Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

print

ந்த பள்ளியில் மாணவர்கள் நன்கு கல்வி கற்றாலும் ஒருவர் மீது மற்றவர் துவேஷத்துடனும் பொறாமையுடனும் இருப்பதை ஆசிரியர் கவனிக்கிறார். பிஞ்சு உள்ளங்களில் உள்ள இந்த நஞ்சை ஆரம்பத்திலேயே போக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

Arrowsஅந்தப் பள்ளியில் ஒவ்வொரு வெள்ளியும் நீதி போதனை வகுப்புகள் நடைபெறுவதுண்டு. ஒரு வெள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது, வகுப்பில் பெஞ்சுக்கு முன்னே ஒரு பெரிய மரப்பலகையில் வெள்ளை காகிதம் ஒட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறார்கள். அருகே ஒரு டேபிளில் கூர்மையான கையெறி அம்புகள், கத்திகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆசிரியர் எதற்க்காக அதை வைத்திருக்கிறார்… இன்று என்ன சொல்லித் தரப்போகிறார் என்று தெரிந்துகொள்ள மாணவர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

வகுப்பும் துவங்கியது. மாணவர்கள் மத்தியில் பேசிய ஆசிரியர், “மாணவர்களே…. உங்கள் மிக மிக மோசமான எதிரி மற்றும் நீங்கள் அதிகம் வெறுக்கும் நபர்கள் மீது உங்கள் உணர்சிகளை காட்ட உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பத்தை இன்று தரப்போகிறேன். உங்கள் மிக மோசமான எதிரியை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு நம்பரையோ அல்லது குறியீட்டையோ, உருவத்தையோ அந்த தாளில் வரைந்துவிட்டு வாருங்கள். அது உங்களுக்கு புரிந்தால் போதும். மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதில்லை!” என்கிறார்.

உடனே ஆவலுடன் அந்த மரப்பலகை நோக்கி செல்லும் மாணவர்கள், தாங்கள் வெறுக்கும் நபர்களை தங்கள் எதிரிகளை குறிக்கும் விதம் ஆளாளுக்கு ஒரு உருவத்தை வரைந்துவிட்டு வருகின்றனர்.

Lord_Sivaஎல்லாரும் வரைந்துமுடித்தவுடன் மாணவர்களிடம் மீண்டும் ஆசிரியர், “இப்போது உங்கள் எதிரியின் மீது அதாவது அந்த எண்ணின் மீது குறியீட்டின் மீது உங்கள் கோபத்தை காட்டுங்கள்!” என்கிறார்.

உடனே மாணவர்கள் டேபிளில் வைக்கப்பட்டிருந்த கையெறி அம்புகளை எடுத்து, கெட்ட வார்த்தைககளை மனதில் நினைத்துக்கொண்டு, திட்டிக்கொண்டு தங்கள் எதிரிகளின் மீது அவற்றை வீசுகின்றனர். தங்கள் உச்சகட்ட பலத்தை பிரயோகித்து மாணவர்கள்  வீசியதில், அம்புகள் அந்த மரப்பலகையில் சொருகிக்கொண்டு அப்படியே நின்றது.

தங்கள் எதிரிகளை குத்தி பழிதீர்த்துவிட்ட சந்தோஷத்தில் மாணவர்கள் சற்று நேரத்தில் சமாதானமானார்கள்.

அடுத்த நொடி ஆசிரியர் அந்த பலகை அருகே சென்று அதில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளை அகற்றுகிறார். என்ன ஆச்சரியம், அந்த தாளின் பின்னே சிவபெருமானின் ஓவியம் இடம்பெற்றிருக்கிறது. மாணவர்கள் வீசிய கத்தி பதம் பார்த்திருந்தபடியால் அந்த ஓவியம் பல இடங்களில் சேதமடைந்திருந்தது. குறிப்பாக பகவானின் கண்களும் கன்னங்களும் முற்றிலும் சேதமடைந்திருந்தது.

உங்கள் பகைவர்களை எண்ணி நீங்கள் வீசிய கத்தி யாரை சென்று தாக்கியிருக்கிறது பார்த்தீர்களா?

“நாம் சக மனிதர்களுக்கு தீங்கு செய்தாலோ அல்லது தீயதை எண்ணினாலோ அதை ஆண்டவனுக்கே செய்வதாகத் தான் அர்த்தம். நல்லது செய்தாலும் அப்படியே. எனவே எப்போதும் சகமனிதர்களிடம் அன்புடனும் பண்புடனும் நடந்து கொள்ளவேண்டும். எவர் மீதும் துவேஷம் பாராட்டக்கூடாது!” இவ்வாறு ஆசிரியர் கூற, மாணவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கித் தலை குனிந்தனர். “இனி எவர் மீதும் துவேஷம் பாராட்டமாட்டோம். இயன்றவரை மற்றவர்களுக்கு நல்லதே செய்வோம்!!” என்று உறுதி எடுத்திக்கொண்டனர்.

இந்த கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட பொருந்தும்.

பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.

பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.

– மகாகவி பாரதியார்

===========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2012/10/Teachers.jpgஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்கள் : இராமம்பாளையம் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பிராங்க்ளின்.

மாணவர்கள் கல்வி கற்பதை கற்கண்டாய் மாற்றிய சாதனையாளர்கள் இவர்கள்.

கோவை மாவட்டத்தில் இராமம்பாளையம் என்னும் கிராமதை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று, இவர்களின் முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவிற்கு – ஏன் அதை விட பல படிகள் அதிகமாக – நவீன வசதிகளுடன் ஒரு மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

http://rightmantra.com/wp-content/uploads/2012/11/Ramampalayam-Model-School-3.jpg

குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தைகள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத்தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப்பறையும் உள்ளன. குழந்தைகள் தங்கள் புத்தகங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தைகளுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்குகளின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப்பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏதுவான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

கோடை காலத்தில் பயன்படுத்த குளிர்சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட்டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமையல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள்.

http://rightmantra.com/wp-content/uploads/2012/10/Model-School4.jpg
இது ஒரு அரசு ஆரம்பப் பள்ளி – அதுவும் குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி என்றால் நம்பமுடிகிறதா?

திருமதி.சரஸ்வதி மதுரம் திரு.பிராங்க்ளின் ஆகியோரின் அழைப்பை ஏற்று சென்ற வருடம் இந்த பள்ளிக்கு நாம் சென்றிருந்தோம். அந்த கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதிகள் கூட இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் இப்படி ஒரு பள்ளி உயர்ந்து நிற்பது உண்மையில் மிகப் பெரிய சாதனை தான்.

சில மாதங்களுக்கு முன்பு பாலம் திரு.கலியாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது, இந்த ஆசிரியர்களை பற்றி அவரிடம் எடுத்துக்கூறி இவர்களை ஊக்கப்படுத்துவதன் அவசியத்தை அவரிடம் எடுத்துரைத்தோம். இதையடுத்து கலியாணசுந்தரம் ஐயா, விழாவில் இவர்களுக்கு சான்றிதழ் அளித்து கையில் ரொக்கப்பரிசும் அளித்தார்கள். அதையும் இவர்கள் பள்ளிக்கூட கட்டிட நிதிக்கு தந்து விட்டார்கள்.

பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களுடன் திருமதி.சரஸ்வதி மற்றும் அவர் கணவர்
பாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களுடன் திருமதி.சரஸ்வதி மற்றும் அவர் கணவர்

சென்ற ஆண்டு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த நம் நண்பரும் வாசகருமான திரு.சக்திவேல் இந்த விளக்குகளை வாங்கி அம்மக்களிடம் சேர்ப்பதில் பெரும்பங்காற்றினார். (பார்க்க http://rightmantra.com/?p=1216 )

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று நாம் கேட்டுக்கொண்ட போது மிக்க மகிழ்ச்சியுடன் சரஸ்வதி அவர்கள் ஒப்புக்கொண்டார். மேலும் பள்ளிக்குழந்தைகளையும் பிரார்த்தனையில் இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.

பள்ளி மாணவர்கள் மனதில் நல்ல விஷயம் எளிமையாக பதியவேண்டும் என்று இந்த வாரத்திற்கான பிரார்த்தனை கதையை சற்று மெனெக்கெட்டு தயார் செய்தோம்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===========================================================
மனைவி நலம் பெறவேண்டும் !

ஐயா,

என் மனைவி பத்மாவிற்கு தொண்டையில் புற்று நோய்  உள்ளது. இதனால் நானும்,  என் மனைவியும், குடுமபத்தினரும் மிகவும் மனவேதனையுடன் இருக்கின்றோம்.

எனவே அவள் குணமடைய  நீங்கள் அனைவரும் மனதார பிரார்த்தனை செய்து வெகு  சீக்கிரம் வீடு திரும்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.

என் மனைவிக்காக பிரார்த்திக்கும் எல்லா நல்ல உள்ளங்களும் மஹா பெரியவர் அருளால் வாழ்க வளமுடன்!!!

– ஜெயராமன்
===========================================================

கொஞ்சி மகிழ குழந்தை வேண்டும் !

வணக்கம் சுந்தர் மற்றும் ரைட் மந்த்ரா நண்பர்களே….

என் பெயர் சசிக்குமார். என் மனைவி பெயர் சுமதி. எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. பல பரிகாரங்களை முடிந்த வரை செய்துவருகிறோம்.

புத்திரபாக்கியம் இல்லாததால் மனதளவில் நாங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம். எங்கள் குறை தீர்ந்து, எங்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்க அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி…
சசிக்குமார்
புதூர்,
கோவை
===========================================================

இந்த வார பொது பிரார்த்தனை

தமிழகத்தின் மின்சார பிரச்னை தீரவேண்டும்

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மின்சாரத்தையே பிரதானமாக நம்பியிருக்கும் விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் எள்ளளவும் பாதிக்கப்படக்கூடாது.

Tamil-Daily-News_75275385380

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு பிரச்னை தீர்ந்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவேண்டும். உற்பத்தி பெருகவேண்டும். விவசாயம் செழிக்கவேண்டும். தொழிலாளர் வாழ்வு சிறக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

===========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgவாசகர் ஜெயராமன் அவர்களின் மனைவி திருமதி.பத்மாவிற்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் முழுவதும் நீங்கி, அவர் இனி ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடன் வாழவும், அதே போல கோவை புதூரை சேர்ந்த வாசகர் சசிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினருக்கு விரைவில் மழலைப் பேறு கிட்டவும், தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு பிரச்னை தீர்ந்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவும், விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் சுபிக்ஷம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : டிசம்பர் 1, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருக்குறள் நெறி பரப்பும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திரு.வள்ளிமுத்து

[END]

15 thoughts on “பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! – Rightmantra Prayer Club

  1. Definitely இந்த கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட பொருந்தும்.

    வாசகர் ஜெயராமன் மற்றும் அவர்களின் மனைவி பத்மாவிற்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் முழுவதும் நீங்கி, அவர் இனி ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடன் வாழவும், அதே போல கோவை புதூரை சேர்ந்த நம் வாசகர் சசிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினருக்கு விரைவில் மழலைப் பேறு கிடைக்கவும், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு பிரச்னை தீர்ந்து மக்கள் சுபிக்ஷமாக வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    நன்றி
    uma

  2. சுந்தர்ஜி

    இந்த வாரம் எனது மிக நெருங்கிய தோழி சுமதியிடம் நம் ரைட் மந்திரா பற்றி சொல்லி பிரார்த்தனை செய்ய சொன்னேன். அவள் அவர் கணவர் திரு.சசிகுமார் அவர்களிடம் சொல்வதாக சொன்னாள். ஆனால் அது இந்த வாரம் வரும் என எதிர்பார்கவே இல்லை. மிக்க மகிழ்ச்சி.
    மேலும் இந்த வாரம் வந்துள்ள அனைத்து பிரார்த்தனைக்கும் திருமதி சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பிராங்க்ளின் அவர்களுடன் நாமும் பிரார்த்திப்போம். நன்றி

  3. தமிழகத்தில் இப்படி ஒரு அரசு பள்ளியை பார்ப்பது ஒரு கனவு போள் உள்ளது சார்..மேலை நாட்டு பள்ளிகள் போல் உள்ளது..இதே போல் அனைத்து அரசு பள்ளிகளும் மாறினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் …தனியார் ஆங்கில பள்ளிகளில் கொள்ளை பணம் கேட்கும் பள்ளிகளுக்கு ஒரு குட்பை சொல்லிவிடலாம் …பெற்றோர்கள் யாரும் தனியாற்பல்லிகலின் வாசலில் நின்று கட்டணத்தை குறைக்க வேண்டும் என கொடி பிடிக்க வேண்டியதில்லை …

    மேலும் இந்த வாரம் பிரார்த்தனை கோரிய ,வாசகர் ஜெயராமன் மற்றும் அவர்களின் மனைவி பத்மாவிற்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் முழுவதும் நீங்கி, அவர் இனி ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடன் வாழவும், அதே போல கோவை புதூரை சேர்ந்த நம் வாசகர் சசிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினருக்கு விரைவில் மழலைப் பேறு கிடைக்கவும், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு பிரச்னை தீர்ந்து மக்கள் சுபிக்ஷமாக வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். –

  4. புற்றுநோய் குணமாக ஸ்ரீவாஞ்சியம் திருகோயில்[ 94424 03926 ]சென்று , அங்கு இரவில் தங்கி ,மறுநாள் குப்தகங்கை யில் நீராடி,வாஞ்சிநாதர்,மங்களாம்பிகை ,எம தர்ம ராஜா ஆகியோருக்கு அபிசேகம் செய்து அர்ச்சனை செய்து வந்து ,நெய் தீபம் 5 வைத்து , அங்கு தரும் விபூதியை 48 நாட்கள் ,ஸ்ரீவாஞ்சியம் பதிகம் பாடி உண்டு வர புற்றுநோய் குணமாகும் ….குணமாகி உள்ளது ….[கண்டிப்பாக இனி அசைவம் சாப்பிடாதீங்க ]..இறைவன் – வாஞ்சிநாதேஸ்வரர்,
    இறைவி – மங்களநாயகி[வாழவந்தநாயகி].
    எமனுக்குத் தனி சந்நிதி உள்ளது. எமன் நான்கு கரங்களுடன் (பாசம், கதை, சூலமேந்தி) இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றான்.எமன், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் தீர, இங்கு இறைவனை வழிபட்டு இறைவனக்கு வாகனமாகும் தன்மையைப் பெற்றான் ஆதலின், எமனுக்குக் காட்சி தரும் ஐதீகவிழா மாசிமகப்பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகிறது. அன்று சுவாமி எமவாகனத்தில் புறப்பாடாகி எம தீர்த்தத்தில் தீர்த்தவாரி கொடுக்கிறார்… .
    ..காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை – 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு. திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம்..இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. கார்த்திகை ஞாயிறு நீராடல் இங்குச் சிறப்பாகும். பின்வரும் தலபுராணப் பாடல் இக்கருத்தையுணர்த்தும் –

    “மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

    பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

    எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

    செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே”. …
    யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்…தீர்க்க முடியாத பயம்?மரண பயம்!ஒருவருக்கு மரண பயம் வந்துவிட்டால், எவராலும் அவரைத் தேற்றவும் முடியாது… தைரியமும் கொடுக்க முடியாது! ‘என்னோட வியாதிக்குத் தீர்வு இல்லை. நான் குணம் ஆகவே மாட்டேன் போலிருக்கு. என்னிக்கு எமன் வந்து, என்னை எடுத்துட்டுப் போகப் போறானோ? என்னை எமன் நெருங்குற மாதிரியே இருக்கு’ என்று படுக்கையில் அடமாகப் படுத்தபடியே புலம்பும் ஆசாமிகளை, நாம் எவ்வளவு தேற்றினாலும் சமாதானம் செய்ய முடியாது.ஆம்! மரண பயம் அவ்வளவு கொடுமையானது. இந்த பயத்துக்கு எங்கே போனாலும், என்ன கயிறு கட்டிக் கொண்டாலும் பயம் போகாது..அனைவரையும் கிடுகிடுக்க வைப்பவன் எமன் .அத்தகைய மரண பயத்தை, எம பயத்தைப் அடியோடு போக்கி ,நோய் போக்க வல்ல திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் … இருந்த இடத்தில் இருந்தபடி ‘ஸ்ரீவாஞ்சியம்’ என்ற பெயரை மூன்று முறை சொன்னாலே போதும், ஸ்ரீவாஞ்சியம் சென்று ஸ்ரீவாஞ்சிநாதரைத் தரிசித்த பலன் முழுமையாகக் கிடைத்துவிடும்!இப்படி நமக்குச் சொல்லி இருப்பவர், ‘நடமாடும் தெய்வம்’ என்று போற்றப்படும் ஸ்ரீகாஞ்சி மகா பெரியவா…இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம், தில (எள்) ஹோமம் ஏதேனும் செய்து நெய்தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும்..கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

    திருச்சிற்றம்பலம்

    வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
    பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
    தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
    என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

    கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
    மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
    மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
    ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

    மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
    நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
    தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
    பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

    சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
    சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
    சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
    ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

    கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
    தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
    செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
    தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

    அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
    இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
    பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
    மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

    விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
    கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
    பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
    தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

    மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
    வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
    வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
    பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

    செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
    கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
    நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
    தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

    பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
    மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
    வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
    தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

    தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
    தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
    நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
    ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

    திருசிடம்பலம்

    1. திரு. விஜய் பெரியசாமி ஐயா அவர்களுக்கு, என் மனைவியின் உடல் நலத்திற்காக மிகுந்த அக்கறையுடன் நீங்கள் அனுப்பிய பதிகங்களுக்கும், கோயில்களுக்கும் மிக்க நன்றி ஐயா. நிச்சயமாக நீங்கள் சொன்ன கோயில்களுக்கு சென்று பரிகாரங்களை செய்து என் மனைவியின் புற்று நோய் குணமாக வேண்டிக் கொள்கிறோம். சீக்கிரம் குணம் பெற்று நல்ல செய்தியுடன் மின்னஞ்சல் அனுப்புவோம்.

    2. மதிப்பிற்குரிய சுந்தர் ஐயா அவர்களுக்கு, எங்களுடைய பிரார்த்தனையை வெளியிட்ட உங்களுக்கு முதற்கண் நன்றி. மேலும் பிரார்த்தனை செய்த அத்தனை வாசக நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி. விரைவில் மஹா பெரியவர் அருளால் என் மனைவி குணமடைந்த செய்தியை தெரிவிக்கிறோம்.

  5. கண் காட்டும் நுதலானும், கனல்
    காட்டும் கையானும்,
    பெண் காட்டும் உருவானும்,
    பிறை காட்டும் சடையானும்
    பண் காட்டும் இசையானும் பயிர்
    காட்டும் புயலானும்
    வெண் காட்டில் உறைவானும், விடை
    காட்டும் கொடியானே

    பேய் அடையா, பிரிவு எய்தும்;
    பிள்ளையினோடு உள்ளம் நினைவு
    ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற
    வேண்டா ஒன்றும்;
    வேயனதோள் உமை பங்கன் வெண்காட்டு
    முக்குள நீர்,
    தோய்வினையார் அவர் தம்மைத்
    தோயாவாம், தீவினையே

    மண்ணொடு நீர், அனல், காலோடு
    ஆகாயம், மதி, இரவி,
    எண்ணில் வரும் இயமானன், இக
    பரமும், எண்திசையும்
    பெண்ணினொடு ஆண் பெருமையோடு
    சிறுமையும், ஆம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபட, வெண்காடு
    இடமா விரும்பினனே

    விடம் உண்டா மிடற்று அண்ணல்
    வெண்காட்டின் தண்புறவில்
    மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக்
    குருகு என்று
    தடம் மண்டு துறைக்கெண்டை,
    தாமரையின் பூமறையக்
    கடல் விண்ட கதிர் முத்தம் நகை
    காட்டும் காட்சியதே

    வேலை மலி தண்கானல் வெண்
    காட்டான் திருவடிக்கீழ்
    மாலை வலி வண்சாந்தால் வழிபடு
    நல் மறையவன்தன்
    மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட
    பினை, நமன் தூதர்,
    ஆலமிட்டற்றான் அடியார் என்று,
    அடர அஞ்சுவரே

    தண்மதியும் வெய்யரவும் தாங்கினான்,
    சடையின் உடன்,
    ஒண்மதிய நுதல் உமை ஓர்
    கூறுஉகந்தான்; உறைகோயில்
    பண்மொழியால் அவன் நாமம் பல
    ஓதப், பசுங்கிள்ளை
    வெண்முகில் சேர் கரும்பெணை மேல்
    வீற்றிருக்கும் வெண்காடே

    சக்கரம் மாற்கு ஈந்தானும்,
    சலந்தரனைப் பிளந்தானும்,
    அக்கு அரைமேல் அசைத்தானும்
    அடைந்து அயிரா வதம்பணிய
    மிக்க அதனுக்கு அருள் சுரக்கும்
    வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம் நன்கு உடையானும்,
    முக்கண்உடை இறையவனே

    பண்மொய்த்த இன்மொழியாள்,
    பயம்எய்த மலைஎடுத்த
    உன்மத்தன் உரம் நெரித்து, அன்று
    அருள்செய்தான் உறைகோயில்,
    கண்மொய்த்த கரு மஞ்ஞை
    நடம்ஆட, கடல் முழுங்க
    விண்மொய்த்த பொழில் வரிவண்டு
    இசைமுரலும் வெண்காடே

    கள்ஆர்செங் கமலத்தான்
    கடல்கிடந்தான், என இவர்கள்
    ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து
    ஆழ்ந்தும், உணர்வு அரியான்;
    வெள்ஆனை தவம் செய்யும் மேதகு வெண்
    காட்டான் என்று
    உள்ஆடி உருகாதார்
    உணர்வு உடைமை, உணரோமே

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு
    மொழிபொருள் என்னும்
    பேதையர்கள் அவர்; பிரிமின்;
    அறிவுடையீர், இதுகேள்மின்;
    வேதியர்கள் விரும்பியசீர்
    வியன் திருவெண்காட்டான் என்று
    ஓதியவர் யாதும் ஒரு தீது இலர்
    என்று உணருமினே

    தண் பொழில் சூழ் சண்பையர் கோன்,
    தமிழ்ஞான சம்பந்தன்,
    விண் பொழி வெள் பிறைச் சென்னி
    விகிர்தன்உறை வெண்காட்டைப்,
    பலர் பொலி செந் தமிழ் மாலை
    பாடியபத்து இவை வல்லார்,
    மண் பொலிய வாழ்ந்தவர், போய்
    வான்பொலியப் புகுவாரே

    திருச்சிற்றம்பலம்

    [48 நாட்கள் காலை ,மாலை வீட்டில் தீபம் வைத்து ,படித்து வரவும்…ஒரு அமவாசைநாளில் திருவெண்காடு திருகோயில்(04364-256 424 )சென்று முக்குளத்தில் நீராடி வழிபடவும் ]…திருவெண்காட்டு முக்குளத்தின் சிறப்புபற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருஞானசம்பந்தர் அவ்வூரில் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். மூங்கில் போன்ற தோள்களையுடைய உமையம்மையை தன் உடலில் ஒரு கூறாகக் கொண்ட வெண்காட்டு ஈசன்கோவில் கொண்டுள்ள திருக்கோவிலின் உள்ளே உள்ள முக்குள நீரில் நீராடி வழிபடுபவர்களை பேய்த்தன்மை நெருங்காது. அவை பீடித்திருந்தாலும் அகலும். குழந்தைப் பேறு வேண்டுவோர் நிச்சயம் அப்பேற்றினைப் பெறுவர்; தீவினை என்பன தீண்டாவாம் என்று கூறியுள்ளார்.

    “பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினொடு உள்ளம் நினைவு
    ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவு வேண்டா ஒன்றும்
    வேய்அனதோள் உமைபங்கண் வெண்காட்டு முக்குளநீர்
    தோய் வினையார் அவர்தம்மைத் தோயாம் தீவினையே”
    என்பது சம்பந்தர் திருவாக்கு.திருவெண்காட்டுத் திருக்கோவில் வளாகத்தினுள் ஒரே பிராகாரத்தில் முக்குளங்கள் அமைந்திருப்பது ஓர் அபூர்வக் காட்சியாகும்.பதின் மூன்றாம் நூற்றாண்டில் சமய சாஸ்திரங்களையெல்லாம் நன்கு அறிஇந்த ஒருவர் வாழ்ந்தார். அவர் பெயர் அருள்நந்தி சிவம். அவரின் வேத ஆகம வித்தகத்தன்மை காரணமாக அவரை சகலாகம பண்டிதர் என அழைப்பர். சகலாகம பண்டிதராகிய இந்த அருள்நந்தி சிவத்திடம் அச்சுதகளப்பாளர் தம்பதிகள் தமக்கு பிள்ளையில்லாத குறைக்கு பரிகாரம் கேட்டு வந்தனர். அவர் தேவார நூலில் ஏடு சார்த்திப் பார்த்தார். ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற சம்பந்தர் பாடிய திருவெண்காட்டு பதிகம் வந்தது. தம்பதிகளை திருவெண்காட்டு தலத்துக்கு போய் வழிபட்டு வருமாறு சொன்னார் . அச்சுதகளப்பாளர் தம்பதிகளும் அவ்வாறே திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி தினமும் திருவெண்காட்டு பெருமானை வழிபட்டு ஓராண்டிலேயே
    ஆண் மகவொன்றை ஈன்றெடுத்தார் .

  6. சசிகுமார் சுமதி அவர்களே அசைவம் சாபிடதீங்க

  7. புற்றுநோய் தீர்க்கும் ” திருந்துதேவன் குடி அருமருந்தம்மை “

    புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்[.0435 – 2000 240 ] சம்பந்தர் இவரை “பிணி நீங்கும் சிவன்’ என்று பதிகம் பாடியுள்ளார்…இத்தலம் நண்டு பூசித்த தலமாதலின் ‘நண்டாங்கோயில்’ என்று வழங்குகிறது. இறைவன் கற்கடேஸ்வரர் (கற்கடகம் – நண்டு) என்று திருநாமங் கொண்டுள்ளார்.கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது[20 ரூபா]…. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    திருச்சிற்றம்பலம்

    மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
    புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
    திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
    அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.

    வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
    ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
    தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
    ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.

    மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
    வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
    தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
    ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.

    செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
    கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
    புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
    அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.

    விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
    மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
    தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
    அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.

    பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
    புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
    திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
    அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.

    கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
    குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
    திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
    அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.

    உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
    விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
    திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
    அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.

    துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
    விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
    திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
    அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.

    செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
    உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
    திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
    அருமருந் தாவன அடிகள்வே டங்களே.

    சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
    மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
    நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
    பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே

    [48 நாட்கள் காலை ,மாலை இந்த பதிகத்தை படித்து இங்கு தரப்படும் எண்ணெய் வாங்கி உண்டு வர புற்று நோய் குணமாகும் ]..கும்பகோணத்திற்கும் சூரியனார் கோவிலுக்கும் இடையில் உள்ள திருவியலூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 Km தொலைவில் திருந்துதேவன்குடி உள்ளது… .

    1. நன்றி ஐயா!!

      அது போல, சிறுநீரக (டயாலிசிஸ்) செய்து கொண்டு அவதிப்படுபவர்களுக்கும் உண்டான திருத்தலம், வேண்டுதல் மற்றும் பாடல்களையும், வழி முறைகளையும் சொன்னால் மிகுந்த நன்றியுடநிருக்கும் என வேண்டுகிறேன்.

      1. இப்பிரச்னை பலருக்கு இருப்பதால் இது குறித்து ஒரு விரிவான பதிவு விரைவில் வெளியிடப்படும்.

        – சுந்தர்

      2. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்[சமயபுரம் அருகில் உளது ] பாடாலூர் என்ற ஊரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர் அகிலாண்டேசுவரி சமேத சுத்தரத்னேஸ்வரர் திருகோயில் …. இங்கு பஞ்சரத்னக் கற்களால் அமைந்த நடராஜர் விசேசம்….இவரை வழிபட சிறுநீரகக் கல் போன்ற சிறுநீரக உபாதைகளைக் களையும் ….சிறுநீரகச் செயலிழப்பு (Renal failure or kidney failure),சிறுநீரக கோளாறு,சிறுநீரக தொற்று,சிறுநீரக கல் முதலிய நோய்கள் குணமாகும்…..[வெட்டிவேர் வாங்கி வந்து நடராஜற்கு சாற்டி வழிபட வேண்டும்……9786905159,9788062416]

  8. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் இராமம்பாளையம் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பிராங்க்ளின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

    சகோதரர் ஜெயராமன் அவர்களின் மனைவி பத்மாவிற்கு ஏற்பட்டுள்ள தொண்டைப் புற்றுநோய் முழுவதும் நீங்கி, ஆரோக்கியத்துடனும் வாழவும், மற்றும் கோவை புதூரை சேர்ந்த சகோதரர் சசிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டு பிரச்னை தீர்ந்து மக்கள் சந்தோசமாக வாழவும் மனமுருகி பிரார்தனை செய்வோம்.

    நன்றி.

  9. அன்பு சுந்தர் அவர்களுக்கு,

    இந்த வாரமும் வழக்கம்போல் எங்கள் சப்தரிஷி ஜோதிட வகுப்பு மாணவர்கள் திருமதி பத்மாவிற்கு புற்றுநோய் குணமாகவும், திரு சசிகுமார் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளவும், தமிழ்நாட்டு மின்சார பிரச்சினை தீரவும் பிரார்த்தனை செய்வார்கள்.

    இந்த சந்தர்ப்பத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    நாராயணன்

    1. மிக்க நன்றி சார்.

      எங்கள் பிரார்த்தனை கிளப் இதன் மூலம் மேலும் மகத்துவம் பெற்றுவருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

      – சுந்தர்

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *