Home > episode (Page 2)

குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!

சில முக்கிய பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைவு பெறவில்லை. எழுதும் பதிவுகளில் தகுந்த புகைப்படங்கள் அல்லது ஓவியம்  சேர்த்து அனைத்தும் நன்றாக வந்த பிறகே பதிவை அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனிடையே காத்திருக்கும் உங்களுக்காக ரமணர் தொடர்புடைய அருள் விளையாட்டுக்களை தந்திருக்கிறோம். யாரோ சிலருடைய கேள்விகளுக்கோ அல்லது ஆன்மாவின் விசும்பலுக்கோ இவை பதிலாக அமையலாம். எனவே கவனமாக படிக்கவும்! முடிந்தால் திருவண்ணாமலை சென்று ரமணாஸ்ரமத்தை தரிசித்துவிட்டு வரவும்! மேலும் இந்தப் பதிவை இன்று பகிர்வதில் காரணமிருக்கிறது.

Read More

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

சிவபுண்ணியம் என்பது போல சிவாபராதம் (சிவத்துரோகம்) என்கிற ஒன்று இருக்கிறது. அது பற்றி நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எந்தக் காலத்திலும் அவற்றை செய்யாமல் உங்களை காத்துக்கொள்ளவேண்டும். கடுகளவு சிவபுண்ணியம் கூட எப்படி நம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று கையிலாயப் பதவியை தருகிறதோ அதே போன்று கடுகளவு சிவாபராதம் கூட நம்மை மீளா நரகில் தள்ளிவிட்டுவிடும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கீழகண்ட சிவாபராதம் பற்றிய கதை நந்திதேவர் சதானந்த முனிவருக்கு கூறியது. நமது தளத்தின்

Read More

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

சிவபுண்ணியத்தின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் கதை இது. சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஒரு மிகப் பெரிய நீதியை உணர்த்தும். 'இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?' என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது

Read More

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபுண்ணியக் கதைகள் யாவும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. மிகப் பெரிய நீதிகளை உணர்த்துபவை. ஒரு ஜீவன் வாழும் காலத்தே எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும் அறிந்தோ அறியாமலோ ஒரு சிவபுண்ணியச் செயலை செய்யும்போது அது நற்கதியை பெற்றுவிடுகிறது. அப்படியெனில், வாழ்நாள் முழுதும் பலன் கருதாது சிவபுண்ணியத்தை செய்துவருபவர்கள் பெறக்கூடிய நன்மையை பட்டியலிட முடியுமா? வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும்! ஞானிகளுள் சிறந்தவராகிய ரிஷப முனிவர் ஒரு முறை

Read More

ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?

வீட்டில் சில சமயம் விருந்தினர்கள் சாப்பிட வரும்போது அவர்களை கவனிக்கும் மும்முரத்தில் நமக்கு எதுவும் கடைசியில் மிச்சமிருக்காது. நாம் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டோம். அம்மா அந்த சூழ்நிலையை சமாளிக்க அவசர அவசரமாக ஏதோ ஒன்றை நமக்கு செய்து தருவாள். ஆனால் அது விருந்தைவிட பிரமாதமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கேட்டால்... "இல்லையேடா கண்ணா... அவசரத்துக்கு இருந்த மிச்சம் மீதியை வெச்சு செஞ்சேன். நாளைக்கு பண்ணித் தரவா?" என்பாள். இது நம் எல்லார்

Read More

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

"நம் பாவங்களைத் தான் வாங்கிக் கொள்பவன் ஈஸ்வரன். அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர். முன் ஜன்ம நல்வினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ

Read More

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

நாம் எல்லாம் ஒரு வகையில் பாக்கியசாலிகள். ஈஸ்வரனை நினைத்த நேரத்தில் சென்று தரிசிக்கிறோமே அது எத்தனை பெரிய பேறு தெரியுமா? 276 பாடல் பெற்ற தலங்கள், அது தவிர 267 வைப்புத் தலங்கள், இதுவும் தவிர தனிச் சிறப்பு மிக்க அந்தந்த பதிகளில் உள்ள தலங்கள் என நாம் உய்ய எத்தனை எத்தனை வழிகள். இந்த கண்களின் பயன் சிவனை தரிசிப்பதும், செவியின் பயன் அவன் பெருமைகளை கேட்பதும், நாவின் பயன் அவன்

Read More

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

சிவபுண்ணியக் கதைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவை. பிரமிக்கவைப்பவை. பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தனித்தனிக்குணம் கொண்டவை. ஒவ்வொரு கதையும் உணர்த்தும் பாடம் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாபத்தை தூள் தூளாக்கி நன்னெறிக்கு நம்மை இட்டுச்சென்றுவிடும். எனவே சிவபுண்ணியம் செய்ய கிடைக்கும் எந்தவொரு செயலையும் விடக்கூடாது. அதே போன்று மறந்து போய் கூட சிவாபராதத்தை செய்துவிடக்கூடாது. செய்பவர்களுக்கும் துணை போகக்கூடாது. சிவாபராதம், ருதிராட்சம் பற்றியேல்லாம அடுத்தடுத்த அத்தியாயங்களில்

Read More

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

நமது முன்னோர்கள் மற்றும் அரசர்கள் அரும்பாடுபட்டு உயரிய எண்ணத்துடன், பரந்த நோக்குடன் கட்டிய பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்து, செடி, கொடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்கள் போதிய வருமானம் இன்றி, பணியாளர்கள் இன்றி தவிக்கின்றன. அவ்வளவு ஏன் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி மூர்த்தத்தின் மீது எண்ணெயே படாத சிவாலயங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. 2012 ஆம் ஆண்டு துவக்கத்தில் (ரைட்மந்த்ரா துவக்குவதற்கு முன்னர்) நாம் திருமணஞ்சேரி சென்றிருந்தபோது,

Read More

என் நிலைமை மாறாதா முருகா… நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வாழ்வேனா ??

இன்று சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த நாள். ஒரு மனிதனுக்கு தெய்வ பக்தி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள இவரது வரலாற்றை படித்தால் போதும். அப்படி ஒரு வைராக்கிய பக்தி இவருக்கு முருகன் மீது. 'COMPLETE SURRENDER' என்பார்கள் இல்லையா அதன் அர்த்தம் புரியவேண்டும் என்றால் இவரது வரலாற்றை படித்தால் போதும். இப்படியும் கூட இறைவனிடம் பக்தி செய்யமுடியுமா உரிமை எடுத்துக்கொள்ளமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தளவு நாடி,

Read More

”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”

உண்மையான ஞானிகள் மந்திர தந்திரங்களில் சித்து வேலைகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் அவதார நோக்கத்தை சிதைத்துவிடும். ஆனால் அவசியம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் சக்தியை பிரயோகிக்க தயங்க மாட்டார்கள். பகவான் ரமணர் போன்ற மகான்கள் தங்கள் உபதேசங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தங்களுக்கு இருந்த மந்திர தந்திர சக்திகளில் அல்ல. காவியுடுத்தியவர்கள் எல்லாம் குரு அல்ல. முற்றும் துறந்தேன் என்று கூறுபவர்கள் எல்லாம் துறவிகளும் அல்ல. துறவின்

Read More

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

சிவசின்னங்களில் தனியிடம் பெற்று விளங்குவது ருத்ராக்ஷம். ருத்ராக்ஷத்தின் பெருமையை அறிந்தோ அறியாமலோ பலர் அதை அணிந்திருப்பதை பார்த்துவருகிறோம். எப்படி இருந்தாலும் அதற்கு பலன் நிச்சயம் உண்டு. (அதே சமயம் அதை அணிந்திருப்பவர்கள் அதன் மகத்துவத்தை உணர்ந்துகொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மது, மாமிசம் உள்ளிட்டவற்றை தீண்டாமல் இருக்கவேண்டும்!) இப்போதைக்கு ருத்ராக்ஷத்தின் பெருமையை விளக்கும் சிவபுண்ணியக் கதை ஒன்றை பார்ப்போம். பத்மகரம் என்னும் நகரில் ஒழுக்கம் நிரம்பிய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். புத்தி

Read More

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

சிவாலயத் திருப்பணி செய்வதால் கிட்டும் சிவபுண்ணியம் பற்றிய கதை இது. வாமதேவர் என்கிற முனிவர் கூறியது. "குலண்டம் என்கிற நாட்டில் கபித்தபுரம் என்கிற பட்டணம் இருக்கிறது. அங்கு கண்டன் என்கிற பெயருடைய ஒரு அதர்மி இருந்தான். அவனுக்கு தொழிலே திருட்டு தான். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று பொருட்களை திருடி வந்து வேற்றூர்களில் அவற்றை விற்று வாழ்ந்து வந்தான். இவ்விதம் ஒரு நாள் பொருட்களை திருடிக்கொண்டு மூட்டைக்கட்டி தூக்கி வரும்போது, மாலை

Read More

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்றவர் ரமண மகரிஷி. பரம்பொருளின் சொரூபமாக விளங்கிய ரமணர், "நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்!" என்றார். சிஷ்யர்கள் சந்தேகங்களை கேட்கும்போது மெய்ஞாநியானவன், மிகப் பெரிய நூல்களையும் வேத உபநிடதங்களையும் தேடவேண்டியதில்லை. அவர்கள் உள்ள சூழலில்

Read More