Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

print
மண திருவிளையாடற் திரட்டில் மூழ்கியெடுத்த மேலும் சில முத்துக்கள் இவை. சிறு சம்பவம் தான். ஆனால் அதன் மூலம் ரமணர் உணர்த்தும் நீதியும், சொடுக்கும் சாட்டையும் இருக்கிறதே… சுரீர் ரகம்!!

எது அவமானம்?

ஒரு முறை பகவான் மதிய உணவு அருந்தும்போது, பாடசாலை மாணவன் மோர் பரிமாறினான்.

Ramana thiruvilaiyadar thirattuபகவானுக்கு மோர் பரிமாறும்போது, “இன்னும் கொஞ்சம் மோர் விடு!” என்றார்.

பகவான் வழக்கமாக இரண்டாவது முறையாக ஏதும் கேட்பதில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இரண்டாவது முறை மோர் கேட்டார்.

வாளியில் மோர் இல்லை. இது பகவானுக்கு தெரியும். ஆனாலும் கேட்டார். பாடசாலை மாணவனும் கிச்சனுக்கு போய் அங்கிருந்த மோர் வாளியை கொண்டு வந்து மீண்டும் பகவானுக்கு பரிமாறினான்.

பகவான் சிறுது கையில் வாங்கி சுவைத்தார். சுவைத்த பின், “சேஷாத்ரி முதல்ல நீ போட்ட மோருக்கும் இப்போ போட்றதுக்கும் வித்யாசம் இருக்கே! இப்போ போட்டது ரொம்ப ஜலமாயிருக்கே. ஏன்னு போய் கேட்டுண்டு வா!” என்றார்.

Ramana having lunch

அவனும் விசாரித்துவிட்டு வந்து, “பகவானே, அது வேலையாளுங்களுக்கு வெச்சிருந்த மோராம்!” என்றான்.

பகவான் அங்கிருந்தவங்களை கூப்பிட்டு, “இதெல்லாம் என்ன பழக்கம்? அவமானமாயிருக்கு. எல்லாருக்கும் ஒண்ணா பரிமாறுங்கோ” என்றார் வேதனையுடன். அடுத்த நாள் முதல் அனைவருக்கும் ஒரே மோர் பரிமாறப்பட்டது.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

ஒரு நாள் காலை ஓல்டு ஹாலில், பகவான் அமைதியே உருவாய் வீற்றிருந்தார். பகவானின் மௌனத்தில் அனைவரும் அமிழ்ந்திருந்தார்கள். அப்போது, ‘டக் டக்’ என்று கைத்தடியின் (வாக்கிங் ஸ்டிக்) சத்தம் கேட்டது. உயரமான கண் தெரியாத முஸ்லிம் ஒருவர் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்தார்.

தியானத்தில் இருந்த ஒருவர், எழுந்து அவருக்கு உதவிக்கு சென்றார். உள்ளே அழைத்துவரப்பட்டார். உதவியவரிடம், அந்த முஸ்லிம் பெரியவர், பகவான் எங்கே அமர்ந்திருக்கிறார் என்று கேட்டார். பகவான் முன்பு அவர் அமரவைக்கப்பட்டார்.

Bhagavan Ramanar

“நீங்க இப்போ பகவான் முன்னே உட்கார்ந்திருக்கீங்க. நமஸ்காரம் பண்ணிக்கோங்க!” என்றார்.

பகவானை நமஸ்கரித்துவிட்டு, பெஷாவரிலிருந்து தான் வருவதாகவும், அங்குள்ள தலைசிறந்த மதரஸா ஒன்றின் மௌல்வி என்றும் கூறினார்.

ஒருமுறை பகவானைப் பற்றி யாரோ படிக்கக் கேட்டவுடன் பகவானை தரிசிக்க தீவிர ஆவல் கொண்டார். பகவானே தனக்கு ஆன்மிக தந்தை போல உணர்ந்தார். உடனடியாக தனது உடல் குறையையும் பொருட்படுத்தாமல் ரயிலேறி ஆயிரம் மைல்கள் தன்னந்தனியாக கடந்து செல்ல முடிவு செய்தார். பல ரயில்கள் மாறி திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வந்து தற்போது பகவான் முன்பு அமர்ந்திருப்பதாக கூறினார்.

உதவிய தொண்டர், “பகவானிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அவர், “ஒண்ணும் இல்லை….. பகவானை பார்க்கனும்னு ரொம்ப ஆசை. பார்த்துட்டேன். பகவான் என்ன செய்யச் சொல்றாரோ அதை செய்யப்போறேன், அவ்வளவு தான்!” என்றார்.

அப்போது பகவான் கண்களில் கண்ணீர் ததும்பியது.

====================================================================

முதல் அனுபவத்தில் நமக்கு கூட மிகப் பெரிய பாடம் இருக்கிறது. பந்தி வஞ்சனை கூடவே கூடாது. பாபத்திலும் கொடிய பாபம் பந்தி வஞ்சனை. ஆகையால் தான் உணவருந்தும்போது என்றைக்கும் இரண்டாம் முறை எதுவும் கேட்காத பகவான் அன்று மட்டும் இரண்டாம் முறை மோர் கேட்டார். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவருக்கு உணர்த்தியிருக்கவேண்டும். மேலும் மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஆசிரியரும் ஒரு வகையில் பொறுப்பு தான் என்பதை ரமணர் உணர்ந்ததால் தான் உடனே அந்த கொடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விழைந்தார்.

அடுத்து, பார்வையற்ற முஸ்லிம் அன்பர் ரமணரை சந்தித்த அந்த நிகழ்வு. இது நிகழ்வு அல்ல. கவிதை. மேலும் நடைபெற்றது சரீரங்களின் சந்திப்பு அல்ல. ஆன்மாக்களின் சந்திப்பு. “பகவானை பார்க்கனும்னு ரொம்ப ஆசை. பார்த்துட்டேன்.” என்று அவர் குறிப்பிடுவதை கவனியுங்கள்.

பார்க்கும் இயல்புடைய கண்கள் அனைத்தும் பார்வையுடைய கண்கள் அல்ல. எந்த கண்கள் பார்க்க வேண்டியவர்களை பார்க்கிறதோ, பார்க்க விழைகிறதோ அந்த கண்களே பார்வையுடைய கண்கள். கண்களை இழந்த நிலையிலும் பல்லாயிரம் மைல்கள் ஒற்றை மனிதனாய் பகவானை பார்க்க வந்த அவர் தான் உண்மையில் பார்வையுடையவர்!

நமக்கெல்லாம் பார்வையிருக்கிறதா?

====================================================================

For earlier episodes…

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

====================================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

====================================================================

[END]

7 thoughts on “எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

  1. இந்த குரு தரிசன பதிவு, உண்மையிலே என்னை திக்கு முக்காட வைத்து விட்டது.

    இரண்டு சம்பவங்களின் மூலம், மிக பெரிய தத்துவத்தை தெரிந்து கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    பந்தி வஞ்சனை கூடவே கூடாது என்பதையும், இரண்டாம் அனுபவம் மூலம் தாங்கள் கேட்ட கேள்வி இருக்கிறதே – நமக்கெல்லாம் பார்வை இருக்கிறதா? – சுளீர் என்று மண்டையில் உரைக்கிறது.

    இந்த குரு தினத்தில் … குருவே..உங்களின் திருவருளால் எங்களின் பார்வையை (ஆன்ம தரிசனம் பெற) மேம்படுதுவிராக..

    குரு வாழ்க ! குருவே துணை!!

    மிக்க நன்றி அண்ணா..

  2. குருவே சரணம்

    குரு வாரத்தில் குருவின் பதிவை படிக்கும் பேறு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிவிற்கு நன்றி

    உமா வெங்கட்

  3. குரு வார பதிவு அருமை.
    இரண்டு நிகழ்வுகளும் நம் தலையில் நாமே குட்டிகொள்ள வேண்டிய பதிவு.
    பந்தி வஞ்சனை கூடாது – இதை பற்றி இதற்க்கு முன் தாங்கள் போட்ட பதிவை படித்த பிறகு சாதாரணமாக என் வீட்டில் கூட அதை தினமும் அனுசரித்து வருகிறேன். கரண்டியை கையில் பிடிக்கும் போதே ஞாபகம் வந்துவிடும்.
    பார்வை – நிச்சியமா அதில் இன்னும் வளரவேண்டும்.
    மதிப்பு மிக்க பதிவிற்கு நன்றி

  4. வணக்கம் சுந்தர் சார்

    மிகவும் அருமையான பதிவு

    சிறு சிறு தவறுகளையும் திருத்திக்கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பம் சார்

    நன்றி

  5. கருணையின் மறு பெயர் குரு.

    குரு தரிசனம் போதும்.கோடி பாப நாசனம்.

    குரு தரிசனம் போதும். பாபம் ஏது.

    நன்றி.

    கே.சிவசுப்ரமணியன்.

  6. வணக்கம் சுந்தர். பந்தி பரிமாறுதல் பற்றிய பகுதி அனைவர் வாழ்விலும் ஒரு முறையேனும் நடந்து இருக்கும். உண்மையில் உள்ள தெளிவு பெற்றவகள்கு மதம், மொழி மற்ற குறை பாடு பற்றிய அக்கறையும் இல்லை தேவையும் இல்லை .ஸ்ரீ ரமணர் உணவு அருந்தும் படம் இதுவரை பார்க்காதது. மிகவும் அழகு . நன்றி .

  7. கண்ணிருந்தும் குருடராய்…
    காதிருந்தும் செவிடராய்
    வாயிருந்தும் ஊமையராய்…

    பாரதியின் வரிகள் என்று நினைக்கிறேன்…

Leave a Reply to C. Rajendiran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *