தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)
'தனிமனிதனால் என்ன செய்துவிடமுடியும்?' என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, தனிமனிதன் சாதித்து காட்டியுள்ள உண்மை நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவதே இந்த தொடரின் நோக்கம். ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த விரும்பினால், "நான் ஒருத்தன் நினைத்து என்னவாகப்போகிறது?" என்று நினைக்காமல் அதை செயல்படுத்த உறுதியுடன் களமிறங்க வேண்டும். மனதின் சக்தி அளவற்றது. நல்ல நோக்கத்திற்காக அதை திருப்பும்போது அதற்கு யானைபலம் வந்துவிடும். நினைப்பதை எப்படியோ சாதித்துவிடும். சாதனையாளர்கள் வாழ்வில் நிகழ்வது இது தான். சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம்
Read More