Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > பஞ்சாங்கமும் முன்னெச்சரிக்கை முத்தப்பாக்களும்!

பஞ்சாங்கமும் முன்னெச்சரிக்கை முத்தப்பாக்களும்!

print
சுனாமி குறித்து ஒரு வதந்தி இன்று சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. அதற்கு பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியோ இன்றைய தொழில்நுட்பங்களோ இல்லாத காலங்களில் நம் முன்னோர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தை கணக்கிட்டு அதை வைத்து போருக்கு செல்பவர்கள், திருத்தல யாத்திரை செல்பவர்கள். வியாபாரத்துக்காக தூரதேசத்துக்கு செல்பவர்கள், கடல் கடந்து வாணிபம் செய்யச் செல்பவர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆகியவர்களை எச்சரிக்க கூறியவை இவை. அந்த அளவில் இதை எடுத்துக்கொண்டால் போதும்!

Nava Graham

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தன்மை  உண்டு. அவற்றின் சுழற்சியில், வட்டப் பாதையில் ஏற்படும் மாறுதல்கள் பூமியை பாதிக்கும். உயிரினங்களையும் பாதிக்கும். அதைக் கொண்டு ரிஷிகள் இயற்றிய சுலோகங்களின் அடிப்படையில் தான் பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன. நமது முன்னோர்களின் இந்த மனிதநேயத்துடன் கூடிய விஞ்ஞான அறிவை வியந்து தான் இதற்கு முன்பு பஞ்சாங்கத்தை பற்றிய பதிவை அளித்தேன்.

ஆனால், இப்போது பஞ்சாங்கத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். தாங்களும் கலவரப்பட்டு அடுத்தவர்களையும் கலவரப்படுத்துகிறார்கள்.

அட ராமா… இதென்ன பஞ்சாங்கத்துக்கு வந்த சோதனை!

warning board

அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி செல்லும் சாலை அது. ஒருவர் அந்த சாலையில் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பகுதியை நெருங்கும்போது, ஒரு எச்சரிக்கை பலகையை பார்த்தார். “யானைக் கூட்டம் கடக்கும் பகுதி. எச்சரிக்கை!” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்ளோ தான். உடனே மேற்கொண்டு வண்டியை இயக்காமல் நிறுத்திவிட்டார் அவர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அந்த வழியே சென்ற காவலர் ஒருவர், “ஏன் வண்டியை இயக்காமல் இங்கேயே ரொம்ப நேரமா நின்னுக்கிட்டுருக்கீங்க?” என்று கேட்டார்.

“இல்லே… ‘யானைக் கூட்டம் கடக்கும் பகுதி. எச்சரிக்கை’ன்னு போர்டு போட்டிருக்கே. அதான் வண்டியை நிறுத்திட்டேன்” என்றாராம்.

அந்த மனிதரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அவர் ஊர் போய் சேரமுடியுமா?

அது யானைக் கூட்டம் உலவும் பகுதி என்பது உண்மை. யானையை பற்றிய எச்சரிக்கை பலகையும் உண்மை. ஆனால் யானை பாதையின் குறுக்கே வருமா வராதா என்பது இறைவன் ஒருவனுக்கு தான் தெரியும். பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட குறிப்புக்களை அந்த ‘எச்சரிக்கை’ பலகைகள் போன்று தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர அதையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்க கூடாது. மீறி தொங்கிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்கு தான்.

நாளை நடப்பதை இறைவன் ஒருவனே அறிவான். ஒருவேளை ஜோதிடர்களுக்கு அந்த சக்தி இருக்குமானால், ஜோதிடர்களுக்கும் பஞ்சாங்கம் கணிப்பவர்களுக்கும் தான் கோவில்கள் இருக்குமே தவிர கடவுளுக்கு இருக்காது!

– ரைட்மந்த்ரா சுந்தர், Rightmantra.com

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check :

நவீன அறிவியலை வென்ற ‘பழைய பஞ்சாங்கம்’

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

“சனிப்பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த் பயம்?”

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

அவசியம் தரிசிக்க வேண்டிய 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

==========================================================

[END]

2 thoughts on “பஞ்சாங்கமும் முன்னெச்சரிக்கை முத்தப்பாக்களும்!

  1. சார்,
    Very short n apt post for people like me, tks a ton.
    Ending….summaaaaaa nachunnuuuuuu irukku.
    Tks
    Ranjini

  2. நல்ல விளக்கம். தன் முயற்சியே திருவினையாக்கும் //.

    மற்றவை எச்சரிக்கை தான் / முடிந்தால் உயரலாம். தெளிவான அறிவுரை.
    நன்றி.

    தங்களின்
    சோ ரவிச்சந்திரன்
    கர்நாடகா

Leave a Reply to sravichandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *