Home > 2014 (Page 5)

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

இன்று கந்தசஷ்டி. சிவ மைந்தனையும் அவன் லீலைகளையும் போற்றிப் பரவசப்படும் நாம் அவனை நமக்களித்த அவன் (நம்) தந்தை பரமேஸ்வரனை மறக்கலாமா? மேலும், தன்னைப்பாடுவதைவிட தன்னைப் பணிவதைவிட தன் பெற்றோரை பாடுவதையே எந்த பிள்ளையும் விரும்புவான். பெற்றோர் மெச்சும் நம் பாலசுப்பிரமணியன் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே இந்த நன்னாளில் ஈஸ்வரன் புகழை பாடுவோம். அவன் சம்பந்தப்பட்ட ஒரு நெக்குருகும் உண்மை சம்பவத்தை படிப்போம். இதை நமக்களித்திருப்பவர் நண்பர் ஸ்ரீஇருங்கோவேள். இவரது

Read More

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

இன்று கந்தசஷ்டி நிறைவு நாள். சூரசம்ஹாரம். வந்தவாசியை சேர்ந்த திரு.வெங்கடரமணன் என்பவரின் வாழ்க்கையில் வேல்மாறல் செய்த அற்புதங்களை பார்ப்போம். வந்தவாசியை அடுத்த ஒரு சிற்றூரில் திரு.வெங்கடரமணன் என்பவர் ஒரு மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். 1977-ம் வருடம் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய புயல் வீசியது. செய்யாத குற்றதிற்காக அவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு மூன்று மகள்கள் சிறு சிறு குழந்தைகளாக இருந்தனர்.  தான் செய்யாத குற்றதிற்காக தண்டனை

Read More

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் திரு.சீதாராமன். இவர் ஒரு தமிழாசிரியர். அது மட்டுமல்ல மிகச் சிறந்த ஆன்மிகவாதி. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர். அவர் தம் மனைவி பெயர் திருமதி.ரமா. பல வருடங்களாக மழலைச் செல்வம் இன்றி இத்தம்பதிகள் மிகவும் வருந்தி வந்தனர். மகா பெரியவா அவர்கள் மீது பெரும்பக்தியும் ஈடுபாடும் கொண்டவர் திரு.சீதாராமன். இவருடைய தந்தை மகா பெரியவா பட்டமேற்கும் சமயம் பெரும் உதவியாக  இருந்தார். காஞ்சிபுரம் - செய்யாறு

Read More

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…

தீபாவளி பரபரப்பில் எத்தனை பேருக்கு நம்மை சுற்றி இப்படி சில நிகழ்வுகள் நடந்தது பற்றி தெரியும் என்று நமக்கு தெரியாது. ஆனால் விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து நாம் துடிதுடித்து போனோம். தனது 24 வயதில், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் என இரண்டு இளைஞர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே கிடுகிடுக்கவைத்து இங்கு வீரமரணத்தை தழுவினார்கள். ஆனால், அவர்கள் பிறந்த தமிழ்நாட்டில் இன்று நடப்பது என்ன தெரியுமா??? நல்லவேளை அவர்கள் இன்று இல்லை. இருந்திருந்தால்,

Read More

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66

ஒரு ஊரில் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வரும் ஒரு ஏழை பிராம்மணன் வசித்து வந்தான். ஒரு நாள் ஒரு வீட்டு முன் நின்று அந்த பிராம்மணன் பிக்ஷை கேட்டான். அந்த இல்லத்தரிசியோ ஏழை எளியவர்கள் பால் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவி வரும் ஒரு நல்லாள். பிராமணன் பிக்ஷை கேட்பதை பார்த்து "சற்று நேரம் அந்த மரத்தடியில் உட்காருங்கள். நான் சமைத்து முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். சற்று நேரத்தில் சூடான உணவு கொண்டுவருகிறேன்"

Read More

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

கந்தசஷ்டி துவங்கி நடைபெற்றுவருகிறது. வரும் புதன்கிழமை சூரசம்ஹாரம். கந்த சஷ்டி நிறைவு நாள். கந்தசஷ்டியை முன்னிட்டு முருகனின் அருள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வழி செய்யும் தொடரை அவன் திருவுளப்படி ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். புத்தம் புது தகவல்கள், வித்தியாசமான செய்திகள், அரிய பாடல்கள், எளிய உபாயங்கள், வியக்க வைக்கும் நிஜ அனுபவங்கள் என இந்த தொடர் துன்பத்தில் உழல்பவர்கள் அனைவருக்கும் அருமருந்தாய் இருக்கும். கேட்பது மட்டுமல்ல கேட்க நினைப்பதை கூட அள்ளித் தரும்

Read More

இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா? — Rightmantra Prayer Club

காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய் பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள் பெற்ற பலரும் முன்வந்தனர். அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின. தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத் தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார். தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப் போகவதாகவும் தன்

Read More

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு நமது தளம் சார்பாக எளிய கைங்கரியங்கள் செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. வேதம் படிப்பதே அரிதாகி வரும் ஒரு சூழ்நிலையில் வேதம் படிக்கும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக அளித்து சந்தோஷப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தோம். கூடவே இன்னொரு ஆசையும் மனதில் அரும்பியது. நாம் கண்டு ரசித்த 'ஜகத்குரு ஆதிசங்கரர்' என்கிற படத்தை ஏதாவது ஒரு பாடசாலை மாணவர்களுக்கு

Read More

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

தில்லையில் உள்ளவர் 'நடராஜர்' என்றால் நம் மஹா பெரியவா ஒரு 'தஸராஜர்'. ஆம், தன்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களிடம் தான் பத்து அடி எடுத்து வைக்கும் தஸராஜர். நம்மிடம் திடீர் திடீரென சில வாசகர்களும் அன்பர்களும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குறைகளை, பகிர்ந்து கொள்வார்கள். நம் வாராந்திர பிரார்த்தனை கிளப்பில் வெளியிட பிரார்த்தனையை சமர்பிப்பார்கள். அவற்றை முறைப்படி நமது பிரார்த்தனை கிளப்பில் வெளியிட்டு உரிய பரிகாரங்களும்

Read More

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக நடைபெற்று வரும் எளிய சேவைகளில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளமையால், பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை. தீபாவளி குறித்து நமக்கு முன்பிருந்த பார்வை வேறு. தற்போதிருக்கும் பார்வை வேறு. பாரம்பரியத்தையும் நமது கலாச்சரத்தையும் கட்டிக்காத்து அதே நேரம் அர்த்தமுள்ள ஒரு தீபாவளியை கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே நமக்கு உண்டு. அதன் வெளிப்பாடு தான் சென்ற ஆண்டு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வையற்ற மாணவிகளுக்கு ஆடைகள்,

Read More

உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் நிலத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அரசின் வருடாந்திர விவசாய கண்காட்சியில் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு முறையும் சிறந்த முறையில் மகசூல் செய்தமைக்கும், தரமான கதிர்களை மகசூல் செய்தமைக்கும் அரசாங்கத்தின் விருதும் பதக்கமும் தவறாமல் அவர் பெற்று வந்தார். அவரின் சாதனை பற்றி கேள்விப்பட்ட ஒரு நாளிதழ் அவரை பேட்டியெடுக்க தன் நிருபரை அனுப்பியது. நிருபர் விவசாயியிடம் பேச்சு கொடுத்தபோது அவர் செய்து வரும்

Read More

வாரியார் ஸ்வாமிகள் முருகப் பெருமானிடம் அனுதினமும் வேண்டி நின்றது என்ன?

இன்று ஐப்பசி 1. ஆயில்யம் நட்சத்திரம். திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குரு பூஜை. கிருபானந்த வாரியார் சென்ற நூற்றாண்டு கண்ட தலைசிறந்த முருக பக்தர். நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றி பரவிய இக்கட்டான காலகட்டங்களில், ஆத்திகத்தை பரவச் செய்தவர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும்

Read More

ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் ஒரு நாள்!

"கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன? உலகில் ஏன் வறுமை உள்ளது?" என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து

Read More

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்... தவறுக்கும் தவறான தவறை ஒருவர்

Read More