Home > 2013 (Page 3)

வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!

நமது சென்ற வருட பாரதி பிறந்த நாள் விழா ஒப்பற்ற சாதனையாளர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது உங்களுக்கு  தெரிந்திருக்கும். எனவே இந்த வருட பாரதி விழாவை அதை விட சிறப்பாக நடத்திவிடவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இயல்பாகவே இருந்தது. ஆனால் இந்த வருடம் ஏற்பாடு துவங்கியதில் இருந்து நம் மனவுறுதியை சோதிக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இருப்பினும் நடத்துவது பாரதி விழா அல்லவா... சோதனையின்றி இருக்குமா? எவர்

Read More

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

வாழ்வில் ஒவ்வொரு கணமும் போராடி, போராடி இன்று வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிஜ ஹீரோவான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்களை நம் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சில நாட்களுக்கு முன்னர் அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தோம். சந்திப்பின் இறுதியில், தான் எழுதிய 'சொல்ல துடிக்குது மனசு' நூலை நமக்கு பரிசளித்தார். (இவரது சந்திப்பு பற்றிய பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்.) போகிற போக்கில் பாலன் போன்றவர்கள் உச்சரிக்கும்

Read More

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

நண்பர்களே, டிசம்பர் 8, ஞாயிறு மாலை நடைபெறும் நம் தளத்தின் இரண்டாம் ஆண்டு பாரதி விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். இதையே எங்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் அவசியம் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம் தளம் சார்பாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆண்டு விழாவும், டிசம்பர் மாதம் பாரதி விழாவும் நடத்தப்படும். பதிவுகள் வழியே பேசிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் பார்க்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

Read More

அமைதி என்றால் என்ன? Monday Morning Spl 22

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்திருந்தார்கள். ஒருவர்

Read More

எயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ !

டிசம்பர் 1, ஞாயிறு. சர்வேதேச எயிட்ஸ் தினம். எயிட்ஸ் நோய் குறித்தும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பல தவறான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்கள் உலவி வருகின்றன. சுய கட்டுப்பாடும் ஒழுக்கமின்மையும் தான் எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் என்றாலும், சம்பந்தமேயில்லாத அப்பாவிகளும் குழந்தைகளும் கூட சில சமயம் அந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை. சமீபத்தில் மதுரா திரு.வீ.கே.டி.பாலன் அவர்களை சந்தித்தபோது தான் எழுதிய 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற

Read More

பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

அந்த பள்ளியில் மாணவர்கள் நன்கு கல்வி கற்றாலும் ஒருவர் மீது மற்றவர் துவேஷத்துடனும் பொறாமையுடனும் இருப்பதை ஆசிரியர் கவனிக்கிறார். பிஞ்சு உள்ளங்களில் உள்ள இந்த நஞ்சை ஆரம்பத்திலேயே போக்க வேண்டும் என்று விரும்புகிறார். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளியும் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுவதுண்டு. ஒரு வெள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது, வகுப்பில் பெஞ்சுக்கு முன்னே ஒரு பெரிய மரப்பலகையில் வெள்ளை காகிதம் ஒட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறார்கள். அருகே ஒரு டேபிளில் கூர்மையான

Read More

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

பிறந்தநாளன்று நங்கநல்லூர் நிலாச்சாரலில் உள்ள பார்வைத்திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்து நாமும் அவர்களுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசை இருந்தது. காலை ஹோமம் முதலானவைகளை ஏற்பாடு செய்திருந்தபடியாலும் மதியம் அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததாலும் இரவு டின்னர் அவர்களுடன் சாப்பிடுவது என்று முடிவானது. அது தான் எனக்கும் சௌகரியம். அலுவலகம் முடிந்து நேரே நங்கநல்லூர் செல்வதற்கு சௌகரியாமாய் இருக்கும். இதையடுத்து நிலாச்சாரலில் 26 நவம்பர் செவ்வாய் இரவு டின்னர் ஸ்பான்ஸர்

Read More

அன்னமிட்ட அண்ணல்!

இதுவரை எத்தனையோ முறை என் பிறந்த நாள் சென்றிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தான் அது அர்த்தமுள்ள வகையில் சென்றது என்று கருதுகிறேன். முன்னதாக கூறியபடி, நான் என்னை உணர்ந்த பிறகு, என் கடமையும் பாதையும் எதுவென்று தெளிந்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் இது ஒருவகையில் முதல் பிறந்தநாள். பிறந்தநாளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் நான் அளித்த பதிவுகளில் கூறப்பட்டிருந்தது எனக்கு முன்பே தெரியுமென்றாலும் ஒரு பதிவாக அதை அளித்து

Read More

திருடனுக்கும் மோட்சமளித்த செருப்பு, குடை தானம்!

பிறந்த நாளை முன்னிட்டு தளத்திலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தன்னலமற்ற  சேவையை உங்களுக்கு தொடர்ந்து அளிப்பதே உங்கள் அன்புக்கு நான் செய்யும் கைமாறாக இருக்க முடியும். நேற்று காலை நான் எழுந்தது முதல் மறுபடியும் உறங்கச் சென்றது வரை நெகிழ்ச்சியான அனுபவங்களுக்கு குறைவில்லை. குருவருளும் திருவருளும் குறைவின்றி பொழிந்ததை உணர்ந்தேன். அனைத்தையும் எழுதி வருகிறேன். அடுத்து வடலூர் பயண அனுபவங்கள். வடலூரில் நான் சந்தித்த அந்த முக்கிய

Read More

இந்த உலகம் யாருக்கு சொந்தம் ? Monday Morning Spl 21

அவர் ஒரு சமூக  சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, "உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்" என்று மிரட்டுகிறான். திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன்

Read More

“ஊசிக்கு பின்னாலே நூல்!” – அம்மையப்பனிடம் வரம் கேட்ட முனிவர் – Rightmantra Prayer Club

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,"மரத்தடியில் பார்த்தீர்களா?" என்றாள். "பார்த்தேன்" என்றார் பரமன். "பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்" என்றாள் அம்மை. "அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம்

Read More

வீடு தேடி வர ஸ்ரீராமன் தயார்… வரவேற்க நீங்கள் தயாரா?

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் & எழுத்தாளர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக தொண்டு நிறுவனமான கிஞ்சிட்காரம் டிரஸ்ட் சார்பாக சென்ற ஆண்டு ஒரு காலண்டர் வெளியிடப்பட்டது நம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அன்னை மகாலக்ஷ்மியின் பல்வேறு வடிவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, 'லக்ஷ்மீ கடாக்ஷம்' என்கிற பெயர் கொண்ட அந்த அழகிய காலண்டரை திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களே முன்னின்று வடிவமைத்து சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து அதை வெளியிட்டார். சுமார் ஒரு லட்சம்

Read More

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

என்ன தான் பரபரப்பான வாழ்க்கையில் உழன்றாலும் வாழ்வின் உன்னதமான விஷயங்கள் குறித்து எப்போதும் என்னிடம் ஒரு தேடல் இருந்தபடி இருக்கும். ஒரு நாள் அலுவலகத்துக்கு செல்லும்போது, மவுண்ட் பூவிருந்தவல்லி சாலையில் எனக்கு முன்னே சென்ற ஷேர் ஆட்டோவில் கரும்பலைகையில், 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் அதற்கு கீழே ஆங்கில விளக்கமும் தரப்பட்டிருந்தது. இது போன்ற ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களின் பின்புறம் குடும்ப கட்டுப்பாடு

Read More

குழந்தை வடிவில் வந்து குழந்தையை காத்த காமாக்ஷி!

மஹா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றிய படிக்கும்போது நம்மையுமறியாமல் கண்களில் நீர் கசிந்துவிடுவதுண்டு. எனக்கு பலமுறை அது போல ஏற்பட்டிருக்கிறது. நம் வாசகர்களுக்கும் அப்படியே. ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அந்த கருணைக் கடல் அருள் மழை பொழிந்தது, பொழிந்துவருகிறது. அவரையே கதி என்று சரணடைந்த பக்தர்களுக்காக பல நேரங்களில் இறைவனிடம் மன்றாடி பல மகத்தான விஷயங்களை சாதித்து தந்துள்ளார். இத்தனைக்கும் அந்த மகான் தனக்கென்று இறைவனிடம்

Read More