாறத் துவங்கியது. ஆக்ரோஷமாக பிளிறிக்கொண்டு வந்தது பரம சாதுவாகிப் போனது. அத்தோடு மட்டுமல்லாமல், காண்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் ரசிக முராரியை மண்டியிட்டு வணங்கவும் செய்தது.

இதை கண்ணெதிரே பார்த்த சுபேதார் அஹமது, ரசிக முராரியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தானும் பகவான் கிருஷ்ணரின் மகிமையை போற்றத் துவங்கினார்.

இதற்கு பிறகு தனது ஊரான கோபி பல்லவபூருக்கு புறப்பட்டு சென்றார் ரசிக முராரி. இதனிடையே பூரியின் பிரபல தேரோட்டம் வந்தது.

ரசிக முராரிக்கோ தேரை காணவேண்டும் என்று கொள்ளை ஆசை. உடனே பூரியை நோக்கி பாத யாத்திரையாகவே புறப்பட்டார் ரசிக முராரி. செல்லும் வழியில் பைதாரணி நதிக் கரையில் உள்ள பல்வேறு ஷேத்ரங்களையும் தரிசித்தவாறே சென்றார். ஆகையால் பூரியை சென்றடைய கால தாமதம் ஏற்பட்டது.

Puri Car

ஆனால் இங்கே பூரியில் தேரோட்டம் துவங்கிவிட்டது. சிம்மவாயிலில் இருந்து படாதண்டாவில் உள்ள குண்டீச்சா ஆலயத்தை நோக்கி தேர் ஓடத் துவங்கியது. இது எப்படியோ பூரியை நோக்கி வந்துகொண்டிருந்த ரசிக முராரிக்கு தெரிந்துவிட்டது.

“ஹே.. ஜகந்நாதா… இந்த எளியவன் வரும் வரை நீ காத்திருக்கக் கூடாதா? உன் தேரோட்டத்தை காணவேண்டும் என்று தானே நான் ஓடோடி வந்துகொண்டிருக்கிறேன்…?” என்று ஜகந்நாதரை நோக்கி பிரார்த்தித்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த மூன்று தேர்களும் அப்படியே நின்றுவிட்டன. ஒரு அடி கூட அதற்கு பிறகு நகரவில்லை. குதிரைகள், யானைகள் என்று வரவழைக்கப்பட்டு தேர்கள் இழுக்கப்பட்டன. ம்ஹூம்… ஒரு அடி கூட நகரவில்லை.

இதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த மூன்று தேர்களும் அப்படியே நின்றுவிட்டன. ஒரு அடி கூட அதற்கு பிறகு நகரவில்லை. குதிரைகள், யானைகள் என்று வரவழைக்கப்பட்டு ரதங்கள் இழுக்கப்பட்டன. ம்..ஹூம்… ஒரு அடி கூட நகரவில்லை.

தேரோட்டம் திடீரெனெ நின்று போன விஷயம் மன்னன் கஜபதியை சென்றடைந்தது. அவன் என்னவோ ஏதோ என்று கவலைப்பட்டான்.

ஜகந்நாதரின் தீவிர பக்தன் அவன். “ஐயனே… என் ஆட்சியில் ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் பொருத்தருள வேண்டும். தேரை எப்படியாவது ஓடச் செய். இல்லையேல்… என்னைத் தான் எல்லோரும் பழிப்பார்கள்.” என்று மனமுருகி பிரார்த்தித்துக்கொண்டான்.

கிராசோரா கோபிநாதர்
கிராசோரா கோபிநாதர்

அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஜகந்நாதர், “மன்னா… கவலை வேண்டாம். என் அடியவன் ரசிக முராரி என்பவன் என்னை காண ஓடோடி வந்துகொண்டிருக்கிறான். அவன் தற்போது துளசிசௌரா என்னுமிடத்தில் இருக்கிறான். இன்னும் சில மணிநேரங்களில் அவன் பூரிக்கு வந்துவிடுவான். அவன் வந்து என்னைக் கண்டவுடன் தேர் நகரத் துவங்கும். வருந்தற்க!” என்று கூறி மறைந்தார்.

