சென்ற ஆண்டு இதே நேரம் அவர் தனது குழுவினருடன் பாதயாத்திரை மேற்கொண்டபோது அலமேலுமங்காபுரத்திற்கு நான்கைந்து கிலோ மீட்டர்கள் முன்னே ‘பிராமணப்பட்டு’ என்னுமிடத்திற்கு வரும்போது உடன் வந்த இரண்டு பெண்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே அங்கு ஒரு வேப்பமரத்தின் கீழ் நிழலில் ஓய்வெடுத்துனர்.
இரண்டு பெண்களும் பல்வேறு குடும்பப் பிரச்சனைகள் காரணமாக எழுமலையான தரிசிக்க இவர்களுடன் வந்தனர். ஒருவர் ஓரளவு வசதியானவர். பிள்ளை படித்து முடித்து யூ.எஸ்.ஸில் செட்டிலாகிவிட்டான். நாமெல்லாம் நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தால் யூ.எஸ்.ஸில் இருப்பவர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று பொதுவாக ஒரு வழக்கு உண்டு. லட்சக்கணக்கான டாலர்கள் பணமும் ஏர் கண்டிஷன் அறைகளும் சொகுசு கார்களும் தாயை மறக்க வைத்தன. யார் பேச்சை கேட்டானோ வாரம் ஒருமுறை பேசியவன் பிறகு மாதம் ஒரு முறை, பிறகு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, பின்னர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை… ஒரு கட்டத்தில் தாயுடன் பேசுவதை நாளடைவில் மறந்து போனான்.
தாய்க்கோ தனது மகன் தன்னுடன் பேசவேண்டும், தான் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சென்று அங்கு அவனுடன் தங்கவேண்டும், பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டும் என்று ஆசை. “பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு” என்று சும்மாவா சொன்னார்கள்?
பேசவே நேரமிருக்காத பிள்ளை இதை எங்கே நிறைவேற்றப்போகிறான்?
அந்நேரம் பார்த்து நண்பர் பாதயாத்திரை ஏற்பாடுகளில் மூழ்க, தானும் பாதயாத்திரை வருவதாக சொன்னார். அவரது வேண்டுதல் எதுவுமில்லை… தனது மகன் அடிக்கடி தன்னுடன் பேசவேண்டும் தான் வருடத்திற்கு ஒருமுறையேனும் மகனை யூ.எஸ்.ஸில் சென்று பார்த்து பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழவேண்டும் என்பது தான்.
பிராமணப்பட்டு அருகே யாத்திரை குழுவினர் வரும்போது ஒரு பக்கம் உடல் ஒத்துழைக்க மறுக்க, மறுப்பக்கம் மகனை பற்றிய வருத்தம் மனதை அரிக்க அதற்கு மேலும் அவரால் நடக்கமுடியவில்லை.
"
இவர் கதை இப்படி என்றால், இவர்களுடன் வந்த இன்னொரு பெண்ணின் கதை வேறு. அவருக்கு ஒரே மகள். எங்கெங்கோ அலைந்து திரிந்தும் என்னென்னவோ செய்தும் சரியான வரன் அமையவில்லை.மகளுக்கு வயது ஏறிக்கொண்டே போக, கவலையில் ஆழ்ந்தார் அப்பெண். இவர் பாதயாத்திரை கிளம்புவதை அக்கம்பக்கத்தினர் மூலம் கேள்விப்பட்டு அவரும் இவருடன் மகளின் திருமணத்தை ஏழுமலையானிடம் வேண்டுதலாக வைத்து கிளம்பினார்.
இரண்டு பெண்களும் உடல் அசதியினாலும் மனக்கவலையினாலும் சோர்ந்து போய் இங்கே மரநிழலில் அமர, அப்படி இப்படி என்று அரை மணிநேரம் ஓடிவிட்டது. மேற்கொண்டு யாத்திரையை தொடரவேண்டுமே?
நண்பர் பார்க்கிறார்… சாலைக்கு அந்தப்புறம் ஒரு சிறிய அம்மன்கோவில் தென்படுகிறது.
அங்கு சென்று அம்மனுக்கு கற்பூரம் காட்டி, “அம்மா… இவர்கள் குறை தீர்க்க நீ தான் அருள்புரியவேண்டும். மேற்கொண்டு அவர்கள் யாத்திரையை தொடர்ந்து நல்லபடியாக முடியவேண்டும். அவர்கள் குறைகளும் தீரவேண்டும். அடுத்த வருடம் நான் யாத்திரை வரும்போது உனக்கு சூடம் ஏற்றுகிறேன்” என்று வேண்டிக்கொள்கிறார்.
