Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > உருவு கண்டு எள்ளுபவரா நீங்கள்?

உருவு கண்டு எள்ளுபவரா நீங்கள்?

print
மது முகநூலில் நேற்றைக்கு இதை பகிர்ந்திருந்தோம். தளத்திலும் வெளியிடும்படியும், பலர் படித்து தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் நண்பர்கள் கூறியதையடுத்து இங்கு பதிவு செய்கிறோம்.

டல் பருமனான ஒருவர் சற்று ஒல்லியான பெண்ணுடன் மணக்கோலத்தில் உட்கார்ந்திருப்பதை ‘அண்டாவை ஏன் டம்ளர் மேலே கவுக்குறீங்க?” என்று கேலி செய்து முகநூலில் ஒரு படம் அதிகம் பகிரக் கண்டேன். சற்று மெச்சூர்டானவர்கள் கூட அதை ஒரு வேகத்தில் பகிர்ந்து எள்ளியது அதிர்ச்சியளித்தது.

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்று வள்ளுவர் சொன்னதில் தான் எத்தனை பொருள். அதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

teaseஉருவத்தில் பொருத்தமற்ற ஜோடிகளை மணக்கோலத்தில் காணும்போது பலருக்கு நகைக்க தோன்றுகிறது. இந்த மனப்பான்மை சரியா?

(குடும்ப சூழல் அல்லது நிர்பந்தத்தின் பேரில் சில சமயம் சம்பந்தப்பட்ட பெண்ணோ பையனோ ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால், அது அவர்கள் தனிப்பட்ட விஷயம்!)

இருவரது தோற்றமும் பலர் மெச்சப் பொருந்தி பெற்றோர் மிக ஆடம்பரமாக திருமணம் செய்துவைத்து ஆனால் மணமக்களிடையே மனப்பொருத்தம் இல்லாததால் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறும் பலர் இந்த சமூகத்தில் உண்டு. ஏன் உங்களைச் சுற்றியே கூட இருக்கலாம்.

அதே நேரம், உருவத்தால் பொருந்தாவிட்டாலும் உள்ளத்தால் பொருந்தி வாழ்வாங்கு வாழும் பலரும் உண்டு.

மலையாள திரையுலகில் பொருத்தமான பல ஜோடிகள் வாரிசுகளை நிர்கதியாய் விட்டுவிட்டு கோர்ட் படியேறி பிரிந்துவிட்ட நிலையில் கின்னஸ் பக்ரு இறைவனருளால் சிறப்பான இல்லறம் நடத்தி வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

Image 1

மேலும் ஒருவரது தோற்றத்தை பார்த்து நீங்கள் கேலி செய்யும்போது, சம்பந்தப்பட்டவருக்கு உங்கள் புண்ணியத்தை கொடுத்து, பதிலுக்கு அவரது கர்மாவை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.

எனவே மணக்கோலத்தில் பொருத்தமில்லாத (உங்கள் கண்களுக்கு) ஒரு ஜோடியை பார்க்கும்போது, நகைப்பதை தவிர்த்து இருவரும் சீரோடும் சிறப்போடும் வாழவேண்டும் என்று வாழ்த்தப் பழகிக்கொள்ளுங்கள். அந்த வாழ்த்து உங்களையும் வாழவைக்கும். உங்கள் பிள்ளைகளையும் வாழவைக்கும்.

=======================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

==========================================================

Also check :

பாடுபட்டு சம்பாதிக்கும் புண்ணியம் ஏன் தங்குவதில்லை தெரியுமா?

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா?

என்னது உங்களை அவமானப்படுத்திவிட்டார்களா? MONDAY MORNING SPL

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

==========================================================

[END]

 

One thought on “உருவு கண்டு எள்ளுபவரா நீங்கள்?

  1. அடுத்தவர்களின் உருவ லட்சணங்களை பார்த்து நாம் ஏன் பாவ மூட்டையை சுமக்க வேண்டும்.. முடிந்தால் அவர்களை வாழ்த்தி நாம் புண்ணியம் சேர்ப்போம்.
    வாழ்க .. வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *