வேதமாகிய மலைகளுக்கு நடுவில் எழுந்தருளியிருக்கும் திரிசூலம் திரிசூலநாதர்!
உழவாரப்பணிக்கு கோவிலை தேர்ந்தெடுக்கும்போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று : அதிகம் வெளியுலகினரால் அறியப்படாத அதே சமயம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த கோவிலாக இருக்கவேண்டும் என்பது. எனவே நமது தளத்தின் உழவாரப்பணிக்காக கோவிலை தேடியபோது, சில ஆண்டுகளுக்கு முன்னர் (2012 ஆம் ஆண்டு) நாம் சென்று வந்த திரிசூலம் திரிசூலநாதர் கோவில் நினைவுக்கு வந்தது. திரிசூலம் திரிசூலநாதர் கோவில், சென்னையில் உள்ள மிக மிக பழைமையான தலங்களுள் ஒன்று.
Read More