பின்னர் குங்குமத்தை கொண்டு போய் அப்பெண்களுக்கு கொடுத்துவிட்டு, “இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்!” என்கிறார்.
அவர்களும் வேண்டிக்கொண்டு ஓரளவு ஆறுதல் பெற்று புறப்படுகிறார்கள். இருவரில் முழங்கால் வலியினால் அவதிப்பட்ட ஒருவர் மட்டும் இவர்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் எடுத்துச் செல்லும் வேனில் ஏறிக்கொள்கிறார். மற்றவர் நடந்தே வந்து யாத்திரையை நிறைவு செய்தார்.
To download this image please click here
இது நடந்து சில மாதங்கள் கழித்து இரண்டு பெண்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக பிரச்னை தீர்ந்துவிட்டது. ஒருவரின் மகளுக்கு நல்ல இடத்தில வரன் அமைந்து, திருமணம் முடிந்துவிட்டது. மற்றவரிடம் அவரது மகன் அடிக்கடி பேச ஆரம்பித்துவிட்டார். அவர் ஒரு முறை அமெரிக்காவும் சென்றுவிட்டு வந்துவிட்டார். இதோ தற்போது இரண்டாம் முறை போகப்போகிறாராம்.
இந்த வருடம் யாத்திரை மேற்கொண்ட – இந்த தகவலை நம்மிடம் சொன்ன – நம் நண்பர் பிராமணப்பட்டில் உள்ள அம்மனிடம் மறக்காமல் சூடம் ஏற்றி தனது வேண்டுதலை நிறைவேற்றினார். நமக்காகவும் அம்மனிடம் வேண்டியிருப்பதாக சொன்னார். அம்மன் அருள் கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறு என்ன இருக்கமுடியும்?
இது மட்டுமல்ல, தன்னுடன் பாதயாத்திரை வரும் அன்பர்கள் பலரின் வேண்டுதல்கள் பலவாறாக நிறைவேறி வந்துள்ளன என்றும் பாதயாத்திரையின் மகத்துவம் அது என்றும் நம்மிடம் குறிப்பிட்டார்.
யார் அந்த நண்பர்? நமக்கு எப்போது எப்படி இந்த விஷயம் தெரியும்?
விபரங்கள்… அடுத்த பதிவில்…
அது சரி…. பாதயாத்திரை அத்தனை மகத்துவம் வாய்ந்ததா ?
மேலே படியுங்கள்!!
திருத்தலங்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்வதன் சிறப்பும் அவசியமும்!
நூறாண்டுகளுக்கு முன்பு வரை, ஆலய தரிசனம் என்றால் அது பாதயாத்திரை மூலமாகத் தான் நடக்கும். சற்று வயதில் முதியவர்கள் என்றால் மாட்டு வண்டி மூலம் செல்வார்கள். ஆதிசங்கரர் முதல் மகா பெரியவா வரை, மத்வாச்சாரியார் முதல் ஸ்ரீ ராகவேந்திரர் வரை நம்மிடையே வாழ்ந்த பல மகான்கள் நடந்து சென்று தான் அத்தனை தலங்களையும் தரிசித்தனர்.
தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரும் நடந்து சென்று தான் பாடினர். பன்னிரு ஆழ்வார்களும் 106 திவ்யதேசங்களுக்கும் நடந்து சென்று தான் மங்களாசாசனம் செய்தனர்.
முதுமை வருத்திய காலத்தில் கூட பல அருளாளர்கள் நடந்து சென்று தான் இறைவனை தரிசித்தனர். காரைக்கால் அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றபோது கயிலை இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் கைகளை தரையில் ஊன்றி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாசராஜ தீர்த்தர் (ஸ்ரீ ராகவேந்திரரின் முந்தைய அவதாரம்) திருமலைக்கு செல்லும்போது, இந்த புனிதமான மலையில் நமது பாதம் படலாகாது என்று முட்டி போட்டு முட்டிக்காலில் ஏறிச் சென்றாராம். நினைத்துப் பார்க்க முடிகிறதா?
நடமாடும் தெய்வமாக விளங்கிய மஹா பெரியவா ஒரு கட்டத்தில் பல்லக்கை துறந்து பாதயாத்திரையாகவே பல தலங்களுக்கு சென்றார். அவர் இப்படி நடந்து சென்றது பல ஆயிரம் கி.மீ.கள் இருக்கும். திருமலைக்கு பல முறை மகா பெரியவா நடந்தே சென்றிருக்கிறார்.
ஆனால், நாம் செய்வது என்ன?
பஸ்களிலோ, கார்களிலோ, அல்லது டூ-வீலர்களிலோ நாம் கோவில்களுக்கு தற்போது தரிசனம் செய்ய செல்கிறோம். மலைக்கோவில்களில் மலை உச்சி வரை பாதையிருக்கிறது என்றால் நேரடியாக அங்கேயே வாகனங்களை கொண்டு போய் பார்க் செய்துவிட்டு தரிசினத்திற்கு செல்கிறோம்.
இது சரியா?
“இந்த அவசர யுகத்தில் வேறு வழியில்லையே…. நூறாண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த சூழ்நிலைகள் வேறு. இப்போது நாம் வாழும் வேறு. வார இறுதியில் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ தான் இது போன்ற ஆலய தரிசனங்களுக்கே நேரம் ஒதுக்க முடிகிறது. ஏதாவது ஆலயத்திற்கு குடும்பத்தை காரிலோ பஸ்ஸிலோ அழைத்துச் சென்றுவிட்டு மாலைக்குள் திரும்பி அடுத்த நாள் வயிற்றுப் பாட்டுக்கு போராட தயாராகவேண்டும். என்பதே பலரின் வாதமாக இருக்கிறது”. அதாவது வார இறுதியில் புண்ணியம், வாரநாட்களில் பணம் என்றாகிவிட்டது.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
அப்போது எப்படித் தான் இறைவனின் அருளை பெறுவது?
நடந்து சென்று ஆலயங்களை தரிசிப்பது என்பது நம்மால் நிச்சயம் இயலாது. வருடம் ஒருமுறை பழனிக்கோ திருமலைக்கோ பாதயாத்திரை செல்லலாம்.
இன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கும் திருப்பதிக்கும் பாதயாத்திரை சென்றுவருகிறார்கள். ஏன் காசிக்கு கூட சமீபத்தில் நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தனது குழுவினருடன் பாதயாத்திரை புறப்பட்டு போயிருக்கிறார்.
பாதயாத்திரை என்பது, ஏதோ சமீப காலத்தில் ஏற்பட்ட சாதாரண வழக்கம் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் ஊறிப்போன ஒன்று.
பாதயாத்திரை சென்று செய்யும் தரிசனமே முழுமையான தரிசனம் ஆகும். அதற்கு தான் ஆலய தரிசனத்தின் 100% பலன் கிடைக்கும். இதர வழிகளில் செல்வதற்க்கெல்லாம் பெரும்பாலும் பலன் குறைவு தான்.
வாகனங்களில் செல்லும்போது நாம் இறைவனைக் காணச் செல்கிறோம். ஆனால் பாதயாத்திரையின் போது இறைவனே நம்மைக் காண வந்துவிடுவான் என்பது பல அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அனைத்து ஊர்களிலும் நடக்கும் பாதயாத்திரைகளுக்கும் முன்னோடி பழநிப் பாதயாத்திரையே எனலாம். சபரிமலை யாத்திரை செல்பவர்கள் கட்டாயம் பழநி வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இசைப்பிரியனான முருகனுக்குகந்த பாதயாத்திரையில் இசை வழிபாடும் சேர்ந்துகொள்ளும்பொழுது அதன் மகிமை இரட்டிப்பாகிறது. திருமலைக்கு செல்பவர்கள் கோவிந்த நாம சங்கீர்த்தனம் செய்தபடி செல்வது வழக்கம்.
வாழ்வில் ஒருமுறையேனும் திருத்தலங்களுக்கு பாதயாத்திரை சென்று வருதல் மிக மிக அவசியம். இது பல தலைமுறைகளை காக்கும். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். மோட்சத்தின் கதவுகள் திறக்கும்.
"
வயோதிகம், இதர உடல் உபாதைகளால் பாதயாத்திரை செல்ல முடியாதவர்கள், பாதயாத்திரை செல்பவர்களுக்கு உதவலாம். எத்தனையோ விதங்களில் உதவலாம்.
பாதயாத்திரை செல்லும் சாலை வழியில் வீடு அமையப் பெற்றிருந்தால் அதைவிட யோகம் வேறு எதுவும் இருக்கமுடியுமா என்ன? யாத்ரீகர்களுக்கு எத்தனையோ விதங்களில் உதவலாம். குடிக்க தண்ணீர் தருவது, வெந்நீர் தருவது, தங்குவதற்கு இளைப்பாறுவதற்கு அவர்கள் இயற்கை உபாதையை தணிக்க வசதிகள் செய்து தருவது, உணவிடுவது இப்படி எத்தனையோ செய்யலாம். திருமால் அடியவர்களின் வரலாற்றை கூறும் பக்த விஜயத்திலும் சரி, சிவனடியார்கள் வரலாற்றை விளக்கும் பெரிய புராணத்திலும் சரி… அடியார்களுக்கு உணவிடும் தொண்டு மிகப் பெரும் தொண்டாக போற்றப்படுகிறது.
"
நீண்ட தூரம் உள்ள தலங்களுக்கு தான் பாதயாத்திரை செல்லவேண்டும் என்பதில்லை. 10, 20 கி.மீ. உள்ள தலங்களுக்கு கூட செல்லலாம். அது அவரவர் சௌகரியத்தையும் உடல்நிலையையும் மனவுறுதியையும் பொறுத்தது.
எப்படியோ அவசியம் வாழ்வில் ஒருமுறையேனும் பாதயாத்திரை சென்றே தீரவேண்டும்.
(நாம் வருடம் ஒருமுறை பாதயாத்திரை செல்வது என்று தீர்மானித்தாகிவிட்டது. விபரங்கள் விரைவில்!)
================================================================
Also check :
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
================================================================
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
================================================================
[END]
உண்மைதான். எனக்கும் பாத யாத்திரை செல்லும் ஆசை நிறைய உள்ளது. எம் தந்தையாகிய நமசிவாயனும், நாராயணனும் அதற்கு வழி செய்வார் என மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அதன் பலனே தனிதான்.
நம்பிக்கையே வாழ்க்கை.
ஓம் நம சிவாய
ஓம் நமோ நாராயணாய நமஹ.
அம்பாள் படம் மிக மிக அருமை. பதிவிறக்கம் செய்து கொண்டு விட்டேன்.
வணக்கம் சுந்தர். பல வருடங்களாக பாத யாத்திரை செய்தவர்,அதனால் அவர் பிராத்தனைக்கு உடனே அன்னை செவி சாய்த்துவிட்டால்.அருமையான பதிவு .இப்படி எதிர் பார்க்காத வித்தியாசமான பதிவுகளை கொடுப்பதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.வாழ்வில் ஒருமுறையேனும் பாத யாத்திரை செல்லவேண்டும்.அன்னை ஆசிர்வதிக்க வேண்டும்.நன்றி.
அமர்க்களமான ஆடி மாத பதிவு …அம்மனின் தரிசனம் மிகவும் அருமை.
அம்மன் நிகழ்த்திய அற்புதம்..சொல்லிட வார்த்தைகள் இல்லை.கண்ணில் நீர் மல்க..மல்க..படித்து ஆனந்தம் உற்றேன்.
மேலும்,பாதயாத்திரை செல்வது பற்றிய செய்திகள் அனைவர்க்கும் உகந்தது.நம் தளம் சார்பாக பாதயாத்திரை செல்வது குறித்து மகிழ்ச்சி.விரைவில் பதிவினை எதிர்நோக்கி உள்ளோம் அண்ணா.
இந்த பதிவை படிக்கும் அனைவரும்,கண்டிப்பாக அம்பாளின் தரிசனம் பெறுவது உறுதி.இந்தபதிவை படிக்கும் அனைவரது வாழ்விலும்,மகிழ்ச்சி பொங்கிட இறைவனை வேண்டுகிறேன்.
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே……
இது நல்ல டெக்னிக்கா இருக்கே…
மிகவும் அழகிய ஆடி மாத அசத்தல் பதிவு. அம்மனின் படம் மெய் சிலிர்க்கிறது
இன்று காலையிலே என் மகனிடம் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன், இந்த பதிவை பார்த்ததும் ஒரே ஷாக் . இந்த பதிவை படித்த பிறகு நாமும் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுப் பெற்று உள்ளது. பெருமாளின் அருள் இருந்தால் நிச்சயம் கைகூடும்.
///நினைப்பது நிறைவேறும் …..அது உந்தன் அருளாகும் //
இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் பாத யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த தங்களுக்கு நினைப்பது நிறைவேறும்
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Dear Sundarji,
The Pictures in the articles are very nice and good. Pls tell how to Download it.
Narayanan.
Provided a download link at the bottom of the image. Please click that.
அருமை அருமை
கண்களில் கண்ணீர்.
கல்யாணத்திற்கு முன் பங்குனி உத்திரம் அன்றும், இந்த வருடம் தை பூசத்திற்கும் 10 km அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றோம்
மனதிற்கும் ,உடலுக்கும் புத்துணர்ச்சியாக இருந்தது.
மேலும் கோவிலில் அன்னதானம் நிறைய பேர் தந்தனர்.
வயிறும், மனமும் வாழ்த்தின
எண்ணியவை எண்ணிய படி நிறைவேறும்.
நன்றி
வாழ்க வளமுடன்