Home > 2014 > January (Page 2)

திக்கற்றோருக்கு தெய்வமே துணை – சகலத்துக்கும் பரிகாரங்கள்

மனிதர்களுக்கு தான் இந்த உலகில் எத்தனை எத்தனை பிரச்னைகள்.... 32 பற்களுக்கு இடையே நாக்கைப் போலத் தான் மனித வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் இப்படித் தான். ஆனால் சிலர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சிலர் அதை உணரவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம். இறை நம்பிக்கையிருப்பவர்களோ அல்லது இல்லாதவர்களோ - எப்படியாகிலும்  பற்களின் கடியிலிருந்து நாக்கு தப்புவது கடினம். கடிபடும் போது இறைவனின் நாமத்தை நாவானது உச்சரித்தால் அந்த வலி தெரியாது. அவ்வளவே!!! நமது

Read More

கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும் தெரியுமா? Rightmantra Prayer Club

'இந்தக் கோவிலுக்கு செல்வதால் அந்த பலன்', 'அந்த கோவிலுக்கு செல்வதால் இந்த பலன்', 'கோவிலுக்கு அடிக்கடி போவது நல்லது', 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கோவிலுக்கு செல்வது பற்றி சான்றோர்கள் கூற கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். பலமுறை அப்படி போய் வந்துள்ளோம். வருகிறோம். சரிதானே? ஆனால், கோவிலுக்கு சென்று வருவதால் பலன் எதுவும் கிடைத்தாற்போல தெரியவில்லையே.. என்று சில சமயம் தோன்றுகிறது அல்லவா? அது ஏன்? கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன்

Read More

வள்ளலாரின் சத்திய பூமியில் சில மணித்துளிகள் – வடலூர் தைப்பூசம் SPL

சென்ற நவம்பர் இறுதியில், நம் பாரதி விழாவிற்காக சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைக்கும்பொருட்டு,  நாம் வடலூர் சென்றிருந்தது நினைவிருக்கலாம். வடலூர் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்ற அந்த நெகிழவைக்கும் சந்திப்பு பற்றிய அனுபவத்தை தனி பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறோம். மேட்டுக்குப்பத்தில் அவரை சந்தித்துவிட்டு திரும்பும்போது வழியில் அப்படியே வள்ளலார் நிறுவிய சத்திய ஞான திருச்சபை சென்றிருந்தோம். நம்முடன் நண்பரும் வாசகருமான சௌந்தரவேல் வந்திருந்தார். உள்ளே நுழையும்போதே மேலே "புலை கொலைத் தவித்தோர் மட்டுமே உள்ளே புகுதல்

Read More

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியின் இன்றைய நிலை… உழவர் திருநாள் SPL!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (குறள் 1031) உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் தான் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. "அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும் பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும் மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும் உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே" என்று வேள்வி முதல் கல்வி வரை, இயற்கை சிறப்பும், அனைத்தும் உழவெனும் உழைப்பின் சிறப்பாலே

Read More

தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !

வாழ்வில் பல்வேறு சோதனைகளை வென்று இறுதியில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள நிஜ ஹீரோக்களை தேடி நாம் புறப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. சாதனையாளர்களை தேடி புறப்பட்டுள்ள நமது பயணத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை சந்தித்துவிட்டோம். அடுத்த 5 வருடத்திற்குள் 1000 சாதனையாளர்களை சந்திக்க இலக்கு நிர்ணயித்து பல்வேறு துறைகளில் சோதனைகளை வென்று சாதித்து கொண்டிருப்பவர்களை சந்தித்து வருகிறோம். இதன் நோக்கம் என்னவெனில், வாழ்வில் வெற்றி பெற, சோதனைகளை சாதனைகளாக்க அவர்கள் கையாண்ட வழிமுறைகள்,

Read More

‘சுந்தரகாண்டம்’ நூல் தொகுப்பு கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு….

சுந்தரகாண்டம் நூல் கேட்டிருந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பியாகிவிட்டது. இன்று அல்லது அடுத்த வேலை நாள் அவர்களுக்கு கிடைக்கக்கூடும். நாம் சுந்தரகாண்டம் அனுப்பி அதை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்துவருபவர்கள் பலரது வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அது பற்றி நாம் ஓரிரு பதிவுகள் கூட அளித்தது நினைவிருக்கலாம். வாசகர்களுக்கு 'சுந்தரகாண்டம்' நூலை அனுப்புவதை ஒரு தொண்டாகவே செய்துவருகிறோம். அவரவர் சௌகரியப்படி படிக்க மூன்று நூல்கள் (வால்மீகி, கம்பராமாயணம், மற்றும் பாக்கெட் சைஸ்) ஆகிய மூன்று வடிவில்

Read More

யார் உங்கள் தலைவர்?

யாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? அவரது பண்புகள் என்ன? அவர் உங்களை சரியாக வழி நடத்துகிறாரா? உங்கள் குழப்பங்களை தீர்த்துவைக்கிறாரா? சுயநலமற்று இருக்கிறாரா? காட்சிக்கு எளியரா? எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எல்லோரும் தலைவனாகிவிடமுடியாது. தலைவனாக திகழ்பவனுக்கு பிறரை வழி நடத்தி செல்லும் திறமைகள்  இருக்கவேண்டும். நல்ல பண்புகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை பின்பற்றி செல்பவர்களும் இந்த உலகும் நன்மை அடையும். தீய பண்புகள் உடைய தலைவர்கள் திறமை உடையவர்களாக இருப்பினும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால்

Read More

தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!

ஐந்தாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து படிக்க குமாரசாமிக்கு வழியில்லை. குடும்பத்தின் வறுமை நிலை தான் அதற்கு காரணம். `அதை அவரும் அறிவார். கல்வி கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. அந்த குறையை போக்குவதற்கு அவர் அவ்வப்போது நூல்களை படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவ்வாறு நூல்களை படிக்க படிக்க அவருக்கு அறிவு வளர்ந்தது. பண்பு மிளிர்ந்தது. இயற்கையாக அமைந்திருந்த பண்போடு நூலறிவும் சேர்ந்ததால் அந்த பண்பு மெருகு பெற்று

Read More

நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் பரமபத வாசல் திறப்பு – ஒரு நேரடி கவரேஜ்!

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில், மற்றும் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என்று வழங்கப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதி்காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், நாம் நந்தம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் கோதண்டராமர் திருக்கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் பங்குகொண்டு சொர்க்கவாசல் புகும் பாக்கியம் பெற்றோம். நந்தம்பாக்கம் கோவில் அடிப்படையில்

Read More

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

இறைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலயத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பை கூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம். வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம்

Read More

அரங்கனின் அருள்மழை பொழியும் வைகுண்ட ஏகாதசி – A COMPLETE PACKAGE

மார்கழி மாதம் வந்த  உடனே   நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது  வைகுண்ட ஏகாதசி. ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். வரும் 11/01/2014 சனிக்கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி. ========================================================= வைகுண்ட ஏகாதசியின் சிறப்பை ஒரு பதிவிற்குள் அடக்குவது என்பது கங்கையை கைக்குள் அடக்குவது போன்றது. இருப்பினும், பல

Read More

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

இதுவரை நாம் எத்தனையோ தன்னம்பிக்கை அளிக்கும் குட்டிக் கதைகளை படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அவற்றுள் ஒரு மிகச் சிறந்த கதை என்று கூறலாம். இந்தக் கதையை நீங்கள் முகநூலிலோ அல்லது வேறு எங்கோ படித்திருக்கலாம். படித்தவுடன் மறந்தும் இருக்கலாம். இந்த கதை மறக்கக்கூடிய கதை அல்ல. அடிக்கடி நாம் நமக்குள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு கதை. (முகநூலில் நல்லது நான்கை ஃபாலோ செய்தால், அல்லது நானூறு அல்லவா பலர்

Read More

நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!

காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த நாள் இன்று. ஆம்... ஜனவர் 8, 1994 ஆம் ஆண்டு தான் அவர் தனது ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சும சரீரம் புகுந்தார். பெரியவர் தான் ஜீவனுடன் இருந்தபோது நமது நல்வாழ்வுக்கு நாம் பின்பற்றக் கூடிய எளிய விஷயங்களை பத்து கட்டளைகளாக கூறியிருந்தார். இவற்றைப் பின்பற்ற பணம் காசே தேவையில்லை. மனமிருந்தால் போதும். பெரியவரின் அந்து பத்து கட்டளைகளை வரிசையாகப் பார்ப்போம். 1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை

Read More

ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

நண்பர்களே, நம் இனிய நண்பரும் பிரபல ஆன்மீக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் மஹா பெரியவா அவர்களின் சீரிய தொண்டர். குருவின் பெருமையை பரப்பவுதே தமது லட்சியமாக கருதி செயல்பட்டு வருகிறார். இதுவரை சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் மஹா பெரியவா அவர்களின் மகிமை குறித்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போர்களுக்கு குருவின் மகிமையை கேட்பதற்கு இனியதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விரைவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய அரபு

Read More