Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

print
பெரியவா  எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும். நமக்கும் ஒரு பாடம் அதில் புதைந்திருக்கும். சிறு வயதிலேயே துறவறம் ஏற்றுக்கொண்டவருக்கு எங்கிருந்து தான் இத்தனை சித்தியும் ஞானமும் வந்ததோ என்று அவர் மகிமைகளை படிக்கும்போது வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள்.

கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது. பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

“உங்க கிராமத்துல ஏரி இருக்கா?”

“இருக்குங்க”

“அதுல ஜலம் இருக்கா?”

கிராமத்தார்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள்.

“பஞ்சாயத்துல தூர் வாரலே…. தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க”

“ஏரியில் தண்ணி இருந்தால் எல்லா ஜனங்களுக்கும் சௌகரியம்… ஆடு மாடுகளுக்கும் பயன்படும் இல்லையா?”

“ஆமாங்க!”

“முதல்ல ஏரியை ஆழப்படுத்துங்கோ….” என்று சொல்லிவிட்டு பிரசாதம் கொடுத்துவிட்டார்கள்.

அதாவது “போய் வாருங்கள்” என்று அர்த்தம்.

Kanchi Maha Periyavaவந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம். “விநாயகர் சிலை தற்சமயம் கைவசம் இல்லை” என்று சொல்லியிருந்தால் கூட சமாதானமாக இருந்திருக்கும்.

சிலையை பற்றி பேசவே இல்லை.

ஏரியை ஆழப்படுத்துவது கவர்மெண்ட் வேலை. அதைப் போய் நாம் செய்வானேன்…

ஆனால் கிராமத்தில் சில வயோதிகர்கள் இருந்தார்கள். “பெரியவங்க சொன்னபடி செய்யலேன்னா அது பெரிய குத்தம், நமக்கு கஷ்டம் வரும்” என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள்.

வேறு வழியில்லை. விலை கொடுத்து வம்பை வாங்கிகொண்டு வந்தாகிவிட்டது.

இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.

குறிப்பிட்ட நாளில் கிராமத்தினர் ஏற்பாடு செய்த ஆட்கள் மண்வெட்டியும், கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.

ஒரு மணிநேரத்துக்கு பின் ஒரு ‘டங்’

“அண்ணே… என்னமோ ஒரு சத்தம்…”

ஜாக்கிரதையாக கையைவிட்டு துழாவினார்கள்.

பிள்ளையார். (பின்னமானவர் அல்ல. இவர் ரொம்ப பழமையானவர்)

அடுத்து ஒரு ‘டங்’. சிவலிங்கம்!

அடுத்து நந்தி, அம்பாள், முருகன், பலிபீடம், துர்க்கை….

ஒட்டோட்டமாக காஞ்சிபுரம் வந்தார்கள்.

நெஞ்சம் குதூகலிக்க பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்கள்.

Lake temple

“சாமிகிட்டே ஒரு பிள்ளையார் தான் கேட்டோம். ஒரு கோவிலே கிடைச்சிருக்கு.”

பெரியவாள், “ஏரிக்கரையில் ஒரு கீற்று கொட்டகை போட்டு விளக்கு ஏற்றி, பழங்கள் வைத்து நிவேதனம் செய்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

“கோயில்…?” என்று இழுத்தார்கள் கிராமத்தினர்.

“பிள்ளையார் வந்துட்டாரே… அவர் பார்த்துப்பார்”

ஏரியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறார் பிள்ளையார். நாளடைவில் சிவனுக்கு ஒரு அரன் மனை (அரனுக்கு ஒரு மனை – சிவன் கோவில்) கட்டிக்கொடுக்கமாட்டாரா என்ன?

[நன்றி : ஸ்ரீ மடம் பாலு அவர்கள் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’]

(ஏரி குளங்கள் போன்றவற்றை தூர்வாருவதற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நாமே ஒன்றுபட்டு செய்யவேண்டும் என்று மஹா பெரியவா இதில் உணர்த்தியிருக்கிறார். ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் நிரம்பும்படி செய்வது மிக்ப பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தின் பலனைத் தான் அந்த கிராம மக்கள் அனுபவித்தனர்! சமீபத்தில் கோவைக்கு சென்றிருந்தபோது அங்கு உக்கடத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரிய ஏரியை பார்த்தோம்! கோவை செல்வம் கொழிக்கும் நகராக எதிர்காலத்தில் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இப்போது மட்டும் என்னவாம்… என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது. ஓ.கே. ஓ.கே. கோயமுத்தூர்காரங்க கொடுத்து வெச்சவங்க தான்!)

=================================================================

Also check from our archives…

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

4 thoughts on “கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

  1. குரு வாரத்தில் ஒரு நல்ல மெசேஜ் கிடைத்தது.

    //ஏரி குளங்கள் போன்றவற்றை தூர்வாருவதற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நாமே ஒன்றுபட்டு செய்யவேண்டும் என்று மஹா பெரியவா இதில் உணர்த்தியிருக்கிறார். //

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *