Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, April 28, 2024
Please specify the group
Home > Featured > அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

print
திருவண்ணாமலை சித்தர், சேஷாத்ரி சுவாமிகளுக்கு ‘தங்கக் கரம் உடைய மகான்’ அதாவது ‘தங்கக்கை மகான்’ என்று என்று ஒரு திருப்பெயர் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு சுவையான, சிலிர்க்க வைக்கும் சம்பவம்.

இது நடந்தது 1885 ஆம் ஆண்டில். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

Seshadriதிரும்பிய பக்கமெல்லாம் கடைகள். பொம்மைக் கடைகள். பலகாரக் கடைகள். ஆங்காங்கு நீர்மோரும் பானகமும் தானம் செய்து கொண்டிருந்தார்கள். அதை வாங்கி பருக வேறு கூட்டம் முண்டியடித்தது.

மரகதம் என்கிற பெயருடைய அந்த தாய் கூட்டத்தில் தொலைந்து போகாமல் இருக்க தனது ஐந்து வயது பாலகனின் பிஞ்சுக் கையை பிடித்து நடந்து சென்றுகொண்டிருந்தார்.

தாயுடன் நடந்து வந்துகொண்டிருந்த குழந்தை திடீரென ஒரு இடத்தில நின்றான். அவன் நின்ற இடம் ஒரு பொம்மை கடை. அந்த வியாபாரி, தான் கொண்டுவந்த பொம்மைகளை அப்போது தான் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒரு சில அழகான குழலூதும் கண்ணன் பொம்மைகளும் இருந்தன.

பார்ப்போரை மயக்கும் வண்ணம் பொம்மைகள் இருந்ததால் கடையை பார்த்ததும், குழந்தைக்கு அந்த பொம்மைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.

“அம்மா… அம்மா… எனக்கு அந்த கண்ணன் பொம்மை வாங்கித் தாயேன்… நான் தினமும் கண்ணனுக்கு பூஜை செய்யப்போறேன்!” குழந்தை கடையை காண்பித்து பிடிவாதம் பிடித்தது.

குழந்தை பிடிவாதம் பிடிப்பதை பார்த்த கடைக்காரன், “குழந்தே இங்கே வா… உனக்கு எந்த பொம்மை பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோ” குழந்தையை அழைத்தான்.

ஆனால், அம்மா விடவில்லை. “அதெல்லாம் விலை ஜாஸ்தியிருக்கும். நம்மகிட்டே இப்போ அவ்வளவு பணமில்லே. இன்னொரு நாள் வாங்கித் தர்றேன்” என்று சமாதானம் சொன்னாள்.

“அம்மா… குழந்தையை பார்த்தால் சாட்சாத் அந்த கிருஷ்ண பரமாத்மா போலவே இருக்கிறானே… இந்த வயதில் பூஜை செய்கிறேன் என்று வேறு சொல்கிறானே… விலை அதிகமில்லை. இரண்டணாத் தான். ஆனா, இவனுக்கு நான் பொம்மையை இனாமாவே தர்றேன்” என்றான்.

Lord Krishna Dollதாயின் ஒப்புதலுக்கு கூட காத்திராமல் உடனே குழந்தை கடையை நோக்கி ஓடியது. தனது பிஞ்சு கையை அங்கிருந்த பெரிய சாக்குப் பையில் துழாவி ஒரு அழகான கிருஷ்ணன் பொம்மையை தேர்வு செய்தது.

“அம்மா… அம்மா… இந்த பொம்மை எவ்வளவு அழகா இருக்கு பாரேன்!”

“ஆமாண்டா கண்ணு அழகாத் தான் இருக்கு. நீ தேர்வு செஞ்சதாச்சே…” தாயும் ஆமோதித்தாள்.

விக்ரகத்தை சொன்னது போலவே அவர்களுக்கு இனாமாகக் கொடுத்து அவர்களை வணங்கி வழியனுப்பி வைத்தான் கடைக்காரன்.

அடுத்த, நாள் அம்மாவும் மகனும் அதே வீதி வழியே நடந்து வந்துகொண்டிருந்தனர்.

முதல் நாள் பொம்மை வாங்கியை அந்த கடையை தாண்டிப் போகும்போது, கடைக்காரன் இவர்களை பார்த்து ஓடிவந்தான்.

அவர்களை அப்படியே விழுந்து வணங்கினான். பிறகு அந்த குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு முத்தமிட்டான். “இது சாதாரண கையல்ல. தங்கக்கை. தங்கக்கை!” என்றான் திரும்ப திரும்ப பரவசத்துடன்.

இவர்களை சுற்றி ஒரே கூட்டம் கூடிவிட்டது. குழந்தையின் தாய், மரகதம் அம்மாளுக்கோ ஒரே சங்கோஜமாக போய்விட்டது.

“அம்மா.. நான் பலவருடங்களாக பொம்மை வியாபாரம் செய்துவருகிறேன். எந்த ஊரில் திருவிழா என்றாலும் அங்கு கடை போட்டுவிடுவேன். எவ்வளவு பெரிய திருவிழாவானாலும் நூறு பொம்மைகளுக்கு மேல் விற்காது. ஆனால், நேற்று என்னடாவென்றால், நான் கொண்டு வந்த பொம்மைகள் அத்தனையும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதுவரை இப்படி நடந்ததில்லை. அது இந்த கண்ணன் செய்த மாயம். என் கண்ணன் செய்த மாயம்!” என்று அந்த குழந்தையை அணைத்துக்கொண்டான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த குழந்தையின் பெயரும் புகழும் மேலும் மேலும் பரவத் தொடங்கியது. குழந்தையின் பெயரான சேஷாத்ரிக்கு முன்னர், ‘தங்கக்கை’ என்று அடைமொழி ஏற்பட்டது.

பிற்காலத்தில் வளர்ந்து திருவண்ணாமலையை தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்டார். ‘தங்கக்கை சேஷாத்ரி’ என்கிற பெயரைப் போலவே அவர் தொட்டது எல்லாம் துலங்கியது. அவர் நம் வீட்டுக்கு வரமாட்டாரா என்று திருவண்ணாமலை வாழ் மக்கள் ஏங்கத் தொடங்கினர்.

திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் பல மகிமைகளை நிகழ்த்தியிருக்கிறார்!

வியாழக்கிழமை அன்று பல்வேறு கமிட்மெண்ட்டுகள் இருப்பதால் இது போன்ற பதிவுகளை அன்று அளிக்கமுடியாமல் போய்விடுகிறது. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இது போன்று பிற குருமார்களைப் பற்றிய பதிவுகள் இடம்பெறும்!

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

[END]

3 thoughts on “அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

  1. சேஷாத்ரி மகானுக்கு ‘தங்கக்கை மகான்’ என்று இந்த பதிவை படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். பெயர் காரணத்தின் கதை அருமை.

    வாராவாரம் சேஷாத்ரி மகானின் கதையை படிப்பதில் ஆர்வமாக உள்ளோம். தெரியாத கதைகளை தங்கள் தளத்தின் மூலம் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி

    கிருஷ்ணர் படம் அருமையோ அருமை.

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம் சுந்தர்.கேள்விபடாத அழகான கதை.ஆசைப்பட்ட குழந்தைக்கு இனாமாக பொம்மை கொடுத்த கடைகாரற்கும் நல்ல மனது.இந்த கிழமை இன்ன பதிவு என்று முடிவு செய்து வைத்து கொள்ளாதீர்கள்.டென்ஷன் தான் ஆகும்.முடியும்போது பதிவுகளை கொடுங்கள் அப்போதுதான் சிறப்பாக,அழகாக அமையும்.நன்றி.

  3. மகான்களின் மலரடி நிழலில் நாம் நின்றிட “rightmantra” உதவுகிறது. சேஷாத்ரி சுவாமி என்று பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டேன். தங்கக்கை என்ற பெயர் காரணம் ஒட்டிய சம்பவம் சூப்பர். அதற்காக இணைத்த கிருஷ்ணர் படம் – அழகோ அழகு.

    தங்கக்கை மகான் சேஷாத்ரி சுவாமிகள் – நம் அன்பர்கள் தொட்டது துலங்க தங்கக்கை நீட்டி,
    அருள் புரியட்டும்.

    குரு வாழ்க !
    குருவே துணை !!

    நன்றி அண்ணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *