Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

print
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சோறூட்டுவார்கள். அதை ‘அன்னப்பிராசனம்’ என்பர். அன்னப்பிராசனம் என்பது மிகவும் புனிதமான ஒரு விஷயம். உங்கள் குழந்தை நன்கு வளர்வதும் ஆரோக்கியமாக வளர்வதும் அது உண்ணும் உணவில் தான் இருக்கிறது. எனவே இந்த குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் நிகழ்வை இறைவனின் சன்னதியில் வைத்து செய்வர். இதற்கு தான் அன்னப்பிராசனம் எனு பெயர். இது ஆண் குழந்தைகளுக்கு 6 ஆம், 8 ஆம் அல்லது 10 ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7 ஆம், 9 ஆம் அல்லது 11 ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.

Thingalur 3

கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிராசனத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

Annaprasanam

குழந்தைக்கு ஊட்டும் முதல் சோறில் இவ்வளவு விஷயமா என்று வியப்பு வரலாம். ஒரு குழந்தையின் உடம்பு என்பதே அது உண்ணும் உணவு தான். எனவே உண்ணும் உணவை சத்தான ஆரோக்கியமான உணவாக குழந்தைக்கு கொடுக்கவேண்டும். மேலும் பலவேறு காரணங்களினால் உணவில் சில சமயம் தோஷம் ஏற்படும். ஆகையால் தான் சில குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. சாப்பிடவும் ஆர்வம் காட்டமாட்டார்கள். அதை அசட்டையாக கருதக்கூடாது. ஒரு பக்கம் மருத்துவ ரீதியிலான ஆலோசனையை உங்கள் குழந்தையை கவனிக்கும் மருத்துவரிடம் பெற்றாலும் மறுபக்கம் ‘அன்னப்பிராசனம்’ செய்யவேண்டும். குழந்தைகளுக்கு ‘அன்னப்பிராசனம்’ செய்து சோறு புகட்ட துவங்குவதன் மூலம் உணவின் மூலம் ஏற்படும் தோஷங்கள் அக்குழந்தையை அண்டாது என்பது நம்பிக்கை.

Thingalur 1

சரியாக சாப்பிடாத குழந்தைகளையும் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளையும் திங்களூர் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து, அன்னப்பிராசனம் செய்தால் தோஷங்கள் அனைத்தும் அகலும்.

அஸ்வினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். (சந்திரனும் பசுவும் படத்தில் கூட காட்டலாம்.) இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான்.

குழந்தையை தாயோ தந்தையோ மடியில் உட்காரவைத்து பால், நெய், தேன் கலந்த கலவையை ஊட்டவேண்டும். மற்றவர்களும் அடுத்து குழந்தைக்கு ஒவ்வொருவராக ஊட்டலாம். அதற்கு பிறகு குழந்தைக்கு விளையாட விளையாட்டு சாமான்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து தரவேண்டும். அதில் வளையல் (செல்வத்தை குறிப்பது), புத்தகம் (அறிவை குறிப்பது), பேனா அல்லது பென்சில் (கல்வியை குறிப்பது), ஒரு மண் பாண்டம் (சொத்துக்களை குறிப்பது) இவற்றை வைக்கவேண்டும். குழந்தை தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து விளையாட அனுமதிக்கவேண்டும்.

திங்களூர் கைலாசநாதர் கோவிலில் அன்னப்பிராசனம் செய்ய ரூ.100/- திருக்கோவில் அலுவலகத்தில் கட்டி முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

Thingalur 4

இது தவிர சிதம்பரம் அருகே உள்ள திருநெல்வாயில் என்கிற தலத்திலும் அன்னப்பிராசனம் செய்யலாம்.

இறைவன் திருஞானசம்பந்தரின் பசி தீர்த்த தலமிது. குழந்தை சம்பந்தனுக்கு ஞானப்பால் ஊட்டினாள் உமையவள். குமரன் சம்பந்தனுக்கு பசி தீர்க்க அமுதளித்தான் இந்த தலத்து இறைவன்.

சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.

சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் “உச்சிநாதர்’ என்றும் “மத்யானேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கும் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யலாம்.

கோவில்களின் முகவரி :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருவையாறு வட்டம், திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்.
(திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது).

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.
(செல்வது எப்படி : சிதம்பரத்திலிருந்து கவரப்பட்டு செல்லும் வழியில் உள்ளது. கவரப்பட்டுக்கு சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது!)

(*சமீபத்தில் நாம் நவக்கிரக கோவில்கள் தரிசனம் சென்றபோது திங்களூருக்கு சென்றிருந்தோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.)

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check :

பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

பிள்ளைகளுக்கு  என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம்  + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

=====================================================================

[END]

7 thoughts on “அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா?

  1. அன்னப் பிரசானத்தில் இவ்வளவு அர்த்தம் பொதிந்து இருப்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நாளுக்கு நாள் இந்த தளத்தின் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. தெரியாத புதுப் புது விசயங்களை அலசி ஆராய்ந்து பதிவாகாக வெளியிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி திக்கு முக்காடச் செய்கிறீர்கள்.

    கைலாச நாதர் திருக்கோவிலுக்கும் , உச்சி நாதர் திருக்கோவிலுக்கும் ஒரு முறை செல்வோம் .

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர்ஜி,

    சிறிய தவறு – அன்ன பிராசனம் என்பது சரியான வார்த்தை. மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.

    நன்றி.

      1. தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்தை மன்னிப்பு

      2. வாழ்க வளமுடன்

        நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

        இந்த நாடே இருக்குது தம்பி

        சின்னஞ் சிறு பிள்ளைகளை நம்பி

        ஒரு சரித்தரம் இருக்கு தம்பி

        நன்றி

  3. நிறைய புதிய விஷயங்கள் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி

  4. நன்றி சார்,

    01.10.15 நாளை நங்கள் எங்களுது பேத்திக்கு அன்ன பிரசானம் நடக்க இர்ருகுது சார்.

    நல்ல விஷயங்கள் கிடைத்தது

    நன்றி.

    தங்கள்
    சோ. ரவிச்சந்திரன்
    கர்வர்ர் , கர்நாடகா

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *