Home > உழவாரப்பணிக்கு வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…!

உழவாரப்பணிக்கு வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…!

1) தங்கள் வருகையை நமக்கு தவறாமல் (மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ். மூலமாக) உறுதிப்படுத்தவும். உணவு, வாகன வசதிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும்.

2) தவிர்க்க இயலாத காரணத்தினால் வர இயலாத பெண் வாசகர்கள் சனிக்கிழமை மாலைக்குள் நமக்கு தெரியப்படுத்தவும்.

3) உழவாரப்பணிக்கு முந்தைய தினம் மிதமான எளிய உணவுகளை உட்கொண்டு சீக்கிரம் உறங்கச் செல்வது மிக மிக அவசியம். சனிக்கிழமை அவசியம் சீக்கிரம் உறங்கச் செல்லவேண்டும். அலாரம் வைப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி எழுப்பச் சொல்வது என அனைத்தையும் கையாளவும்.

4) ஞாயிற்றுக்கிழமை பொதுவாக தாமதமாக எழும் வழக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பதால் சனிக்கிழமை காலையே சீக்கிரம் தூக்கம் விழித்து உடலையும் மனதையும் உழவாரப்பணிக்கு தயார்படுத்துவது மிகவும் முக்கியம்.

5) சோம்பல் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவோ ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை தவிர்க்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் நமக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்கள் பல.

6) ஒவ்வொரு உழவாரப்பணிக்கும் கூடுமானவரை தவறாமல் வர முயற்சிக்கவும். நியாயமான, தவிர்க்க இயலாத காரணங்களினால் ஒன்றிரண்டு பணிக்கு வர முடியாது போனால் அது குறித்து வருந்தவேண்டாம்.

7) இது தொண்டு மட்டுமல்ல அதற்கும் மேலான சிவபுண்ணியம் என்பதை மறக்கவேண்டாம். ஈசனுக்காக நீங்கள் தியாகம் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்கு அளவற்ற நற்பலன்களை தரும் என்பதை மறக்கவேண்டாம்.

8) பணிக்கு வரும் ஆண்கள் கையில் ஒரு வேஷ்டி, துண்டு SPARE எடுத்து வரவும்.

9) பணியின் போது சம்பந்தப்பட்ட ஆலயத்தையோ, நிர்வாகத்தினரையோ குறை கூறுவது, புறம்பேசுவது இவற்றை தவிர்க்கவும்.

10) பணியின்போது உங்கள் கவனம் பணியின் மீது மட்டும் இருக்கட்டும்.

11) ஒரு ஆலயத்தை தேர்ந்தெடுத்து உழவாரப்பணி செய்வதன் பின்னணியில் எத்தனை விஷயங்கள் உள்ளன என்று பலருக்கு தெரியாது.

12) உங்கள் தேவைகளை மற்றும் இன்னபிற அவசியங்களை ஒருங்கிணைப்பாளரிடம் கூற தயங்க வேண்டாம்.

13) உழவாரப்பணிக்கு செல்லும் வாகனத்தில் ஏற, குறித்த நேரத்தில் வருவது மிகவும் முக்கியம். தாமதமான புறப்பாடுக்கு நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.

14) நமது தளத்தின் செயல்பாட்டுக்கோ அல்லது சேவைக்கோ உதவுபவர்கள் எந்த வித ஐயத்தையும், நெருடலையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு உதவிகளை செய்யவேண்டாம். இத்தகு உதவிகள் நமக்கு ஏற்புடையதல்ல. நாம் கடந்து வந்த பாதையும், இதுவரை ஆற்றிய பணிகளும், நமது உழைப்பும், பதிவுகளுமே நமக்கு உரைகல். மனமுவந்து சந்தோஷமாக நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் கூட மதிப்பு மிக்கது தான். நன்றி.

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

Rightmantra Sundar,
Founder & Editor, www.rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com |Facebook : www.facebook.com/rightmantra

* தளத்திற்கும் தளத்தின் பணிகளுக்கும் பொருளுதவி நல்கிட விரும்பினால் கீழ்கண்ட எங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் நிதி உதவியை செலுத்தலாம்…

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.