Home > 2015 (Page 2)

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். "இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??" சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். "எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா" பெரியவா தீர்க்கமாக யோசித்தார். "மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே..." "நேர்லேயே போய் பார்த்துடுவோமே..." என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து

Read More

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

தீபாவளி சிறப்பு பதிவுகளில் இன்னும் ஒன்றே ஒன்று பாக்கியிருக்கிறது. குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு நடந்த அபிஷேகம் குறித்த பதிவு தான் அது. அந்த பதிவை அளிக்கும் முன்னர், திருமுறை விநாயகரைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அது என்ன திருமுறை விநாயகர்? இந்த கோவில் எங்கேயுள்ளது? யார் கட்டியது ? நமது பன்னிரு திருமுறைகளில் மிக மிக பழமையான அச்சுப் பிரதிகள் (* சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் ஏறிய முதல் பிரதிகள்

Read More

சேவை இங்கே சுலபமல்ல!

ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது சென்னை சற்று திக்கி திணறினாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த முறை தான் கதி கலங்கிப் போனது. அதற்குரிய காரணங்களுக்கு சென்றால் அரசியலோடு கூடிய பதிவை அளிக்கவேண்டியிருக்கும். எனவே நாம் அதில் போகவேண்டாம். இந்த மழை வெள்ள பாதிப்பை இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். நவம்பர் துவக்கத்தில் பெய்த மழை & டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழை. முதல் கட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் முடிச்சூர், தாம்பரம்,

Read More

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

நாளை மறுநாள் அதாவது 17/12/2015 வியாழக்கிழமை மார்கழி மாதம் துவங்குகிறது. மாதங்களில் தனிச்சிறப்பு மிக்கது மார்கழி. மார்கழி மாதம் திருக்கோவில் சென்று சுவாமியை தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுதும் தரிசனம் செய்ததற்கான பலன் கிடைத்துவிடும். காரணம் நமக்கு ஒருவருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்கிற கணக்கில் தேவலோகத்தில் சுப்ரபாதம் கேட்கும் நேரம் மார்கழி மாதம் ஆகும். ஆடி முதல் நாளிலிருந்து மார்கழி முடிய தேவலோகத்தில் இராத்ரிகாலமாகும். ஆகையால் தை

Read More

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

மக்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே அதிகம் தேவைப்படுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது. அவர்கள் முன்பு அந்த கடவுளே வந்து உதவிக்கு நின்றாலும் அவர்களால் முடியாது. எனவே தான், சமீபத்திய வேலூர் சொற்பொழிவின் தலைப்பை கூட, "சோதனைகளை சாதனைகளாக்குவோம்!" என்று தேர்ந்தெடுத்தோம். சொற்பொழிவின் முதலில் நாம் சொன்னது என்ன தெரியுமா? "நீ என்ன பார்க்கிறாயோ அது விதி. அதை எப்படி பார்க்கிறாயோ

Read More

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

வாசக அன்பர்களுக்கும் ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கும் வணக்கம். சரியாக சென்ற டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் கறுப்பு நாளன்று அடைமழை பெய்ய ஆரம்பித்த நேரம், அலுவலகத்துக்கு புறப்பட்டவன் மழை ஓயட்டும் அதன் பிறகு கிளம்பலாம் என்று அப்படியே வீட்டில் அமர்ந்துவிட்டோம். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கணினியில் அமர்ந்து பதிவுகளை தயார் செய்துகொண்டிருந்தோம். அதுவரை போக்குக்காட்டிவிட்டு பின்னர் 10.00 மணியளவில் வலுக்கத் துவங்கிய மழை 11.00 am, 12.00 pm, 1.00

Read More

சோதனைகளை சாதனைகளாக்குவோம்!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்த சபை, வேலூர் சார்பில் வருகின்ற வெள்ளிக்கிழமை (11/12/2015) 4ம் ஆண்டு குரு பூஜை மஹோத்சவம் வேலூரில் கொசப்பேட்டையில் நடைபெறவிருக்கிறது. குருராஜர் அருளால் மேற்படி வைபவத்தில் பங்கேற்று "சோதனைகளை சாதனைகளாக்குவோம்" என்கிற தலைப்பில் அடியேன் ஆன்மிக / சுயமுன்னேற்ற சொற்பொழிவாற்றவிருக்கிறேன். நாடு தற்போது மிகவும் சோதனையான ஒரு காலகட்டத்தில் இருப்பதால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மேற்படி தலைப்பை தேர்வு செய்தோம். வேலூர் மற்றும் சுற்றுப் புறங்களில் வசிக்கும்

Read More

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள். ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர்

Read More

மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா! Rightmantra Prayer Club

1964 ம் வருட துவக்கம். ஸ்ரீமடம் சார்பாக நடைபெறும் தர்மகாரியங்கள் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு நிறைய பேர் அரிசி மூட்டை அனுப்பி வந்தார்கள். அப்படி  அளிப்பவர்களை மூட்டைகளை காஞ்சிக்கு அனுப்பாமல் ராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீமடத்துக்கு அனுப்பும்படி பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள். மகா பெரியவாவின் செயல் பலருக்கு விசித்திரமாக இருந்தது. குறிப்பாக ஸ்ரீ மடத்தில் இருந்தவர்களுக்கு. ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகளை வைக்க இடமில்லாமல் போனது. எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக்

Read More

வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற அன்னாபிஷேக தரிசன அனுபவங்கள் பற்றிய பதிவு இது. சிவதரிசனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அன்னாபிஷேக தரிசனம் என்பது அரிதினும் அரிய ஒரு பேறு. சிவ அபச்சாரம் செய்த தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்ட பாவத்தினாலும், சிவ நிந்தனையை காதால் கேட்ட பாவத்தினாலும் தேவர்கள் அனைவரும் சூரபன்மனிடம் சிக்கி சிறைபட்டு அவனுக்கு மீன் முதலானவற்றை சுமந்து பல விதமான ஏவல்கள் செய்து துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தனர். இந்நிலையில்

Read More

புண்ணியத்துக்கு பதில் பாவத்தை மூட்டை கட்டுவதா? அன்னாபிஷேக அனுபவம் – 1

சிவ வழிபாட்டை பொருத்தவரை மிகச் சிறிய தொண்டு கூட மலையளவு புண்ணியம் தரும். அதே  நேரம், மிகச் சிறிய தவறான விஷயம் கூட மலையளவு பாவத்தை குவித்துவிடும். புண்ணியம் சேர்க்க செய்யும் ஒரு எளிய சேவையில் பாவத்தையும் சேர்த்து மூட்டைக் கட்டிக்கொள்வது நம் மக்களுக்கு கைவந்த கலை. எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அன்னாபிஷேகத்திற்கு அரிசி தருகிறேன் பேர்வழி என்று பாவத்தை மூட்டைக் கட்டிகொள்பவர்கள் மாற வேண்டி இந்தப் பதிவை அளிக்கிறோம். நமது

Read More

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

ஆங்கிலத் தேதிப்படி இன்று அடியேன் பிறந்த நாள். பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றுவிட்டு ஏதேனும் தொன்மையான ஆலயம் சென்று இறைவனை தரிசித்துவிட்டு அலுவலகம் சென்று இன்றைய பணிகளை கவனிப்பது மட்டும் தான் இன்று நமது அதிகபட்ச நடவடிக்கை. தமிழ் மாதத்தில் வரக்கூடிய நமது பிறந்த நட்சத்திரம் அன்று தான் பிறந்தநாளை கொண்டாடுவது நமது வழக்கம். நட்சத்திரப்படி வரும் பிறந்த நாள் தான் சரியான ஒன்று. மேலும் நமது பாரம்பரியங்களில் ஒன்று. ஆங்கிலத்

Read More

‘கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்?’ வழி(ஒளி)காட்டும் மகா பெரியவா!

நாளை 25/11/2015 புதன்கிழமை... கார்த்திகை தீபத் திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று நாம் குன்றத்தூர் சென்று ஜோதி தரிசனம் செய்து, புகைப்படங்களுடன் விரிவான அப்டேட் அளிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டு ஜோதி தரிசனத்திற்கும் முருகனருளால் நாளை செல்லவிருக்கிறோம். நமது ஜோதி தரிசன அனுபவம் பற்றிய பதிவு விசேஷ புகைப்படங்களுடன் பின்னர் அளிக்கப்படும். தற்சமயம் வேறொரு முக்கிய பதிவை தயாரித்து வருவதால் தீபத்தை பற்றி விசேஷ பதிவை அளிக்க

Read More

நவீன அறிவியலை வென்ற ‘பழைய பஞ்சாங்கம்’!

சென்ற வாரம் சென்னையை புயல் ஒரு புரட்டு புரட்டிவிட்டுச் சென்ற நிலையில், அதன் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நேரத்தில் தற்போது மீண்டும் புயல் ஒன்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரே வடியாத சூழ்நிலையில் சமீபத்திய மழையால் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியிருக்கின்றனர். நேற்று மாலை பலத்த மழை பெய்தபடியால், சாலையில் வெள்ள நேர் பெருக்கெடுத்து ஓட, வாகனங்கள் நகர முடியாமல் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப

Read More