Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

print

“நீ ஒரு சிவத்தொண்டன் நீ போய் காளையை அடக்கலாமா?” கேட்டார் நீலகண்டம்.

“இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு நூறு வராகன் தேவைப்படுகின்றது.. வேறுவழியில்லை” பதிலளித்தான் சிவக்கொழுந்து..

“நீ எங்கே வேலை செய்கின்றாயோ, அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?”

“ஆம் அறிவேன்…”

“தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன் மோதப்போகின்றாயா..?” விடாமல் தொடர்ந்தார் நீலகண்டம்.

“மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்.. அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது.. என் நாவு யாரிடமும் இறைஞ்சாது..” நெஞ்சை நிமிர்த்து கூறினான் சிவக்கொழுந்து.

“பலே…பலே… உனக்கு அந்த காளையை பற்றி தெரியுமல்லவா.. எட்டுப்பட்டிக்கும் தண்ணீர் காட்டிய காளை… எந்த வாலிபகாளையும் அந்த வீரத்திமில் கொண்ட காளையை அடக்கியதில்லை..”

“அதையும் பார்த்துவிடுவோம்.. இருவரில் ஒருவர் யாரென்று”

“நீ புதியவன்..”

“தமிழன் வீரத்தில் பழையவன்.. பார்ப்போம் களத்தில்..”

கிளம்பினார் நீலகண்டம்.

பந்தயக்களம் மன்னர் ராஜராஜன் கம்பீரமாக போட்டியை காண குடும்ப சகிதமாக அமர்ந்திருந்தார்.

முதலில் வருவது கிள்ளிவளவனூர் ஜமீன் காளை.

“துள்ளிவரும் காளையை அள்ளி அடக்குபவருக்கு 20 தங்கவராகன்” அறிவிப்பாளன் அறிவிக்க, கனத்த உடலுடன் மலை போன்ற திமில்களுடன் காளை உள்ளே புகுந்தது. இளைஞர்கள் உள்ளே குதிக்க சுற்றிலும் கரகோஷம் விண்ணை பிளந்தது.

“நீ இறங்கவில்லையா சிவக்கொழுந்து..??” கேட்டார் நீலகண்டம்.

“இல்லை, எமது காளை 100 வராகன்களுடன் வரும்… அதற்காக காத்திருக்கின்றேன்..”

“20 வராகன்கள் உள்ள காளையே யாரும் அடக்க முடியாமல் போக்கு காட்டுகின்றது.. உன்னை பார்த்தால் எனக்கு நகைப்புத்தான் வருகின்றது..” சிரித்தார் நீலகண்டம்.

20 வராகன் காளை யாரும் நெருங்கமுடியாமல் நெருப்புபோல இருந்து போக்குகாட்டியபடி வெற்றியடைய வளவனூர் ஜமீன் மீசையை முறுக்கிவிட்டார்.

அடுத்து வருவது… 30 தங்கவராகன் காளை இம்முறை இளைஞர்கள் ஒன்றுகூட, அத்தனை பேரையும் தொடவிடாமல் தவிடு பொடியாக்கியது காளை.

“சிவக்கொழுந்து இப்பொழுதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை போட்டியிலிருந்து விலகிவிடு..” கூறினார் நீலகண்டம்.

“இல்லை..எம்பெருமான் எனக்கு வெற்றியை நல்குவார்.. பார்த்துவிடலாம்..”

அறிவிப்பாளன் அறிக்கையை தொடர்ந்தான்.

“எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீரவ நல்லூர் ஜமீனின் காளை அடுத்ததாக களமிறங்கும்.”

கைதட்டலும்..விசில் சப்தங்களும் விண்ணைப்பிளந்தன…

மேலும் அறிவிப்பாளன் தொடர்ந்தான்..

“இதுவரை இந்த ஆண்டில் நான்கு காளைகளையும் வென்று ஒருவர் கூட வெற்றி பரிசை தட்டிச்செல்லவில்லை.. இறுதியாக இறங்கும் வீரவநல்லூர் காளையை வென்று சோழமண்ணிற்கு பெருமை சேர்ப்பவருக்கு மன்னர் 1000ம் தங்க வராகன்களுடன், மன்னர் படைப்பிரிவில் உயர் பதவியும் வழங்குவதாக அறிவித்துள்ளார்…” முரசு கனமாக ஒலித்தது..

“எங்கே வீரவநல்லூர் ஜமீன்?” மன்னர் கேட்க, “போட்டிக்கு முந்தைய நாளே வரும் அவர் இன்னும் வரவில்லை மன்னா..” என்று பதில் வந்தது.

தொலைவில் ஒருவர் காளையை பிடித்தபடி வருவது தெரிந்தது.

“யார் அவர் பார்த்து வாருங்கள்..”

பணியாட்கள் வேகமாய் சென்று.. விரைவாக மன்னரிடம் வந்தனர்…

“மன்னா வருவது ஜமீன்தான்..வரும் வழியில் பாலாற்றின் சேற்றில் மற்றவர்கள் மாட்டிக் கொள்ள ஜமீன் மட்டும் காளையை பிடித்தபடி தனித்துவருகின்றார் மன்னா..”

“அப்படியா… விரைவில் அழைத்துவாருங்கள்..”

ஜமீன் அருகில் வர மன்னன் வணங்கி வரவேற்றான்.

வீரவநல்லூர் காளை இப்பொழுது களமிறங்கும், விசில் ஒலி விண்ணைப்பிளக்க… கைதட்டல் ஆராவாரம் காதை பிளந்தது.

களத்தில் கொம்புகளில் கட்டப்பட்ட தங்க சங்கிலி 100 வராகன்களுடன்.. திமில்களை மலைபோல அசைத்துக்கொண்டு தைரியம் இருப்பவன் தொட்டுப்பார் என காளை புழுதி பறக்க நின்றது.

அனைத்து வாலிபர்களும் பின்வாங்க, களத்தில் நெஞ்சை நிமிர்த்தி குதித்தான் சிவக்கொழுந்து மன்னர்..வைத்த கண் வாங்காமல் பார்க்க.. ஜமீன் மீசையை தடவிக்கொண்டே சிரித்தார்.

காளை.. நான் தயார் என்பதை போல.. நிலத்தை காலால் பறித்து..கொம்புகளினால் மண்ணை பெயர்த்து எடுத்தது…

சிவக்கொழுந்து எதிரில் போய் நின்று.. தன்னுடைய அகண்ட மார்பை காண்பித்து உனக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என எதிர் நின்றான்..

கரகோஷம் விண்ணை பிளக்க.. சிவக்கொழுந்து தன் தாய் மரணத்தின் தருவாயில் இருப்பதை உணர்ந்து காளையை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான்..

கருப்பான அந்த காளை.. சற்றே விலக… மண்ணில் விழுந்தான் சிவக் கொழுந்து… ஓ..என்றோரு சப்தம் கூட்டத்தில் எழுந்தது…

சுதாரித்துக்கொண்ட சிவக்கொழுந்து உடனே சுதாரித்து சட்டென எழுந்தான்.. அதற்குள் அவனருகில் வந்த காளை அவனை தூக்கி பந்தாடியது..

மன்னரின் மேடையருகில் போய் விழுந்த அவன் நெஞ்சில் ரத்த காயங்களுடன் எழுந்தான். கூட்டமே திகைத்து நிற்க.

வெறிகொண்ட வேங்கையாய் எழுந்தான் சிவக்கொழுந்து… ஜமீன்தார்..கை தட்டி சிரிக்க.. மன்னன் தலைகுனிந்தான்..

மேலும் வெறியேறியவனாய்..தன்னிடம் வந்த காளையை நோக்கி பாய்ந்தான் சிவக்கொழுந்து… திமிலை அணைத்துக்கொள்ள.. காளை பிடிகொடுக்காமல் திமிறியது.. தன்னுடைய தாயின் தோற்றம் கண்முன்னே வர,காளையின் திமிலை மேலும் இறுக்கினான்…

காளை துள்ளிக்குதிக்க.. காளையின் திமிலை சிவலிங்கமாய் நினைத்து கண்களில் கண்ணீர் பெருக இறுக அணைத்தான் சிவக்கொழுந்து.

காளையின் ஓட்டம் குறைய.. மெல்ல காளை தளர்வடைந்தது… அமைதியான காளை சிவக்கொழுந்துவிடம் பணிந்து நின்றது… காளையை தழுவிய சிவக்கொழுந்து..அதன் நெற்றியில் முத்தமிட.. கூட்டத்தில் கரகோஷம் விண்ணை பிளந்தது..

மன்னரும்..ஜமீன்தாரும்..மகிழ்ச்சியை கைதட்டல் மூலம் சிவக்கொழுந்திருக்கு தெரிவித்தனர்..

சிவக்கொழுந்து காளையின் கொம்பிலிருந்த தங்க வராகன்களையும் தங்க சங்கிலியையும் எடுத்துக்கொள்ள கூட்டத்தில் ஆரவாரம் விண்ணை பிளந்தது. மன்னர் அறிவிப்பாளனிடம் ஏதோ சொல்ல.. அறிவிப்பாளன் மன்னரின் பரிசுத்தொகையும் வீரனின் பதவியும் நாளை ராஜசபையில் வழங்கப்படும் என அறிவித்தான்.

கூட்டத்தில் அனைவரும் கரவொலியை வெளிப்படுத்தினர்.. மறுநாள் காலை சூரியன் பொன்னிற கதிர்களை பூமியில் படரவிட பேச முடியாத தன்னுடைய தாயின் கால்களை தொட்டுக்கும்பிட்டுவிட்டு அரசவை நோக்கி கிளம்பினான் சிவக்கொழுந்து.

மக்கள் அங்கே கூடியிருக்க, சிவக்கொழுந்துக்கு அரசவையில் ஆசனம் அளிக்கப்பட்டது.

மன்னர் அரியணையில் அமர்ந்து சிவக்கொழுந்துவின் வீரத்தை புகழ்ந்து பேசினார்.

சிவக்கொழுந்து எதுவும் பேசாமல் பணிந்து நின்றான்.

“யார் அங்கே பரிசுத்தொகையை கொண்டு வாருங்கள்.. “

பரிசுத்தொகை தங்கத்தட்டில் கொண்டுவரப்பட்டது.

மன்னன் பரிசுத்தொகையை எடுத்து வழங்க அதை பெற்றுக்கொள்ள கைகளை நீட்டினான் சிவக்கொழுந்து.

“சற்றே..பொறுங்கள் மன்னா….”

குரல் கேட்டு திரும்பிய பக்கத்தில் வீரவநல்லூர் ஜமீன்தார் காளையுடனும் அந்த ஊர் மக்களும் நின்றிருந்தனர்.

அரசவையும் மக்களும் சிவக்கொழுந்தும் அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க.. மன்னன் மட்டும் முகத்தில் எந்த ஒரு திகைப்புமில்லாமல் பார்த்தான்…!

“மன்னா.. நேற்று முழுவதும் பாலாற்றின் சேற்றில் சிக்கிய எங்களது வண்டிமாடுகள் மக்கள் இவற்றையெல்லாம் விடுவித்து கொண்டுவர சற்று காலதாமதம் ஆனது… இப்பொழுதுதான் நாங்கள் எங்கள் காளையுடன் வருகின்றோம். அதற்குள் இவர் வெற்றி பெற்றதாக கூறி பரிசுத்தொகையை அறிவித்தால் ஏற்றுக் கொள்ளமுடியாது மன்னா…” ஜமீன் கூற அரசவையில் மக்களிடமும் சலசலப்பு ஏற்பட்டது.

சிவக்கொழுந்து குழம்பி போய் நின்றான். மன்னர் ராஜராஜன் அனைவரையும் அமைதிப்படுத்தினார்..

அனைவரும் அமைதியாக இருங்கள்… “ஜமீன் சொல்வது சரிதான்” என்றார் மன்னர்.

மக்கள் அனைவருடன் சிவக்கொழுந்தும் மேலும் திகைக்க, மன்னர் புன்னகையுடன் தொடர்ந்தார்… “இன்று அதிகாலையில் வந்த கனவில் எம்பெருமான் ஈசன் என் கனவில் தோன்றினார்.. சிவக்கொழுந்தின் பக்தியை உலகிற்கு உணர்த்தவும்.. நேர்மையையும், வீரத்தையும் பறைசாற்றுவதற்க்காகவும்.. யாமும், நந்திதேவரும்.. ஜமீனாகவும்.. காளையாகவும் வந்தோம். அறிவித்தபடி பரிசையும் பதவியையும் சிவக்கொழுந்துக்கு வழங்கவும் ஆணையிட்டார். மேலும், 100 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் நந்தீஸ்வரர் ஆலயத்தின் கதவை திறந்து ஒரு அற்புதத்தை காணுமாறும் கூறி மறைந்தார்… எப்படியும் ஜமீனும் வந்துவிடுவார் என தெரியும். எனவே, இதை சொல்ல காத்திருந்தேன்” மன்னர் சொல்ல சொல்ல மக்களும், அரசவையினரும், ஜமீன்தாரும் திகைப்பில் நின்றனர்.

மன்னன் பரிசுத்தொகையை கொடுத்து படைத்தளபதியாக சிவக்கொழுந்தை அறிவித்தான்.

“வாருங்கள் நந்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வோம்..” மக்கள் அனைவரும் பின்தொடர…

நூறாண்டுகள் பூட்டப்பட்ட கோவில் கதவு பெரும் சப்தத்தோடு திறந்தது… மன்னனின் பார்வையும்.. மக்களின் பார்வையும் நாலாபுறமும் சுழல… மேடையில் அமர்ந்திருந்த நந்தியின் திமில்கள் சிவலிங்கமாக காட்சியளித்தது.. அதைக்கண்ட பரவசத்தில் மன்னனும், மக்களும் “ஓம் நம சிவாய” “சம்போ மகாதேவா” என்ற பெரும்கோஷம் எழுப்ப எதுவும் பேசமுடியாமல் நின்ற சிவக்கொழுந்துவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகியது.

ஏறுதழுவதல் எம் பெருமை. எம் உரிமை.

சம்போ மகாதேவா!

– வாட்ஸ்ஆப்பில் வந்த இந்த அற்புதமான கதையை எழுதியவர் யார் என்று அறியோம். சைவ சித்தாந்த குழுமத்தில் பார்த்ததாக பகிர்ந்த நண்பர் கூறினார். சிற்சில மாற்றங்கள் ,பிழை திருத்தங்கள் செய்து, புகைப்படங்கள் சேர்த்து நம் தளத்தில் அளித்திருக்கிறோம். “இன்று என்ன பதிவு அளிக்கலாம் மக்கள் அனைவரின் உணர்வும் ஏறு தழுவதலில் இருக்க, நாம் என்ன பதிவளிக்கமுடியும்?” என்று குழம்பித் தவித்த நிலையில் இந்த பதிவு கண்ணில் பட்டது எந்தை ஈசனின் கருணையே.

நற்றுணையாவது நமச்சிவாயமே!

==========================================================

ழவு சிறக்க வேண்டி நம் தளம் சார்பாக ஒரு ஆக்கப்பூர்வமான எளிய முயற்சி. இரண்டு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு இன்று நடைபெறுகிறது. இதுவும் விவசாயிகளுக்கு ஆதரவான ஒன்று தான்.

==========================================================

உங்கள் உதவியை எதிர்நோக்கி….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

Similar articles…

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

[END]

One thought on “ஒரு சிவத்தொண்டன் அடக்கிய காளை!

  1. அழகான படங்களுடன், அற்புதமான தங்கள் மொழி நடையில் இந்த ஈசனின் அருட்செயல்…

    சுவாரசியமான பக்தி சம்பவம், திரைக்கதை போல் கண் முன் விரிகிறது.

    படித்த பின்பும் பிரமிப்பு விலகவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *