Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

print
மது தளத்தின் முக்கியப் பணிகளுள் திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி என்னும் திருப்பணியும் ஒன்று என்பதை வாசகர்கள் அறிவீர்கள். ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் உழவாரப்பணி செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

‘உழவாரப்பணி’ என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா?

21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம்.

அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், உடலால் முடியாதவர் பொருளாலும், பிற வகைகளாலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு ஈசனருள் பெற்று வாழ்வோம்.

உழவாரப்பணியை பொருத்தவரை பலர் உடலுழைப்பை கொடுப்பது என்று மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடன் பேசும் சில வயதில் பெரியவர்கள் தங்களுக்கு வர விருப்பம் தான் என்றும், ஆனால் தங்களால் எந்த பணியும் செய்ய இயலாது என்பதால் வருவதற்கு யோசிப்பதாகவும் கூறுவார்கள். அந்த எண்ணம் தவறு. இருகால்களை இழந்த திரு.ஜெயராமன் உழவாரப்பணியை செய்து வரவில்லையா?

உழவாரப்பணியை பொருத்தவரை அவரவர் வயதுக்கும் தெம்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பணிகள் நிச்சயம் உண்டு.

உடல் உழைப்பு தான் என்றில்லை நம் பொருட்களை பார்த்துக்கொள்வதற்கு கூட சில சமயம் நபர்கள் தேவைப்படுவார்கள். அதைச் செய்தால் கூட போதும். எனவே வயதும் உடல்நிலையும் உழவாரப்பணி செய்ய ஒரு போதும் தடையாக இருக்காது. வாசகி தாமரை வெங்கட் அவர்களின் மாமியார், சற்று வயது முதிர்ந்தவர் தொடர்ந்து உழவாரப்பணிக்கு வந்து இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார்.

இந்த முறை நமது மகளிர் அணி உறுப்பினர் சாந்தா ரோகினி அம்மா அவர்கள் உடல்நலம் சரியில்லை. பணி செய்யமுடியாவிட்டாலும் பொருட்களை பார்த்துக்கொள்ள நான் வருகிறேன் என்று கூறி பணிக்கு புறப்பட்டு வந்தார். அவர் வந்தது மிகவும் உபயோகமாக இருந்தது.

(பொருட்களை பார்த்துகொள்வதில் என்ன புண்ணியம் கிடைக்கும்? வந்து பணி செய்தால் தானே என்று நினைக்கவேண்டாம். இந்தப் பதிவை அவசியம் செக் செய்யவும். உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!)

=========================================================

நமது உழவாரப்பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக வர விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு…!

1) தங்கள் வருகையை நமக்கு தவறாமல் (மின்னஞ்சல் / எஸ்.எம்.எஸ் / அலைபேசி மூலமாக) உறுதிப்படுத்தவும். உணவு, வாகன வசதிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும். இதை பலர் செய்வதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

2) தவிர்க்க இயலாத காரணத்தினால் வர இயலாத பெண் வாசகர்கள் முந்தைய தினம் மாலைக்குள் நமக்கு தெரியப்படுத்தவும்.

3) உழவாரப்பணிக்கு முந்தைய தினம் மிதமான எளிய உணவுகளை உட்கொண்டு சீக்கிரம் உறங்கச் செல்வது மிக மிக அவசியம். சனிக்கிழமை அவசியம் சீக்கிரம் உறங்கச் செல்லவேண்டும். அலாரம் வைப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி எழுப்பச் சொல்வது என அனைத்தையும் கையாளவும்.

4) ஞாயிற்றுக்கிழமை பொதுவாக தாமதமாக எழும் வழக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பதால் சனிக்கிழமை காலையே சீக்கிரம் தூக்கம் விழித்து உடலையும் மனதையும் உழவாரப்பணிக்கு தயார்படுத்துவது மிகவும் முக்கியம்.

5) சோம்பல் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவோ ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை தவிர்க்கவேண்டாம்.

6) ஒவ்வொரு உழவாரப்பணிக்கும் கூடுமானவரை தவறாமல் வர முயற்சிக்கவும். நியாயமான, தவிர்க்க இயலாத காரணங்களினால் ஒன்றிரண்டு பணிக்கு வர முடியாது போனால் அது குறித்து வருந்தவேண்டாம்.

7) இது தொண்டு மட்டுமல்ல அதற்கும் மேலான சிவபுண்ணியம் என்பதை மறக்கவேண்டாம். ஈசனுக்காக நீங்கள் தியாகம் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்கு அளவற்ற நற்பலன்களை தரும் என்பதை மறக்கவேண்டாம்.

8) பணிக்கு வரும் ஆண்கள் கையில் ஒரு வேஷ்டி, துண்டு SPARE எடுத்து வரவும்.

9) பணியின் போது சம்பந்தப்பட்ட ஆலயத்தையோ, நிர்வாகத்தினரையோ குறை கூறுவது, புறம்பேசுவது இவற்றை தவிர்க்கவும்.

10) பணியின்போது உங்கள் கவனம் பணியின் மீது மட்டும் இருக்கட்டும்.

11) ஒரு ஆலயத்தை தேர்ந்தெடுத்து உழவாரப்பணி செய்வதன் பின்னணியில் எத்தனை விஷயங்கள், நடைமுறை சிரமங்கள் உள்ளன என்று பலருக்கு தெரியாது.

12) உங்கள் தேவைகளை மற்றும் இன்னபிற அவசியங்களை ஒருங்கிணைப்பாளரிடம் கூற தயங்க வேண்டாம்.

13) உழவாரப்பணிக்கு செல்லும் வாகனத்தில் ஏற, குறித்த நேரத்தில் வருவது மிகவும் முக்கியம். தாமதமான புறப்பாடுக்கு நீங்கள் காரணமாக இருக்கவேண்டாம்.

14) நமது தளத்தின் செயல்பாட்டுக்கோ அல்லது சேவைக்கோ உதவுபவர்கள் எந்த வித ஐயத்தையும், நெருடலையும் மனதிற்குள் வைத்துக்கொண்டு உதவிகளை செய்யவேண்டாம். இத்தகு உதவிகள் நமக்கு ஏற்புடையதல்ல. நாம் கடந்து வந்த பாதையும், இதுவரை ஆற்றிய பணிகளும், நமது உழைப்பும், பதிவுகளுமே நமக்கு உரைகல்.

15) சிறிதோ பெரிதோ உங்கள் உதவியினால் தான் இந்த மகத்தான பணிகள் சாத்தியமாகின்றன. பணி சிறக்க உங்கள் மேலான ஒத்துழைப்பையும் புரிதலையும் வேண்டுகிறோம்.

நற்றுணையாவது நமச்சிவாயமே!

==========================================================

நெஞ்சம் நிறைந்த பணி தந்த திருவிற்கோலம்!

திருவிற்கோலம் என்னும் கூவம் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திரிபுராந்தகர் கோவிலில் உழவாரப்பணி செய்யவேண்டும் என்பது நமது நீண்ட நாள் அவா. ஏற்கனவே சில முறை நாம் சென்றிருந்தாலும், சமீபத்தில் நமது பிரார்த்தனை கிளப் தொடர்பாக பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அவர்களை சந்திக்க இரண்டு மூன்று முறை சென்றோம். (நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு இது அருமையான பரிகாரத் தலம்!) அப்போது கூவம் எனப்படும் திருவிற்கோலம் சென்றிருந்தோம். இந்தக் கோவிலின் தலப்புராணத்தை முழுமையாக அறிந்துகொண்டபோது இந்தக் கோவிலில் உழவாரப்பணி செய்ய ஆசை அரும்பியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் தரப்பில் சென்று பேசி ஒப்புதல் பெற்றோம்.

உழவாரப்பணி இறுதி ஆனவுடனேயே கூவம் திரிபுராந்தகர் கோவில் பற்றிய ‘ஆலய தரிசனம்’ பதிவை அளிக்க விரும்பினோம். ஆனால், பதிவை தயாரிக்க மிகவும் நேரம் பிடித்ததால் அளிக்க இயலவில்லை நேற்று தான் அளிக்க முடிந்தது. தாமதமாக வந்தாலும் சிறப்பாக அப்பதிவு வந்திருப்பதாக கருதுகிறோம். ஈசன் அருள்.

>>>>> இந்த பதிவில் நிறைய புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதால் பிரவுசர் லோட் ஆக சிறிது நேரம் பிடிக்கும். எனவே சற்று பொறுமையாக பார்க்கவும். <<<<<

dsc01130

dsc02544dsc02539உழவாரப்பணி திட்டமிட்ட நாளன்று (18/09/2016) காலை சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நமது வீட்டிலிருந்து உழவாரப்பணி பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்ட பின்னர் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலைய நிறுத்தத்ததில் காத்திருந்த குழு உறுப்பினர்கள் அனைவரையும் பிக்கப் செய்துகொண்டு புறப்பட்டோம்.

பூவிருந்தவல்லி வழியாக சென்னை – காஞ்சிபுரம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று சவீதா மருத்துவக்கல்லூரி அருகே தண்டலம் சாலையில் வலப்பக்கம் திரும்பி பின்னர் அங்கிருந்து மப்பேடு வழியாக கூவம் பயணம்.

இது சற்று நீண்ட தூர பயணம் என்பதால் பங்கேற்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை மனதில் கொண்டு காலை உணவு ஏற்பாடு (பொங்கல் + சட்னி) ஏற்பாடு செய்திருந்தோம்.

dsc01127

சாப்பிடுவதற்கு வேனை நிறுத்த நல்ல இடம் தேடித் தேடி, இடம் எதுவும் அமையாமல், அப்படி இப்படி என்று கடைசியில் கூவமே வந்துவிட்டது. அங்கிருந்து நரசிம்மர் கோவில் பக்கத்தில் தான். நரசிம்மர் கோவில் செல்லும் வழியில் ஒரு அற்புதமான இடம் இருக்கிறது. மரநிழலும், கை கால் அலம்ப ஒரு சிறு குளம் என அற்புதமான இடம் அது. வேன் டிரைவரிடம் அந்த இடத்திற்கு போகச் சொன்னோம். அங்கு போய் அனைவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு பின்னர் திருவிற்கோலம் செல்லலாம் என்றோம். அந்த இடத்தை பார்த்ததும் அனைவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப்போய்விட்டது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு.

அங்கு காலை டிபனை முடித்துக்கொண்டோம். பொங்கல் + சட்னியின் சுவை சுண்டியிழுக்க இழுக்க, ‘டிபன் வேண்டாம் வேண்டாம்’ என்று சொன்னவர்கள் கடைசியில் ஒரு பிடி பிடித்தனர். அப்படியும் நாம் கொண்டு சென்றதில் மீந்துவிட்டது. வருவதாக ஒப்புக்கொண்டவர்கள் கடைசி நேரத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வராமல் போனதே காரணம். ( நாம் டயட் என்பதால் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் தான் சாப்பிட்டோம்! வதந்திகளை நம்பவேண்டாம்! 🙂 )

ஒரு 15 நிமிடம் REFRESHING செய்த பிறகு வண்டி மீண்டும் புறப்பட்டது.

திரிபுராந்தகர் கோவிலை அடைந்ததும் வேனை விட்டு இறங்கி உள்ளே சென்றால் மேள தாள, நாதஸ்வர சப்தம் நம்மை வரவேற்றது. ஏதோ சுபநிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருந்தது. விசாரித்ததில் வளைகாப்பு என்று சொன்னார்கள். சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் திரிபுராந்தகர் தான் குலதெய்வம் என்பதால் தங்கள் வீட்டு விசேஷங்களை இங்கு தான் நடத்துவார்கள்.

ஆலய நிர்வாகத்திடம் சென்று பேசினோம். “அவர்கள் 9.00 – 10.30 முகூர்த்தம் முடிந்ததும் புறப்பட்டு போய்விடுவார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் பணிகளை துவக்குங்கள்” என்று ஆலயத்தின் தரப்பில் சொன்னார்கள்.

img_8530

சுவாமி தரிசனம் செய்துவிட்டு பணிகளை துவக்கினோம். தொடர்ந்து குழுவினர் ஆளாளுக்கு வேலைகள் பிரித்துவிடப்பட்டது.

உழவாரப்பணியை பொருத்தவரை எந்தளவு வேலை அதிகமோ அந்தளவு திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும். இங்கும் அந்த மனநிறைவு கிடைத்தது.

நமது குட்டீஸ் டீம்!
நமது குட்டீஸ் டீம்!

பொதுவாக உழவாரப்பணிகளில் மகளிர் குழுவினருக்கு தான் சற்று வேலை அதிகம் இருக்கும். காரணம் பிசுக்கேறி நிறம் மாறிய விளக்குகளை துலக்குவது, பிரபைகளை சுத்தம் செய்வது, திருக்கோவில் பாத்திரங்களை துலக்குவது என்று உட்கார்ந்தே செய்யவேண்டிய கடினமான பணிகள். சில நேரங்களில் நிழல் கிடைக்காமல் உச்சி வெயிலில் உட்கார்ந்து இவற்றை செய்யவேண்டியிருக்கும்.

img_8536

img_8540

dsc04637

dscn6472ஆண் உறுப்பினர்களை பொருத்தவரை ஒட்டடை அடிப்பது, சன்னதிக்குள் சென்று சுத்தம் செய்வது போன்ற பணிகள் இருக்கும். ஆனால் இந்த முறை மகளிர் குழுவினர் அவர்களின் பணி தவிர்த்து சன்னதி சுத்தம் செய்வது வரை பார்த்துக்கொண்டார்கள்.

img_8580

dscn6525பைரவர் சன்னதி, பிள்ளையார் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி என அனைத்தும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து பின்னர் அலம்பிவிடப்பட்டது.

ஆண் உறுப்பினர்கள் குறைவாக இருந்ததாலும் நிறைவாக பணி செய்தவர்கள். (சிங்கம்ல!)

பிரகாரம் சுத்த செய்ய களமிறங்கிய குழுவினர், வெயிலென்றும் பாராமல், பிரகாரத்தில் ஆங்காங்கு முளைத்திருந்த செடிகொடி புற்களை பிடுங்கி, ஆங்காங்கு பரவியிருந்த குப்பை கூளங்களை அகற்றி சுத்தம் செய்தபடி இருந்தனர்.

img_8541

img_8545img_8556img_8565img_8572dsc04647dsc04650மற்றொரு குழுவினர் உட்பிரகாரம் முழுக்க ஒட்டடை அடித்தனர். மேலே சுவற்றில் அப்பிக்கொண்டிருந்த நாட்பட்ட ஒட்டடைகள், சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டது. தூசி மேலே விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் இது சற்று சிரமமான பணி தான்.

மேற்கூறிய பணிகள் தவிர தரை துடைக்கும் பணியும் இருந்தது. அதையும் ஒரு சிலர் கவனித்துக்கொண்டனர்.

dscn6423

dscn6427dscn6449dscn6453dscn6489dscn6518dscn6493dscn6520குருக்களிடம் ஏற்கனவே பேசிவிட்டு சென்றதால், பாத்திரங்கள், மற்றும் விளக்குகள், காலங்கள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்திருந்தனர்.

மகளிர் அணியினர் விளக்குகள் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய துவங்கினர். குத்து விளக்குகள், கோவில் பாத்திரங்கள், தாம்பாளத் தட்டு, பித்தளை அண்டா இவற்றை துலக்கினர். மலைக்க வைக்கும் அளவு பாத்திரங்கள் குவிந்தன. ஆனால், மகளிர் அணியினருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? துலக்கி தூள் கிளப்பிவிட்டனர். எத்தனை அதிர்ஷ்டசாலிகள் நம் மகளிர் அணியினர்…! அழுக்கும் எண்ணைப் பிசுக்கும் ஏறி தோற்றமே மாறி பொலிவையும் இழந்திருந்த பல விளக்குகள் இவர்களின் கைங்கரியத்தால் புத்தொளி பெற்றது. (பார்க்க படங்கள்!).

இந்த முறை உழவாரப்பணிக்கு புதிதாக வந்த திருமதி.சரஸ்வதி மற்றும் திருமதி.புவனேஸ்வரி ஆகிய இருவரைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்கள் நம் குழுவிற்கு புதியவர்கள். நாம் கடந்த ஜூலை மாதம் அரியத்துறைக்கு உழவாரப்பணிக்கு சென்றபோது அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தவர்கள், நம் குழுவினர் பணி செய்வதை பார்த்து நம்முடன் இணைந்து பணி செய்தனர். அடுத்த பணி எங்கே எப்போது என்று கேட்டனர். “அது பற்றிய அறிவிப்பு தளத்தில் வெளியாகும். பார்த்துவிட்டு இணைந்துகொள்ளுங்கள்” என்று கூறிவிட்டோம். எனவே இந்த முறை அவர்களாகவே விஷயத்தை தளம் மூலம் அறிந்துகொண்டு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து நேரிலேயே வந்துவிட்டனர். எங்களுடன் வேனில் கூட வரவில்லை. அவர்கள் வரப்போவதும் எங்களுக்கு தெரியாது. எப்படியோ வந்து பங்கேற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் வந்து விட்டனர். வந்தவர்கள் மகளிர் அணியினர் செய்துகொண்டிருந்த பணியில் இணைந்து தங்கள் உழைப்பை கொடுத்தனர். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்று இதைத் தான் சொல்வார்கள். பணியை சிறப்பாக செய்ததோடல்லாமல் தங்களால் ஆன உதவியையம் நம் தளத்திற்கு மறக்காமல் செய்தனர். இனி ஒவ்வொரு பணிக்கும் தவறாமல் வருவதாக கூறியிருக்கிறார்கள். சிரம் தாழ்ந்த நன்றி!

ஒரு வழியாக பணி நிறைவுபெற்றதும் அனைத்து பொருட்களையும் எடுத்து ஒழுங்குபடுத்தி, கட்டி அதை வேனில் ஏற்றினோம்.

பிரார்த்தனையாளர்கள் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது...
பிரார்த்தனையாளர்கள் பெயர்களுக்கு சங்கல்பம் செய்யும்போது…

பின்னர் நடைபெற்ற உச்சிகால பூஜை மற்றும் அபிஷேகத்தில் அனைவரும் கலந்துகொண்டோம். உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினரின் பெயர்களுக்கும் சங்கல்பம் செயப்பட்டது. நாம் தயாராக கொண்டு சென்ற கடந்த இரண்டு பிரார்த்தனைப் பதிவுகளின் பிரார்த்தனை கோரிக்கைகளை சுவாமி பாதத்தில் வைத்து தருமாறு கேட்டுக்கொண்டோம். வீட்டிலிருந்தே அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு தான் கொண்டு சென்றோம். மேலும் பிரார்த்தனையாளர்கள் சுமார் 30 பேருக்கு சங்கல்பம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நாம் ஒவ்வொரு பெயரும் நட்சத்திரங்களோடு படிக்க, படிக்க குருக்கள் சங்கல்பம் செய்த்துக்கொண்டே வந்தார்.

nataraja-paththuஇது தவிர உழவாரப்பணியில் பங்கேற்கும் நமது குழுவினரை உற்சாகப்படுத்த நாம் ஒவ்வொரு முறையும் சிறு சிறு பரிசுகள் அளித்து அவர்களை கௌரவிப்போம். இந்த முறை ‘நடராஜப் பத்து கருடப்பத்து’ ஸ்லோக புத்தகங்களை ஆலயத்தின் அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமியிடம் வைத்து அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. பொதுவாகவே இறைவனின் ஸ்லோகம் மற்றும் பாடல்கள் புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம்.

உறுப்பினர்களில் சிலர் திருமுறைகளில் இருந்து பாடல்கள் பாட, உச்சிகால பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு நைவேத்தியம் நடைபெற்ற பின்னர் அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டது.

அடுத்து ஆலய ஊழியர்களை அர்ச்சகர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு உழவாரப்பணியின்போதும் நாம் பணி செய்யும் ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்களை கௌரவிப்பது நம் வழக்கம். எனவே இங்கும் இறுதியில் பிரகாரத்தில் வைத்து அர்ச்சகர்கள் மடப்பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆலயத்தில் வாத்தியங்களை இசைப்பவர்கள், பால் கொண்டுவருபவர்கள், துப்புரவு பணி செய்பவர்கள் என அனைவருக்கும் நம் தளம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. வெற்றிலை பாக்கு, பூ, பழம், வேட்டி, சட்டை,இனிப்பு, ரொக்கமாக ஒரு சிறு தொகை அவருக்கு வைத்து தரப்பட்டது.

dscn6529

dsc01175

dsc01178dsc01189dscn6539dsc01196dsc01198dsc01200நமது இந்த கைங்கரியத்தை பார்த்து மிகவும் நெகிழ்ந்துவிட்டார் குருக்கள். அனைவருக்கும் எல்லா வித நலன்களும் செல்வமும் கிடைக்க வாழ்த்துவதாக உள்ளம் உருகி கூறினார்.

நமது தளத்தின் லேமினேட்டட் பிரார்த்தனை படம் கோவிலுக்கு பரிசளிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தை பொறுத்தவரை நாம் கௌரவித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் திரு.குமார் மற்றும் ரங்கன்.

குமார் அவர்கள் தான் சுவாமிக்கு உச்சி கால பூஜைக்கு பால் கொண்டு வருகிறார். சுமார் ஆயிரம் வருடங்களாக இவரது தலைமுறையினர் தான் திரிபுராந்த சுவாமிக்கு உச்சிகால அபிஷேகத்திற்கு பிஞ்சிவாக்கத்திலிருந்து (கடம்பத்தூர் அருகே) பசும்பால் கொண்டுவருகிறார்கள். இப்போது சைக்கிளில் சுமார் பத்து கி.மீ. தூரம் குமார் அவர்கள் இதன்பொருட்டு தினமும் வருகிறார். ஆரம்ப காலங்களில் காவடியில் இந்த பாலை சுமந்து வருவார்களாம். பன்னெடுங்கலாக மாறாமல் இந்த சம்பிரதாயம் நடைபெற்றுவருகிறது.

3
தினசரி பத்து கி.மீ தூரம் சைக்கிளில் அபிஷேகத்திற்கு பால் கொண்டு வரும் திரு.குமார்
திரு.குமார் அவர்களை கௌரவித்தபோது...
திரு.குமார் அவர்களை கௌரவித்தபோது…

நாம் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை திருபுராந்தகரை தரிசிக்க சென்றபோதும் திரு.குமார் அவர்களை சந்தித்திருக்கிறோம். நம்மால் இயன்ற சிறு உதவியை அவருக்கு செய்திருக்கிறோம். ஆனால் அவர் ஆற்றி வரும் சேவைக்கு சபை மரியாதை செய்வது தான் முறை எனவே கோவில் ஊழியர்களை கௌரவிக்கும் திரு.குமார் அவர்களது சேவையைப் பற்றி உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறி அவரை பலத்தை கைத்தட்டல்களுக்கிடையே கௌரவித்தோம்.

அதே போல திரு.ரங்கன். இவர் இந்தக் கோவிலில் உச்சி கால அபிஷேகத்தின்போது திருச்சின்னம் வாசிப்பவர். சொல்லப்போனால் மங்கள் வாத்தியம் இசைக்கவேண்டும். அதற்கு வழியில்லாததால் திருச்சின்னத்தோடு நிற்கிறார்கள்.

திருச்சின்னம் வாசிக்கும் ரங்கன்!
திருச்சின்னம் வாசிக்கும் ரங்கன்!
dsc01192
திரு.ரங்கன் நமது குழுவால் கௌரவிக்கப்பட்டபோது…

இவரையும் இதற்கு முன்பு சென்ற அத்தனை முறையும் பார்த்திருக்கிறோம். அவருக்கும் சபை மரியாதை செய்தோம்.

“எங்களையெல்லாம் இதுபோல யாரும் இதற்கு முன்னர் கௌரவித்ததில்லை. இது போன்று வஸ்திரம் இனிப்பு ரொக்கம் இவற்றை வைத்து சபை மரியாதை செய்ததில்லை. எங்கள் ஆயுளுக்கும் இதை மறக்கமுடியாது” என்று இருவரும் நெகிழ்ந்துபோனார்கள்.

“நீங்கள் செய்து வரும் சிவத்தொண்டுக்கு எங்களால் இயன்ற ஒரு சிறு பிரதியுபகாரம். கௌரவம். மேன்மேலும் உங்கள் தொண்டு சிறக்க ஈசனை வேண்டுகிறேன்” என்றோம்.

குருக்களும் இதையேத் தான் சொன்னார். “இங்கு எத்தனையோ பேர் இது வரை பணி செய்திருக்கிறார்கள். யாரும் இதுபோல எங்களை கௌரவித்ததில்லை. மிகச் சிறப்பான பணி. உங்கள் குழுவினர் அனைவரும் சகல சௌபாக்கியங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ திரிபுரசுந்தரியும் திரிபுராந்தகரும் துணையிருப்பார்கள்!”

மடப்பள்ளியை சேர்ந்த குட்டி ஐயர் புறப்படும்போது நம்மிடம் வந்து கூறியதாவது : “நவராத்திரி உங்க புண்ணியத்தாலே நல்லா போகும். அவ்வளவு அருமையா எல்லாரும் வேலை பார்த்திருக்கீங்க! ரொம்ப சந்தோஷம்!!” என்றார்.

வழக்கமாக இங்கு பூஜை சாமான்கள் மற்றும் விளக்குகளை தேய்க்கும் முருகம்மா என்பவர் நமது மகளிர் குழுவிடம் உணவருந்தும் ஹாலில் கூறியதாவது : “அந்த பாத்திரங்களை அதுவும் அந்த பெரிய குத்து விளக்குகளை எவ்ளோ நல்லா தேய்ச்சி கொடுத்திருக்கீங்கம்மா… நாங்க ஒவ்வொரு முறையும் போராடுவோம். இன்னிக்கு எல்லா விளக்கும் பளபளன்னு ஜொலிக்குது…!” என்றார் மனம் திறந்து.

இதைவிட பெரிய ஆசி வேண்டுமா என்ன?

இறுதியில் மதிய உணவு சாப்பிட்டோம். எந்தக் கோவிலிலும் இல்லாத அளவு நமது குழுவினருக்கு என சிறப்பு உணவு – சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, மோர், அப்பளம் என பெரிய மெனு. கூவத்தை சேர்ந்த திரு.மணிவாசகம் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவர் திருவாசக மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி!

மொத்தத்தில் இந்த உழவாரப்பணி மனநிறைவையும் உற்சாகத்தையும் நமது குழுவினருக்கு மட்டுமல்ல ஆலயத்தில் உள்ள ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைவருக்கும் தந்தது. இருக்காதா பின்னே திரிபுரசுந்தரிக்கு செய்த திருப்பணியாயிற்றே!

==========================================================

உழவாரப்பணி அறிவிப்பு !

நமது உழவாரப்பணி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறு என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என பண்டிகைக் காலமாக இருப்பதால் அடுத்து வரக்கூடிய உழவாரப்பணி மட்டும் முதல் ஞாயிறே நடைபெறும்.

சுந்தரராஜ பெருமாள் கோவில்
சுந்தரராஜ பெருமாள் கோவில்

அடுத்த உழவாரப்பணி வரும் 02/10/2016 ஞாயிறு அன்று சென்னை பட்டாபிராமை அடுத்து அமைந்துள்ள ‘சித்துக்காடு’ என்னும் ஊரில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும். ஐயப்பன்தாங்களில் இருந்து வேன் காலை 6.45 க்கு புறப்படும். வரவிரும்பும் அன்பர்கள் அவசியம் மின்னஞ்சல் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ நமக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். * இது ஒரு சுவாதி நட்சத்திர பரிகாரத் தலம்.

Thathireeswarar
தாத்திரீஸ்வரர் கோவில்

இந்த ஊரில் சிவன் கோவில் பெருமாள் கோவில் என அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளது. சென்ற ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு இங்குள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (அதன் சுட்டி கீழே அளிக்கப்பட்டுள்ளது!)

ஈசனருளால் அக்டோபர் 2 ஞாயிறு காலை 6.45 AM அளவில் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தின் அருகே இருந்து வேன் புறப்படும். வரவிரும்புகிறவர்கள் முன்கூட்டிய தகவல் தெரிவிக்கவேண்டும்.

தொடர்புக்கு : – ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

Please check : ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

==========================================================

நமது உழவாரப்பணிக் குழுவில் சேர விரும்பினால்…

நமது உழவாரப்பனிக் குழுவில் நீங்கள் சேர விரும்பினால்… ‘TEMPLE CLEANING VOLUNTEER’ என்று குறிப்பிட்டு தங்கள் பெயர், வசிப்பிடம், அலைபேசி எண் ஆகியற்றை editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும். உழவாரப்பணி இறுதி செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். (* உழவாரப்பணி பிரதி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெறும்!)

Rightmantra Sundar  | M : 9840169215  | E : editor@rightmantra.com

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Also check articles on  ‘உழவாரப்பணி’:

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா?

தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !

அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!

நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!

தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!

பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)

“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி

‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !

திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !

பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!

“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!

==========================================================

[END]

3 thoughts on “திரிபுரசுந்தரிக்கு செய்த உழவாரப்பணியும் அது அள்ளித்தந்த உற்சாகமும்!

  1. வணக்கம்
    உழவாரப்பணி என்பது எங்கள் கடமைகளுள் ஒன்று.
    எல்லா பணியின் போதும் எங்கள் முன்ஜென்ம பாவ வினை குறைவது மட்டுமல்லாமல் எங்கள் மனதிற்கு ஒரு புத்துணர்வும் கிடைக்கிறது.
    நாங்கள் தடை இன்றி இந்த பணியை செவ்வனே செய்ய ஈசனருள் வேண்டும்.
    நன்றி

  2. வாழ்க வளமுடன்

    உழவாரப்பணி சிறக்க வாழ்த்துக்கள். நிச்சயம் உழவாரப்பணியில் துணை நிற்போம் ஈசனருளுடன்.

    நன்றி

  3. வாழ வளமுடன்
    ஈசனினின் அருள் இருத்தல் கண்டிப்பா அடுத்த உழவார பணிக்கு வருவேன் நிச்சியமாக
    நன்றி

Leave a Reply to selvi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *