Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > ‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

print
“இந்த உலகம் என்பது யானை என்றால், நாம் ஒரு எறும்பு போல…” என்று சொல்வார்கள். எறும்பால் எந்தக் காலத்திலும் யானையின் முழு உருவத்தை பார்க்கமுடியாது. அது இன்னதென்று புரிந்துகொள்ளவும் முடியாது. இந்த உலகம் தான் யானை. நமது அறிவு தான் எறும்பு. எனவே நடக்கும் நிகழ்வுக்கெல்லாம், காரணம் என்ன என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், இறைவனிடம் பரிபூரண சராகதி அடைந்துவிடவேண்டும். அவன் எதைக் கொடுத்தாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த வாழ்க்கை என்பது புதிர் நிறைந்தது. யுகயுகமாய் நாம் எடுத்த பிறவிகளின் பாப-புண்ணியங்களின் கூட்டல் கழித்தல் கணக்கு. கணக்கின் சூட்சுமம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். சில நிகழ்வுகளுக்கு காரணம் என்ன என்று புரிந்துகொள்ள நமக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அப்போது எவ்வளவோ முயற்சித்தும் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் ஆண்டுகள் உருண்டோடிய பின்னர் புரிவது ஏன்? காரணம், உலகியலில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள். அவை கற்றுத் தரும் பாடங்கள்.

பிரசாத புத்தி என்ற ஒன்று உண்டு. இது மட்டும் ஒருவருக்கு வாய்த்துவிட்டால் அவரால் எந்த சூழ்நிலையிலும் மனநிம்மதியுடன் இருக்கமுடியும்.

perumal-prasadham

பெருமாள் கோவிலுக்கு செல்கிற போது பட்டர் சுவாமிக்கு அர்ச்சனை செயது தீபாராதனை காட்டிய பிறகு நமக்கு தீர்த்தம் தருகிறார். அதை பயபக்தியோடு வாங்கி அருந்தியபின்னர், மிச்சம் மீதி துளிகள் கூட கீழே சிந்தக் கூடாது என்று அதை தலையில் தடவிக்கொள்கிறோம்.

என்ன காரணம்?

இறைவனின் பிரசாதம். அது துளி கூட கீழே சிந்தக்கூடாது என்பதனால் இல்லையா?

எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, சுத்த பத்தம் பார்க்கும் நபராக இருந்தாலும் சரி, பட்டர் தீர்த்தம் தரும்போது அதை பயபக்தியுடன் வாங்கித் தான் உட்கொள்கிறார்கள் தவிர,

“இது என்ன சுத்தமான ஜலம் தானா?”

“கிணற்று நீரா மினரல் வாட்டரா?”

“ஆர்.ஓ மூலம் ப்யூரிஃபை செய்திருக்கிறீர்களா?”

“எத்தனை நாள் ஆச்சு தீர்த்தத்தை மாற்றி?”

“நேற்று வைத்திருந்த தீர்த்தம் போலிருக்கிறதே??”

– என்றெல்லாம் நாம் கேள்விகள் எழுப்புவது இல்லை. நீங்கள், நான் மட்டுமல்ல உலகில் எந்தக் கொம்பனும் கேள்வி எழுப்பமாட்டான். காரணம் அது சந்தேகத்திற்கும் சுத்தத்திற்கும் அப்பாற்பட்டது. பெருமாளின் பிரசாதம். அல்லவா?

தீர்த்தத்தை மட்டும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், இறைவன் நமக்கு அளிக்கும் மற்ற விஷயங்களில் முரண்டு பிடிப்பது ஏன்?

இறைவன் ஒரு விஷயத்தை பரிசாக உங்களுக்கு தந்திருக்கிறான் என்று நீங்கள் மனதார நம்பும்போது அதன் மீது கேள்வி எழுப்புவீர்களா? அதை பெற்றுக்கொள்ள தயங்குவீர்களா? அல்லது முனுமுனுப்பீர்களா?

“இது இறைவன் எனக்கு அளித்தது. இதைவிட எனக்கு நன்மை தருவது எதுவும் இருக்கமுடியாது” என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. நமக்கு இது தான் என்று திருப்தியுடன் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும். இந்தப் பழக்கத்தை வாழ்க்கை முழுதும் கடைப்பிடித்தால் அதன் பெயர் தான் ‘பிரசாத புத்தி’.

பிரசாத புத்தி மட்டும் ஒருவருக்கு வாய்த்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் தான்.

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்!

து ஒரு அழகிய கோவில். அந்த கோவிலின் அழகையும் அதில் பிரதானமாக உள்ள கருங்கல்லால் ஆன விக்ரகத்தின் அழகையும் கண்டு ரசிக்க எண்ணற்ற பக்தர்கள் தினசரி வந்து செல்வார்கள். எதிரே உள்ள பிரகாரத்தில் கூட தரையில் கருங்கற்களை தான் பதித்திருந்தார்கள்.

ஒரு நாள் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகத்திடம் பேசின. (கல் பேசுமா என்று கேட்காதீர்கள். அகலிகையும் கல்லாக இருந்தவள் தானே?!)

“எங்கள் மீது நடந்து வந்து தான் உன்னை பார்க்கிறார்கள். ஆனால் உன்னை மட்டும் எல்லோரும் வணங்கிவிட்டு செல்கிறார்கள். உன் அழகை புகழ்கிறார்கள். ஆனால் எங்களை எவரும் பொருட்படுத்துவதே கிடையாது. இது எந்த வகையில் நியாயம்?”

sculpting

“நண்பர்களே, நீங்களும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்தோம் என்பது உங்களுக்கு தெரியும் தானே?”

“ஆம்… தெரியும்… அதனால் தான் எங்களுக்கு இந்த வருத்தம். ஒரே இடத்தில் இருந்து நாம் வந்திருக்கும்போது உன்னை மட்டும் உயர்வாக கருதுவது ஏன்?”

“நண்பர்களே… இந்த கோவிலை கட்டும்போது, தொழிலாளர்கள் உங்களை நாடி வந்து உங்களை வெட்டி எடுத்து உளியால் செதுக்க முற்பட்டபோது நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. உளி மேலே படுவதை விரும்பாது வேண்டுமென்றே உடைந்து உடைந்து போனீர்கள். எனவே உங்களை தரையில் பதிக்கும் கல்லாக போட்டுவிட்டார்கள். ஆனால் என்னிடம் வந்தபோது நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். சிற்பி தனது உளியால் என்னை செதுக்கியபோது “இறைவன் என்னை இப்படி சோதிப்பது, இது என்னை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்காகத் தான்” என்று என்னை தேற்றிக்கொண்டு உளியும் சுத்தியும் எனக்கு தந்த அடிகளை தாங்கிக்கொண்டேன். இதோ இன்று அந்த கடவுள் சிலையாக மாறிவிட்டேன்…. இதைவிட பெரிய பாக்கியம் எனக்கு கிடைக்குமா?”

“நீ சொல்வது வாஸ்தவம் தான்…”

“உங்களை மேம்படுத்த அவர்கள் விரும்பியபோது நீங்கள் ஒத்துழைக்கவில்லை. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது. உங்களை உயர்த்தும் முயற்சிக்கு ஒத்துழைக்காமல் பாதியிலேயே நீங்கள் நிறுத்திவிட்டதால், உங்கள் மேலே நடந்து செல்பவர்களை பற்றி நீங்கள் குறைப்பட்டுக்கொள்ள முடியாது!”

இவ்வாறு விக்ரகம் கூறி முடித்தவுடன் பெருமூச்சு விட்டன தரையில் பதிக்கப்பட்ட கற்கள்.

stone-sculpt

விக்ரகம் எப்படி உளியை தாங்கிக்கொண்டு தன்னை வடிக்க ஒத்துழைத்ததோ அதே போல நாமும் இறைவன் நம்மை செம்மை படுத்த தரும் சோதனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். சோதனையின்றி சாதனை எப்போதும் இல்லை.

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்

நமக்கு நிகழும் அனுபவங்கள் அனைத்தையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். தோல்விகளினாலும், ஏமாற்றங்களினாலும் நிலை குலைந்துவிடாது நம் பயணத்தை நம்பிக்கையுடன் தொடரவேண்டும். சோதனைகள் நெருக்கும்போதெல்லாம் “இது இறைவன் தருவது. எல்லாம் நன்மைக்கே” என்ற எண்ணத்தை கைக்கொள்ளவேண்டும். இத்தகு நம்பிக்கை இருப்பவர்களே வாழ்க்கையில் துன்பங்களை ஜெயித்து வெற்றியடைய முடியும்.

இன்றைக்கு நாம் பார்த்து பெருமூச்சு விடும் பல சாதனையாளர்கள் இது போன்ற சோதனைகளை தாண்டி வந்தவர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.

நம் வாழ்க்கையில் நம்மை கண்ணீர் விட வைத்த தருணங்கள் பெரும்பாலானவை ஒரு வகையில் நமக்கு மிக மிகப் பெரிய வரங்களே என்பதை காலம் தான் உணர்த்தும்.

The past may be good or bad, but the present is better and the future will always be the best. இதை என்றும் நினைவில் வைத்திருந்தால் எந்த துன்பமும் நம்மை எதுவும் செய்ய முடியாது.

நடந்ததெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே.

இன்றைய தேவை : பிரசாத புத்தி!

காப்பிரைட் எச்சரிக்கை : ரைட்மந்த்ரா பதிவுகள் யாவும் கடும் உழைப்பில் விளைபவை. இவற்றை ஆசிரியரின் முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நட்பு வட்டத்தில் பகிர விரும்பினால் அதற்குரிய வசதி பதிவின் தொடக்கத்திலும் இறுதியிலும் உள்ளது. அதை பயன்படுத்தி மட்டுமே பகிரவேண்டும்.

**************************************************************

இந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Also check :

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

மாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

[END]

2 thoughts on “‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?

Leave a Reply to Ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *