Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 23, 2024
Please specify the group
Home > Featured > கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

print

த்தனையோ கவலைகள் நம்மை வருத்துகின்றன. கவலை என்பது சட்டை போல. இன்று ஒன்றை அணிந்தால் நாளை வேறு ஒன்றை அணியவேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே உண்டு. ரத்தத்தை உறிஞ்சும் அட்டை போல இந்த கவலை எனும் சட்டைகள் நமது நிம்மதியை உறிஞ்சுகின்றன. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஞானிகளைத் தவிர.

நாம் செய்த தவறுகளால் தோன்றும் கவலைகள் ஒருபுறம். நமக்கு சம்பந்தமேயில்லாத விஷயங்கள் மூலம் தோன்றும் கவலைகள் மறுபுறம் இப்படி கவலைக்கு பன்முகத் தன்மைகள் உண்டு. அன்றாட வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் குலைக்கும் இந்த கவலைகளை என்ன செய்யவேண்டும் தெரியுமா?

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

யதான துறவி ஒருவர் ஒருநாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அங்கே தன் உடைகளைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். கரையின் மீது எவருடைய ஆடைகளோ இருப்பதைக் கண்டான் அவன். உடனே ஆற்றுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனது கண்ணுக்கு எதுவும், யாரும் தென்படவில்லை. பக்கவாட்டில் இருந்த கரைகள் அவனை மறைத்திருந்தன.

எட்டிப் பார்த்தான். சற்று தூரத்தில் யாரோ ஒரு முதிர்ந்த துறவி நீராடுவதை கண்டான்.

“அடடா! யாரோ ஒரு துறவி நீராடும் பொருட்டு இதனை இங்கே விட்டுவிட்டுப் போயிருக்கிறார் போல. அவர் வரும் வரை இதனைப் பாதுகாப்போம்!” என்று எண்ணி அங்கேயே ஆடைகளுக்குக் காவலாக நின்றான்.

ஆற்றில் வெகு நேரம் நீராடிய பின்னர் துறவி கரையேறினார். அவர் தன்னுடைய உடைகளை எடுக்க முற்பட்டபோது அங்கே நின்றிருந்தவன் அவரிடம், “பெரியவரே! உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் என்ன ஆவது?” என்றான்.

அவர் சிரித்தார். “ஓஹோ ! நான் உடைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அவன் அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்..!” என்றார் சர்வ சாதாரணமாக.

எல்லா நிகழ்வுகளும் இறைவனின் செயலே என்பதுதான் ஞானம். ஓர் பொருள் கிட்டியது என்றால் இது இறைவன் நமக்கு அளித்தது என்று நினைத்து அதனை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும். அது தொலைந்தாலோ அல்லது மறைந்தாலோ இறைவனால் அது எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று கருதவேண்டும். (Check : ‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?)

அதனால்தான் ஞானியர் எந்தப் பொருள் பத்திரமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்வதும் இல்லை. எந்தப் பொருள் போனாலும் அதற்காக அவர்கள் வருந்தப்படுவதும் இல்லை.

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

இறைவன் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். ஆம் உங்கள் கவலைகளை இறைவனிடம் விட்டு விடுங்கள். நிச்சயமாக அவர் உங்களுக்கு அருள் புரிவார்!!! முயற்சி செயது பாருங்களேன்.

(நண்பர் ஹாலஸ்ய சுந்தரம் ஐயர் அவர்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்து மெருகூட்டி இங்கே தந்திருக்கிறேன்.)

==========================================================

Support for the smooth functioning of this website…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

வண்டியில தான் ஏறிட்டீரே… பாரத்தை இறக்கி வைக்க வேண்டியது தானே?

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” 

நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? 

தவளையை கொன்றது எது?

==========================================================

[END]

One thought on “கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

  1. மீண்டும் விடை கிடைத்தது nandri
    உங்கள் தளத்துக்கு உதவும் பாக்கியத்தை இறைவன் விரைவில் தருவானாக

Leave a Reply to Velu Pathmanathan (sri lanka) Cancel reply

Your email address will not be published. Required fields are marked *