Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

print
ருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. “நான் பிறந்த நாள் கொண்டாடுறதில்லை சார்… வயசு கூடிகிட்டு போறதை கொண்டாடனுமா? வேற வேலை இல்லை. பிறந்த நாளை கொண்டாடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை…” இப்படிப்பட்ட வாதங்களை அடுக்குகின்றனர் ஒரு சாரார்.

மற்றொரு சாரார்… மேற்கத்திய பாணியில் மெழுகுவர்த்தி ஏற்றி அதை வாயால் ஊதி அணைத்து, கேக் வெட்டி, கிடா வெட்டி, மது விருந்தளித்து இன்னும் பலப் பல வகைகளில் கொண்டாடுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். அன்று உண்மையில் அவர்களது பிறந்த நாள் இல்லை என்பது தான் அது.

நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும். சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).

ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின் நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த நாளே துல்லியமாக இருக்கும். ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும் அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக இருக்காது. சற்று முன்னர் பின்னர் இருக்கும். (அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’ என்று கூறுகிறார்கள்.) ஆங்கில தேதிகள் அந்த துல்லியத்தை தருவதில்லை. ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும் வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சூட்சும அறிவைக் கொண்டு வேதங்களை அடிப்படையாக வைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர கணக்குகள் மேலே கூறிய பூமியின் சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில் எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும் என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர். எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.

“இத்தனை வருஷமா என் பிறந்த நாளை ஆங்கில தேதியை வைத்தே கொண்டாடுகிறேன். என் நண்பர்களுக்கும் அது தான் தெரியும். இப்போது திடீரென வழக்கத்தை மாற்றிகொள்வது எப்படி?” என்று கேட்கலாம்.

நீங்கள் வழக்கமாக ஊரறிய ஆங்கில தேதிப்படி கொண்டாடும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள். அன்னைக்கு கொஞ்ச சந்தோஷமா இருப்பீங்க. அதே சமயம் உங்கள் நட்சதிரத்திற்குரிய நாளன்று நீங்கள் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வது, நாலு நல்ல விஷயங்களில் ஈடுபடுவது என்று கொண்டாடுங்கள்.

அது ஊருக்கு. இது ஆன்மாவுக்கு.

உங்கள் பிறந்த நாளன்றும், உங்களின் குழந்தைகளின் பிறந்த நாளன்றும் நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதை மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். ஆனால் அதற்கு முன், உங்கள் பிறந்தநாளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி’ இதழில் படித்த விஷயம் ஒன்றை கீழே பகிர்ந்துகொள்கிறேன். பிறந்தநாளன்று செய்யவேண்டியது என்ன என்பது பற்றிய பதிவை அடுத்து பார்க்கலாம்.

================================================================

இறைவன் நம்முள் நுழையும் நாள்

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள் இறைவன் நம்முள் நுழைகிறான். பிறந்த நாள், அந்த நாட்களுள் ஒன்றாகும். அன்று நம் ஆன்மா இறைவனை சந்திக்கிறது. நாம் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறோம். அப்போது சிறிதளவாவது உணர்வுடன் இருந்தால் நாம், நம்முள் இறைவனின் சாநித்தியத்தை உணரலாம். அந்த நாளில் நாம், சிறிது முயற்சி செய்தாலும் பல பிறவிகளின் பணியை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். இதனால் தான் நான் பிறந்த நாளுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கிறேன்.

Meditating Manஇந்த ஒரே நாளில், ஒருவன் ஈடு இணையற்ற ஆன்ம பலனை பெறக்கூடும். இதற்காக, இவாறு இறைவன் முன்னிலையில் நீங்கள் வருவதற்காக, உங்கள் உணர்வை உயர்நிலையை நோக்கி சற்றேனும் திறக்க நாள் முயலுகிறேன். என் குழந்தையே! இது மிக மிக முக்கியமான நாளாகும். ஏனென்றால் இந்த நாளில் ஒருவன் திட்டவட்டமாக முடிவெடுத்து, இறைவனுடன் ஒன்றுபடலாம். ஏனினில், நித்திய ஒளியாகிய இறைவனின் ஒரு பாகமாகிய நம் ஆன்மா, அதன் மூலமாகிய இறைவனுடன் ஒன்றித்து இணையும்படி, இந்நாளில் இறைவன் நம்மை நம்மால் இயன்ற உயர்நிலைக்கு உயர்த்துகிறார்.

இந்நாள் உண்மையிலேயே வாழ்வில் நல்ல வாய்ப்பை கொடுக்கும் நாளாகும். மேலிருந்து கிடைப்பதை எல்லாம் சரியான முறையில் ஏற்று கிரகிக்கும் அளவிற்கு, ஒருவன் தன பிறந்தநாளன்று திறவு நிலையில் இருக்கிறான். அன்று தான், பல செயல்களை சாதிக்க முடியும். எனவே அது ஒரு முக்கிய நாளாகும்.

இறைவனே தனது வாயில்களை நமக்காக அகல திறந்துவிடும் ஒரு நாளாகும் இது. நம் விழைவின் கனலை மீண்டும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி, இறைவன் நமக்கு அழைப்பு விடுப்பதை போன்றது இந்நாள். இது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு நன்னாள். இவற்றையெல்லாம் நாம் நமது சொந்த முயற்சியால் அடையலாம். ஆனால் அதற்கு நெடுங்கலாம் ஆகும். அது மிக கடினமாகும். எளிதல்ல. ஆனால் இதுவோ நம் வாழ்வில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாகும். இது இறையருளின் நாளாகும்.

ஸ்ரீ அன்னை இது பற்றி கூறியது:

வருடத்தில் இந்த குறிப்பிட்ட நாளில் நமக்கு தெரியாமலே நிச்சயமாக நிகழும் ஒரு சூட்சும நிகழ்ச்சியாகும் இது. அன்று ஆன்மா உடலைவிட்டு வெளியேறி, மேன்மேலும் உயர்ந்து பயணம் செய்து, தன மூலமாகிய இறைவனை அடைகிறது. அங்கு பரம்பொருளிடம் சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றை பெற்று, அடுத்த ஒரு வருடத்தை கழிப்பதற்காக இவ்வாறு மீண்டும் புத்துயிர் பெற்று, கீழிறங்கி வருகிறது. இவ்வாறே ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும்…

================================================================

“அடடா… நம் பிறந்தநாளுக்கு இத்தனை சிறப்பு இருக்கா? அது தெரியாம இத்தனை இருந்து விட்டோமே.. இனி வரும் பிறந்த நாளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனா அன்னைக்கு என்ன செய்றது ஒன்னும் புரியலியே?” என்று தானே தோன்றுகிறது. கவலைவேண்டாம் உங்கள் பிறந்த நாளன்று நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன என்பது பற்றி ஒரு விரிவான பதிவு வருகிறது. அதில் பார்ப்போம்.

[END]

20 thoughts on “உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

  1. happy morning to ரைட் manthra readers

    சுந்தர்ஜி very good article. Definitely I will follow the same as per your article

    Thanks and regards
    உமா

  2. சிறு திருத்தம் சுந்தர்ஜி – கடைசி பாராவில் – பரம்பொருளிடம் சக்தி, ஒழி, என்பது பரம்பொருளிடம் சக்தி, ஒளி என இருக்கவேண்டும் என தாழ்மையுடன் கருதுகிறேன் .
    நன்றி .

  3. ” நீங்கள் வழக்கமாக ஊரறிய ஆங்கில தேதிப்படி கொண்டாடும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள். அன்னைக்கு கொஞ்ச சந்தோஷமா இருப்பீங்க. அதே சமயம் உங்கள் நட்சதிரத்திற்குரிய நாளன்று நீங்கள் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வது, நாலு நல்ல விஷயங்களில் ஈடுபடுவது என்று கொண்டாடுங்கள்.

    அது ஊருக்கு. இது ஆன்மாவுக்கு.” — கிரேட்.

  4. சுந்தர் சார்

    கிட்ட தட்ட 10 வருடங்களா என் நட்சத்திரம் அன்று பிறந்த நாள் கொண்டிட்டு இருகேன் ஆனால் சரியான விளக்கம் இன்று தான் கிடைத்து இருகிறது..

    அடுத்த பதிவு ஆவலுடன் இருகேன் சார்…

    நன்றி

  5. அருமையான பதிவு சுந்தர் ….

    ஒரு விஷயம் – நீங்கள் குறிப்பிட்ட ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தான் நான் பிறந்தேன் … நீங்கள் அதை உதாரணமாக எடுத்து கொண்டதுக்கு நன்றி 🙂

  6. சுந்தர்ஜி
    இது ஒரு வித்தியாசமான பதிவு. பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும் அதை நம் நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடி பரம்பொருளிடம் சக்தி, ஒளி, ஆனந்தம் ஆகியவற்றை பெற்று, அடுத்த ஒரு வருடத்தை கழிப்பதற்காக இவ்வாறு மீண்டும் புத்துயிர் பெறுவோம்.

  7. மிக விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி சுந்தர் சார்!

  8. சுந்தர் சார்,

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் rightmantra வில் முதல் பதிவை படித்தேன். மிக சிறந்த பதிவு கேள்வி படாத நல்ல செய்தி தந்துள்ளீர்கள். இதை பற்றி உங்களின் விரிவான பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    நன்றியுடன் அருண்

  9. ஒரே மாதத்தில் இரு முறை நட்சத்திரம் வந்தால் ( அதாவது மாதத்தின் முதலிலும், கடைசியிலும் ) எதை கணக்கு எடுத்து கொள்ளுவது? ( சில தமிழ் மாதத்தில் ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகின்றது. ) நன்றி. வள்ளி

    1. இரண்டாம் முறை வரும் நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
      – சுந்தர்

      1. சுந்தர் , இது கூட தவறு என்பது என் அபிப்ராயம். சரியாக சொல்லவேண்டும் எனில், நமது ஜனன காலத்தில் சந்திரன் வளர் பிறையா அல்லது தேய் பிறையா என்று பார்த்து , அந்த தமிழ் மாதத்தின் நட்சத்திர தினத்தை – பிறந்த தினமாக கொள்ள வேண்டும்.
        அந்த வகையில் வருடத்துக்கு ஒருமுறை தான் , அந்த அபூர்வ தினம் வரும்.
        அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் !
        நமது பிறந்த நாழிகை , வரும் நேரத்தில் வரும் அந்த ஆத்மார்த்தமான உணர்வு இருக்கிறதே, அது ஸ்ரீ அன்னை கூறி இருக்கும் கருத்துக்கு கொஞ்சமும் குறைவில்லை.. அந்த நேரத்தில் நாம் இறையை தொழும்போது , கிடைக்கும் சக்தி அபரிமிதமானது…….
        வாழ்த்துக்கள்…. தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை!

  10. சார்,..

    இன்னிக்கி (29.10.13)என்னோட பிறந்த நாள்.. அருமையான பதிவு!!.. நன்றி சார்,..

  11. சுந்தர் அவர்களே,
    தினசரி காலெண்டரில் எப்படி பார்ப்பது? பிராக்கெட்டில் PM / AM என்று மட்டும் உள்ளது. அது நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமா அல்லது நட்சத்திரம் முடியும் நேரமா? விளக்கவும். நன்றி.

Leave a Reply to Valli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *