Home > 2015 (Page 24)

ருத்ராக்ஷ லிங்கம், கயிலாய வாத்தியங்கள் & தசாவதாரம் – 7 வது இந்து ஆன்மீக கண்காட்சி – ஒரு ரவுண்டப்!

7 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 1 லட்சத்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 340 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தினமும் காலை 9.30 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இருந்து 70

Read More

முருகா என்றதும் உருகாதா மனம்… Rightmantra Prayer Club

முருகப் பெருமானையையே சிந்தித்து வாழ்ந்து வந்த தம்பதிகள் அவர்கள். செல்வத்திற்கோ சுற்றத்திற்கோ பஞ்சமில்லை. ஆனால் ஆயிரம் இருந்தும் என்ன? கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று இல்லையே என்கிற குறை அவர்களுக்கு. முருகனிடம் கதறித் துடித்தார்கள். அவர்கள் நிலை கண்டு இரங்கிய கந்தக் கடவுள், அந்த கண்ணீர் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தான். அழகிய ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் அவள். முருகப் பெருமானின் அருளால் பிறந்த குழந்தையாதலால் 'முருகம்மை' என்று முருகனின் பெயரையே

Read More

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

சிவகளை என்ற ஊரில் உள்ள சோரநாத விநாயகர் கோவில் சிதிலமடைந்திருந்தது. அதற்கு திருப்பணி செய்ய விரும்பிய சுப்பையாப் பிள்ளை என்பவர், மூர்த்திகள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்திருந்தார். வாரியார் சுவாமிகளை அவருக்கு நன்கு தெரியுமாதலால், திருப்பணிக்கு அவரை அணுகினார். வாரியார் தமது ஆயுட்காலத்தில் எண்ணற்ற ஆலயங்களுக்கு திருப்பணி செய்திருக்கிறார். தனது சொற்பொழிவு மூலம் கிடைத்த வருவாய் அனைத்தையும் திருப்பணிகளுக்கே கொடுத்தான் வந்தார். எனவே சுப்பையாப் பிள்ளை வாரியார் சுவாமிகளை அணுகி, கேட்டபோது வாரியார் தாம்

Read More

7வது இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – என்னென்ன பார்க்கலாம்?

இந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் 7-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (விமான நிலையம் எதிரே) உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் செவ்வாய் மாலை தொடங்கியது. துவக்கவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நாதஸ்வரம் தவில் முழங்க மங்கள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் பாடப்பட்டது. திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் முத்துக்குமார சுவாமி தம்பிரான், புத்தமத துறவி கென்டிங் தாய்

Read More

ஒரு கனவின் பயணம்!

பிப்ரவரி 1, 2015. ஞாயிறு காலை சுமார் 10.15 மணி. 'இராமநாம மகிமை' நாடக புகழ் திருமதி.பாம்பே ஞானம் அவர்கள்  நமது நண்பர்கள் மற்றும் வாசகர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே நமது அலுவலகத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து ரிப்பன் வெட்டுகிறார். நம்மை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டோம். இப்போது நினைத்தாலும் அனைத்தும் ஒரு கனவு போலவே இருக்கிறது. திறப்பு விழாவுக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டார். "எப்படிஜி இப்படி ஒரு அருமையான இடத்தை

Read More

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது நடந்தது 1976 ஆம் ஆண்டு. ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வந்தார் அந்த மாணவர். நன்றாக படிக்கக் கூடிய மாணவர் அவர் என்றாலும் கல்லூரி மாணவர்களுக்கே உரிய விசேஷ சொத்தான அரியர்ஸ் அவருக்கும் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு தாள்கள் அரியர்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் இறுதியாண்டு தேர்வுக்கும் முந்தைய அரியர்ஸ் பேப்பர்களுக்கும் அந்த மாணவர் தயாராகிகொண்டிருந்தால் அனைத்தும் நல்லபடியாக முடித்து நாம்

Read More

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்தபோது, போர்முனையில் ராவணனின் மகன் இந்திரஜித், இராமபிரானை எதிர்கொண்டான். அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான். பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார். எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார். கூடவே லக்ஷ்மணனும். இதை நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய், வைகுண்டம் போய் கருடனிடம், "இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும். நீ உடனே

Read More

மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது எப்படி? வழிகாட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!

இந்து மதத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துக்கூறவும், பல்வேறு இந்து அமைப்புக்களின் சேவைகளை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவும் வருடா வருடம் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. இதுவரை ஆறு முறை நடைபெற்றுள்ள இந்த கண்காட்சி ஏழாவது ஆண்டு ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கவுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். சென்ற ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்தப்

Read More

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

இந்தக் கதை சற்று பிரபலமான கதை தான். உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதனால் என்ன நல்ல விஷயம் தானே... இன்னொரு முறை படியுங்களேன். ஆனால் இதை தெரியாதவர்கள் யாராவது ஒருவர் இருந்து அவர் இதன் மூலம் பலன் பெற்றால் கூட நமக்கு சந்தோஷம் தான். இதற்கு முன் இந்தக் கதையை கேள்விப்பட்டவர்களோ அல்லது படித்தவர்களோ இதன் உட்கருத்தை சரியாக உள்வாங்கியிருப்பார்களா என்று தெரியாது. ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் சரி, நல்ல

Read More

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மரை சந்திக்காமல் நாம் எந்த முக்கிய முடிவும் எடுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியும். வரும் பிப்ரவரி 1 ஞாயிறு காலை ரைட்மந்த்ராவுக்கென பிரத்யேக அலுவலகம் மேற்கு மாம்பலத்தில் திறக்கப்படவுள்ளதையடுத்து (நேற்று) வியாழன் மாலை நரசிம்மரை தரிசிக்க பேரம்பாக்கம் சென்றிருந்தோம். செல்லும் வழியே ஒரு ரம்மியம் தான். இந்த கோபுரத்தை இது வரை நூறு முறையாவது படமெடுத்திருப்போம் என்று கருதுகிறோம். ஒவ்வொருமுறையும் ஒரு வித புதுமையோடு நம்மை ஈர்க்கிறது. (எழுதி

Read More

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

யாராவது பெரிய மனிதர்களிடமோ, சாதனையாளர்களிடமோ, சான்றோர்களிடமோ, நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள நேரும்போது நாம் தவறாமல் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி : "ரைட்மந்த்ரா ஆஃபிஸ் எங்கே இருக்கு?" என்பது தான். சென்ற மாதம் நடைபெற்ற நமது ஆண்டுவிழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் உட்பட பலர் நம்மிடம் கேட்ட கேள்வி இது தான். நமது தளத்தையும் பணிகளையும் வியந்து பாராட்டும் பலர் நம்மிடம் இந்த கேள்வியை கேட்பதுண்டு. காரணம், கிட்டத்தட்ட ஒரு முன்னணி பத்திரிகை

Read More

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

நமது பிரார்த்தனை கிளப் துவங்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகப்போகிறது. 'ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்' என்னும் இந்த கூட்டுப் பிரார்த்தனை மன்றம் தற்போது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வருகிறது என்றால் மிகையல்ல. நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பிக்கப்பட்டு அது நிறைவேறிய சம்பவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். தற்போது மேலும் மூன்று சம்பவங்கள் பற்றிய தகவல் நமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. வரும் பிரார்த்தனை பதிவில் அது பற்றிய விபரங்கள் இடம்பெறும். இந்த

Read More

ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77

சலவைக்கல்லினால் ஆன (MARBLE) பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் அது. நகரில் அவர்களுக்கு மிகப் பெரிய ஷோரூம் இருந்தது. மிகப் பெரிய கடவுள் சிற்பங்கள் முதல் குழந்தைகள் விளையாடும் சிறு சிறு பொம்மைகள் வரை அவர்களிடம் அனைத்தும் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் அனைவரும் இங்கு தான் படையெடுப்பர். அந்தளவு சலவைக்கல் சிற்பங்கள் அங்கு பேமஸ். அந்த குடும்பத்தின் பரம்பரை தொழிலே அது தான். முப்பாட்டன் காலம்

Read More

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா? — Rightmantra Prayer Club

நமது சமயத்திற்கு கிடைத்த அரும் பெரும் பொக்கிஷங்களுள் ஒன்று சைவத் திருமுறைகள் எனப்படும் பன்னிரு திருமுறைகள். சிவபெருமானின் பெருமையை, சிறப்பை பாடும் இப்பதிகங்கள் பலவற்றுள் இன்றியமையாத மந்திர பிரயோகங்கள் மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன. இப்பதிகங்களை பக்தியுடன் ஓதி வந்தால் அனைத்து நலன்களையும் ஒருவர் பெறலாம். விதியையே மாற்றும் வல்லமை பெற்றவை இப்பதிகங்கள். அப்படி நான்கு சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானால் விதியை மாற்றிக் காட்டச் செய்த ஒரு

Read More