Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

print
சிவபுண்ணியத்தின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் கதை இது. சிவபுண்ணியத்தின் மகத்துவத்தை அத்தனை எளிதில் யாரும் விளக்கிவிடமுடியாது. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஒரு மிகப் பெரிய நீதியை உணர்த்தும். ‘இப்படியெல்லாம் நடக்குமா? இவர்களுக்கெல்லாம் நற்கதியா?’ என்று ஆராய்ந்துகொண்டிருக்காமல், கடலில் மூழ்கி தத்தளிப்பவன் எப்படி ஏதோ ஒன்று பிடித்துக்கொள்ள கிடைத்தால் கரையேற முயற்சிப்பானோ அதையே போல, பிறவிக்கடலில் தத்தளிப்பவர்கள் இந்த சிவபுண்ணியத் தொடரில் இடம்பெறும் ஏதாவது ஒரு நீதியையாவது உணர்ந்து அதை பற்றிக்கொண்டு கரையேற முயற்சிக்கவேண்டும்.

அறியாமல் செய்யும் சிவபுண்ணியமே இப்படி என்றால், அனுதினமும் பக்தியோடும் உள்ளன்போடும் சிவபெருமானை துதிப்பவர்கள் அடையக்கூடிய நற்பலன்களை சொல்லவேண்டுமா என்ன? இந்த தொடரின் நோக்கம் அதை உங்களுக்கு புரியவைப்பது தான்!

—— மேற்கொண்டு தொடரும் முன் ————

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10) என்கிற பதிவில்

//மகாகாளர் சீற்றத்துடன் “அடேய்… யமனே முன்பு நடைபெற்ற விஷயங்களை எல்லாம் மறந்து போனாயோ?” என்று கோபமாக கேட்க, “இல்லை இல்லை சுவாமி… இல்லை. இன்றும் கூட அவற்றை நினைவுப்படுத்தி வருகிறேன்” என்றான் திக்கித் திணறி.//

 ‘அதென்ன முன்பு நடைபெற்ற சம்பவம்?’

அது பற்றி பின்னர் கூறுவதாக கூறியிருந்தோம். அந்த சம்பவம் இது தான். படியுங்கள்.

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்!

சௌராஷ்டிர தேசத்தில் (இன்றைய குஜராத்) தீவ்விரதன் என்கிற செல்வ செழிப்பு மிக்க அந்தணன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பாபங்களே உருவமாய் அமைந்த கௌசிகன் என்கிற மகன் இருந்தான். மது, சூது, மாது என தீய பழக்கங்கள் அனைத்தும் கௌசிகனுக்கு இருந்தது. ஒரு நாள் அந்த ஊரில் இருந்த சண்டாளப் பெண் ஒருத்தியை பார்த்து அவள் மீது மையல் கொண்டு அவளை அடைந்தே தீருவது என அவள் பின்னாலேயே சுற்றித் திரிந்தான். அவளும் இவனிடம் உள்ள பணத்திற்கு ஆசைப்பட்டு இவன் இச்சைக்கு உடன்பட்டாள். இருவரும் கூடிக் களித்திருந்த தருணம் அந்த பெண்ணின் கணவன் அதை பார்த்துவிட்டான். இருவரையும் நையப்புடைத்தவன், “இனி மாற்றான் மனைவி மீது ஆசைப்படாதே” என்று கூறி அவனது பிறப்புறுப்பை அறுத்துபோட்டுவிட்டான்.

சில காலம் வாழ்ந்த கௌசிகன், பின்னர் மாண்டுபோனான். அப்போது அங்கே தோன்றிய எமகிங்கரர்கள் அவனை பாசத்தால் கட்டியிழுத்துச் சென்றார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அங்கே விரைந்த சிவகணங்கள், யமதூதர்களை அடித்து விரட்டிவிட்டு கௌசிகனை ஒரு அழகிய புஷ்பக விமானத்தில் ஏற்றிக்கொண்டு கயிலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

இங்கே சிவகணங்களால் அடித்து விரட்டப்பட்ட யமதூதர்கள் தங்கள் தலைவன் எமதர்மனிடம் நடந்த அனைத்தையும் சொன்னார்கள். உடனே எமன், “கவலைப்படவேண்டாம். நான் போய் என்ன ஏதென்று விசாரித்து வருகிறேன்” என்று கூறி கயிலைக்கு புறப்பட்டான்.

கயிலையில் பூத கணங்களின் தலைவரான மஹா காளரை சந்தித்து நடந்த விஷயங்களை கூறி, விளக்கம் கேட்க முற்பட்டான்.

“யமனே… இந்த கௌசிகன் மகா புண்ணியசாலி. இவன் பால்ய காலத்தில் ஜம்பு என்கிற அந்தணச் சிறுவனோடு நட்பு கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனும் இவனை ‘திரியம்பகன்’ என்கிற ஈஸ்வர நாமங்களில் ஒன்றை குறிப்பிட்டு அழைத்து வந்தான். மிக புண்ணியம் வாய்ந்த ‘திரியம்பகன்’ என்கிற பெயரை இவன் கொண்டிருந்தமையால் இவனுக்கு கயிலையில் இடம் கிடைத்துவிட்டது!” என்றார்.

அதைக் கேட்ட எமனுக்கு “இந்தப் பெயரை வைத்துக்கொண்டிருந்த ஒரே காரணத்திற்க்காக இவனுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது என்பது நம்பும்படியாக இல்லையே மஹா காளரே” என்றான் சந்தேகத்தோடு. (நம்மில் சிலரைப் போல!). சொல்லிவிட்டு உடனே ஈசனின் திருமாளிகையை நோக்கி செல்ல முற்பட்டான்.

yamadharman
நமது தளத்தின் ஓவியர் சசி அவர்கள் வரைந்த ஓவியம்…!

எமன் கூறியதைக் கேட்டு கோபமடைந்த மஹா காளர், “ஏ… மூடனே… என் வார்த்தைகளை சந்தேகித்ததோடு அவற்றை உதாசீனப்படுத்தினாய் அல்லவா… இந்தா வாங்கிக்கொள்” என்று கூறி தனது தண்டத்தால் ஓங்கி எமனின் மார்பில் அடித்தார்.

மஹா காளரின் அடியை தாங்கமுடியாமல், “ஓ…” என்று அலறியபடி எமன் கீழே சாய்ந்தான். இருப்பினும் சிவகணங்கள் தலைவரான மஹா காளரின் தண்டம் பட்டமையால் அவனுக்கு ஞானம் துளிர்த்தது.

அவனுக்கு நினைவு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. அவன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அங்கே பிரம்மதேவர் சிவபெருமானை தரிசித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். அவரிடம் நடந்த அனைத்தையும் கூறி நியாயம் கேட்டான்.

பிரம்மதேவரும் மஹாகாளரை சென்று வணங்கி, “யமனை நீங்கள் பெரிய மனம் கொண்டு மன்னிக்கவேண்டும்” என்று பலவாறு துதித்து கேட்டார். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவே கேட்பதால் யமனை மன்னித்தார் மஹா காளர்.

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

==========================================================

பிரம்மா புன்னகைத்தபடி எமனை நோக்கி, “கூற்றுவனே… நான் தற்போது தான் சர்வேஸ்வரனை அவரது சன்னதியில் தரிசித்துவிட்டு வருகிறேன். புண்ணியாத்மா கௌசிகன் அங்கு தான் இருக்கிறான். பரமேஸ்வரனின் திவ்ய நாமங்கள் சிறப்பை யாரால் அறுதியிட்டு கூறமுடியும்? இனி நீ இந்த விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையுடன் இருப்பது உனக்கு நல்லது” என்று புத்திக்கூறிவிட்டு புறப்பட்டார்.

அதன் பிறகு மஹா காளரை பலவாறு சேவித்துவிட்டு எமன் தன்னுடைய எமலோகம் சென்றான். செல்லுகையில் அவனுடன், கௌசிகனை இழுத்து வரச் சென்றபோது சிவகணங்களிடம் அடி வாங்கி ஓடிவந்த கிங்கரர் படைத்தலைவனை பார்த்து, “சிவகணங்களை பார்த்த மாத்திரத்தில் நீ ஏன் கௌசிகனை விடுவிக்கவில்லை? அவர்களிடம் உதை வாங்கும் வரை காத்திருக்கவேண்டுமா? அவன் புண்ணியாத்மாவோ பாபியோ யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். சிவகணங்களை பார்த்த மாத்திரத்தில் நீ வராமல் அவர்களோடு ஏன் வாக்குவாதம் செய்தாய்? உடனே வந்திருக்கவேண்டியது தானே? நான் பார்த்துக்கொள்ளமாட்டேனா? இது உனக்கு மட்டுமல்ல… எனக்கும் நேர்ந்திருக்கிறது. நான் அதிகாரத்திற்கு வந்த புதிதில் இதே போல உமாபதியின் நாமங்கள் பெருமை தெரியாமல் நடந்துகொண்டேன்….” என்கிறார் பெருமூச்சு விட்டபடி.

“அது என்ன பிரபோ? சற்று விளக்கமாக கூறுங்களேன்…”

“கந்துகம் என்கிற நாட்டை நந்தகன் என்கிற ஷத்ரிய அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு துர்க்குணங்கள் நிரம்பிய காமதை என்கிற மனைவி இருந்தாள். பேரழகு நிரம்பிய அவள் காமவெறி பிடித்தவள். தன் கணவனைத் தவிர அழகு வாய்ந்த ஆடவர்கள் யாரைக்கண்டாலும், அவர்கள் எந்த வர்ணத்தை சார்ந்தவராக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவர்களோடு கூடிக்குலாவி சம்போகம் செய்துவந்தாள். இப்படி இருக்கும்போது ‘துர்புத்தி’ என்கிற பெயருடைய ஒரு நீசனின் நட்பு அவளுக்கு கிடைத்தது. அவனோடு அவள் கூடிக் களித்திருந்தாள். இதன்விளைவாக கருத்தரித்தாள். பின்னர் அவனை விட்டு பிரிந்து ‘வஸுவதி’ என்கிற பெயர் கொண்ட அந்தணனோடு பழக்கம் ஏற்பட்டு அவனோடு சேர்ந்து வாழ்ந்தாள். இதனிடையே பிள்ளையும் பெற்றாள். வஸுவதி எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தான். ஆதரிப்பார் யாருமில்லாத காரணத்தால் தான் பெற்ற குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு முன்பு தான் கூடிக்குலாவிய ‘துர்புத்தி’யிடமே மீண்டும் சென்றாள். அவனும் இவள் அழகிற்காக ஏற்றுக்கொண்டான்.

இருவரும் ஒரு முறை கப்பல் பிரயாணம் செல்லுகையில் நடுக்கடலில் புயல் வீசி கப்பல் கவிழ்ந்துவிட்டது. இருவரும் உயிர் துறந்தார்கள்.

உடனே அடுத்த வினாடி அவர்களை பாசத்தால் கட்டியிழுத்து நரகிற்கு கொண்டு வந்த யமதூதர்கள், இருவரையும் பலவிதங்களில் சித்தரவதை செய்யலானார்கள். ஆனால், அங்கே திடீரென பிரவேசித்த சிவகணங்கள் இருவர், எமதூதர்களை விரட்டிவிட்டு இருவரையும் மீட்டுக்கொண்டு கயிலைக்கு சென்றுவிட்டார்கள்.

இதைப் பார்த்த எனக்கு கோபம் தலைக்கேறியது. “சிவகணங்களே, பாபமே உருவான இவர்களை ஏன் நீங்கள் காப்பாற்றி அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

உடனே அவர்கள் என் மீது கோபம் கொண்டு, என்னை என் பாசத்தாலேயே கட்டி தூக்கிக் கொண்டு போய் சக்ரவாள மலையின் அடிவாரத்தில் ஒரு குகையில் தலைகீழாக தொங்கவிட்டுவிட்டு, காவலுக்கு ஒரு பூத கணத்தையும் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

நான் இந்த பதவிக்கு வந்த புதிதில் நடந்தது இது.

இதற்கிடையே எனக்கு நேர்ந்த கதியை அறிந்த சித்திரகுப்தன், மகா விஷ்ணுவிடமும் பிரம்மதேவரிடமும் ஓடிச்சென்று நடந்ததை கூறி என்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான். அவர்களும் தாங்கள் சிவபெருமானிடம் பேசி ஆவன செய்வதாக கூறிவிட்டு சென்றனர். அங்கே கயிலையில் விநாயகப் பெருமான் எதிர்பட்டார். அவரிடம் நடந்தை கூறி என்னை மீட்க உதவும்படி கேட்டுக்கொண்டனர்.

வரலாற்று தகவல் : மஹாமேரு, உதயகிரி, ஹஸ்திகிரி, சக்ரவாள மலை, நிஷாதம், விந்திய மலை, நரசிம்மகிரி, அத்திகிரி ஆகிய மலைகள் விளங்கும் இந்த உலகினை எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் கஜங்களான புஷ்பதந்தம், ஐராவதம், புண்டரீகம், குமுதம், சார்வபௌமம், சுப்ரதீபம், அஞ்சனம், வாமனம் ஆகிய எட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன.

விநாயகருக்கும் அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. “அந்த யமனுக்கு என்ன துணிச்சல் இருந்தால் சிவகணங்களோடு மோதுவான்? வாக்குவாதம் செய்வான்? அவனுக்கு அந்த தண்டனை தேவைதான்!” என்றார்.

“ஆனைமுகத்து அண்ணலே… கோபம் கொள்ளவேண்டாம். சாந்தியடையுங்கள். புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அந்த எமன் விபரம் அறியாமல் ஏதோ தவறு செய்த்துவிட்டான். அவனை மன்னித்து விடுதலைசெய்யுங்கள்” என்று நமஸ்கரித்து கேட்டுக்கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து கோபம் தணிந்த ஆனைமுகன், உடனே ஒரு பூதத்தை அனுப்பி என்னை விடுவித்து அழைத்து வருமாறு கட்டளையிட்டார். அந்த பூதமும் சக்கரவாள மலைக்கு விரைந்து வந்து என்னை விடுவித்தது அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தியது.

“யமனே… இவ்விருவரும் பாபாத்மாக்கள் என்று நினைத்துவிட்டாய். இவ்விருவரும் செய்த சிவபுண்ணியம் நீ அரியமாட்டாய். அதனால் தான் உனக்கு இவ்வளவு துன்பம்….”

உடனே நான் “மன்னிக்க வேண்டும் விநாயகப் பெருமானே… அவர்கள் எத்தகைய சிவபுண்ணியம் செய்தவர்கள் என்பதை அடியேனுக்கு எடுத்துரைக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

“காமதை துர்புத்தியோடு கூடி கருத்தரித்த பிறகு, வஸுவதி என்கிற அந்தணனிடம் சென்று அங்கு குழந்தை பெற்றாள். வஸுவதி எதிர்பாராதவிதமாக மாண்டதும், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் துர்புத்தியிடம் சென்றுவிட்டாள். வஸுவதியின் நல்லொழுக்கம் மிக்க மனைவி, அந்தக் குழந்தை மீது இரக்கங்கொண்டு ‘சங்கரன்’ என்கிற பெயரைச் சூட்டி அந்த மகவை வளர்த்து வந்தாள். அக்குழந்தையை ‘சங்கரா’ என்று அடிக்கடி அழைத்து வந்தாள். அந்தக் குழந்தையும் அந்த அந்தணன் வீட்டில் பலவித பணிவிடைகள் செய்தபடி வளர்ந்து வந்தது.

தன் சக்களத்திக்கு பிறந்த குழந்தையாக இருந்தாலும், தன் கணவன் கூடிக்குலாவிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்பதால் அக்குழந்தைக்கு ‘சங்கரன்’ என்ற பெயரை சூட்டினாள் அவள்.

பரமேஸ்வரனின் திவ்விய ஸ்வரூப திருநாமங்களில் ஒன்றான ‘சங்கரன்’ என்கிற பெயரை அக்குழந்தை பெற்றதால், அந்த சிவபுண்ணியத்தின் மகிமையால் அதன் பெற்றோர்களுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.

அந்த சர்வேஸ்வரனின் திருநாமங்களின் மகத்துவத்தை உணர்ந்து யார் அவர்களின் பிள்ளைகளுக்கு முறைப்படி அப்பெயர்களை சூட்டி அழைக்கிறார்களோ அவர்கள் அடையக்கூடிய புண்ணியத்தை அநேக கோடி வருஷங்கள் ஆனாலும் யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது. என்னால் மட்டும் எப்படி கூறமுடியும்?” என்றார் விக்னேஸ்வர பெருமான்.

நான் உடனே அவரது கால்களில் வீழ்ந்து “ஆனைமுகத்து கடவுளே… நான் செய்த பிழையை பொறுக்கவேண்டும்.” என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றேன்.

உடனே விநாயகப் பெருமான் என்னை நோக்கி, “காலதூதர்களின் தலைவனே, இனியாவது சர்வேஸ்வரரின் திருநாமங்களின் மகத்துவத்தை உணர்ந்து நீயும் உன் தூதர்களும் நடந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் நான் உன்னை காப்பாற்ற முடியாது!” என்றார்.

(மேலே இந்தப் பதிவில் நாம் அளித்திருக்கும் சிவபுண்ணியக் கதை சற்று ஜீரணிக்க இயலாததாக தெரியலாம். ஆனால் இன்றைக்கும் இந்த சமூகத்தில் துர்புத்திகளுக்கோ காமதைகளுக்கோ வஸுவதிகளுக்கோ பஞ்சம் கிடையாது. ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டுகின்றனர் என்று தான் தெரியாது. மற்றபடி இந்த கதையைப் போன்ற பல சம்பவங்களை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாம் பலமுறை தினசரிகளில் படித்திருக்கிறோம்!)

==========================================================

இந்த புராணக்கதையை ஒட்டிய தேவாரப் பாடல் இதோ…!

ஈசனின் பெயரைக் கூறினாலே நல்வினையை அடையலாம் என்று கூறுகிறார் சம்பந்தர்.

Siva lingaநீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
– திருஞானசம்பந்தர் 

விளக்கம் : நல்ல நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. ஈறக்கின்ற நாளும், உலகினிலே வாழ்கின்ற நாளையும் கணக்கிட்டுக் கூற முடியாது. சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும் பூக்களைச் சுமந்து சென்றும், அப்பெருமானது திரு நாமங்களைக் காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை சொல்லி ஏத்தி வழிபட, நல் வினையைப் பெறலாம்.

==========================================================

குழந்தைகளுக்கு கூகுளில் பெயர் தேடும் அறியாமை…

மகாபாபிகள் தங்கள் குழந்தைக்கு அவர்களையுமறியாமல் அந்தத் சிவபெருமானின் திவ்ய திருநாமங்களில் ஒன்று அமைந்ததால் அவர்கள் பெற்ற நற்கதியை பார்த்தீர்களா?

பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் கூட ஒருவர் சுலபமாக சிவபுண்ணியம் சம்பாதிக்க முடிகிறது பாருங்கள். அது தான் அதன் தனித்தன்மை. ஆனால் நாம் செய்வதென்ன? குழந்தைகளுக்கு பெயர் ஃபேன்ஸியாக இருக்கவேண்டும் என்று கூகுளில் தேடுகிறோம். ஏதோ வாயில் நுழைய முடியாத பெயரை வைக்கிறோம். குழந்தைகளின் பெயர்களை நமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் தேடவேண்டும். நாயன்மார்கள் வரலாற்றில் தேடவேண்டும். எத்தனையோ அற்புதமான பெயர்கள் எல்லாம் – உச்சரித்தாலே புண்ணியம் தரக்கூடிய அற்புதமான பெயர்கள் எல்லாம் – நமது புராணங்களில் உள்ளது. இது பற்றி விரிவான ஒரு பதிவை பின்னர் அளிக்கிறோம். 

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

தெய்வத்தின் குரல் 

புராணத்தை போதித்தவர் யார்?

Maha periyava anushtanamந்தப் புராணங்களை ஈச்வரனே தேவிக்குச் சொல்வதாக அல்லது விஷ்ணுவுக்குச் சொல்வதாக, அல்லது விஷ்ணுவோ ப்ரம்மாவோ நாரதருக்கோ அல்லது ஒரு ரிஷிக்கோ சொல்வதாக அவற்றில் சொல்லியிருக்கும். அப்படி தெய்வங்களே சொன்ன கதைகளை அப்புறம் ஒரு ரிஷிக்கோ ராஜாவுக்கோ இன்னொரு ரிஷி சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போய்க் கடைசியில் இவற்றை வியாஸர் ஸூதருக்கு உபதேசிக்க ஸூதர் நைமிசாரண்யத்திலுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார் என்று முடித்திருக்கும்.

நைமிசாரண்யத்து ரிஷிகள் அப்பிராம்மணரான ஸூதருக்கு உயர்ந்த ஆஸனமளித்து உட்கார வைத்து மரியாதை பண்ணி அவரிடமிருந்து புராண சிரவணம் பண்ணினார்கள். இதிலிருந்தே புராணங்களுக்குள் மதிப்புத் தெரிகறது. அதோடுகூட, பிறப்பைவிட அறிவுக்குத்தான் மதிப்புத் தந்தார்கள் என்றும் தெரிகிறது. உயர்ந்த விஷயத்தை எந்த ஜாதியார் சொன்னாலும் மரியாதையோடு கேட்டுக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

– மகா பெரியவா

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

2 thoughts on “தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

  1. ஜி,

    இந்த புண்ணிய கதைகளையெல்லாம் தனக்கு மட்டுமே என்று வைத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் அள்ளி அள்ளி தரும் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட சிவபுண்ணியம்!

    தாங்கள் இக பர சுகங்கள் அனைத்தையும் பெற்று வாழ்வாங்கு வாழ அந்த சிவத்திடம் பிரார்த்தனை செய்கிறேன்.

    அன்பன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

  2. சிவ புண்ணிய கதைகள் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன! மிக அற்புதமான விஷயங்களை எளிதாக புரியும் வண்ணம் சிரத்தை எடுத்து அளித்துள்ள பதிவு ! தொடரட்டும் உங்கள் சிவ பணி!! வாழ்க வளமுடன் ! நன்றி !

Leave a Reply to radhamani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *