கடந்த மாதம் ஒரு நாள், தனது மாணவர்களின் திருவாசக முற்றோதல், குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவில் பின்புறம் மறைந்த தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் இல்லத்தில் நடக்க விருப்பதாகவும், நம்மை வருமாறும் அழைத்திருந்தார் சங்கர்.
நமக்கும் குன்றத்தூரில் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெறவிருந்த உழவாரப்பணி முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒரு வேலை இருந்தது. அந்த வேலையையும் முடித்துவிடலாம் அப்படியே முற்றோதலிலும் சிறிது நேரம் கலந்துகொள்ளலாம் என்று சங்கர் அவர்கள் சொன்ன ஞாயிறன்று குன்றத்தூர் சென்றோம்.
நாகேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள தருமபுரம் சாமிநாதன் அவர்களின் வீட்டில் மாடியில் ஒரு அறையில் முற்றோதல் நடந்துகொண்டிருந்தது. சங்கர் அவர்களின் மாணவர்கள் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார்கள்.
நம்மை சங்கர் அவர்களும் அவருக்கு உதவியாக அங்கு திருமுறை சொல்லிக்கொடுப்பவர்களும் நம்மை வரவேற்று அமரவைத்தார்கள்.
“சார்.. தப்பா நினைக்காதீங்க.ஒரு அரைமணி நேரம் இருக்கேன்!” – நமது நிலையை சொன்னோம்.
“தாராளமா சார்… நான் கீழே தான் இருப்பேன்… போகும்போது வந்து பார்த்துட்டு போங்க” என்று கூறி கீழே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அனைவருக்கும் மோர் தந்தார்கள். ஒரு அரைமணி நேரம் அங்கே முதலீடு (ஆம்.. புண்ணிய முதலீடு!) செய்துவிட்டு கீழே வந்தோம்.
சங்கர் அவர்களிடம் விடைபெறுவதற்கு முன்பு பேசியபோது, இது மறைந்த ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் வாழ்ந்த வீடு என்றும் சேக்கிழார் அறக்கட்டளையின் பராமரிப்பில் இருப்பதாகவும் அவர் இருக்கும் காலத்தில் அடிக்கடி திருமுறை பாராயணம் நடந்த இடம் என்றும் மிக்க இந்த இடத்தை அப்படியே விட்டுவிடாது அடிக்கடி இங்கு திருமுறை படிக்க வேண்டி, அறக்கட்டளையிடம் பேசி வீட்டை திறந்துவிடச் சொன்னதாகவும் சொன்னார்.
“ரொம்ப நல்ல விஷயம்…”
“நீங்களும் உங்க சார்பா எங்கேயாவது முற்றோதல் பண்ணனும்னா சொல்லுங்க… நம்ம மாணவர்களை நான் கூட்டிகிட்டு வர்றேன்…” என்று ஒரு யோசனையை சொன்னார்.
நம் தளம் சார்பாக முற்றோதல்..? நல்ல ஐடியாவா இருக்கே…! யோசித்தோம்.
“நிச்சயம் செய்யலாம் சார்… எங்கே நடத்தலாம்? என்னென்ன தேவைப்படும்??”
“ஒன்னும் வேண்டாம் இடத்தை மட்டும் நீங்க பிக்ஸ் பண்ணுங்க. நான் பசங்களை கூட்டிகிட்டு வந்துடுவேன்” என்றார்.
“பசங்களுக்கு சாப்பிட எதாச்சும் கொடுக்கணுமே?”
“காலைல டிபன் மதியம் சாப்பாடு அரேஞ்ஜ் பண்ணீங்கன்னா போதும்” என்றார் அவரே தொடர்ந்து.
நாம் யோசித்தோம்… இடத்தை வாடகைக்கு பிடித்து, மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து…. செலவு எங்கோ போய்விடும்… இங்கேயே குன்றத்தூர்லயே எங்கேயாவது வைத்துக்கொள்ளலாமே. மாணவர்களுக்கும் சிரமம் இருக்காது. டிரான்ஸ்போர்ட் காசும் மிச்சமாகும்…. ஓ.கே….. குன்றத்தூரில் வைப்பதானால் எங்கு வைப்பது? இந்த இடம் நிச்சயம் போதாது… தவிர அடிப்படை வசதிகள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி நமது மனம் இவ்வாறாக பல சிந்தனைகளில் ஆழ்ந்தது.
நமது எண்ணங்களை அவரிடம் தெரிவித்தோம். “சார்… குன்றத்தூர்லயே எங்கேயாச்சும் வெச்சிக்கலாம். ஆனா.. இடம் தான் கொஞ்சம் நல்ல விசாலமான இடம் வேணும் சார். அடிப்படை வசதிகள் இருக்கணும். அது போதும்… மத்தபடி ஓலை கொட்டகையா இருந்தாக்கூட போதும். எங்காளுங்க அதையெல்லாம் பார்க்க மாட்டாங்க…” என்றோம்.
சற்று யோசித்தவர்… “அப்போ நம்ம தேவார பாடசாலை ஒன்னு இங்கே குன்றத்தூர்ல துரைசாமி தெருவுல இருக்கு. அங்கே வெச்சிக்கலாமா?”
“அந்த இடத்தை நான் பார்க்கமுடியுமா?”
“இதோ வாங்க உடனே காட்டுறேன்… இங்கே பக்கத்துல தான்”
உடனவே நம்மை கையேடு அழைத்துச் சென்று கோவிலிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி துரைசாமி தெருவில் அமைந்துள்ள பன்னிரு திருமுறை பாடசாலையை காண்பித்தார்.
இரண்டாவது ப்ளோரில் மிகப் பிரமாண்டமான ஹால் அது. நல்ல காற்றோட்டமான ஹால். கைகழுவ தண்ணீர், பாத்ரூம் என அனைத்து வசதிகளும் இருந்தன.
“இதை விட நல்ல இடம் கிடைக்காது. இங்கேயே வெச்சிக்கலாம் சார்” என்று இடத்தை கன்பர்ம் செய்தோம்.
தொடர்ந்து அவரிடம் ஆலோசித்ததில் முற்றோதலுக்கு ஆகஸ்ட் 2, ஞாயிறு காலை 8.45 – 1.00 என்று நாளும் நேரமும் முடிவு செய்யப்பட்டது.
திருமுறை பாடசாலை மாணவர்கள் சுமார் 50-60 பேர், திரு.சங்கர் மற்றும் இதர உதவி-ஆசிரியர்கள் 3 பேர், நம் வாசகர்கள் சுமார் 20-30 பேர், சிறப்பு விருந்தினர் பெரியவர் ஒருவர், திருவலிதாய சகோதரிகள், வள்ளி-லோச்சனா, என அனைவரையும் சேர்த்தும் சுமார் 100 பேருக்கு காலை உணவும், மதிய உணவும் ஏற்பாடு செய்வது என்று தீர்மானித்தோம்.
மாணவர்களுக்கு நாம் அளிப்பதாக இருந்த பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் இதர ஸ்டேஷனாரி பொருட்களை முற்றோதலில் அவர்கள் கலந்துகொள்ளும்போது பரிசாக கொடுத்துவிடலாம் என்று முடிவானது.
முற்றோதலில் என்ன ஓதுவது?
திருவாசக முற்றோதல் எல்லாரும் செய்வது தான். நாமே இதுவரை பல திருவாசக முற்றோதல்களில் கலந்துகொண்டுவிட்டோம்.
அப்போது தான் பாடியில் திருவலிதாய சகோதரிகள் இல்லத்தில் நாம் கலந்துகொண்ட, ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல் நினைவுக்கு வந்தது. அது சமயம் அவர்களின் குரு திரு.வா.சொ. சேது அவர்களையும் சந்தித்தோம். சேது அவர்கள் இதுவரை 276 பாடல் பெற்ற தலங்களையும் இரண்டு முறை பாதயாத்திரையாகவே சென்று தரிசித்துவிட்டு வந்தவர்.
பேசாமல் திருவலிதாய சகோதரிகளை அழைத்து திரு.சேது அவர்கள் தலைமையிலேயே இந்த முற்றோதலை செய்துவிடலாம் என்று தீர்மானித்தோம். சங்கர் அவர்களிடம் சொன்னபோது… “தாராளமா… நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க. நம் சைட்ல நாம் மாணவர்கள் 50 பேர் கியாரண்டியா வருவாங்க” என்றார்.
இதையடுத்து வா.சோ.சேது அவர்களிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றோம்.
நாள் நெருங்குவதையடுத்து ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். அப்போது தான் அந்த எண்ணம் தோன்றியது. ‘நாம பாட்டுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ் வாங்கி தர்றோம்னு சொல்லியிருக்கோமே? அது உண்மையிலேயே அவங்களுக்கு உபயோகமா இருக்குமா? ஏற்கனவே ஜியாமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ் வெச்சிருந்தா இது வேஸ்ட் தானே… அதுக்கு பதிலா அவங்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு அதை வாங்கிக்கொடுக்கலமே’ என்று தோன்றியது.
அன்று ஞாயிறு. ஒவ்வொரு ஞாயிறு மாலையும் குன்றத்தூரில் தேவார வகுப்பு நடைபெறும் என்பதால் நேராக குன்றத்தூர் சென்று மாணவர்களிடமே அவர்கள் தேவை என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று சங்கர் அவர்களை அலைபேசியில் அழைத்து, விஷயத்தை சொன்னோம்.
“தாராளமா வாங்க சார்… இன்னைக்கு சுந்தரர் குரு பூஜை சிறப்பு சொற்பொழிவு வேற கோவில்ல நடக்குது. அதையும் கேட்டமாதிரி இருக்கும்” என்றார்.
இதையடுத்து குன்றத்தூர் விரைந்தோம்.
மாணவர்கள் கோவில் அருகே உள்ள, பாடசாலை ஒன்றில் இருந்தார்கள். (கோவிலில் சுந்தரர் குரு பூஜை நிகழ்ச்சி நடைபெறுவதால் தற்காலிகமாக இங்கே அன்று பாடம் நடைபெற்றது).
மாணவர்கள் நம்மை பார்த்தவுடன் பரவசமானார்கள்.
சங்கர் அவர்கள் மாணவர்களிடம் சொன்னார் : “வர்ற ஞாயிற்றுக்கிழமை சார் நம்ம தேவார பாடசாலைல முற்றோதல் ஏற்பாடு பண்ணியிருக்காரு. எல்லாரும் காலைல 8.45 மணிக்கு வந்துடுங்க. டிபன் சாப்பாடு ரெண்டும் உண்டு. அப்புறமா, உங்க எல்லாருக்கும் நீங்க கேட்குறதை வாங்கி தர்றேன்னு சொல்றாரு. படிப்புக்கு உபயோகமா இருக்குறதை. யார் யாருக்கு என்ன வேணும்னு சொல்லுங்க…” என்றார்.
எல்லாரும் ஒருவித கூச்ச சுபாவத்தில் அமைதியாக இருந்தார்கள்.
நாம் சொன்னோம் : “உங்களுக்கு படிப்புக்கு உபயோகமா இருக்குற எது வேணும்னாலும் கேளுங்க. உங்கப்பா அம்மாகிட்டே கேட்டு அவங்க அப்புறமா வாங்கித் தர்றேன்னு சொல்லியிருப்பாங்க. அது மாதிரி… எதுவேணும்னாலும்… இதை நான் சொல்றதுக்கு காரணம், மறுபடியும் நீங்க அவங்ககிட்டே இதை கேட்கக்கூடாது. நாங்க வாங்கி தர்றதை பத்திரமா வெச்சிருக்கணும். இந்த சந்தர்ப்பத்தை நல்லா பயன்படுத்திக்கோங்க. அப்பா, அம்மாவோட சிரமத்தை குறைங்க” என்றோம்.
இதையடுத்து ஜியாமெட்ரி பாக்ஸ் வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் கையை தூக்கச் சொன்னோம். சுமார் 20 மாணவர்கள் கையை தூக்கினார்கள்.
பின்னர் ஒரு சிறுவன் “அங்கிள் எனக்கு ஹீரோ பென் வேணும்” என்றான்.
“நிச்சயமா கண்ணா”
இதைப் பார்த்த வேறொருவன், “அங்கிள் எனக்கு TANK PEN வேணும்” என்றான்.
“அதென்னபா TANK PEN?”
“அது FOUNTAIN PEN அங்கிள். செமையா எழுதும்”
வேறொரு சிறுவன் அருகே வந்து, “எனக்கு ஸ்கெட்ச் பென் செட் வேணும் அங்கிள்” என்றான்.
ஒரு சிறுமி தயங்கி தயங்கி வந்து, “அங்கிள் எனக்கு பென்சில், ஸ்கேல், எரேசர், ஷார்ப்பனர், பென்ஸில் பாக்ஸ், இதெல்லாம் வேணும்” என்றாள்.
“ஓ.கே. டா செல்லம்”
இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இரண்டு மாணவிகள், பிளஸ்-2 படிக்கும் மாணவிகள், சற்று தயங்கி தயங்கி, “சார்… எங்களுக்கு 4 ஸ்கொயர் அக்கவுண்ட்ஸ் நோட்ஸ் ரெண்டு வாங்கித் தரமுடியுமா?” என்று கேட்டார்கள்.
“தாராளமாம்மா.. வேறு எது வேணும்னாலும் சொல்லுங்க. எப்போ வேணும்னாலும் சொல்லுங்க…. நான் வாங்கிட்டு வந்து இங்கே தேவார கிளாஸ்ல பார்த்து கொடுத்துடுறேன்” என்றோம்.
அவர்களின் கண்களில் தெரிந்த அந்த நன்றியை நம்மால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.
சங்கர் அவர்கள் சற்று அந்த பக்கம் போக, குழந்தைகளுக்கு ஒரு திடீர் தைரியம் அன்னியோன்யம் வந்தது. ஆளாளுக்கு வந்து இது வேணும் அது வேணும் என்று தங்கள் தேவைகளை கூறினார்.
கேட்கவே அத்தனை சந்தோஷமாக இருந்தது.
பிரேமவாசம், வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமம் போன்ற இடங்களில் நாம் அங்குள்ள குழந்தைகளுக்கு இது போன்ற உதவிகள் செய்து அவர்களோடு பழகியிருந்தாலும் இது வேறு விதமான ஒரு அனுபவம்.
இவர்கள் அனைவரும் மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள். 90% அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான். அதெல்லாம் விடுங்கள்… வாரந்தோறும் தவறாமல் வந்து தேவாரம் படிக்கும் ஒரே காரணத்திற்காகவே இவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சற்று நேரத்தில் வந்த சங்கர் அவர்கள், “சார்… அங்கே சுந்தரர் குருபூஜை சொற்பொழிவு நடக்குது. எல்லாரும் அங்கே போகலாம்” என்று கூற, அனைவரும் கோவிலை நோக்கி நடந்தோம்.
நாம் வெளியே வந்து கோவிலை நோக்கி நடக்கத் துவங்க சிறுவர்களும் சிறுமிகளும் நம்மை மொய்த்துக்கொண்டனர்.
“அங்கிள் அங்கிள் எனக்கு ஸ்கெட்ச் பேனா”, “அங்கிள் எனக்கு ஹீரோ பேனா”, “அங்கிள்…அங்கிள் .. எனக்கு ஜியாமெட்ரி பாக்ஸ்”, “அங்கிள் எனக்கு நோட்புக்” “அங்கிள்… எனக்கு கலர் சாக்பீஸ்” “எனக்கு கலர் பென்ஸில் வாங்கித் தர்றீங்களா அங்கிள்”
“எல்லாருக்கும்… எல்லாம் வாங்கித் தர்றேன்…. DON’T WORRY”
“டேய் உன்கிட்டே தான் ஸ்கெட்ச் பேனா இருக்கேடா… அங்கிள் அங்கிள் இவன் பொய் சொல்றான்… இவன்கிட்டே ஸ்கெட்ச் பேனா இருக்கு. இவனுக்கு பக்கத்துல உட்கார்ந்திருக்குற பையனுக்கு கேட்குறான்…”
இப்படியாக குழந்தைகள் ஒரே குதூகலத்துடன் இருந்தார்கள். குழந்தைகளுக்கே உரிய COMPLAINTS, சீண்டல்கள் என அந்த கணம் அத்தனை சந்தோஷம்.
“எல்லாருக்கும் எல்லாம் தர்றோம். கேட்காதது கூட தர்றேன்… உங்க பக்கத்துல இதெல்லாம் வாங்க வசதியில்லாத ஏழைப் பிள்ளைங்க இருந்தா அவங்களுக்கு கூட நீங்க இதை கொடுக்கலாம்” என்றோம்.
“தேங்க்ஸ் அங்கிள்…” “தேங்க்ஸ் அங்கிள்” என்றனர் ஆளாளுக்கு.
கோவிலில் இராமகிருஷ்ணன் என்கிற தமிழாசிரியர் ஒருவர் சுந்தரர் குறித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். குழந்தைகள் அதை அமர்ந்து கேட்டார்கள். நாம் ஒரு ஓரம் நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தோம்.
அப்போது அவர் ஈசன் கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து அதிலிருந்து சுந்தரரை உருவாக்கிய கதையை கூறினார். நமக்கு ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி. ஏனெனில், அந்த சம்பவத்தை நாம் நமது தளத்தில் பகிர்ந்திருந்தாலும் அதன் உண்மைத் தன்மை குறித்து ஒரு மெல்லிய சந்தேகம் இருந்து வந்தது. ஏனெனில், அது குறித்து மிகவும் அரிதாகவே வெளியே தெரியும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் இங்கே சொற்பொழிவாளர் அது பற்றி கூறக் கூற நமக்கு கண்களில் ஆனந்த கண்ணீர்.
அவர் வார்த்தைகள் இருந்து : “கயிலையில் ஒரு நாள் சிவபெருமானுக்கு ஒரு சிந்தனை தோன்றியது. எல்லாரும் நமது புகழையையும் பெருமையையும் பாடிக்கொண்டிருக்கிறார்களே… அடியவர்களின் பெருமையை யார் தான் பாடுவது? என்று சிந்தித்து, ஒரு நாடகம் ஆடினார். தனது கண்ணாடி பிம்பத்திலிருந்து சுந்தரரை தோற்றுவித்து அவரை மாயையில் சிக்க வைத்து பூமிக்கு அனுப்பி ‘திருத்தொண்டத் தொகை’ எழுத வைத்தார். சுந்தரர் இல்லையேல் நமக்கு திருத்தொண்டத் தொகை கிடைத்திருக்காது. திருத்தொண்டத்தகை தான் சிவனடியார்களின் வரலாற்றை வாழ்க்கையை விரித்துரைக்கும் பெரிய புராணத்துக்கு ஆதார நூலாய் அமைந்தது!” என்று அற்புதமான ஒரு கருத்தை சொன்னார்.
சொற்பொழிவு முடியட்டும் என்று காத்திருந்தோம். ஒருகட்டத்தில் கோவிலில் பிரசாதம் கொடுத்தனர். அனைத்து மாணவர்களும் பசியோடு இருந்ததால் அதை வாங்கச் சென்றுவிட்டனர். இங்கே அவர் சொற்பொழிவை கேட்க கொஞ்சம் பேர் தான் இருந்தனர். நாம் உடனே முன்னே சென்று தரையில் அவருக்கு நேரெதிரே அமர்ந்து, அவ்வப்போது கைதட்டி, அவர் கூறுவதை ஆமோதித்து கேட்டுக்கொண்டிருந்தோம்.
சொற்பொழிவு முடிந்ததும் நேரே சென்று, அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, “ஐயா… அருமையான சொற்பொழிவுக்கு என் வாழ்த்துக்கள்!” என்றோம். அவரை பற்றி மேலும் விசாரித்தோம்… அனகாபுத்தூர் சிவன் கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமியும் பெரியபுராணம் சொற்பொழிவு நிகழ்த்திவருகிறாராம். ஒய்வு பெற்ற தமிழாசிரியர். பெயர் இராமகிருஷ்ணன். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து, “ஐயா… ஒரே ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் சொன்ன சிவபெருமானின் பிம்பத்திலிருந்து சுந்தரர் தோன்றிய கதையை அடியேனும் அறிவேன். அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஏதாவது நூலில் அது பற்றி சொல்லியிருக்கிறார்களா?” என்று நம் சந்தேகத்தை கேட்டோம்.
“அது பற்றி உபமன்யு முனிவர் உபமன்யு புராணத்தில் கூறியிருக்கிறார்” என்றார்.
ஹப்பா….. என்று பெருமூச்சு விட்டுக்கொண்டோம். சும்மா ஃபேண்டஸிக்காக நாம் எதையோ சொல்லிவைத்தோம் என்று யாரும் கருதக்கூடாது அல்லவா?
(பிறகு ஆராய்ச்சி செய்த போது திரு.இராமகிருஷ்ணன் கூறியது உண்மை என கண்டுகொண்டோம்.)
மாணவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின்னர் சங்கர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
நாம் புறப்படும்போது பிரசாதம் காலியாகிவிட்டது போல. கொடுத்துக்கொண்டிருந்த இடத்தில் யாருமில்லை. (புளியோதரை போச்சே!). ஹூம்… நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு வெளியே வந்தோம்.
அங்கே இந்த தேவார வகுப்பு குழந்தைகள் நான்கு பேர் உட்கார்ந்திருந்தனர்.
“என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கீங்க? வீட்டுக்கு போகலியா??”
“இல்லே அங்கிள்… எங்கப்பா வந்து கூட்டிகிட்டு போவாரு. இவனை இவங்கம்மா வந்து கூட்டிகிட்டு போவாங்க” என்றாள் மழலை மாறாமல்.
அவள் கையில் தொன்னை நிரம்ப பிரசாதம் இருந்தது.
“உள்ளே பிரசாதம் இன்னும் கொடுக்குறாங்களா என்ன” (ஆமாம் என்று சொன்னால், ஒரே ஓட்டமா ஓடி வாங்கிட்டு வரலாம்னு தான்! ஹி..ஹி..!!)
“இல்லே அங்கிள் காலியாயிடுச்சு. நீங்க வேணா இதை எடுத்துக்கோங்களேன்” என்று தன் கையில் இருந்த தொன்னையை நம்மிடம் கொடுத்துவிட்டாள்.
“வேண்டாம்மா… நீ சாப்பிடு…”
“இல்லே அங்கிள்…நான் சாப்பிட்டுட்டேன்… நீங்க இதை எடுத்துக்கோங்க”
“இல்லேம்மா… வீட்டுக்கு எடுத்துட்டு போ…”
“இல்லே அங்கிள்… இதோ இவன்கிட்டே இருக்குறது போதும்… நீங்க எடுத்துக்கோங்க…” என்று பிடிவாதாமாக கூறினாள்.
அவள் முகத்தை பார்த்தபோது வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வந்தது புரிந்தது. பொதுவாகவே குழந்தைகள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசமாட்டார்கள்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
“நமக்கு அதை கொடுக்கவேண்டும்… நாம் அதை சாப்பிடவேண்டும்” என்று மனப்பூர்வமாக அவள் விரும்புகிறாள் என்று புரிந்தது.
அவள் கொடுப்பதை மறுக்க யாராலும் முடியாது. அத்தனை அன்பு. இருப்பினும் நாம் தொடர்ந்து மறுத்தோம்.
மற்ற மூன்று குழந்தைகளும் இம்முறை சேர்ந்துகொண்டாரகள்.
“அங்கிள் அங்கிள்… நீங்க எடுத்துக்கோங்க அங்கிள்” என்று நான்கு பேரும் சேர்ந்து அடம்பிடித்தனர்.
அவர்களுக்காக அதை வாங்கிக்கொண்டோம்.
“இங்கேயே சாப்பிடுங்க அங்கிள்… எங்களுக்காக”
அவர்கள் எதிரிலேயே சாப்பிட்டோம். பிரசாதத்தின் புனிதத்துடன் இந்த குழந்தைகளின் அன்பும் சேர்ந்துகொண்டதால் தானோ என்னவோ அது அத்தனை ருசி…
குழந்தைகள் மனதில் ஒருவர் இடம்பிடித்துவிட்டால் போதும்… கடவுளின் இதயத்தில் அமர அது தான் ஷார்ட் கட்.
இந்த குழந்தைகளுக்காக, இவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்காகவே முற்றோதல் நடக்கிறது. அவசியம் நீங்கள் வந்திருந்து இந்த பாக்கியத்தை அனுபவிக்கவேண்டும். இவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடவேண்டும். இவர்களுடன் பேசவேண்டும். இவர்கள் மூச்சுக் காற்று உங்கள் மீது படவேண்டும். உங்கள் கைகளால் இக்குழந்தைகளுக்கு நோட்டு புக், பென்ஸில், ஜியாமெட்ரி பாக்ஸ் இவற்றை தரவேண்டும்.
சொன்னால் புரியாது. உணர்ந்தால் தான் தெரியும். இவர்கள் நம் ஈசனின் செல்லப் பிள்ளைகள். ‘அன்பே சிவம்’ என்பதை உணர்த்திய சிவனின் செல்லப்பிள்ளைகள்! கிடைப்பதர்க்கரிய பேறு இது. தவறவிடாதீர்கள்!
================================================================
இந்த முற்றோதலை நாம் துவக்குவதற்கு முன்போ அல்லது இறுதியிலோ அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் நம் தளம் சார்பாக நாம் முன்னரே அறிவித்த ஸ்டேஷனரி பொருட்களுடன் அனைவருக்கும் தலா ஒரு மரக்கன்று வழங்கப்படவிருக்கின்றது.
இன்று ஸ்டேஷனரி பொருட்களை வாங்க பாரிமுனை செல்லவிருக்கிறோம்.
================================================================
இந்த வார பிரார்த்தனை!
நாம் முன்பே அறிவித்தபடி பிரார்த்தனை கிளப் பதிவு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் இடம்பெறும். சென்ற வாரம் திரு.போதகுரு அவர்கள் தலைமையேற்ற பிரார்த்தனையே இந்த வாரமும் செய்யவேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறோம். (தேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்)
இந்த வாரம் பொதுப் பிரார்த்தனை அமரர் அப்துல் கலாம் அவர்களுக்காக. அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்காக பிரார்த்தனை தேவையில்லை. ஆனால் அவரது கனவுகளுக்காக பிரார்த்திப்போம்.
2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு கண்டார். நம் இளைஞர்கள் மாணவர்கள் குறித்தும் அவர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்தும் அவர் கனவு கண்டார். நம் தேச முன்னேற்றத்தில் அவர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து கனவு கண்டார். அவை யாவும் நிறைவேறி, வீட்டுக்கொரு மரம் வளர்த்து நம் தாய்த் திருநாட்டை செம்மையாக்குவோம். இதற்கு திருவருளின் துணையை வேண்டுவோம்.
இதுவே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி. அர்த்தமுள்ள பிரார்த்தனை.
================================================================
நமது தளம் சார்பாக ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல்
‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல் நமது தளம் சார்பாக வரும் ஆகஸ்ட் 2, ஞாயிறு காலை 9.00 – 1.00 வரை குன்றத்தூரில், எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சைவப் பணியில் சிறந்து விளங்கும் பெரியோர் ஒருவர் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தவுள்ளார். குன்றத்தூரில் திரு.சங்கர் அவர்களிடம் திருமுறை கற்றும் வரும் மாணவர்கள் சுமார் 60 பேர் இந்த முற்றோதலில் கலந்துகொள்ளவுள்ளார்கள். அது சமயம், அம்மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக நோட்டு புத்தகங்கள், ஜியாமெட்ரி பாக்ஸ்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் இன்னும் பிற ஸ்டேஷனரி பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முற்றோதலில் கலந்துகொள்ளும் திருவலிதாய சகோதரிகள் மற்றும் இதர சைவத் தொண்டர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (இவர்கள் பாடி நீங்கள் கேட்டதில்லையே… கண்களை மூடிக்கொண்டு கேட்டால், மூவர் காலத்திற்கே உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்கள். மிகையல்ல… உண்மை!!! கேட்டுவிட்டு சொல்லுங்கள். எந்த வாத்தியமும், பின்னணி இசையும் இல்லாமலேயே மிக மிக சிறப்பாக பாடும் வல்லமை இவர்களுக்கு இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.)
Check : அகத்தியர் தேவாரத் திரட்டு!
மேற்படி முற்றோதலில் நம் வாசகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதியம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள இடமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. .
ஸ்டேஷனரி பொருட்கள், உணவு ஏற்பாடு, அகத்திய தேவார திரட்டு – (100 நூல்கள்) என பல செலவுகள் உள்ளன. இந்த எளிய இறைபணியில் உதவிக்கரம் நீட்ட விரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். (ஏற்கனவே இரண்டு வாசகர்கள் இது தொடர்பாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த தொகை இதனுடன் சேர்க்கப்படும்.)
நாள் : ஆகஸ்ட் 2, 2015 ஞாயிறு
நேரம் : காலை 8.45 முதல் மதியம் 1.00 வரை.
முகவரி : திருமுறை தேவார பாடசாலை, எண் : 29, துரைசாமி தெரு, வட திருநாகேஸ்வரம், குன்றத்தூர் – சென்னை 600 069. (Landmark : குன்றத்தூர் பேருந்து நிலையம் – தேரடி அருகே)
அனைவரும் வருக!
வரவிரும்பும் வாசகர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்
(குறிப்பு : முற்றோதலில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்கு மேற்படி ‘அகத்தியர் தேவார திரட்டு’ நூல் நமது தளம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்படும்.)
=========================================================
Also check :
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!
பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!
நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!
இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?
=========================================================
[END]
குழந்தைகளே நம்மிடம் பேசுவது போன்று உள்ளது. அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் தாங்களும் அனுபவித்து எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
இந்த முற்றோதலில் கலந்து கொள்வதே நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்.
ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் புன்னகையைப் பார்க்க ஆனந்தமாக உள்ளது.
இந்த வார பிரார்த்தனையில் திரு கலாமின் கனவை நனவாக்க பிரார்த்தனை செய்வோம்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
வாழ்க …. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம்….. சிவபெருமானின் செல்லப் பிள்ளைகளை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மனதில் எழுகிறது………அவர்களின் மகிழ்ச்சியை நேரில் காண வேண்டும்……. அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் விழா இனிதே நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்…… மற்றபடி புளியோதரை கதை சூப்பர்………. (வட போச்சேவிற்கு புளியோதரை போச்சே சரியான போட்டி)………….
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே என்று உங்களோடு எங்களை பயணிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி
புகைப்படங்கள் அனைத்தும் நம்மை குன்றத்தூருக்கே கூட்டிச்சென்றுவிட்டன
சான்றோரின் வழிகாட்டுதல்
குழந்தைகளின் ஈடுபாடு மற்றும் பக்தி
நல்லோரின் கூட்டு முயற்சி
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து
இனிய அனுபவத்து தந்தது
முற்றோதல் சிறப்புற வாழ்த்துக்கள்
தொடரட்டும் தொண்டு
வாழ்க வளமுடன் !!!
நேற்றைய முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியம். நேற்றைய நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிகழ்ச்சியை organise செய்து இருந்தீர்கள் என்பதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மிகவும் மனதைத் தொட்ட நிகழ்வு . பல சான்றோர்களின் சந்திப்பு, குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி , காலை டிபன் , சாப்பாடு , குழந்தைகளுக்கு கொடுத்த பரிசுப் பொருட்கள், தாங்கள் சான்றோர்களை கௌரவித்தது இன்னும் பலப் பல . எங்களுக்கு போன வருடம் எங்களுக்கு வடலூரில் கிடைத்த மகிழ்ச்சியை விட பல மடங்கு அனுபவித்தோம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்
தங்கள் பதிவு வந்த பிறகு என் பின்னூட்டம் தொடரும்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
சிவனின் செல்ல பிள்ளைகள் – நாம் அனைவருக்கும் போதித்த பாடம் என்ன என்று பதிவை திரும்ப திரும்ப படிக்கும் போது..நமக்கு அந்த செல்ல பிள்ளைகள் போதித்த பாடம் அன்பு..அன்பு ..அன்பு ..மட்டும் தான் என்று சொல்ல முடியும்.முற்றோதலில் கலந்து கொண்டது மிக மிக மகிழ்ச்சி..புதிய அனுபவங்கள்..புதிய உறவுகள்..விரைவில் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அண்ணா..
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
-திருமூலர்-