Home > 2013 (Page 4)

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

"நிறைய நல்ல காரியம் பண்றேன் சார்... தர்மம் பண்றேன்... கோவில்களுக்கு நிறைய செஞ்சிகிட்டு வர்றேன். நான் செய்யலேன்னா கூட எனக்காக எங்கப்பாம்மா நிறைய நல்ல விஷயம் பண்றாங்க. ஆனா அப்படி இருந்தும் எதுவும் பலனளிக்கவில்லை... நோ யூஸ் சார்.... " என்று சொல்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் உட்பட அனைவரும் அவசியம் இதை தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு பக்கம் புண்ணியம் சேர்த்துக்கொண்டே சென்றாலும் மறு பக்கம்  அந்த புண்ணியம் பலனற்று போகும் விதம்

Read More

கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்!

இந்த வார பிரார்த்தனை கிளப், கார்த்திகை தீபத்தன்று வந்தபடியால் அந்த நேரம் குன்றத்தூர் கோவிலில் இருக்கவேண்டும் என்பது தான் நமது விருப்பமாக இருந்தது. ஆனால் மனமெங்கும் திருவண்ணாமலையில் தான் இருந்தது. சரி... அடுத்த முறை நிச்சயம் அண்ணாமலையில் இருக்கவேண்டும். இம்முறை குன்றத்தூர் குமரனிடம் இருப்போம் என்று முடிவு செய்தேன். நங்கநல்லூர் நிலாச்சாரல் ராதாகிருஷ்ணன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு வசதியற்ற பெண்ணின் திருமணத்திற்கு

Read More

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – பாரதிக்கு முன்பே வாழ்ந்த புதுமை பெண்!

"என்ன வாழ்க்கை இது? நித்தம் நித்தம் போராட்டமாக இருக்கிறது...! கண்ணீரை துடைக்க கூட எவரும் இல்லையே" என்று மனம் வெதும்பும் பெண்கள் அநேகம் உண்டு. பிறந்த வீட்டில் தான் எந்த சுகமும் இல்லை... புகுந்த வீட்டிலாவது சற்று நிம்மதியாக இருப்போம் என்றால் சிங்கத்திடம் இருந்து தப்பித்து புலியிடம் சிக்கிக்கொண்ட கதையாக சிலரின் (பலரின்) கதை அமைந்து விடுகிறது. அலுவலகம், வீடு, உறவு, நட்பு என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சூழ்ச்சி, சூது

Read More

திருமலை வெங்கடேச பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர் !

நேற்று கார்த்திகை தீபத்தின் போது குன்றத்தூரில் இருந்தோம். கார்த்திகை தீப தரிசன அனுபவத்தை எழுதி வருகிறேன். நேரடி புகைப்படங்களுடன் ஒரு விரிவான பதிவு வரவிருக்கிறது. தவிர உங்களை நெகிழ வைக்கும் வேறு சில விஷயங்களும் நம் தளம் சார்பாக (நேற்று) கார்த்திகை தீபத்தன்று நடைபெற்றது. நம் நண்பர்கள் & தள வாசகர்கள் சிலர் தங்களை கவர்ந்த செய்திகளையோ கட்டுரைகளையோ இணையத்தில் படிக்க நேர்ந்தால் அதை நமக்கு அனுப்புவதுண்டு. நாமும் அவற்றை நேரமும்

Read More

அதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் ! Monday Morning Spl 20

ஒரு பெண் தோட்டத்தில் உள்ள புல்வெளியில் குழந்தைகளுடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். கணவன் வெளியே சென்றிருந்தான். விளையாடும்போது குழந்தைகள் அடித்த பந்து புல்வெளிக்குள் சென்று மறைந்துவிட, அதை தேடிக்கொண்டு இவள் சென்றாள். அங்கே ஒரு பொறியில் ஒரு வெள்ளை எலி சிக்கியிருப்பதை பார்க்கிறாள். இவளை பார்த்தவுடன், அந்த வெள்ளை எலி பேசியது. "என்னை இந்த பொறியில்  இருந்து விடுவித்தால் உனக்கு மூன்று வரம் தருவேன்" என்றது. இவளுக்கு எலி பேசுவது ஆச்சரியம். தன்னை விடுவித்தால் வரம்

Read More

கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

நாளை (17/11/2013) முதல் கார்த்திகை மாதம் துவங்குகிறது. மார்கழி மாதத்துக்கு எத்தனை சிறப்பு உள்ளதோ அதே அளவு கார்த்திகை மாதத்துக்கும் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஜதீகம்.  அதே போன்று நினைத்தாலே முக்தியளிக்க கூடியது

Read More

பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

செல்வத்துள் இன்றியமையாத செல்வமான மழலைச் செல்வம் எங்களுக்கு வேண்டும் என்று பலர் நம் பிரார்த்தனை கிளப்புக்கு மனு செய்துவருகின்றனர். "பல பரிகாரங்கள் செய்தும் இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை" என்பதே அவர்களின் வேதனை குரல். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இறைவனையே ஒரு கணம் மடக்கி அவனை தடுமாற வைத்து சாதித்துக்கொண்ட தம்பதியினரை பற்றிய வரலாற்றையல்லவா படிக்கப்போகிறோம்? திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

Read More

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? குழந்தைகள் தின ஸ்பெஷல்!

இன்று நவம்பர் 14. 'குழந்தைகள் தினம்'. பண்டித நேருவின் பிறந்தநாள். குழந்தைகளை போல மிகச் சிறந்த ஆசிரியர்கள் இந்த உலகில் எவரும் இல்லை. குழந்தைகளை போன்ற ஒரு ஒளஷதம் (மருந்து) எந்த உலகிலும் இல்லை. மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் கூட நீங்கள் கற்றுக்கொள்ள முடியாத பாடத்தை ஒரு குழந்தையிடம் நீங்கள் சிறிது நேரத்தை செலவழிப்பதன் மூலம் அனாயசமாக கற்றுக்கொள்ளலாம். மிகப் பெரிய கவலைகள் கூட ஒரு குழந்தையின் சிரிப்பை கண்டால்

Read More

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

நம் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், நட்சத்திரப்படி ஒருவர் தன் பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியத்தையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம். ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும். பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ? 1) காலையில் சீக்கிரம் எழுந்து

Read More

இறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு!

குன்றத்தூர் முருகன் நமக்கு மிகப் பெரிய பேறு ஒன்றை அளித்திருப்பதாகவும் அதை அடுத்த பதவில் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன் அல்லவா? இதோ அந்த பதிவு. கந்தசஷ்டியை முன்னிட்டு சமீபத்தில் குன்றத்தூருக்கு முருகன் கோவிலுக்கு சென்று வந்ததில் அங்கு விளக்குகள் ஏற்ற எண்ணை தேவைப்படுவதாக தெரிந்தது. (கோவில்களுக்கு அரசு தனது கோட்டாவில் தரும் சொற்ப எண்ணை உண்மையில் எந்தக் கோவிலுக்கும் ஒரு வேளை விளக்கேற்ற கூட போதாது.)  முருகப் பெருமான் ஏன் நம்மை

Read More

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

இன்று நவம்பர் 12, 2013. செவ்வாய்க்கிழமை. ஐப்பசி சதயம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1028 வது ஜெயந்தி. ராஜ ராஜ சோழன் என்றால் பலருக்கு எப்போதோ பள்ளிக்கூட பாடத்தில் படித்த பெயர் நினைவுக்கு வரும். வேறு சிலருக்கு நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' படம் நினைவுக்கு வரும். மற்றும் சிலருக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னன் என்பது நினைவுக்கு

Read More

கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

இது வழக்கமான பதிவு அல்ல. கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம். இந்த ஒரு பதிவு பல பதிவுகளுக்கு சமம் (நீளத்தில்) என்றால் மிகையாகாது. இறைவனுக்கு தொண்டு செய்யவேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் தகுந்த நபர்களை இணைத்து அவன் அதை சிறப்பாக நடத்தி கொள்வான் என்பதை அனுபவப்பூர்வமாக அவன் நமக்கு மற்றுமொருமுறை உணர்த்திய நிகழ்வு இது. நம் தேவைகள் அனைத்தையும் அவன் அறிவான்... அவன் ஒவ்வொரு

Read More

பெருந்தன்மை என்னும் பந்து! – Monday Morning Spl 19

அது ஒரு புகழ்பெற்ற பாடசாலை. தூர தேசங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் அங்கு வந்து தங்கி கல்வி கற்றுக்கொண்டு செல்வார்கள். மிக மிக அரிய நூல்களின் ஓலைச் சுவடிகளின் களஞ்சியமாகவும் அந்த பாடசாலை விளங்கியது. அதை ஒரு சந்நியாசி   நிர்வகித்து வந்தார். அந்த பாடசாலைக்கு சந்நியாசியின் நண்பர்களில் ஒருவரான அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவர் பழமையான நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர். பாடசாலையில் பழங்கால, அரிய தகவல்களும் ஆரூடங்களும்

Read More

விரும்பியதை வெறுக்க வைத்து, வெறுத்ததை விரும்ப வைப்பான் ! Rightmantra Prayer Club

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எவ்வளவு பெரிய ஞானி என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு தன் அனுபவத்திலிருந்து அவர் மிக மிகத் தெளிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். இந்த வார பிரார்த்தனை பதிவில் ஜாதகம் மற்றும் ஜோதிடர்கள் பற்றி 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் அவர் கூறியிருப்பதை பார்ப்போம். =========================================================== [highlight]எல்லாம் இறைவன் செயல்[/highlight] நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என்

Read More