உடனே திடுக்கிட்டு விழித்த கஜபதி, பொழுது விடிந்ததும் தனது பரிவாரங்களுடன் சென்று பூரியின் எல்லையிலேயே ரசிக முராரியை மேள தாளத்தோடு அரசு மரியாதையோடு வரவேற்றான். திடீரென பூரியின் அரசனே தன்னை வரவேற்க படை பரிவாரங்களோடு புறப்பட்டு வந்த காரணம் புரியாது விழித்த ரசிக முராரியிடம் ஜகந்நாதர் தனது கனவில் தோன்றி கூறியதை கஜபதி விளக்கினான். அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ரசிக முராரி.

அடுத்து இருவரும் தேர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு புறப்பட்டனர். ஜகந்நாதரின் தேரை கண்டவுடன் இருகரமும் கூப்பி கண்ணீர் மல்க தொழுதார் ரசிக முராரி. கஜபதியின் வேண்டுகோளுக்கிணங்க, தேர் வடத்தின் மீது ரசிக முராரி கை வைக்க, அடுத்த நொடி தேர் நகரத் தொடங்கியது.

ரசிக முராரியின் திருச்சமாதி
ரசிக முராரியின் திருச்சமாதி

இந்த அதிசயம் 1640 ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆலய பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரசிக முராரி ரசிகானந்தா என்றே அழைக்கப்படலானார். இவரது சமாதி ஒரிஸ்ஸாவில் பாலேஸ்வர் மாவட்டத்தில் ரெமுனா என்னும் ஊரில் உள்ள கிராசோரா கோபிநாதர் ஆலயத்தில் உள்ளது.

================================================================

ஏழை எளியோருக்காக மட்டுமே…

இந்த தளம் ஏழை எளியோருக்காக மட்டுமே இலவசமாக நடத்தப்படுகிறது. இருப்பவர்கள் தளத்திற்கு தங்களால் இயன்ற உதவியை செய்தால் தான் இயலாதவர்களுக்கும் இதை முழுமையாக கொண்டுபோய் சேர்க்க முடியும். இந்த தளத்தால் தங்களுக்கோ இந்த சமூகத்திற்கோ ஏதேனும் பயனோ நன்மையோ இருப்பதாக கருதினால் வாசக அன்பர்கள் தங்களால் இயன்ற தொகையை பிரதி மாதம் மனமுவந்து விருப்ப சந்தாவாக அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

Also check :

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

================================================================

[END]

4 thoughts on “பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

  1. ரசிக முராரியின் பக்தியைக் கண்டு மெய் சிலிர்த்தேன். தெரியாத கதையை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி

    போடோஸ் அருமை

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர். அருமையான புதிய கதை அளித்தமைக்கு நன்றி.உண்மையான பக்திக்கு மேலும் ஒரு எடுத்துகாட்டு. இப்பொது யாராவது இப்படி இருகிறார்களா, தெரியவில்லை . நன்றி.

  3. வணக்கம்………….ரசிக முராரி அவர்களின் பக்தியைக் கண்டு மெய் சிலிர்க்கிறது……. தன் பக்தனுக்காக தேரை நிறுத்திய நம் திருமாலின் கருணையைக் கண்டு கண்ணீர் வருகிறது………..உண்மையான பக்திக்கு கடவுள் கட்டுப்படுவார் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது………. பகிர்ந்தமைக்கு நன்றிகள்……….

  4. முதல் தொகுப்பு முத்தாய்ப்பு என்றால்
    இரண்டாம் தொகுப்பு இன்பக் கடல் என்று தான் சொல்ல வேண்டும். பக்தியின் இன்ப கடலில் இந்தபதிவு முழுதும் நீந்தினோம். ரசிக முராரி நம்மை எல்லாம் கட்டிபோட்டு, ஜகன்னாதர் திருவிளையாடலை ரசிக்க வைத்து விட்டார் என்பதே உண்மை.
    பக்தனின் பரவசமும், பெருமாளின் பேரின்பமும் ஒரே பதிவில் உணர்த்த, தாங்கள் செய்கின்ற தொண்டுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறோம் அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *